Thursday 27 August 2020

ROBERT JOHN KENNEDY: 42 ஆண்டுகளுக்குமுன் திருத்தந்தை முதலாம் யோவான் பவுல்

ROBERT JOHN KENNEDY: 42 ஆண்டுகளுக்குமுன் திருத்தந்தை முதலாம் யோவான் பவுல்:   கர்தினால் அல்பீனோ லூசியானி அவர்கள் திருத்தந்தையாக தெரிவு செய்யப்பட்டதும், தன் தலைமைப்பணிக்குரிய பெயரை, முதலாம் யோவான் பவுல் என்...

ROBERT JOHN KENNEDY: 10-Day Challenge Workout – 10 Minutes A Day to Los...

ROBERT JOHN KENNEDY: 10-Day Challenge Workout – 10 Minutes A Day to Los...

ROBERT JOHN KENNEDY: இரணியல் அரண்மனை | Eraniel Palace | Tamil Navigation

ROBERT JOHN KENNEDY: இரணியல் அரண்மனை | Eraniel Palace | Tamil Navigation

இரணியல் அரண்மனை | Eraniel Palace | Tamil Navigation

10-Day Challenge Workout – 10 Minutes A Day to Lose Belly Fat

42 ஆண்டுகளுக்குமுன் திருத்தந்தை முதலாம் யோவான் பவுல்

 திருத்தந்தை முதலாம் யோவான் பவுல்  அவர்கள் தேர்நெதெடுக்கப்பட்ட நாளில் (26 ஆக.1978)


கர்தினால் அல்பீனோ லூசியானி அவர்கள் திருத்தந்தையாக தெரிவு செய்யப்பட்டதும், தன் தலைமைப்பணிக்குரிய பெயரை, முதலாம் யோவான் பவுல் என்று அறிவித்தது, பலருக்கும் வியப்பைத் தந்தது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சரியாக 42 ஆண்டுகளுக்கு முன், 1978ம் ஆண்டு, ஆகஸ்ட் 26ம் தேதி, திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள் திருஅவையின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதையொட்டி, வத்திக்கான் செய்தித்துறை, இத்திருத்தந்தையின் வாழ்வில் விளங்கிய சில பண்புகளை தொகுத்து வெளியிட்டுள்ளது.

புரட்சிகரமான புதுப்பெயர்

திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்களின் மறைவையடுத்து கூடிய கர்தினால்கள் அவையில், கர்தினால் அல்பீனோ லூசியானி அவர்கள் திருத்தந்தையாக தெரிவு செய்யப்பட்டதும், தனக்குமுன் திருஅவையின் தலைவர்களாக இருந்த 23ம் யோவான், 6ம் பவுல் என்ற இருவரின் பெயர்களையும் இணைத்து, தன் தலைமைப்பணிக்குரிய பெயரை, முதலாம் யோவான் பவுல் என்று அறிவித்தது, பலருக்கும் வியப்பைத் தந்தது.

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் ஆயர் லூசியானி

லூசியானி அவர்கள் அருள்பணியாளராகவும், பின்னர் ஆயராகவும், பணியாற்றிய வேளையில், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்திற்கு தேவையான தயாரிப்புக்களைக் குறித்து மக்களுக்கு பல வழிகளில் விளக்கிவந்தார்.

இந்தப் பொதுச் சங்கத்தில் கலந்துகொண்ட ஆயர் லூசியானி அவர்கள், ஒவ்வோர் அமர்விலும் தவறாமல் கலந்துகொண்டதோடு, அங்கு நடைபெற்ற கருத்துப்பரிமாற்றங்களை தவறாமல் எழுதிவந்தார் என்று வத்திக்கான் செய்தித்துறை நினைவுகூர்ந்துள்ளது.

இந்தப் பொதுச்சங்கம் நிறைவுற்றபின், வெனிஸ் உயர் மறைமாவட்டத்தின் முதுபெரும் தந்தையாகப் பொறுப்பேற்ற வேளையில், இச்சங்கத்தைப் பற்றி கூறப்பட்டு வந்த பல்வேறு முரணான கருத்துக்களினால் மக்கள் குழப்பம் அடையாதிருக்கும் வகையில், கர்தினால் லூசியானி அவர்கள் இச்சங்கத்தைப் பற்றிய தெளிவுகளை வழங்கிவந்தார்.

ஏனைய மதத்தினர் மீது மதிப்பு

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் வழங்கிய உலகளாவிய திருஅவை என்ற கருத்தை, கர்தினால் லூசியானி அவர்கள் தன் மறைமாவட்டத்தில் வலியுறுத்தி வந்தார்.

திருவழிபாட்டில் தேவையான மாற்றங்களைக் கொணர்வதிலும், ஏனைய மதத்தினர் மீது மதிப்பு காட்டுவதிலும், உரையாடலை வளர்ப்பதிலும், கர்தினால் லூசியானி அவர்கள் தனிப்பட்ட ஆர்வம் காட்டினார்.

ஒவ்வொரு மதத்தினரும் அவரவர் மத நம்பிக்கையை வளர்ப்பதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடை செய்யவோ, நிறுத்தவோ முயற்சி செய்யாமல், நம் கிறிஸ்தவ மதத்தின் அழகை நம் குழந்தைகளின் உள்ளங்களில் ஆழமாகப் பதிக்க நம் மறைக்கல்வியை இன்னும் சிறப்பான முறையில் வழங்கவேண்டும் என்பது, திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களின் விருப்பமாக இருந்தது.

ROBERT JOHN KENNEDY: புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர் பணித்துறையின் அற...

ROBERT JOHN KENNEDY: புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர் பணித்துறையின் அற...:   உலகின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் அரசு சாரா அமைப்புக்கள், மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை...

ROBERT JOHN KENNEDY: திருத்தந்தையர் வரலாறு --- புனித பேதுரு எனும் சீமோன்

ROBERT JOHN KENNEDY: திருத்தந்தையர் வரலாறு --- புனித பேதுரு எனும் சீமோன்: திருமறைக்காக தலைகீழாய் சிலுவையில் அறையுண்டு இறந்த புனித பேதுருவின் துன்ப மரணம், திருத்தந்தையரின் வரலாற்றில், பலமுறை, மீண்டும், மீண்டும், ந...

ROBERT JOHN KENNEDY: மனித உயிர்கள் மீது மதிப்பு குறைந்துவருவது முக்கிய ...

ROBERT JOHN KENNEDY: மனித உயிர்கள் மீது மதிப்பு குறைந்துவருவது முக்கிய ...:   கோவிட் 19 கொள்ளைநோய் உருவானதற்கு, காரணங்களை ஆய்வுசெய்யும் குடிபெயர்ந்தோர் பணித்துறையின் நேரடிச் செயலர், கர்தினால் மைக்கிள் செர்...

ROBERT JOHN KENNEDY: செப்டம்பர் 1ம் தேதி முதல் 'படைப்பின் காலம் 2020'

ROBERT JOHN KENNEDY: செப்டம்பர் 1ம் தேதி முதல் 'படைப்பின் காலம் 2020':   தற்போதையை உலகம், சமுதாயம், பொருளாதாரம், மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய அனைத்து துறைகளிலும் சமநிலையைப் பெறும் கட்டாயத்தில் உள்ளது ...

ROBERT JOHN KENNEDY: சிறுவனின் அறிவு

ROBERT JOHN KENNEDY: சிறுவனின் அறிவு:   பலங்களைக் காட்டி பிரச்சனைகளைச் சீர்செய்ய நினைப்பதைவிட, அந்தந்த நிகழ்வுக்கேற்ப, சாதுரியமாகச் செயல்படுவதே பலன்தரும். ...

ROBERT JOHN KENNEDY: அரண்மனையும் ஒரு சத்திரமே...

ROBERT JOHN KENNEDY: அரண்மனையும் ஒரு சத்திரமே...:   தங்கிச் செல்லும் சத்திரங்களை, தங்கள் நிரந்தரமான உறைவிடங்களாகக் கருதுவது, அறிவு முதிர்ச்சி அல்ல! ஜ...

புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர் பணித்துறையின் அறிக்கை

 மியான்மார் ரொங்கிஜியா புலம்பெயர்ந்தோர்


உலகின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் அரசு சாரா அமைப்புக்கள், மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை விவாதிக்கும் திருப்பீட அறிக்கை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட் 19 உருவாக்கியுள்ள நெருக்கடி நிலையைத் தொடர்ந்து, ஆப்ரிக்க கண்டத்தில் பல்வேறு அரசு சாரா அமைப்புக்கள் தங்கள் அலுவலகங்களை மூடவேண்டிய நிலை உருவாகியுள்ளது என்றும், இதனால், புலம்பெயர்ந்தோரும், குடிபெயர்ந்தோரும் மேலும் பல நெருக்கடிகளைச் சந்திக்கவேண்டியுள்ளது என்றும் திருப்பீட அவையின் அறிக்கையொன்று கூறுகிறது.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் புலம்பெயர்ந்தோர், மற்றும் குடிபெயர்ந்தோர் பணித்துறை, ஆகஸ்ட் 25, இச்செவ்வாயன்று வெளியிட்ட மடலில், உலகின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் அரசு சாரா அமைப்புக்கள், மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டுள்ளன.

மேற்கு ஆப்ரிக்கா, பெரும் ஏரிகள் ஆகிய பகுதிகளில், பணியாற்றிவந்த இயேசு சபையினரின் புலம்பெயர்ந்தோர் அமைப்பில், மக்களை நேரில் சந்தித்து செயலாற்றும் வாய்ப்புக்கள் இந்த தொற்றுக்கிருமியின் தாக்கத்தால் குறைந்துள்ளன என்றும், கணணி மற்றும் வலைத்தளம் வழியே புலம்பெயர்ந்தோரின் குழந்தைகளுக்கு வகுப்புக்கள் நடத்தும் பணி மட்டும் நடைபெறுகிறது என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கிரேக்க நாட்டின் லெஸ்போஸ் தீவில் வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோர் முகாம்களில், தன்னார்வப் பணியாளர்களின் நேரடித் தொடர்புகள் குறைந்துள்ளதால், 15,000த்திற்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் மிகக் கடினமானச் சூழலில் வாழ்ந்து வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் கோவிட் 19 கொள்ளைநோய் உருவாக்கியுள்ள நெருக்கடியால் வளர்ந்து வரும் மனித வர்த்தகத்தைத் தடைசெய்ய, பல்வேறு அருள் சகோதரிகள், ஆற்றிவரும் உதவிகளும், இந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன.

திருத்தந்தையர் வரலாறு --- புனித பேதுரு எனும் சீமோன்

கடல் மீது நடக்க விரும்பிய புனித பேதுரு
திருமறைக்காக தலைகீழாய் சிலுவையில் அறையுண்டு இறந்த புனித பேதுருவின் துன்ப மரணம், திருத்தந்தையரின் வரலாற்றில், பலமுறை, மீண்டும், மீண்டும், நிகழ்ந்துள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

யோனாவின் மகனாக, கெனசரேத் ஏரிக்கரையின் பெத்சாயிதா ஊரில், சீமோன் என்ற பெயர் தாங்கிப் பிறந்த இவர், புனித அந்திரேயாவின் சகோதரர். திருத்தூதர் புனித பிலிப்புவும் இவர் ஊர்க்காரரே. இயேசு தன் பணிவாழ்வைத் தொடங்கியபோது, இவர் கப்பர்நாகூமிற்கு குடிபெயர்ந்திருந்தார். அங்கு இவருடன் இவர் மாமியாரும் வாழ்ந்து வந்தாக அறிகிறோம். அலெக்சாந்திரியாவின் கிளமென்டின் எழுத்துக்களின்படி பார்த்தால், புனித பேதுரு எனும் சீமோனுக்கு, திருமணம் ஆகி, குழந்தைகளும் இருந்தன. இவர் மனைவி, மறைசாட்சியாக உயிரிழந்தார் எனவும் அறிகிறோம்.

புனித பேதுருவை, இயேசுவுக்கு, அல்லது, இயேசுவை, புனித பேதுருவுக்கு, அறிமுகப்படுத்தி வைப்பவர் அவரின் சகோதரர் புனித அந்திரேயாவே. முதல் பார்வையிலேயே புனித பேதுருவின் தனித்தன்மையை இயேசு புரிந்துகொள்கிறார். பாறை எனும் பொருள்படும்படியாக, தன் தாய்மொழியான அரமேயு மொழியில், ‘கேபா’ என புதுப்பெயர் சூட்டுகிறார் இயேசு. அதுவே, கிரேக்கம், மற்றும் இலத்தீன் மொழிகளில், ‘பேதுரு’வானது.

புனித பேதுருவின் நடவடிக்கைகளை நாம் விவிலியத்தில் பார்க்கும்போது, அவர் எதையும் வெளிப்படையாகப் பேசுபவராக, எளிதில் உணர்ச்சிவசப்படுபவராக, எதற்கும் அஞ்சாதவராய் இருப்பதாகத் தோற்றம் கிடைக்கிறது. எடுத்துக்காட்டுகளைப் பார்க்கவேண்டுமானால், நிறையவே உள்ளது. ‘என்னை யாரென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்” எனச் சீடர்களிடம் இயேசு கேட்ட கேள்விக்கு, அவர்கள் சார்பில் முந்திக்கொண்டு பதிலளிக்கும் புனித பேதுரு, ‘நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்கிறார். இயேசுவும், புனித பேதுருவின் மீது, தன் திருஅவையைக் கட்டுவதாக வாக்களிக்கிறார். (மத்.16:18).

மற்றொரு இடத்தில், இயேசு தம் சீடர்களைப் பார்த்து ‘நீங்களும் என்னை விட்டுப்போய் விடுவீர்களா?” எனக் கேட்கும்போது, அங்கும், புனித பேதுருவே முந்திக்கொண்டு “நாங்கள் யாரிடம் செல்வோம்? வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன’ என்று நம்பிக்கை அறிக்கையிடுகிறார். இதே பேதுருதான், இயேசு கடலில் நடப்பதைக் கண்டதும், தானும் நடக்க ஆசைப்படுகிறார். அதே பேதுருதான், இயேசு பாடுகள் படவேண்டாம் என ஆலோசனை கூறி, இயேசுவின் கோபத்துக்கும் உள்ளாகிறார்.

