Wednesday 24 January 2024

Muslim Countries Reaction on Ayodhya Temple: "இது ஆழ்ந்த கவலை தருகிறது"

Ayodhya Ram Mandhir திறப்பு: ராமர் கோவில் அரசியல் இனி எடுபடுமா? (அ) இனித...

செயற்கை நுண்ணறிவும் இதயத்தின் ஞானமும்!

 

செயற்கை நுண்ணறிவும் இதயத்தின் ஞானமும்!



நாம் ஒன்றிணைந்த நிலையில் மட்டுமே தெளிந்து தேர்தல் மற்றும் விழிப்புணர்விற்கான நமது திறனை அதிகரிக்க முடியும் மற்றும் அவற்றின் நிறைவேற்றத்தின் ஒளியில் விடயங்களைப் பார்க்க முடியும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நமது மனிதநேயம் அதன் தாங்குதிறன்களை இழக்காதபடி, எல்லாவற்றுக்கும் முன் இருந்த ஞானத்தைத் தேடுவோம் (காண்க சீராக் 1:4) என்றும், இஞ்ஞானமே செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை முழுமையாக மனித தகவல் தொடர்பு சேவையில் வைக்க உதவும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனவரி 24, இப்புதனன்று, 'செயற்கை நுண்ணறிவு மற்றும் இதயத்தின் ஞானம்: ஒரு முழு மனித தகவல் தொடர்பு நோக்கி' என்ற கருப்பொருளில் 58-வது உலக சமூகத் தொடர்பு நாளுக்காக வழங்கியுள்ள தனது செய்தியில் இவ்வாறு உரைந்துள்ள திருத்தந்தை, நாம் எப்படி முழு மனிதராக இருந்து, இந்தக் கலாச்சார மாற்றத்தை ஒரு நல்ல நோக்கத்திற்காக வழிநடத்த முடியும் என்பது குறித்து சிந்திக்கவும் அழைப்புவிடுத்துள்ளார்.

இதயத்திலிருந்து தொடங்குவோம்

இந்தச் செயல்முறைக்குள் நாம் ஒவ்வொருவரும் அவரவர் வழியில் நுழைய வேண்டும் என்றும், ஆனால் அதில் உள்ள அழிவுகரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயல்கள் அனைத்திற்கும் வெளிப்படைத்தன்மையுடனும் கூர்ந்தறியும் திறனுடனும் விழிப்பாய் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, இவை யாவும் தொழில்நுட்ப, அறிவியல் மற்றும் அரசியல் சிக்கல்கள் என்றும், மனித இதயத்திலிருந்து பிறக்கும் ஞானமின்றி இவைகளுக்குத் தீர்வு காண முடியாது என்றும் உரைத்துள்ளார்.

எதார்த்தத்தைப் பார்க்கும் ஆன்மிக வழியைக் கடைப்பிடிப்பதன் வழியாகவும், இதயத்தின் ஞானத்தை மீட்டெடுப்பதன் வழியாகவும் மட்டுமே, நம் காலத்தின் நவீனத்தை நாம் எதிர்கொள்ளவும், விளக்கவும் முடியும் என்றும், முழுமையான மனித தொடர்புக்கான பாதையை நம்மால் மீண்டும் கண்டுபிடிக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

மேலும் இதயத்தின் ஞானம் என்பது, ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமையை அடையாளப்படுத்துகிறது, ஆனால் அது நம் உணர்ச்சிகள், ஆசைகள், கனவுகள் ஆகியவற்றில் ஈடுபடுகிறது என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக, அது கடவுளுடனான நமது சந்திப்பின் உள்ளார்ந்த இடமாக உள்ளது என்றும் எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, அப்படியானால், இதயத்தின் ஞானம் என்பது முழு மற்றும் அதன் பகுதிகள், நமது முடிவுகள் மற்றும் அவற்றின் விளைவுகள், நமது பெருந்தன்மை மற்றும் பலவீனம், நமது கடந்த காலம் மற்றும் எதிர்காலம், நமது தனித்துவம் மற்றும் ஒரு பெரிய சமூகத்திற்குள் நமது உறுப்பினருரிமை ஆகியவற்றை ஒருங்கிணைக்க உதவும் நற்பண்பாக அமைத்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாய்ப்பு மற்றும் ஆபத்து

தரவுகளை சேமித்து தொடர்புபடுத்துவதற்கு மனிதர்களை விட இயந்திரங்கள் வரம்பற்ற அதிக திறனைக் கொண்டுள்ளன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றாலும், மனிதர்கள் மட்டுமே அந்தத் தரவுகளை உணர்ந்து புரிந்துகொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

மனிதர்கள் எப்போதுமே தாங்கள் தன்னிறைவு பெற்றவர்கள் அல்ல என்பதை உணர்ந்து, சாத்தியமான எல்லா வழிகளையும் பயன்படுத்துவதன் வழியாகத் தங்கள் பலவீனத்தை வெற்றிகொள்ள முற்படுகிறார்கள் என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை, தொடக்க கால வரலாற்றுக்கு முந்தைய கலைப்பொருள்கள், படைக்கலன்களின் நீட்டிப்புகளாகப் பயன்படுத்தப்பட்டன, பின்னர் ஊடகங்கள், பேசும் வார்த்தையின் நீட்டிப்பாகப் பயன்படுத்தப்பட்டன, இப்போது நம் சிந்தனைக்கு ஆதரவாக செயல்படும் அதிநவீன இயந்திரங்களை உருவாக்கும் திறன் பெற்றுள்ளோம் என்றும் விளக்கியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்தக்  கருவிகள் ஒவ்வொன்றும், கடவுள் இல்லாமல் கடவுளைப் போல ஆகுவதற்கான தொடக்க கால சோதனையால் தவறாகப் பயன்படுத்தப்படலாம் (காண தொநூ 3), அதாவது, கடவுளிடமிருந்து இலவசமாகப் பெறப்பட வேண்டியதை, மற்றவர்களுடன் சேர்ந்து அனுபவிக்க வேண்டும் என்பதை நம் சொந்த முயற்சியால் புரிந்து கொள்ள விரும்புவது என்றும் விளக்கிக் கூறியுள்ளார் திருத்தந்தை.

இதயத்தின் விருப்பத்தைப் பொறுத்து, நாம் அடையக்கூடிய அனைத்தும் ஒரு வாய்ப்பாகவோ அல்லது அச்சுறுத்தலாகவோ மாறும் என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, தகவல்தொடர்பு மற்றும் ஒன்றிப்புக்காக உருவாக்கப்பட்ட நமது உடல்கள் ஆக்கிரமிப்புக்கான வழிமுறையாக மாறும் என்றும், அதேபோல், நமது மனிதகுலத்தின் ஒவ்வொரு தொழில்நுட்ப விரிவாக்கமும் அன்பான சேவை அல்லது விரோத ஆதிக்கத்திற்கான வழிமுறையாக இருக்கலாம் என்றும் உரைத்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் அறியாமையை போக்க உதவுவதோடு வெவ்வேறு மக்கள் மற்றும் தலைமுறையினரிடையே தகவல் பரிமாற்றத்தை எளிதாக்க முடியும் என்றும், ஆனால் அதேவேளையில், இது மற்றவர்களுடனும் எதார்த்தத்துடனும் நமது உறவை