இறுதி இரவுணவின்போது, சீடர்களின் காலடிகளைக் கழுவ இயேசு வந்தபோது, அதற்குச் சம்மதிக்க மறுத்த பேதுரு, ‘அப்படியானால் என்னோடு உனக்குப் பங்கில்லை” என்ற இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டவுடன், “என் காலடிகளை மட்டுமல்ல கைகளையும் தலையையும்கூடக் கழுவும்” என்று சிறு குழந்தைபோல் பதிலளிக்கிறார். அந்த சிறு குழந்தைதான், கெத்சமனியில் வாளை உருவி தலைமைக் குருவின் பணியாளரின் காதை வெட்டுகிறார். நீ என்னை மும்முறை மறுதலிப்பாய் என இயேசு கூறியபோதும் அதை ஏற்க மறுத்த புனித பேதுருதான், அந்த தவற்றைச் செய்தபின் மனம் வருந்தி அழுது புலம்பினார். கெத்சமனியில், இயேசு, துயரத்தில் ஆழ்ந்திருந்தபோது, செபிக்கும்படி அவர் விடுத்த கட்டளையை மறந்து, அயர்ந்து தூங்கியவரும் இவர்தான். 

சீடர்களுள் முக்கிய இடம், புனித பேதுருவுக்கே இயேசுவால் வழங்கப்பட்டது. இவர் வீட்டிற்கு இயேசு சென்றதாகவும், தனக்கும் சேர்த்து வரி செலுத்தும்படி இவரிடமே இயேசு பணித்ததாகவும், இயேசுவின் தோற்றமாற்றம், இறுதி இறைவேண்டல் என்ற முக்கிய நிகழ்வுகளுக்கு அழைத்துச்சென்ற மூன்று சீடருள் இவரும் ஒருவர் எனவும் நற்செய்தியில் பார்க்கிறோம். பேதுருவின் படகிலிருந்துதான் கெனசெரேத் ஏரிக்கரையிலிருந்த மக்களுக்கு இயேசு போதிக்கிறார். இப்படி, பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, புனித பேதுரு, கி.பி.67 அல்லது 68ம் ஆண்டில், அதாவது, மன்னர் நீரோவின் ஆட்சிக் காலத்தில், 13 அல்லது 14வது ஆண்டில், தலைகீழாகச் சிலுவையில் அறையுண்டு கொல்லப்பட்டார். இயேசுவால் ஏற்கனவே தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டு, 42ம் ஆண்டு உரோமைக்கு வந்த புனித பேதுரு, 25 ஆண்டுகள் உரோமை ஆயராக பணியாற்றினார் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அன்றிலிருந்து துவங்கியதுதான், திருத்தந்தையரின் வரலாறு. திருமறைக்காக தலைகீழாய் சிலுவையில் அறையுண்டு இறந்த புனித பேதுருவைப்போல், திருத்தந்தையர் பலர் துன்பம் மிகுந்த மரணங்களைச் சந்தித்தது, வரலாற்றில் பலமுறை மீண்டும் மீண்டும் நிகழ்ந்துள்ளது. இவற்றை, இனிவரும் வாரங்களில், ஒவ்வொன்றாக, தொடர்ந்து நோக்குவோம்.

மனித உயிர்கள் மீது மதிப்பு குறைந்துவருவது முக்கிய காரணம்

 கர்தினால் மைக்கிள் செர்னி


கோவிட் 19 கொள்ளைநோய் உருவானதற்கு, காரணங்களை ஆய்வுசெய்யும் குடிபெயர்ந்தோர் பணித்துறையின் நேரடிச் செயலர், கர்தினால் மைக்கிள் செர்னி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட் 19 கொள்ளைநோய் உருவானதற்கு, பல்வேறு கோணங்களிலிருந்து காரணங்கள் ஆய்வுசெய்யப்பட்டுவரும் வேளையில், அடிப்படையில், மனித உயிர்கள், படைப்பு, மனித சமுதாயம் ஆகியவற்றின் மீது மதிப்பு குறைந்துவருவதை, இந்நோய் உருவாக ஒரு முக்கிய காரணமாக சிந்திக்கவேண்டும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

கர்தினால் மைக்கிள் செர்னி

ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் புலம்பெயர்ந்தோர், மற்றும் குடிபெயர்ந்தோர் பணித்துறையின் நேரடிச் செயலர், கர்தினால் மைக்கிள் செர்னி அவர்கள், 'In Terris' என்ற இத்தாலிய செய்தித்தாளுக்கு வழங்கிய ஒரு பேட்டியில் கூறிய இக்கருத்துக்களை, புலம்பெயர்ந்தோர், மற்றும் குடிபெயர்ந்தோர் பணித்துறை, தன் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

இக்கொள்ளைநோய் நம் ஒவ்வொருவரின் பலமற்ற நிலையை வெளிக்கொணர்ந்துள்ளதால், நாம் நம்மைக் காப்பாற்றும் நிலையிலேயே தங்கி, மற்றவர்களைப் புறக்கணிக்கும் ஆபத்தும் வளர்ந்துள்ளது என்று கர்தினால் செர்னி அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

கர்தினால் சார்ல்ஸ் மாங் போ

மேலும், கோவிட் 19 கொள்ளைநோய் இவ்வுலகின்மீது சுமத்தியுள்ள பெரும் சுமைகளை, அனைவரும் சேர்ந்து சுமப்பதைவிடுத்து, அவற்றை, நலிவுற்ற வறியோரின் தோள்கள் மீது சுமத்துவது நீதியல்ல என்று, ஆசிய கர்தினால் ஒருவர் கூறியுள்ளார்.

ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரான கர்தினால் சார்ல்ஸ் மாங் போ அவர்கள், பன்னாட்டு சமுதாயத்திற்கு விடுத்த ஒரு விண்ணப்பத்தில், இந்தக் கொள்ளைநோய் காலத்தில் மனித சமுதாயம் பிளவுபட்டிருந்தால், இந்தப் பிரச்சனையை வேரறுக்க இயலாது என்று கூறியுள்ளதை, திருப்பீடத்தின் புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர் பணித்துறை ஆகஸ்ட் 25 இச்செவ்வாயன்று தன் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

இந்த உலகத்தை நம் பொதுவான இல்லமாக கருதாமல், சுற்றுச்சூழலைச் சீரழித்தால், வறியோர் பலர் தங்கள் இல்லங்களைவிட்டு வெளியேறும் கட்டாயத்திற்கு உள்ளாவர் என்றும், அதனால் இந்த நோயின் பரவல் இன்னும் கூடும் என்றும் கர்தினால் போ அவர்கள் தன் விண்ணப்பத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செப்டம்பர் 1ம் தேதி முதல் 'படைப்பின் காலம் 2020'

 படைப்பின் காலம் செப்.டம்பர் 1 -அக்டோபர் 04


தற்போதையை உலகம், சமுதாயம், பொருளாதாரம், மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய அனைத்து துறைகளிலும் சமநிலையைப் பெறும் கட்டாயத்தில் உள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 1ம் தேதி துவங்கி, அக்டோபர் 4ம் தேதி முடிய சிறப்பிக்கப்படும் 'படைப்பின் காலம் 2020' என்ற சிறப்பு காலத்திற்கென, ஐரோப்பிய சபைகள் கூட்டமைப்பு, மற்றும் ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் ஒன்றியம் என்ற இரு அமைப்புக்களும் இணைந்து, அறிக்கையொன்றை, ஆகஸ்ட் 25, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளன.

'இந்த பூமிக்கோளத்தின் யூபிலி' என்ற மையக்கருத்துடன், இவ்வாண்டுக்குரிய படைப்பின் காலத்தை சிறப்பிக்குமாறு, ஐரோப்பிய சபைகள் கூட்டமைப்பின் தலைவர், Christian Krieger அவர்களும், ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் ஒன்றியத்தின் தலைவர், கர்தினால் Angelo Bagnasco அவர்களும் அழைப்பு விடுத்துள்ளனர்.

விவிலியத்தில் யூபிலி என்பது, நீதியையும், சமநிலையையும் வலியுறுத்தும் ஒரு காலம் என்று கூறும் இவ்வறிக்கை, தற்போதையை உலகம், சமுதாயம், பொருளாதாரம், மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய அனைத்து துறைகளிலும் சமநிலையைப் பெறும் கட்டாயத்தில் உள்ளது என்று வலியுறுத்தியுள்ளது.

நாம் அனைவரும், ஒருவர், ஒருவரோடும், இந்தப் பூமிக்கோளத்தோடும் எவ்வாறு பிரிக்கமுடியாத உறவில் பிணைக்கப்பட்டுள்ளோம் என்பதை, நம்மை அச்சுறுத்தி வரும் கொள்ளைநோய் நமக்குச் சொல்லித்தருகிறது என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செப்டம்பர் 1ம் தேதி கடைபிடிக்கப்படும் படைப்பின் நாளையும், அக்டோபர் 4ம் தேதி முடிய கடைபிடிக்கப்படும் படைப்பின் காலத்தையும் கிறிஸ்தவ ஒன்றிப்புடன் கூடிய இறைவேண்டல் மற்றும் பிறரன்பு முயற்சிகளில் செலவழிக்குமாறு ஐரோப்பிய சபைகள் கூட்டமைப்பும், ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் ஒன்றியமும் அழைப்பு விடுத்துள்ளன.

சிறுவனின் அறிவு

 ஹாங்காங்கில் புல்வெளியில் ஓய்வெடுக்கும் பசு

பலங்களைக் காட்டி பிரச்சனைகளைச் சீர்செய்ய நினைப்பதைவிட, அந்தந்த நிகழ்வுக்கேற்ப, சாதுரியமாகச் செயல்படுவதே பலன்தரும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

பால்காரர் ஒருவர், தன் பசுவை இழுத்துக்கொண்டு சாலையோரமாக வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். அமைதியாக நடந்து வந்துகொண்டிருந்த பசு, திடீரென அடம்பிடித்து, சாலையின் நடுவில் அமர்ந்துவிட்டது. குறுகலான அச்சாலையில், இரு சக்கர வாகனம் தவிர, வேறு எந்த வாகனமும் செல்லமுடியாதபடி, பசு, சாலையில் அமர்ந்திருந்தது. பால்காரர் எவ்வளவோ முயற்சி செய்தும், அப்பசுவை, இம்மியளவும் நகர்த்த முடியவில்லை.

அவ்வழியே காவலர் ஒருவர் வந்தார். தன்னுடைய முரட்டு மீசையையும் கையிலிருந்த தடியையும் வைத்து மிரட்டிப்பார்த்தார். பால்காரரோடு சேர்ந்து பசுவை இழுத்துப்பார்த்தார். பசு அசையவில்லை. அப்போது வேறு ஒரு நபர், அவ்வழியாக வந்தார். அமர்ந்திருந்த பசுவை, மூவரும் சேர்ந்து இழுத்தனர். முயற்சிகள் தோல்வியில்தான் முடிந்தன. மல்யுத்த போட்டியொன்றில் வெற்றிபெற்று திரும்பிக்கொண்டிருந்த வீரர் ஒருவர், அவ்வழியே வந்தார். மூன்று பேரையும் நகரச் சொல்லிவிட்டு மல்யுத்த வீரர் தனித்து மாட்டை இழுத்துப் பார்த்தார். பசு அசரவில்லை. அப்போது, அவ்வழியே ஒரு சிறுவன் வந்தான். அவன், அருகே வளர்ந்து நின்ற புற்களைப் பறித்துக் கட்டாகக் கட்டி பசுவின் முகத்தருகே காட்டினான். பசு, புல்லை சாப்பிட எழுந்தது. சிறுவன், புல்லை பசுவிடம் காட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். பசுவும் அவன்பின்னே சென்றது.

தங்கள் பலங்களைக் காட்டி பிரச்சனைகளைச் சீர்செய்யச் சிலர் நினைக்கிறார்கள். ஆனால் சில எளிய நிகழ்வுகளில்தான், கற்றல் தானாகவே உருவாகிறது என்பதை, அவர்கள் ஏனோ மறந்து விடுகிறார்கள்.

அரண்மனையும் ஒரு சத்திரமே...

 இந்தியாவில், மைசூரில் அமைந்துள்ள அரண்மனை


தங்கிச் செல்லும் சத்திரங்களை, தங்கள் நிரந்தரமான உறைவிடங்களாகக் கருதுவது, அறிவு முதிர்ச்சி அல்ல!

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

ஆன்மீகத்தில் முதிர்ச்சிபெற்ற ஒரு துறவி, ஒரு நாள், அந்நாட்டின் அரசன் வாழ்ந்துவந்த அரண்மனைக்குள் நுழைந்து, நேரே அரசவைக்குள் சென்றார். அவரைக் கண்ட அரசன், அரியணையிலிருந்து எழுந்து, அவரை வணங்கி, "குருவே, உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார். "மன்னா, நான் இந்தச் சத்திரத்தில் சிலநாள்கள் தங்கவேண்டும்" என்று அத்துறவி சொன்னார்.

துறவி, நகைச்சுவையாகப் பேசுகிறார் என்றெண்ணிய அரசன், ஒரு புன்னகையுடன், "நீங்கள் தாராளமாகத் தங்கலாம். ஆனால், இது, சத்திரம் அல்ல. இது, என் அரண்மனை" என்று கூறினார்.

"மன்னா, இவ்வரண்மனை, உனக்குமுன் யாருக்குச் சொந்தமாக இருந்தது?" என்று துறவி கேட்டதும், "என் தந்தைக்குச் சொந்தமாக இருந்தது" என்று பெருமையுடன் கூறினார் அரசன். துறவி உடனே, "சரி, அவர் இப்போது எங்கே?" என்று கேட்க, "அவர் இறந்துவிட்டார்" என்று சிறிது சோகத்துடன் பதில் சொன்னார்.

"உன் தந்தைக்கு முன், இது யாருக்குச் சொந்தமாக இருந்தது?" என்று துறவி மீண்டும் கேட்டார். அதற்கு அரசர், "இந்த அரண்மனை என் தாத்தாவுக்குச் சொந்தமாக இருந்தது. அவரும் இப்போது இல்லை" என்று பதில் சொன்னார்.

துறவி, அரசனை உற்றுநோக்கி, "இந்தக் கட்டடத்தில் வாழ்ந்தவர்கள் எல்லாரும், ஒரு சில ஆண்டுகள் இங்கு தங்கிவிட்டு, பின்னர் மறைந்துவிட்டனர். அப்படியானால், இந்தக் கட்டடம், சிலகாலம் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள ஒரு சத்திரம்தானே!" என்று கேட்டபோது, மன்னன் மௌனமானார்.

தங்கிச் செல்லும் சத்திரங்களை, தங்கள் நிரந்தரமான உறைவிடங்களாகக் கருதுவது, அறிவு முதிர்ச்சி அல்ல!

Wednesday 26 August 2020

ROBERT JOHN KENNEDY: Tamils in Pakistan: தமிழர்கள் எப்போது, எதற்காக பாக...

ROBERT JOHN KENNEDY: Tamils in Pakistan: தமிழர்கள் எப்போது, எதற்காக பாக...

Tamils in Pakistan: தமிழர்கள் எப்போது, எதற்காக பாகிஸ்தான் சென்றார்கள்? |...

ROBERT JOHN KENNEDY: Keezhadi: எரிந்த நெல் மணிகளும் நுண்கற்கால கருவிகள...

ROBERT JOHN KENNEDY: Keezhadi: எரிந்த நெல் மணிகளும் நுண்கற்கால கருவிகள...

ROBERT JOHN KENNEDY: பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய மேற்கூரை ஓடுகள் கண்...

ROBERT JOHN KENNEDY: பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய மேற்கூரை ஓடுகள் கண்...

ROBERT JOHN KENNEDY: ராஜராஜசோழன்.. கீழடி அகழாய்வு.. இன்னொரு நல்ல செய்தி...

ROBERT JOHN KENNEDY: ராஜராஜசோழன்.. கீழடி அகழாய்வு.. இன்னொரு நல்ல செய்தி...

ROBERT JOHN KENNEDY: 7 இடங்களில் அகழாய்வு - தொல்லியல்துறை அறிக்‍கை | Ex...

ROBERT JOHN KENNEDY: 7 இடங்களில் அகழாய்வு - தொல்லியல்துறை அறிக்‍கை | Ex...

ROBERT JOHN KENNEDY: கீழடி | ஆதிச்சநல்லூர் | கொடுமணல் | தமிழகத்தில் நடக...

ROBERT JOHN KENNEDY: கீழடி | ஆதிச்சநல்லூர் | கொடுமணல் | தமிழகத்தில் நடக...

கீழடி | ஆதிச்சநல்லூர் | கொடுமணல் | தமிழகத்தில் நடக்கும் அகழாய்வின் தொகுப...

7 இடங்களில் அகழாய்வு - தொல்லியல்துறை அறிக்‍கை | Excavation Process | Tam...

ராஜராஜசோழன்.. கீழடி அகழாய்வு.. இன்னொரு நல்ல செய்தி.. | Raja Raja Cholan ...

முதுமக்கள் தாழியில் மனித எலும்புகள் கண்டெடுப்பு | Keeladi Sivakalai | Su...

பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய மேற்கூரை ஓடுகள் கண்டெடுப்பு | Discovery o...

Keezhadi: எரிந்த நெல் மணிகளும் நுண்கற்கால கருவிகளும் Tamil Nadu Excavat...

ROBERT JOHN KENNEDY: Australia, UK bishops on moral concerns of potenti...

ROBERT JOHN KENNEDY: Australia, UK bishops on moral concerns of potenti...:   As several Covid-19 vaccines reach advanced clinical trials, Catholic Bishops in Australia and the UK address an ethical questi...

Australia, UK bishops on moral concerns of potential Covid-19 vaccine

 A scientist working on the Oxford University Covid-19 vaccine


As several Covid-19 vaccines reach advanced clinical trials, Catholic Bishops in Australia and the UK address an ethical question regarding the use of an aborted fetus in the development of one particular candidate.

By Devin Watkins

With the world’s hopes pinned on researchers finding a vaccine to ward off the novel coronavirus, one potential candidate has raised an ethical question for many Catholics.

The AstraZeneca/Oxford University Covid-19 vaccine has reached large-scale clinical trials on humans.

Initial results appear to show that the vaccine produced strong immune responses in participants, according to findings published in The Lancet journal.

Morally-questionable origins

The vaccine makes use of a cell-line (HEK-293) developed in 1973 using embryonic kidney cells grown in tissue culture taken from a voluntarily-aborted human fetus.

That means the historical origins of the vaccine are linked to an aborted baby girl, raising ethical questions about its use. Following its original development, the cell-line has been clinically reproduced, without the need for continued abortions.

Providing uncontroversial alternatives

In response, Bishops from Australia and Britain have called for a Covid-19 vaccine that uses cell-lines not produced through abortion.

Most recently, Australian Archbishop Anthony Fisher wrote an opinion piece on Monday in The Catholic Weekly. He urged the government to make available an “ethically uncontroversial alternative vaccine if one is achieved.”

Australia’s government recently signed a letter of intent to manufacture the AstraZeneca vaccine, if it proves successful.

Physical and moral health

Archbishop Fisher pointed out that “most religious believers are not anti-vaxxers”, and that many Catholics are praying for a Covid-19 vaccine.

But, he added, the World Health Organization has identified 167 candidate vaccines, of which 29 are already in clinical trials.

“If the Government pursues an ethically uncontroversial vaccine [moral concerns] won’t be a problem. If it assures people that no one will be pressured to use such a vaccine or disadvantaged for failing to do so, it won’t be a problem,” he said. “The key, then, is seeking solutions that protect the community’s physical health while also respecting its moral health and offering people choices.”

Archbishop Fisher wrote that, if there is no alternative available, he does not think it would be unethical to use the AstraZeneca vaccine.

“To do so would not be to co-operate in any abortion occurring in the past or the future,” he said. “But I am deeply troubled by it.”

Vaccination vs. complicity?

Earlier, in late July, two UK bishops responsible for Healthcare and Life issues published a paper to address the same topic.

Bishops Paul Mason and John Sherrington expressed the Catholic Church’s support for vaccination to protect society’s weakest members.

They acknowledged “the distress many Catholics experience when faced with a choice of not vaccinating their child or seeming to be complicit in abortion.”

But, they added, “the Church distinguishes between the present unethical sourcing of vaccines and the use of historical cell-lines which were derived from aborted fetuses in the 1970s.”

“We hope that the ethical sourcing of such a vaccine is possible,” they noted.

The UK bishops also cited a note issued by the Pontifical Academy for Life in 2017.

The note expresses the position that “all clinically recommended vaccinations can be used with a clear conscience and that the use of such vaccines does not signify some sort of cooperation with voluntary abortion.”

ROBERT JOHN KENNEDY: ஆகஸ்ட் 25, கந்தமால் நாள்

ROBERT JOHN KENNEDY: ஆகஸ்ட் 25, கந்தமால் நாள்:   தேசிய ஒருமைப்பாட்டு அமைப்பு – கந்தமாலில், 12 ஆண்டுகளுக்குமுன் இடம்பெற்ற வன்முறையில் தப்பிப் பிழைத்தவர்கள், நீதி மற்றும், இழப்பீ...

ஆகஸ்ட் 25, கந்தமால் நாள்

 இந்தியாவில் புலம்பெயர்ந்தவர்கள்


தேசிய ஒருமைப்பாட்டு அமைப்பு – கந்தமாலில், 12 ஆண்டுகளுக்குமுன் இடம்பெற்ற வன்முறையில் தப்பிப் பிழைத்தவர்கள், நீதி மற்றும், இழப்பீட்டு நிதிக்காக இன்றும் காத்திருக்கின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஒடிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறையில் பலியானவர்கள் மற்றும், அதில் உயிர்பிழைத்தவர்கள் நினைவாக, ஆகஸ்ட் 25, இச்செவ்வாயன்று கந்தமால் நாளை இந்திய திருஅவை சிறப்பித்தது.

இந்நாளை முன்னிட்டு, இரு வார நடவடிக்கை ஒன்றைத் தொடங்கியுள்ள, NSF எனப்படும், தேசிய ஒருமைப்பாட்டு அமைப்பு, 12 ஆண்டுகளுக்குமுன் இடம்பெற்ற வன்முறையில் தப்பிப் பிழைத்தவர்கள், நீதி மற்றும், இழப்பீட்டு நிதிக்காக இன்றும் காத்திருக்கின்றனர் என்று கூறுகின்றது.

எழுபது பொது மக்கள் இயக்கங்கள் மற்றும், மனித உரிமை நிறுவனங்களைக் கொண்ட NSF அமைப்பில், அருள்பணியாளர்கள், துறவியர், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் போன்ற, பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.  

கோவிட்-19 கொள்ளைநோய் காரணமாக, இந்நாள்களில், இணையவழி தொடர்புகளை உருவாக்கி, நீதி, அமைதி மற்றும், நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் அறிக்கைகளை வெளியிடுமாறும், வீடுகளில் மெழுகுதிரிகளை ஏற்றுமாறும், அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

2008ம் ஆண்டில், இந்து தீவிரவாதிகள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்திய வன்முறையில், பழங்குடி இன மக்கள் மற்றும், தலித் கிறிஸ்தவர்களின் 395 ஆலயங்கள் மற்றும், வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டன. குறைந்தது நூறு பேர் கொல்லப்பட்டனர். நாற்பது பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டனர், பள்ளிகள், சமுதாயநல மையங்கள், நலவாழ்வு மையங்கள் ஆகியவை அழிக்கப்பட்டன மற்றும் சூறையாடப்பட்டன.

75 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் புலம்பெயர்ந்தனர். பலர், இந்து மதத்தை தழுவ கட்டாயப்படுத்தப்பட்டனர். இது தொடர்பாக, இதுவரை எந்த குற்றவாளியும் சிறைப்படுத்தப்படவில்லை. அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட 3,300 புகார்களில், மிகக் குறைந்த எண்ணிக்கையே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. பல குடும்பங்கள், தங்களின் பூர்வீக இடங்களுக்குத் திரும்ப முடியாமல் உள்ளனர். 

2008ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி, இந்துமதத் தலைவர் Swami ‎Lakshmanananda Saraswati அவர்கள் கொலைசெய்யப்பட்டதற்கு, மாவோயிஸ்ட் புரட்சியாளர்கள் பொறுப்பேற்றதையும் விடுத்து, இந்துமதத் தீவிரவாதிகள், ஆகஸ்ட் 25ம் தேதி, கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறையில் இறங்கினர். (AsiaNews)

ROBERT JOHN KENNEDY: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நீதிமன்ற ஆணைக்கு வரவேற்பு

ROBERT JOHN KENNEDY: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நீதிமன்ற ஆணைக்கு வரவேற்பு:   ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருப்பதால், நாங்கள், தூய்மையான காற்றை அனுபவிக்கிறோம், நீரின் தன்மையும் மேம்பட்டுள்ளது, மழையும் பெய்யத் ...

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நீதிமன்ற ஆணைக்கு வரவேற்பு

 2018ல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு முன்பாக மக்கள்

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருப்பதால், நாங்கள், தூய்மையான காற்றை அனுபவிக்கிறோம், நீரின் தன்மையும் மேம்பட்டுள்ளது, மழையும் பெய்யத் தொடங்கியுள்ளது - தூத்துக்குடி ஆயர் ஸ்டீபன்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உற்பத்தி ஆலைக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றம் சரியாகச் செயல்பட்டிருப்பது, மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கின்றது என்று, தூத்துக்குடி ஆயர் ஸ்டீபன் அந்தோனி பிள்ளை அவர்கள் கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு விதித்த தடை உத்தரவு நீடிக்கும் என்றும், அந்த ஆலையை, மீண்டும் திறக்க அனுமதி இல்லை என்றும், சென்னை உயர்நீதிமன்றம், இம்மாதம் 18ம் தேதி வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து யூக்கா செய்தியிடம் கருத்து தெரிவித்த, ஆயர் ஸ்டீபன் அவர்கள், மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் மாசடைய, இந்த ஆலை காரணமாக இருந்தது என்று கூறினார்.

இந்த ஆலை நிர்வாகிகள், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அக்கறையற்று இருந்ததால், அதிலிருந்து வெளியேறிய கழிவுகளால், நிலத்தடி நீர், மண்வளம், சூழலியல் போன்ற அனைத்தும் மாசடைந்தன என்றும், ஆயர் ஸ்டீபன் அவர்கள் தெரிவித்தார்.

இந்த மாசுகேட்டின் தாக்கம் எவ்வளவு இருந்ததென்றால், அதனால் மழை சரியாகப் பெய்யவில்லை, பெருமளவான மக்கள், புற்றுநோய், மூச்சுத்திணறல், தோல் வியாதிகள், காசநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் தாக்கப்பட்டனர் என்றும், தூத்துக்குடி ஆயர் சுட்டிக்காட்டினார்.

இந்த ஆலை மூடப்பட்டிருப்பதால், நாங்கள், தூய்மையான காற்றை அனுபவிக்கிறோம், நீரின் தன்மையும் மேம்பட்டுள்ளது, மழையும் பெய்யத் தொடங்கியுள்ளது என்றும் கூறிய ஆயர் ஸ்டீபன் அவர்கள், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கமுடியாது என்று, சென்னை நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை, தான் முழுமனதோடு வரவேற்பதாகக் கூறினார். 

இந்த ஆலையை மூட வலியுறுத்தி, அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு கத்தோலிக்கர் உட்பட, 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும், ஓர் அருள்பணியாளர் உள்ளிட்ட, 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இதையடுத்து, 2018ம் ஆண்டு மே மாதத்தில், இந்த ஆலையை மூட உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து, அந்த ஸ்டெர்லைட் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆகஸ்ட் 18ம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்த ஆலையை மீண்டும் திறப்பதற்கு அனுமதிக்க இயலாது என்று தீர்ப்பு வழங்கினர். 

இலண்டனை தலைமையிடமாகக் கொண்ட வேதாந்தா குழுமம், 1994ம் ஆண்டில், தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையைத் தொடங்கியது. (UCAN)

பெலாருஸ் பேராயர் Kondrusiewicz, பிரதமர் சந்திப்பு

 பெலாருஸ் நாட்டில் எதிர்க்கட்சி ஊர்வலம்


மேய்ப்புப்பணியாளர்களாகிய நாங்கள், யாரையும் தீர்ப்பிடுவதற்காகச் செயல்படவில்லை, மாறாக, குற்றம் புரிந்தவர்கள் அனைவரும் மனம் மாறவேண்டும் என்று அழைப்புவிடுப்பதற்காகப் பணியாற்றுகிறோம் - பெலாருஸ் பேராயர் Kondrusiewicz

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பெலாருஸ் நாட்டில் அரசுத்தலைவருக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே நிலவும் மோதல்களுக்கு, அமைதியான முறையில் தீர்வு காணும் நோக்கத்தில், அந்நாட்டு கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர், பெலாருஸ் நாட்டின் இடைக்கால பிரதமரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பெலாருஸ் தலைநகர் மின்ஸ்க் பேராயர் Tadeusz Kondrusiewicz அவர்கள், இடைக்கால பிரதமர் Yuri Karaev அவர்களைச் சந்தித்துப் பேசுவதற்கு விடுத்த விண்ணப்பங்கள் பலமுறை மறுக்கப்பட்டிருந்தாலும், இறுதியாக, ஆகஸ்ட் 21ம் தேதி, இவ்விருவரும் சந்தித்து கலந்துரையாடினர் என்று, அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்நாட்டில் இம்மாதம் 9ம் தேதி நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து, எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் தொடர்ந்து நடத்திவரும் போராட்டங்கள் எதுவும் வன்முறையைத் தூண்டவில்லை, ஆயினும், போராட்டதாரர்கள் வன்முறையால் ஒடுக்கப்படுகின்றனர் என்று, பேராயர் Kondrusiewicz அவர்கள், பிரதமரிடம் எடுத்துரைத்தார்.

எதிர்க்கட்சியாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பது, பொதுமக்கள் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருப்பது போன்ற விவகாரங்கள் குறித்து பரிசீலனை செய்வதற்கு, பலதரப்புக்களைக்கொண்ட குழு ஒன்று உருவாக்கப்படுமாறும், பேராயர் Kondrusiewicz அவர்கள் பரிந்துரைத்தார்.

சிறையில் உள்ளவர்களை, அருள்பணியாளர்கள் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படவேண்டும் என்றும், மேய்ப்புப்பணியாளர்களாகிய நாங்கள், யாரையும் தீர்ப்பிடுவதற்காகச் செயல்படவில்லை, மாறாக, குற்றம் புரிந்தவர்கள் அனைவரும் மனம் மாறவேண்டும் என்று அழைப்புவிடுப்பதற்காகப் பணியாற்றுகிறோம் என்பதையும், பேராயர் Kondrusiewicz அவர்கள் தெளிவுபடுத்தினார்.

கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் அருள்பணியாளர்கள்

மேலும், பெலாருஸ் நாட்டில், ஏறத்தாழ 26 ஆண்டுகளாக தொடர்ந்து அரசுத்தலைவர் பதவி வகிக்கும் அலெக்ஸாண்டர் லூகஷென்கோ அவர்கள், மக்களின் அரசுத்தலைவர் இல்லை என்று சொல்லி, கத்தோலிக்க மற்றும், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை அருள்பணியாளர்கள், அமைதியான போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இதற்கிடையே, பேராயர் Kondrusiewicz அவர்கள் பரிந்துரைத்த, பலதரப்புக்களை உள்ளடக்கிய குழு ஒன்று உருவாக்கப்படுவதற்கு இசைவு தெரிவிக்கப்பட்டிருப்பதாக, பெலாருஸ் நாட்டின் ONT அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது என, ஆசியச் செய்தி கூறுகிறது.

1991ம் ஆண்டில் சோவியத் யூனியன் கூட்டமைப்பு கலைந்ததையடுத்து, 1994ம் ஆண்டில் பதவிக்கு வந்த லூகஷென்கோ அவர்கள், ஐரோப்பாவின் ``கடைசி சர்வாதிகாரி'' என்று, ஊடகங்களால் வருணிக்கப்படுகிறார். (AsiaNews)

ROBERT JOHN KENNEDY: கொழும்புவின் புதிய துணை ஆயர் மீது மிகுந்த நம்பிக்கை

ROBERT JOHN KENNEDY: கொழும்புவின் புதிய துணை ஆயர் மீது மிகுந்த நம்பிக்கை:   53 வயது நிரம்பிய அருள்பணி இரஞ்சித் அவர்கள், ஆகஸ்ட் 29, வருகிற சனிக்கிழமையன்று, Kotahena புனித லூசியா பேராலயத்தில், ஆயராகத் திர...

கொழும்புவின் புதிய துணை ஆயர் மீது மிகுந்த நம்பிக்கை

 இலங்கை கோவில் ஒன்றில்

53 வயது நிரம்பிய அருள்பணி இரஞ்சித் அவர்கள், ஆகஸ்ட் 29, வருகிற சனிக்கிழமையன்று, Kotahena புனித லூசியா பேராலயத்தில், ஆயராகத் திருநிலைப்படுத்தப்படவுள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இலங்கையில் கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள, தமிழரான அருள்பணி  ஆன்டன் இரஞ்சித் பிள்ளைநாயகம் (Anton Ranjith Pillainayagam) அவர்கள், அந்நாட்டின் வடக்கிற்கும், தெற்கிற்கும் இடையே நெருங்கிய உறவு வளர ஊக்குவிப்பார் என்று, கத்தோலிக்கர் எதிர்பார்த்துள்ளனர்.

53 வயது நிரம்பிய அருள்பணி  இரஞ்சித் அவர்கள், ஆகஸ்ட் 29, வருகிற சனிக்கிழமையன்று, Kotahena புனித லூசியா பேராலயத்தில், ஆயராகத் திருநிலைப்படுத்தப்படவுள்ளார்.

சிங்களம், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையும் சரளமாகப் பேசக்கூடிய அருள்பணி இரஞ்சித் அவர்கள், புனித ஜோசப் வாஸ் தேவ தர்ம நிகேதானாயா இறையியல் நிறுவனத்தில், தமிழ்ப் பிரிவுக்குத் தலைவராக, 2006ம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.

அருள்பணி இரஞ்சித் அவர்கள், கொழும்பு உயர்மறைமாவட்டத்திற்கு, துணை ஆயராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து, யூக்கா செய்தியிடம் கூறிய, தேசிய சமூகத்தொடர்பு அமைப்பின் இயக்குனரான அருள்பணி Lal Pushpadewa Fernando அவர்கள், புதிய ஆயர், தனது இளமைத்துடிப்பு மற்றும், தொலைநோக்கு கருத்துக்களால், கொழும்பு உயர்மறைமாவட்டத்திற்கு, ஒரு சொத்தாக இருப்பார் என்று கூறினார்.

இந்த நியமனம் குறித்து கருத்து தெரிவித்த, தமிழ் கத்தோலிக்க ஆசிரியர் ஆர்.ஷண்முகம் அவர்கள், இலங்கையில் பல ஆண்டுகள் நடைபெற்ற உள்நாட்டுப் போரால், வடக்கிற்கும், தெற்கிற்கும் இடையே முறிந்திருந்த உடன்பிறந்த உணர்வு, மீள்கட்டமைக்கப்பட, அருள்பணி இரஞ்சித் அவர்களுக்கு, நல்லதொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

இலங்கையில் ஏறத்தாழ 26 ஆண்டுகள் நடைபெற்ற உள்நாட்டுப் போரால், நாட்டின் பொருளாதாரமும், சுற்றுச்சூழலும், மக்களும் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டனர். இந்தப் போரில், குறைந்தது நாற்பதாயிரம் அப்பாவி மக்கள் இறந்தனர் என்று ஐ.நா. கூறும்வேளை, இவ்வெண்ணிக்கை, ஒரு இலட்சத்திற்கும் அதிகம் என்று, சில தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையே, இலங்கையில் அரசுத்தலைவரின் பதவிக்காலத்தை வரையறுக்கும் சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவதற்கு, அந்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அமைச்சரவை, வல்லுனர்களைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கியுள்ளது என்று, ஆசியச் செய்தி கூறுகிறது.

Tuesday 25 August 2020

ROBERT JOHN KENNEDY: India’s Catholic Church opens centre for Covid-19 ...

ROBERT JOHN KENNEDY: India’s Catholic Church opens centre for Covid-19 ...:   The first medical facility of the Catholic Church of India exclusively for Covid-19 patients has been inaugurated in the southe...

ROBERT JOHN KENNEDY: Philippine national shrine spiritually twinned wit...

ROBERT JOHN KENNEDY: Philippine national shrine spiritually twinned wit...:   One of the oldest shrines to St Anthony outside of Europe is granted a new spiritual relationship with the Basilica dedicated t...

ROBERT JOHN KENNEDY: US Bishops praise recent pro-life gains

ROBERT JOHN KENNEDY: US Bishops praise recent pro-life gains:   In two separate statements released on Thursday, the U.S. Bishops praise two different announcements regarding abortion. ...

ROBERT JOHN KENNEDY: 12th anniversary of India’s anti-Christian violenc...

ROBERT JOHN KENNEDY: 12th anniversary of India’s anti-Christian violenc...:   Indian Christians are observing Kandhamal Day on Tuesday, the 12th anniversary of the outbreak of the unspeakable atrocities th...

India’s Catholic Church opens centre for Covid-19 cases

  St. John's Hospital Covid Care Centre in Bengaluru, India.


The first medical facility of the Catholic Church of India exclusively for Covid-19 patients has been inaugurated in the southern city of Bengaluru (formerly Bangalore).

By Robin Gomes

A care centre for Covid-19 patients at the prestigious St John’s Medical College of the Catholic Bishops’ Conference of India, was blessed and inaugurated by Archbishop Peter Machado of Bangalore on Aug. 17. 

The St. John’s Hospital Covid Care Centre has 48 isolation beds, a 24-bed intensive treatment unit (ITU) and a 24-bed intensive care unit (ICU). 

St. John's Hospital for poor and needy

“The Church is always at the forefront to help the poor and the needy, whether in the education or health fields, and it is an opportunity to give our selfless service to our society and nation,” Archbishop Machado told UCA News.

He pointed out that St John’s Medical College has taken “a leading step to provide healthcare to people during these crucial times”, and thanked all who made the new facility possible. 

The medical college has given free treatment worth over US$ 67,000 in the last five months in tackling the virus.

By the end of July, it had screened more than 5,000 fever patients, 2,000 patients in the emergency department, treated more than 600 patients on the wards and taken care of some 500 critically ill patients in the ICU.

Father Paul Parathazham, director of St. John’s National Academy of Health Sciences, that includes the college and other units, noted that despite financial constraints, they have been providing excellent Covid care, which is rare among private hospitals.  “It is the best thing we could provide during these difficult times,” he told to UCA News.

The new Covid Care Centre, he said, is located away from the main hospital but is well linked, so that non-Covid patients can access the outpatient department area, laboratory and pharmacy without coming into contact with infected patients.

Church fights Covid stigma, ostracism

The priest lamented that Covid-19 patients are stigmatized, ostracized and even physically attacked but the college has risen to the challenge of providing affordable healthcare to Covid-s9patients.

Father Parathazham expressed gratitude Azim Premji Philanthropic Initiatives which helped establish the ICU and Titan Company Ltd. funded the 48-bed isolation ward at the Covid Care Centre.

St. John's National Academy of Health Sciences

St. John's Medical College was established in 1963 by the CBCI with the aim of training healthcare personnel committed to serving the poor in the margins of society. 

Later it was incorporated into St. John's National Academy of Health Sciences, which includes a state-of-the-art hospital with 1350 beds for all medical and surgical departments including super-speciality departments.  It includes a college for nursing, a research institute, and an Institute of Health Care Management and Paramedical Studies.

The motto of St. John's National Academy of Health Sciences -“He shall live because of me” - is a constant reminder to its staff and students that they are God's collaborators in the care of human lives. and are instruments of healing, dependent on the divine.

Globally, India has the third-highest caseload of Covid-19 after the United States and Brazil.  Its 55,794 deaths is the fourth-highest in the world.   India's Health Ministry reported 69,878 new cases on Saturday, bringing the total to 2,975,701. The nation of 1.3 billion has been reporting the biggest daily rise in cases for 18 consecutive days. 

Philippine national shrine spiritually twinned with Basilica of St. Anthony in Padua

 Basilica of St. Anthony in Padua, Italy


One of the oldest shrines to St Anthony outside of Europe is granted a new spiritual relationship with the Basilica dedicated to the Saint in Padua, Italy.

By Vatican News

With a desire to “spread more the devotion to Saint Anthony of Padua,” Asia’s first church under the patronage of the Portuguese saint has been ‘spiritually twinned’ with the Pontifical Basilica of St. Anthony in Padua, Italy.

This privilege, approved by the Franciscan friars of the Basilica on 6 August, bestows upon the National Shrine of St. Anthony of Padua in Laguna, Philippines a certain "bond of affinity" with the Paduan Basilica, where the tomb and the incorrupt tongue and other relics of St. Anthony are venerated.

Saint Anthony of Padua
Saint Anthony of Padua

The spiritual bond also means that all the indulgences attached to the Basilica of Padua can also be obtained, under the same conditions, at the Laguna shrine. 

The Pontifical Basilica of Saint Anthony of Padua is one of the eight international shrines recognized by the Holy See. Construction of the Basilica began around 1232 and was completed towards the end of that century. It is dedicated to St. Anthony, who was born in Lisbon, Portugal in 1195 and died in Padua, Italy on 13 June 1231.

Reacting to the development, the rector of the Basilica, Fr. Oliviero Svanera said that they will support the pastoral work of the Laguna National Shrine “in communion of intention and fraternity.”

National Shrine of St. Anthony of Padua, Philippines

The Laguna National Shrine was built in 1578. It is an important pilgrimage site, visited annually by thousands of pilgrims seeking to honour the much-loved Saint and requesting his intercession for their needs.

On 9 July 2002, the church was made a diocesan shrine and it was subsequently elevated as a national shrine, the first in the San Pablo Diocese, on 23 April 2019. 

The National Shrine houses posseses several relics of Saint Anthony, and houses the the country’s fourth oldest bell.

US Bishops praise recent pro-life gains

 Mother and newborn


In two separate statements released on Thursday, the U.S. Bishops praise two different announcements regarding abortion.

On Tuesday, two reports were issued in the United States that affect the government's policies on abortion. The United States Conference of Catholic Bishops (USCCB) responded to both in two separate statements on Thursday. Both were written by Kansas City, Kansas, Archbishop Joseph Naumann in his capacity as Chairman of the USCCB Committee on Pro-Life Activities.

Ethics of using fetal tissue

In one statement Archbishop Naumann commended the Trump administration after the National Institutes of Health Human Fetal Tissue Research Ethics Advisory Board issued its report.

This report was issued on Tuesday and contains responses to 14 research proposals on the topic of the ethics of human fetal tissue research. The 15-member board was established this past February by the Department of Health and Human Services. Each of the 14 proposals was voted on by the members of the board. The board’s members voted that funds be withheld in 13 of the 14 proposals.

Archbishop Naumann voices praise for the direction in which the NIH is moving. That direction, he says, is one that “shows greater consideration for medical ethics in research, and greater respect for innocent human life. It is neither ethical nor necessary to further violate the bodies of aborted babies by commodifying them for use in medical research. The victims of abortion deserve the same respect as every other human person. We are grateful that the Administration is following through on its commitment to end federal funding of research using aborted fetal tissue.”

US and foreign NGOs

In a separate statement also released on Thursday, Archbishop Naumann commended the Trump Administration for a successful implementation of the “Protecting Life in Global Health Assistance” (PLGHA) policy.

In January 2017, President Trump reinstated the “Mexico City Policy” regarding U.S. international aid provided for family-planning assistance. It’s name was changed to the current Protecting Life in Global Health Assistance Policy. The goal of the policy is that U.S. taxpayer money not be used to “support foreign non-governmental organizations that perform or actively promote abortion as a method of family planning.”

Results regarding the policy’s implementation were released by the U.S. Department of State on Tuesday. 95% of NGOs are shown to be in compliance with the PLGHA.

Archbishop Naumann, on behalf of the US Bishops, praised the Trump Administration “for ensuring that U.S. global health assistance funding actually promotes health and human rights, and doesn’t undermine them by promoting abortion. Killing innocent and defenseless unborn children through abortion is not health care. Abortion violates an unborn child’s most basic human right, the right to life, and it also can wound the mother emotionally and physically. Americans recognize this injustice and an overwhelming majority of them oppose giving tax dollars to organizations that are more committed to promoting abortion than providing health services.”

12th anniversary of India’s anti-Christian violence in Kandhamal

 The displaced of Kandhamal, India.


Indian Christians are observing Kandhamal Day on Tuesday, the 12th anniversary of the outbreak of the unspeakable atrocities that continued unabated for weeks and months. Civil society organizations have appealed for support for victims and survivors.

By Robin Gomes

A group of civil society organizations in India has called for support for a two-week campaign to remember the victims and survivors of the anti-Christian violence 12 years ago, saying many of them are still awaiting justice and compensation.

Hell broke loose on the Christians of Kandhamal on August 25, 2008, with Hindu extremists making them scapegoats for the August 23 murder of Hindu leader Swami ‎Lakshmanananda Saraswati, even though Maoist rebels ‎claimed his assassination.

The National Solidarity Forum (NSF), a network of 70 civil society and rights organizations, among them activists, priests, religious, lawyers, Christians, Hindus and people of other faiths, has called for a fortnight of commemoration of what they describe as the largest organized communal attacks on Christians “in the history of India in the past three centuries.”

Upholding India’s democratic and pluralistic values

In a press release, NSF said the commemoration is in support of the victims and survivors, whose freedom of conscience and religion has been violated. Organizers intend to promote India’s democratic and pluralistic values seen as best practices and as envisaged by the Indian Constitution. 

Due to the restrictions of Covid-19 health protocols, the forum encourages people to organize webinars, issue declarations, hold candle-lit memorials at home for justice, peace and harmony. It also recommends screening of films, videos, photo and art exhibitions on the Kandhamal atrocities, utilizing the social and mainstream media, to spread awareness and information on the event and related issues. 

“We are sure that if all humanitarian forces join hands to build peace, justice and harmony in this country,” the NSF press statement said, “we will be able to achieve results in these dark times and protect the values of Indian Constitution so that no such violence takes place in India.”

Toll of violence

The NSF statement also recounted the heavy loss of property and life in the 2008 anti-Christian violence in Kandhamal. As many as 395 churches and places of worship of Adivasi (indigenous) and Dalit (low caste) Christians were destroyed. Some 6,500 houses were destroyed. More than 100 people were killed, 40 women were subjected to rape, molestation and humiliation and several educational, social service and health institutions were destroyed and looted.

While more than 75,000 people have been displaced, several cases of forced conversion to Hinduism have also been reported.

Justice denied

Of the more than 3,300 complaints filed with the police during the 2008 communal violence, only some 820 were registered. Of these 820, only 518 cases were chargesheeted, while others were declared false. Only 247 of the 518 cases were disposed of. The rest of the cases are pending before the sessions and magistrate’s courts. Many of the accused have been acquitted. 

“None of the criminals responsible for destruction are in jail today,” the NSF pointed out. “The murderers, rapists, looters and destroyers are today running scot-free.” Instead, 7 innocent persons in jail for 11 years with fabricated cases, are now on bail.

The National Solidarity Forum also drew attention to the Dalits, Adivasis, minorities and other marginalised sections of India, saying they continue to face violence and injustice. Of the 122 cases of violence against Christians, only 23 were registered as of June 2020. The NSF noted that attacks on Christians have “increased consistently” since 2014.

ROBERT JOHN KENNEDY: நம்மை முழுமையாக கடவுள் முன் வைப்பதே செபம்

ROBERT JOHN KENNEDY: நம்மை முழுமையாக கடவுள் முன் வைப்பதே செபம்:   திருத்தந்தை : நில நடுக்கங்களாலும், நல்வாழ்வைத் தேடிய பயணத்திலும் உயிரிழந்தோர் குறித்து சிறப்பான விதத்தில் நினைவுகூர்வோம். ...

ROBERT JOHN KENNEDY: ஏழைகளுக்கென நம் கதவுகள் எப்போதும் திறந்திருக்கட்டும்

ROBERT JOHN KENNEDY: ஏழைகளுக்கென நம் கதவுகள் எப்போதும் திறந்திருக்கட்டும்:   திருத்தந்தை : வளமான வாழ்வை நோக்கிய பயணத்தின்போது, தங்கள் உயிரை இழந்துள்ள ஏழை குடியேற்றதாரர் குறித்து நம் ஒவ்வொருவரிடமும் இறைவன்...

ROBERT JOHN KENNEDY: மலாவி நாட்டு மருத்துவமனைக்கு திருத்தந்தை உதவி

ROBERT JOHN KENNEDY: மலாவி நாட்டு மருத்துவமனைக்கு திருத்தந்தை உதவி:   உலகெங்கும் மக்களின் உயிர்வாழ்வுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள கொரோனா கொள்ளைநோய் குறித்து, திருத்தந்தை உண்மையிலேயே கவலைகொண்டுள்ளா...

ROBERT JOHN KENNEDY: மதங்களின் பெயரால் இடம்பெறும் வன்முறைகள் நிறுத்தப்பட..

ROBERT JOHN KENNEDY: மதங்களின் பெயரால் இடம்பெறும் வன்முறைகள் நிறுத்தப்பட..:   எவராலும் பாதுகாக்கப்படவேண்டிய அவசியம் கடவுளுக்கு கிடையாது, மேலும், மக்களை பயங்கரவாதத்தால் அச்சுறுத்துவதற்கு, தம் பெயர் பயன்படுத...

ROBERT JOHN KENNEDY: மொசாம்பிக் ஆயருக்கு ஆறுதல் தொலைப்பேசி அழைப்பு

ROBERT JOHN KENNEDY: மொசாம்பிக் ஆயருக்கு ஆறுதல் தொலைப்பேசி அழைப்பு:   தேவைப்படும் மனிதாபிமான உதவிகளுக்கு, கர்தினால் Michael Czerny அவர்களைத் தொடர்புகொள்ள, திருத்தந்தை தன்னை ஊக்கப்படுத்தினார் – மொசா...

ROBERT JOHN KENNEDY: அர்ஜென்டீனா பங்குத்தளம் ஒன்றிற்கு திருத்தந்தை மடல்

ROBERT JOHN KENNEDY: அர்ஜென்டீனா பங்குத்தளம் ஒன்றிற்கு திருத்தந்தை மடல்:   புதன் மறைக்கல்வியுரைக்குப்பின் மக்களைச் சந்திக்கும்போது, குழந்தைவரத்திற்காக செபிக்கும்படி தன்னிடம் கேட்கும் தம்பதியரிடம், புனித...

ROBERT JOHN KENNEDY: கோவிட்-19, 10 கோடிப் பேர் வறுமைகோட்டிற்குகீழ்

ROBERT JOHN KENNEDY: கோவிட்-19, 10 கோடிப் பேர் வறுமைகோட்டிற்குகீழ்:   சமுதாய அநீதி, வாய்ப்புகள் வழங்கப்படுவதில் சமத்துவமின்மை, புறக்கணிப்பு, நலிந்தோருக்குப் போதுமான பாதுகாப்பின்மை போன்ற பெரிய நுண்க...

நம்மை முழுமையாக கடவுள் முன் வைப்பதே செபம்

 திருத்தந்தை பிரான்சிஸ்


திருத்தந்தை : நில நடுக்கங்களாலும், நல்வாழ்வைத் தேடிய பயணத்திலும் உயிரிழந்தோர் குறித்து சிறப்பான விதத்தில் நினைவுகூர்வோம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

2016ம் ஆண்டு, ஆகஸ்ட் 24ம் தேதி, இத்தாலியின் மையப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையும், மெக்சிக்கோவில், 10 ஆண்டுகளுக்கு முன்னர், ஆகஸ்ட் 24ம் தேதியன்று, 72 குடியேற்றத்தார்கள் கொல்லப்பட்டதையும் நினைவுகூரும் வண்ணம், இத்திங்களன்று, மூன்று டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய இத்தாலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, அதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காகவும், அவர்கள் நம்பிக்கையிலும், ஒருமைப்பாட்டிலும் முன்னோக்கிச் செல்லவேண்டும் என்பதற்காகவும், தான் செபிப்பதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

மற்றொரு டுவிட்டர் செய்தியில், மெக்சிக்கோவில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆகஸ்ட் 24ம் தேதியன்று, 72 குடியேற்றத்தார்கள் கொல்லப்பட்டதை நினைவுகூர்ந்து, இன்றும் அந்நிகழ்வு குறித்த உண்மைக்காகவும் நீதிக்காகவும் காத்திருக்கும் குடும்பங்களுடன் ஒருமைப்பாட்டை வெளியிடுவதாகவும்,  நம்பிக்கையின் பயணத்தின்போது உயிரிழந்த குடியேற்றத்தார்கள் குறித்து இறைவன் நம்மிடம் கணக்கு கேட்பார், எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

இத்திங்களன்று திருத்தந்தை வெளியிட்ட மூன்றாவது டுவிட்டர் செய்தியில், எவ்வித மாயத்தோற்றங்களும், சாக்குபோக்குகளும், நியாயப்படுத்தல்களும் இன்றி, நம்மை முழுமையாக கடவுள் முன் வைப்பதே செபம் ஆகும். ஏனெனில், சாத்தானிடம் இருந்தே இருளும் பொய்யும் பிறக்கின்றன, கடவுளிடமிருந்தோ ஒளியும் உண்மையும் வருகிறது, என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

மேலும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தி, வட மொசாம்பிக்கில் வன்முறைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுடன் ஒருமைப்பாட்டை அறிவிப்பதாக இருந்தது.

வட மொசாம்பிக்கின் Cabo Delgado மக்களுடன் என் அருகாமையை வெளியிடுகிறேன், கடந்த ஆண்டு, இந்த அன்புநிறை நாட்டில் திருத்தூது பயணம் மேற்கொண்ட நினைவலைகளுடன், இந்த மக்களை நினைவுகூர்கிறேன், என தன் முதல் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டாரோ, கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குறித்த அக்கறையுடன், 'இந்நோய்க்கு பலியானவர்கள் பற்றியும், எண்ணற்ற சுயவிருப்பப்பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆண், பெண் துறவறத்தார், அருள்பணியாளர்கள்,ஆகியோரையும், இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களையும் நினைகூர்வோம்’ என்ற அழைப்பை விடுப்பதாக இருந்தது.

ஏழைகளுக்கென நம் கதவுகள் எப்போதும் திறந்திருக்கட்டும்

 மூவேளை செபவுரையின்போது -230820


திருத்தந்தை : வளமான வாழ்வை நோக்கிய பயணத்தின்போது, தங்கள் உயிரை இழந்துள்ள ஏழை குடியேற்றதாரர் குறித்து நம் ஒவ்வொருவரிடமும் இறைவன் கணக்கு கேட்பார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தங்கள் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் துன்புறுத்தப்படுவோர் குறித்தும், கொரோனா தொற்று நோயால் துன்புறுவோர் குறித்தும், 4 ஆண்டுகளுக்கு  முன்னர் ஆகஸ்ட் 24ம் தேதி மத்திய இத்தாலியில் இடம்பெற்ற நிலஅதிர்வினால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்தும், இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் நினைவுபடுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்காகவும் செபிக்கும்படி அழைப்பு விடுத்தார்.

தாங்கள் கொண்டிருக்கும் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்களை  நினைவுகூரும் அனைத்துலக நாள், ஆகஸ்ட் 22, கடந்த சனிக்கிழமை சிறப்பிக்கப்பட்டதையொட்டி, தன் ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின், இவர்களுக்காக செபிக்கும்படி அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொரோனா கொள்ளைநோய்க்கு பலியானவர்கள், மற்றும், வளமான வாழ்வு நோக்கிய பயணத்தில் உயிரிழந்த குடியேற்றத்தாரர் குறித்தும் அக்கறையை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார்.

இன்றைய உலகில் எண்ணற்றோர் தங்கள் மத நம்பிக்கையின் காரணமாக, வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுவது தொடர்கிறது என்ற கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களுக்காக செபிப்பது, மற்றும், அவர்களுடன் ஒருமைப்பாட்டை அறிவிப்பதன் வழியாக, நம் ஆதரவை வெளியிடுவோம் என கேட்டுக்கொண்டார்.

வளமான வாழ்வை நோக்கிய பயணத்தின்போது, தங்கள் உயிரை இழந்துள்ள ஏழை குடியேற்றதாரர் குறித்து நம் ஒவ்வொருவரிடமும் இறைவன் கணக்கு கேட்பார் என்ற எச்சரிக்கையையும் விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பல்வேறு நாடுகளில் இருந்து வளமான வாழ்வைத்தேடி செல்லும் வழியில் மெக்சிகோவின் சான் பெர்னாண்டோ என்ற இடத்தில் 72 குடியேற்றதாரர்கள், 10 ஆண்டுகளுக்கு முன்னர், ஆகஸ்ட் 24ம் தேதி கொலைசெய்யப்பட்டதையொட்டி, குடியேற்றதாரர் குறித்த தன் எண்ணங்களை பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏழ்மையால் வாடும் மக்களுக்கென நம் சமூகங்களின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஆகஸ்ட் 24ம் தேதி, மத்திய இத்தாலியில் இடம்பெற்ற நிலநடுக்கம் குறித்தும் தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதனால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தன் ஒருமைப்பாட்டைத் தெரிவிப்பதுடன், பாதிப்புகளைச் சீரமைக்கும் பணிகள், விரைவில் நிறைவுறும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.

மலாவி நாட்டு மருத்துவமனைக்கு திருத்தந்தை உதவி

 பேராயர்  Ziyaye அவர்கள், உயிர்காக்கும் சுவாசக்கருவியை வழங்குகிறார்


உலகெங்கும் மக்களின் உயிர்வாழ்வுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள கொரோனா கொள்ளைநோய் குறித்து, திருத்தந்தை உண்மையிலேயே கவலைகொண்டுள்ளார் – மலாவி பேராயர் Tarcisius Ziyaye

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 உருவாக்கியுள்ள அவசரகாலச் சூழலில், துன்புறும் வறிய நாடுகளிலுள்ள மக்களுக்கு, தொடர்ந்து உதவி வருகின்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்போது மலாவி நாட்டு மருத்துவமனை ஒன்றிற்கும், மருத்துவ கருவி ஒன்றை வழங்கியுள்ளார் என்று, ஆகஸ்ட் 22, இச்சனிக்கிழமையன்று வத்திக்கான் செய்தித்துறை கூறியுள்ளது.

தென்கிழக்கு ஆப்ரிக்க நாடாகிய மலாவியின், Lilongwe நகரில், அசிசி நகர், புனித பிரான்சிஸ் மறைப்பணியாளர் அருள்சகோதரிகள் நடத்தும் Likuni மருத்துவமனைக்கு, உயிர்காக்கும் சுவாசக்கருவி ஒன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நன்கொடையாக வழங்கியுள்ளார்.

மலாவி மற்றும், சாம்பியா நாடுகளின் திருப்பீட தூதர், பேராயர் Gianfranco Gallone அவர்கள், இந்த சுவாசக்கருவியை, திருத்தந்தையின் பெயரில் வழங்கியுள்ளார்.

திருத்தந்தை வழங்கியுள்ள, உயிர்காக்கும் சுவாசக்கருவி குறித்து, மலாவி ஆயர் பேரவையின் blogல் செய்தி வெளியிட்டுள்ள, Lilongwe பேராயர் Tarcisius  Ziyaye அவர்கள், உலகெங்கும் மக்களின் உயிர்வாழ்வுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள இந்த கொள்ளைநோய் குறித்து, திருத்தந்தை உண்மையிலேயே கவலைகொண்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ள வறிய நாடுகள் மற்றும், மக்களுக்கு உதவுவதோடு, அவர்களுக்காக திருத்தந்தை செபித்து வருகின்றார் என்றும், மலாவி நாட்டிற்காகவும் திருத்தந்தை செபிக்குமாறு தான் கேட்டிருப்பதாகவும், பேராயர்  Ziyaye அவர்கள் கூறியுள்ளார்.

மேலும், Likuni மறைத்தள மருத்துவமனை இயக்குனர் அருள்சகோதரி Agnes Lungu அவர்களும், திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

உலகில் மிக வறிய நாடுகளில் ஒன்றான மலாவியில், இதுவரை 4.988 பேர் கொரோனா கொள்ளைநோயால் தாக்கப்பட்டுள்ளனர், இவர்களில் 2.576 பேர் குணமடைந்துள்ளனர் மற்றும், 156 பேர் இறந்துள்ளனர்.

Likuni மறைத்தளம் என்ற பெயரில் இயங்கும், இந்த மருத்துவமனையில், ஒவ்வோர் ஆண்டும், 45,000த்திற்கும் அதிகமான நோயாளிகளுக்கும், அதோடு, குறைந்த ஊதியத்தில் வாழ்கின்ற, சாலையோர விற்பனையாளர்கள், விவசாயிகள் போன்றோருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகின்றது.  தலைநகர் Lilongweவிலிருந்து 9 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள இந்த மருத்துவமனை 231 படுக்கைகள் கொண்டது.

மதங்களின் பெயரால் இடம்பெறும் வன்முறைகள் நிறுத்தப்பட..

 திருத்தந்தை பிரான்சிஸ்


எவராலும் பாதுகாக்கப்படவேண்டிய அவசியம் கடவுளுக்கு கிடையாது, மேலும், மக்களை பயங்கரவாதத்தால் அச்சுறுத்துவதற்கு, தம் பெயர் பயன்படுத்தப்படுவதையும், அவர் விரும்பவில்லை - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வெறுப்பு, வன்முறை, பயங்கரவாதம், கண்மூடித்தனமான தீவிரவாதம் போன்ற அனைத்துவிதமான கொடூரங்களுக்கும், மதங்கள் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்படவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 22, இச்சனிக்கிழமையன்று, உலகினர் அனைவரையும் கேட்டுக்கொண்டார். 

மதம் அல்லது மதநம்பிக்கையின் அடிப்படையில் இடம்பெறும் வன்முறைக்குப் பலியானவர்களை நினைவுகூரும் உலக நாள், ஆகஸ்ட் 22, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரு டுவிட்டர் செய்திகள் வழியாக, இவ்வாறு அழைப்புவிடுத்துள்ளார்.

“எவராலும் பாதுகாக்கப்படவேண்டிய அவசியம், கடவுளுக்கு கிடையாது, அதேநேரம், மக்களை பயங்கரவாதத்தால் அச்சுறுத்துவதற்கு, தம் பெயர் பயன்படுத்தப்படுவதையும், அவர் விரும்பவில்லை, எனவே, வெறுப்பு, வன்முறை, பயங்கரவாதம், கண்மூடித்தனமான தீவிரவாதம் போன்றவற்றைத் தூண்டிவிடுவதற்கு, மதங்கள் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்படுமாறு, அனைவருக்கும் அழைப்புவிடுக்கிறோம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில், மனித உடன்பிறந்தநிலை (#HumanFraternity) என்ற ஹாஷ்டாக்குடன் பதிவாகியிருந்தன.

திருத்தந்தை வெளியிட்டுள்ள இரண்டாவது டுவிட்டர் செய்தியில், “நீ நன்றாக நடந்துகொள்கிறாய் என்பதற்காக, கடவுள் உன்னை அன்புகூர்வதில்லை, அவர், எவ்வித எதிர்பார்ப்புமின்றி, எளிமையாக உன்னை அன்புகூர்கிறார், அவரது அன்பு எல்லையற்றது, அது, உன்னைச் சார்ந்து இருக்கவில்லை” என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

மேலும், மதக் குழுமங்கள், பொதுவான பாதுகாப்பிற்கும், தேசிய தனித்துவத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளன என்று பலநேரங்களில் சித்தரிக்கப்படும்வேளை, கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், அக்குழுமங்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன என்றும், இதனை நிறுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறும், ஐ.நா. மனித உரிமை வல்லுனர்கள் அரசுகளை வலியுறுத்தியுள்ளனர்.

மொசாம்பிக் ஆயருக்கு ஆறுதல் தொலைப்பேசி அழைப்பு

 ஆயர் Luis Fernando Lisboa


தேவைப்படும் மனிதாபிமான உதவிகளுக்கு, கர்தினால் Michael Czerny அவர்களைத் தொடர்புகொள்ள, திருத்தந்தை தன்னை ஊக்கப்படுத்தினார் – மொசாம்பிக் ஆயர் Fernando Lisboa

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மொசாம்பிக் நாட்டில் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள Cabo Delgado மாநிலத்தில் மேய்ப்புப்பணியாற்றும் Pemba மறைமாவட்ட ஆயர் Luiz Fernando Lisboa அவர்களை, எதிர்பாராத நேரத்தில், தொலைப்பேசியில் அழைத்து, தன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் இந்த தொலைப்பேசி அழைப்பு குறித்து வத்திக்கான் செய்தித் துறையிடம் பகிர்ந்துகொண்ட ஆயர் Fernando Lisboa அவர்கள், ஆகஸ்ட் 18, இப்புதன் உள்ளூர் நேரம் காலை 11.29 மணிக்கு, திருத்தந்தை, தன்னை தொலைப்பேசியில் அழைத்து, Cabo Delgado வடபகுதி  மாநிலத்தில், மனிதாபிமான சூழல், மோசமடைந்து வருவது குறித்து தான் மிகவும் கவலையடைந்திருப்பதாகத் தெரிவித்தார் என்று கூறினார்.

திருத்தந்தையின் தொலைப்பேசி அழைப்பு, தனக்கு மிகுந்த ஆறுதலையும், உறுதியையும் கொடுத்தது எனவும், உதவி தேவைப்பட்டால், தயங்காமல் தன்னிடம் கேட்குமாறு திருத்தந்தை கூறியதாகவும், ஆயர் Luis Fernando Lisboa அவர்கள் கூறினார்.

கடந்த ஏப்ரல் 12ம் தேதி உயிர்ப்புப் பெருவிழா ஞாயிறன்று, ஊர்பி எத் ஓர்பி செய்தியிலும், Cabo Delgado மாநிலத்தின் நிலைமையைக் குறிப்பிட்டு, அப்பகுதிக்காகத் திருத்தந்தை செபிக்க அழைப்பு விடுத்ததற்கு, தான் நன்றி கூறியதாக, ஆயர் Fernando Lisboa அவர்கள் தெரிவித்தார்.

Mocimboa da Praia துறைமுக நகரில் ஜிகாதிகள்

ஐ.எஸ். இஸ்லாம் அரசோடு தொடர்புடைய ஜிகாதிகள், Mocimboa da Praia துறைமுக நகரைக் கைப்பற்றியது குறித்தும், கடந்த வாரத்தில், அந்நகரை ஜிகாதிகள் தாக்கியதைத் தொடர்ந்து, மொசாம்பிக் அரசுப் படைகள் அந்நகரிலிருந்து வெளியேறியுள்ளது குறித்தும் திருத்தந்தையிடம் தான் பகிரந்துகொண்டதாக, ஆயர் Fernando Lisboa அவர்கள் கூறினார்.

ஜிகாதிகள், Mocimboa da Praia நகரைக் கைப்பற்றியதிலிருந்து, காணாமல் போயுள்ள இரு அருள்சகோதரிகள் பற்றி எவ்விதத் தகவலும், இதுவரை கிடைக்கவில்லை எனவும்  ஆயர் Fernando Lisboa அவர்கள், திருத்தந்தையிடம், தொலைப்பேசியில் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டில் மொசாம்பிக் நாட்டிற்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டபோது, Cabo Delgado மாநிலத்தை அடிக்கடி நினைத்தேன் என திருத்தந்தை கூறியதாகவும், தேவைப்படும் மனிதாபிமான உதவிகளுக்கு, கர்தினால் Michael Czerny அவர்களைத் தொடர்புகொள்ள, திருத்தந்தை தன்னை ஊக்கப்படுத்தியதாகவும், ஆயர் Fernando Lisboa அவர்கள் கூறினார்.

Cabo Delgado மாநிலத்தின் கடற்கரைப் பகுதியில், கணிசமான அளவு, இயற்கை எரிவாயு இருப்பதாக, 2010ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அன்றிலிருந்து இந்த வாயுவை எடுப்பதற்காக, ஏராளமான நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. ஆயினும், தற்போது அப்பகுதியில் வளர்ந்துவரும் கடுமையான தாக்குதல்கள், இந்த முதலீடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. இந்த எரிவாயு பகுதி ஆப்ரிக்காவிலேயே மிகப்பெரிய அளவில் இயற்கை எரிவாயு இருக்கும் இடம் என்று கூறப்படுகின்றது.

அர்ஜென்டீனா பங்குத்தளம் ஒன்றிற்கு திருத்தந்தை மடல்

 புனித Raymond Nonnatus


புதன் மறைக்கல்வியுரைக்குப்பின் மக்களைச் சந்திக்கும்போது, குழந்தைவரத்திற்காக செபிக்கும்படி தன்னிடம் கேட்கும் தம்பதியரிடம், புனித Raymond Nonnatusஇடம் மன்றாடுங்கள் என்று கூறுகிறேன் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நிலையில்லாத இவ்வுலகில், நிரந்தரமாய் இருப்பது அன்பு ஒன்றே என்ற கருத்தை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 21, இவ்வெள்ளியன்று, டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

“கடந்துபோகும் பல விடயங்களுக்கு மத்தியில், என்றென்றும் நிலைத்திருப்பது எது என்பதை, ஆண்டவர் நமக்கு நினைவுபடுத்த விரும்புகிறார், அதுவே அன்பு, ஏனெனில் கடவுள் அன்பானவர்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

புவனஸ் அய்ரஸ் பங்குத்தளத்திற்கு மடல்

 மேலும், அர்ஜென்டீனா நாட்டின் புவனஸ் அய்ரஸ் நகரில் அமைந்துள்ள, புனித Raymond Nonnatus பங்குத்தள விழாவிற்கு, வாழ்த்து தெரிவித்து, மடல் ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் புவனஸ் அய்ரஸ் உயர்மறைமாவட்ட பேராயராகப் பணியாற்றுகையில், புனித Raymond Nonnatus பங்குத்தளத்தின் விழாவில் கலந்துகொண்டு, அன்னையர், சிறார், குழந்தைவரம் வேண்டிய தம்பதியர் போன்றோரை ஆசிர்வதித்தது நினைவில் இருக்கிறது என்று, திருத்தந்தை அம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.

புனித Raymond Nonnatus ஆலய பங்குத்தந்தை அருள்பணி Rubén Ceraci அவர்களுக்கு, தனது கைப்பட மடல் எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித Raymond Nonnatus திருநாளான ஆகஸ்ட் 31ம் தேதி, அந்தப் பங்குத்தளத்தை தான் பார்வையிட்டதை நினைவுகூர்ந்துள்ளார்.

இன்றும், புதன் மறைக்கல்வியுரைகளுக்குப்பின் மக்களைச் சந்திக்கையில், குழந்தைவரத்திற்காக செபிக்கும்படி தன்னிடம் கேட்கும் தம்பதியரிடம், புனித Raymond Nonnatusடம் மன்றாடுங்கள் என்றும், அவர்கள், அர்ஜென்டீனா மக்களாக இருந்தால், Cervantes சாலையிலுள்ள அப்புனிதரின் திருத்தலம் சென்று செபியுங்கள் என்றும் கூறிவருவதாக, திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புவனஸ் அய்ரஸ் உயர்மறைமாவட்ட பேராயராக, 1998ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதியிலிருந்து, அவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 2013ம் ஆண்டு, மார்ச் 13ம் தேதி வரை பணியாற்றினார்.

கோவிட்-19, 10 கோடிப் பேர் வறுமைகோட்டிற்குகீழ்

 இலத்தீன் அமெரிக்காவில் கோவிட்-19ன் எதிர்விளைவு


சமுதாய அநீதி, வாய்ப்புகள் வழங்கப்படுவதில் சமத்துவமின்மை, புறக்கணிப்பு, நலிந்தோருக்குப் போதுமான பாதுகாப்பின்மை போன்ற பெரிய நுண்கிருமிகள் குணமாக்கப்படவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோயின் எதிர்விளைவுகளால், உலக அளவில் 10 கோடிக்கும் அதிகமானோர் வறுமைகோட்டிற்குகீழ் வாழும் நிலை உருவாகக்கூடும் என்று, உலக வங்கி எச்சரித்துள்ளவேளை, கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பான அகில உலக காரித்தாஸ் நிறுவனம், துன்புறுவோருக்கு பரிவன்பு காட்டப்படுமாறு மீண்டும் ஒருமுறை அழைப்புவிடுத்துள்ளது.

தற்போதைய கொள்ளைநோயின் நெருக்கடியால் கடுமையாய்ப் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, இதுவரை எதிர்பார்த்திருந்ததைவிட, இருமடங்கு அதிகம் என்று கூறியுள்ள காரித்தாஸ் நிறுவனம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வறியோர் சார்பாக, அடிக்கடி விடுத்துவரும் விண்ணப்பங்களையும் குறிப்பிட்டுள்ளது.  

வறுமையின் நுண்கிருமி

கொரோனா கொள்ளைநோய் பரவத்தொடங்கிய நாளிலிருந்து, அறிவியலாளர்களும், மருத்துவர்களும், ஆய்வாளர்களும், தடுப்பு ஊசி கண்டுபிடிப்பதற்கு அயராது உழைத்து வருகின்றனர், அதேநேரம், “புறக்கணிப்பு” என்ற அவலத்தை அகற்றுவதற்கான ஊசிமருந்தை கண்டுபிடிப்பதில், அரசியல்வாதிகள், தொழில்முனைவோர், மற்றும், தனிநபர்களில், எத்தனை பேர் ஆர்வமாக உள்ளனர் என்ற கேள்வியையும், காரித்தாஸ் நிறுவனம் எழுப்பியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக சமுதாயத்திற்கு எண்ணற்ற விண்ணப்பங்களை முன்வைத்துள்ளார், ஆகஸ்ட் 19, இப்புதன் மறைக்கல்வியுரையிலும், நோயுற்ற சமுதாய அமைப்புமுறைகள் மாற்றப்படுவதற்கு, நாம் இப்போதே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டதை, காரித்தாஸ் குறிப்பிட்டுள்ளது.

சமுதாய அநீதி, வாய்ப்புகள் வழங்கப்படுவதில் சமத்துவமின்மை, புறக்கணிப்பு, நலிந்தோருக்குப் போதுமான பாதுகாப்பின்மை போன்ற பெரிய நுண்கிருமிகள் குணமாக்கப்படவேண்டும் எனவும், ஏழைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உதவும் பொருளாதாரம் அமைக்கப்படவேண்டும் எனவும், திருத்தந்தை வலியுறுத்தியுள்ளதையும், உலக காரித்தாஸ் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.   

குரலற்றோரின் குரலாக ஒலிப்போம்

 சம உரிமை கேட்டு போராடும் தென் ஆப்ரிக்க பெண்கள்

நிறவெறி அரசின் கீழ் பல்வேறு அடிமைத்தனங்களை சந்தித்த தென் ஆப்ரிக்க பெண்கள், ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தை, பெண்கள் மாதமாக சிறப்பித்து வருகின்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

குரலற்றோரின் குரலாக ஒலிப்போம் என்ற நோக்கத்துடன், தென் ஆப்ரிக்க கத்தோலிக்க பெண்கள் அமைப்பு, இத்திங்கள், ஆகஸ்ட் 24ம் தேதியன்று மாலை, வலைத்தொடர்புகள் வழியாக கூட்டம் ஒன்றை நடத்தியது.

இந்த கோவிட்-19 காலத்தில் தனிமைப்பட்டிருக்கும், மற்றும், துன்புறும் மக்களுடன் ஒருமைப்பாட்டை அறிவித்து, அவர்களின் குரலாக ஒலிக்க விரும்புவதாக இந்த கத்தோலிக்க பெண்கள் அமைப்பு தன் செய்தியில் கூறியுள்ளது.

தென்மண்டல ஆப்ரிக்க ஆயர்களின் வலைத்தளத்தில் தங்கள் செய்தியை வெளியிட்டுள்ள இந்த பெண்கள் அமைப்பு, தென் ஆப்ரிக்க ஆயர் பேரவையின் பொதுச்செயலர், அருள்சகோதரி Hermenegild Makoro அவர்களின் வழிநடத்தலின்கீழ் இந்த ஒருமைப்பாட்டு நிகழ்வு இடம்பெறுவதாகவும் அறிவித்துள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, உயிரிழந்த George Floyd அவர்கள் கடைசியாக உச்சரித்த, 'என்னால் மூச்சுவிட முடியவில்லை' என்ற  தலைப்புடன் நடத்தப்பட்ட இந்த வலைத்தொடர்பு வழி செபக்கூட்டம், தென் ஆப்ரிக்க கத்தோலிக்க பெண்கள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டது.

நிறவெறி அரசின் கீழ் பல்வேறு அடிமைத்தனங்களை சந்தித்த தென் ஆப்ரிக்க பெண்கள் 20,000த்திற்கும் மேற்பட்டோர், 1956ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 9ம் தேதி, ஊர்வலம் ஒன்றை நடத்தியதன் நினைவாக, ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் மாதத்தை, பெண்கள் மாதமாக சிறப்பித்து வருகின்றனர், தென் ஆப்ரிக்க மக்கள்.

வயதானவர்கள் திருமுழுக்குப் பெறுவது அதிகரிப்பு

 பெல்ஜியம் கோவில் ஒன்றில்


பெல்ஜியம் நாட்டில், குழந்தைப்பருவத்தில், திருமுழுக்கு பெறாமல் போனவர்கள், தற்போது, வளர்ந்தபின் திருமுழுக்குப்பெறும் ஆர்வத்தை வெளியிட்டு, திருமுழுக்குப் பெற்றுவருகின்றனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

வயதானவர்கள் திருமுழுக்குப் பெறும் போக்கு, பெல்ஜியம் நாட்டில், கடந்த பத்தாண்டுகளில், இருமடங்காகியுள்ளது என்று, அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

2010ம் ஆண்டு, 143 பெரியவர்கள், திருமுழுக்குப் பெற்றிருந்த நிலையில், இவ்வாண்டில் இவ்வெண்ணிக்கை 305 ஆக உயர்ந்துள்ளது.

பெல்ஜியம் நாட்டின் 1 கோடியே 15 இலட்சம் மக்கள் தொகையில், பெரும்பான்மையினர் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுபவர்கள் எனினும், ஞாயிறு திருப்பலிக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை, 7 விழுக்காட்டிற்கும் குறைவாகவே உள்ள நிலையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்குவதும் குறைந்து வருகிறது.

தங்கள் பெற்றோர்களால் குழந்தைப்பருவத்தில், திருமுழுக்கு பெறாமல் போனவர்கள், தற்போது, வளர்ந்தபின் திருமுழுக்குப்பெறும் ஆர்வத்தை வெளியிட்டு, திருமுழுக்குப் பெற்றுவருகின்றனர்.

இவ்வாறு திருமுழுக்கு பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக, பெல்ஜியம் திருஅவைசெய்திகள் கூறுகின்றன. (ICN)

ஏழைகளுக்குரிய திட்டங்களை செயல்படுத்த ஒன்றிணையுங்கள்

 திருத்தந்தையுடன் சீரோ மலபார் திருஅவை தலைவர்கள்


கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட சமுதாயத்தில், மேலும் ஏழைகளாக மாறியுள்ள மக்களின் மேம்பாட்டிற்காக அதிக ஈடுபாட்டுடன் ஒன்றிணைந்து உழைக்கவேண்டியதன் அவசியம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில் கோவிட் -19 கொள்ளைநோய் பரவத் துவங்கிய காலத்திலிருந்து, ஏழை மக்களுக்கென இதுவரை 73 இலட்சம் டாலர்களை செலவிட்டுள்ளதாக, இந்தியாவின், சீரோ மலபார் ஆயர் மன்றம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதிலுமிருந்து ஏறத்தாழ 61 சீரோ மலபார் ஆயர்கள் கணனி காணொளி தொடர்பு வழியாக கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், நாட்டில், விவசாய, மற்றும், தொழில் உற்பத்தியைப் பெருக்கவும், ஏழைகளுக்குரிய திட்டங்களைச் செயல்படுத்தவும், அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தை  முன்வைத்தனர்.

காணொளி வழியாக நடத்தப்பட்ட சீரோ மலபார் ஆயர் மன்றத்தின் 28வது கூட்டத்தில், இந்த கோவிட்-19 கொள்ளைநோய்க் காலத்தில், ஏழைகளுக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்தே அதிகமாக விவாதிக்கப்பட்டது.

கோவிட்-19 கொள்ளைநோயின் பாதிப்புகள், மற்றும், இதனால் ஏழையான மக்களுக்கு உதவுதல் என்பது குறித்து விவாதித்த சீரோமலபார் ஆயர் மன்றத்தின் காணொளி வழியான இரண்டாவது கூட்டம், இம்மாதம் 19ம் தேதி முதல் 21 வரையில் இடம்பெற்றது. இவர்களின் இந்த ஆண்டு முதல் கூட்டம் ஜனவரி 7 முதல் 15 வரை இடம்பெற்றிருந்தது.

காணொளி வழியாக இடம்பெற்ற இக்கூட்டத்தை துவக்கிவைத்து உரையாற்றிய சீரோ மலபார் கர்தினால், ஜார்ஜ் ஆலஞ்சேரி அவர்கள், இந்த கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட சமுதாயத்தில் மேலும் ஏழைகளாக மாறியுள்ள மக்களின் மேம்பாட்டிற்காக அதிக ஈடுபாட்டுடன் ஒன்றிணைந்து உழைக்க வேண்டியதன் அவசியத்தை  வலியுறுத்தினார்.

மதம், இனம் என்ற எவ்வித பாகுபாடும் நோக்கப்படாமல், அனைவருக்கும் உணவு கிட்டவேண்டும் என்ற நோக்கத்தை மையம் கொண்டதாக சீரோ மலபார் திருஅவை அதிகாரிகளின் செயல்பாடுகள் இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்ட கர்தினால் ஆலஞ்சேரி அவர்கள், மனிதாபிமானத்தை வெளிப்படுத்துவதற்குரிய சிறந்த வழி, ஏழைகளுக்கும் பசியால் இருப்போருக்கும் உணவு வழங்குவதேயாகும் என்பதையும் வலியுறுத்தினார். (AsiaNews)

பாலஸ்தீனம், இஸ்ரேலுக்கு இடையே நேரடி உரையாடலுக்கு...

 பாலஸ்தீனம், இஸ்ரேல்

பாலஸ்தீனம் மற்றும், இஸ்ரேலுக்கு இடையே அமைதி நிலவ வேண்டுமெனில், இவ்விரு நாடுகளுக்கு இடையே நேரடி உரையாடல் இடம்பெறவேண்டியது இன்றியமையாதது - அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்துடன், நல்லுறவுகளை உருவாக்கியதன் ஒரு கட்டமாக, பாலஸ்தீனா நாட்டின் மேற்கு கரையிலுள்ள (West Bank) சில பகுதிகளை, தன்னோடு இணைப்பதை, இஸ்ரேல் அரசு, நிறுத்தி வைக்கத் தீர்மானிருப்பதை வரவேற்றுள்ள அதேவேளை, பாலஸ்தீனா, மற்றும், இஸ்ரேலுக்கு இடையே நேரடி உரையாடல் இடம்பெறவேண்டும் என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் உலகளாவிய நீதி மற்றும், அமைதிப் பணிக்குழுவின் தலைவரான, Rockford ஆயர் David Malloy அவர்கள், ஆகஸ்ட் 20, இவ்வியாழனன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், பாலஸ்தீனம் மற்றும், இஸ்ரேலுக்கு இடையே அமைதி நிலவ வேண்டுமெனில், இவ்விரு நாடுகளுக்கு இடையே நேரடி உரையாடல் இடம்பெறவேண்டியது இன்றியமையாதது என்று குறிப்பிட்டுள்ளார்.

புனித பூமியில் நீடித்த, நிலையான அமைதி நிலவவேண்டும் என்று, நீண்டகாலமாக ஏங்கும் மக்கள் எல்லாருடனும், கத்தோலிக்க ஆயர்கள் என்ற முறையில், நாங்களும் ஏங்குகின்றோம் என்று, அமெரிக்க ஆயர்கள் சார்பாக, ஆயர் David Malloy அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

இம்மாதம் 13ம் தேதி, ஐக்கிய அரபு அமீரகமும், இஸ்ரேலும், தங்களுக்கிடையே தூதரக உறவுகளை உருவாக்கின. இந்த ஒப்பந்தத்திற்கு, எகிப்து, ஓமன், பஹ்ரைன் ஆகிய நாடுகள், தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன. இதன் வழியாக, எகிப்து, ஜோர்டன் ஆகிய இரு நாடுகளுக்கு அடுத்தபடியாக, இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை உருவாக்கியுள்ள, முதல் வளைகுடா நாடு என்ற பெயரை, ஐக்கிய அரபு அமீரகம் பெற்றுள்ளது.

இதற்கிடையே, இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்துள்ள, மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்கள் மற்றும், ஏனைய சிறுபான்மை மதங்களுக்கு ஆதரவான அமைப்பு ஒன்று, இந்த ஒப்பந்தம், அப்பகுதியில், அமைதிக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையில், வரலாற்று முக்கியத்துவம் பெற்றது என்று கூறியுள்ளது. (CNA)

மதத்தின் அடிப்படையில் இடம்பெறும் வன்முறைக்கு பலியானவர்கள்

 அல்ஜீரியாவில் பயங்கரவாத தாக்குதலுக்குப் பலியான துறவிகள்


பயங்கரவாதத்திற்குப் பலியாவோரை நினைவுகூரும் உலக நாளுக்கு, அடுத்த நாளை, அதாவது ஆகஸ்ட் 22ம் தேதியை, மதத்தின் அடிப்படையில் இடம்பெறும் வன்முறைக்குப் பலியானவர்களை நினைவுகூரும் உலக நாளாக, ஐ.நா. நிறுவனம், 2019ம் ஆண்டில் அறிவித்தது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மதத்தை அடிப்படையாகக்கொண்டு இடம்பெறும் பயங்கரவாதம், உலக அளவில் அதிகரித்துவருவது குறித்து, பன்னாட்டு கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதம் அல்லது ஒருவரது மதநம்பிக்கையின் அடிப்படையில் இடம்பெறும் வன்முறைக்குப் பலியானவர்களை நினைவுகூரும் உலக நாள், ஆகஸ்ட் 22, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, ACN எனப்படும், தேவையில் இருப்போருக்கு உதவும் உலகளாவிய பிறரன்பு அமைப்பின் தலைவர், Thomas Heine-Geldern அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, இந்த உலக நாளை அறிவித்து ஓராண்டு ஆகிய பின்னரும், சமயக் குழுமங்களுக்கு எதிரான வன்முறை, முன்னெப்பேதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது என்பதை, Heine-Geldern அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.    

உலகில் இடம்பெறும் இந்த எதார்த்தமான உண்மைக்கு முன், நாம், கண்களை மூடிக்கொண்டு இருக்கஇயலாது என்று கூறியுள்ள Heine-Geldern அவர்கள், நியாயமான சமுதாய உரிமைகள் மற்றும், அநீதியான விவகாரங்கள் ஆகியவை மீது கவனத்தைக் கொணர்வதற்காக, மதங்களின் கட்டடங்களும், அடையாளங்களும் தாக்கப்படுவது, உலக அளவில் அதிகரித்து வருகின்றது என்றும் கூறியுள்ளார்.

பாகிஸ்தான், நைஜீரியா, இந்தியா போன்ற பல நாடுகளில், மதத்தை அடிப்படையாக வைத்து இடம்பெறும், வன்முறை மற்றும், அடக்குமுறை நடவடிக்கைகள் குறித்து தனது அமைப்பு, மிகுந்த கவலைகொண்டுள்ளது என்றும், Heine-Geldern அவர்கள் கூறியுள்ளார்.

இம்மாதம் 12ம் தேதி, மொசாம்பிக் நாட்டின் Mocimboa da Praia துறைமுக நகரை, ஐ.எஸ். இஸ்லாமிய அரசு கைப்பற்றியது பற்றிக் குறிப்பிட்டுள்ள Heine-Geldern அவர்கள், ஐ.எஸ் அரசு, ஈராக் போன்று, மற்ற நாடுகளிலும், அந்நாடுகளின் கலாச்சார மற்றும், சமயப் பன்மைத்தன்மையை அழிக்கும் கருத்துடன் செயல்பட்டு வருகிறது என்று கவலை தெரிவித்தார்.

ஈராக்கில் இடம்பெறும் அடக்குமுறைகளால், 2003ம் ஆண்டுக்குமுன் 12 இலட்சமாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, தற்போது ஒரு இலட்சத்திற்கும் குறைவாகவே உள்ளது என்றும், இந்த உலக நாளில், நைஜீரியா, புர்கினா ஃபாசோ, மாலி போன்ற நாடுகளில் இவ்வாண்டில் கொல்லப்பட்டுள்ள கத்தோலிக்கரை நினைவுகூர்வோம் என்றும், Heine-Geldern அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

பயங்கரவாதத்திற்குப் பலியாவோரை நினைவுகூரும் உலக நாளுக்கு, அடுத்த நாளை,  அதாவது, ஆகஸ்ட் 22ம் தேதியை, மதத்தின் அடிப்படையில் இடம்பெறும் வன்முறைக்குப் பலியானவர்களை நினைவுகூரும் உலக நாளாக, ஐ.நா. நிறுவனம், 2019ம் ஆண்டில் அறிவித்தது. (Zenit)

பெங்களூருவில் கத்தோலிக்க கோவிட்-19 சிகிச்சை மையம்

 பெங்களூரு, புனித ஜான் மருத்துவக் கல்லூரி


பேராயர் பீட்டர் மச்சாடோ - கல்வியோ, மருத்துவமோ, எந்த துறையாக இருந்தாலும், வறியோர் மற்றும், தேவையில் இருப்போருக்கு உதவுவதற்கு, திருஅவை எப்போதும் முன்னுரிமை கொடுக்கின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பெங்களூரு, புனித ஜான் மருத்துவக் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள,  அனைத்து வசதிகளும்கொண்ட, கோவிட்-19 சிகிச்சை பிரிவை, பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ அவர்கள், ஆசிர்வதித்து திறந்து வைத்துள்ளார்.

இந்தியாவில் கோவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்குவதற்கென, எல்லா மருத்துவ வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ள, இந்த முதல் கத்தோலிக்க சிகிச்சைப் பிரிவில், தனித்து வைக்கப்படுவதற்கு 48 படுக்கைகளும், அவசர சிகிச்சைக்கென (ITU) 24 படுக்கைகளும், பொதுவான சிகிச்சைகளுக்கு 24 படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 17, இத்திங்களன்று இந்தப் பிரிவை ஆசீர்வதித்து திறந்துவைத்த பேராயர்  பீட்டர் மச்சாடோ அவர்கள், கல்வியோ, மருத்துவமோ, எந்த துறையாக இருந்தாலும், வறியோர் மற்றும், தேவையில் இருப்போருக்கு உதவுவதற்கு, திருஅவை எப்போதும் முன்னுரிமை கொடுக்கின்றது என்றும், நம் சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் தன்னலமற்ற சேவையை அளிப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்றும் கூறினார்.  

இந்த கொள்ளைநோய் காலத்தில், நமது மருத்துவமனை, மக்களுக்கு நலவாழ்வை வழங்குவதற்கு மேற்கொண்டுள்ள இந்நடவடிக்கை, நாட்டில் முதலில் எடுக்கப்பட்டுள்ள முதல் முயற்சி என்றும், இதனை இயலக்கூடியதாக அமைத்த அனைவருக்கும் வாழ்த்து என்றும், யூக்கா செய்தியிடம் கூறினார், பேராயர் மச்சாடோ.

புனித ஜான் மருத்துவ கல்லூரி, கடந்த ஐந்து மாதங்களில், கொரோனா கொள்ளைநோய் தொடர்பான இலவச சிகிச்சைகளுக்கு, ஐம்பது இலட்சம் ரூபாய்க்கு அதிகமாகவே செலவழித்துள்ளது என்பதையும், பேராயர் குறிப்பிட்டார். 

கடந்த ஜூலை மாத இறுதியில், காய்ச்சல் என்று வந்த 5000த்திற்கும் அதிகமான நோயாளிகளுக்கும், அவசர சிகிச்சைப் பிரிவில் இரண்டாயிரம் நோயாளிகளுக்கும், ICUவில் ஏறத்தாழ 500 பேருக்கும், 600க்கும் அதிகமான நோயாளிகளுக்கும் பெங்களூரு புனித ஜான் மருத்துவமனை சிகிச்சை அளித்துள்ளது. (UCAN)

கொரோனா நோயுற்றோர் தீண்டத்தகாதவர்கள் அல்ல

 மணிலா மெட்ரோ இரயில் நிலையத்தில் கோவிட் சோதனை


முன்னொரு காலத்தில் தொழுநோயாளரை சமுதாயத்திலிருந்து ஒதுக்கிவைத்ததுபோல், தற்போது, கொரோனா தொற்றுக்கிருமியினால் பாதிக்கப்பட்டோரையும் ஒதுக்கிவைக்கும் ஆபத்து வளர்ந்துவருகிறது - பிலிப்பீன்ஸ் ஆயர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

முன்னொரு காலத்தில் தொழுநோயாளரை சமுதாயத்திலிருந்து ஒதுக்கிவைத்ததுபோல், தற்போது, கொரோனா தொற்றுக்கிருமியினால் பாதிக்கப்பட்டோரையும் ஒதுக்கிவைக்கும் ஆபத்து வளர்ந்துவருவதாக, பிலிப்பீன்ஸ் ஆயர் ஒருவர் கவலையை வெளியிட்டுள்ளார்.

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவின் துணை ஆயரான Broderick Pabillo அவர்கள், கொரோனா தொற்றுக்கிருமி உள்ளவர் என்றும், பின்னர் அக்கிருமியின் தாக்கம் அற்றவர் என்றும் கூறப்பட்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, மக்கள், இந்த நோயுற்றோரை எவ்விதம் கண்ணோக்குகின்றனர் என்பதைக்குறித்து, தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஆசியா பசிபிக் பகுதியில், தொற்றுக்கிருமியின் தாக்கம் கொண்டோரின் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் பிலிப்பீன்ஸ் நாட்டில், இந்தக் கிருமியினால் துன்புறுவோர், முற்காலத்தில் தொழுநோயால் துன்புற்றோரைப் போல் நடத்தப்படுகின்றனர் என்று ஆயர் Pabillo அவர்கள் கூறினார்.

இந்தத் தொற்றுக்கிருமியின் தாக்கம் குறித்து அனைத்து மருத்துவ பாதுகாப்பு வழிகளையும் பின்பற்றவேண்டிய அதே வேளையில், இந்த நோயுற்றோரை தீண்டத்தகாதவர்கள் என்ற முத்திரை குத்தி விலக்கிவைப்பது தவறு என்பதையும், ஆயர் Pabillo அவர்கள் சுட்டிக்காட்டினார்.

நண்பகலில் பத்துமணி செபம்

பிலிப்பீன்ஸ் நாட்டில் நிலவும் கவலை தரும் தொற்றுக்கிருமி தாக்கத்தை ஒழிக்க, ஆகஸ்ட் 15 கடந்த சனிக்கிழமை முதல், செப்டம்பர் 15, துயருறும் அன்னை மரியா திருநாள் முடிய மக்கள் ஒவ்வொரு நாளும், நண்பகலில் பத்துமுறை 'அருள்மிகப் பெற்றவரே' என்ற செபத்தை, அன்னை மரியாவை நோக்கி எழுப்புமாறு, அந்நாட்டு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

அத்துடன், பிலிப்பீன்ஸ் நாட்டிலுள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பயில்வோர், மற்றும், பணியாற்றுவோர், கோவிட் 19 கொள்ளைநோயைக் குறித்த தெளிவான கருத்துக்களை மக்கள் நடுவே பரப்ப முயற்சிகள் எடுக்குமாறு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர் என்று ஆசிய செய்தி கூறுகிறது. (AsiaNews)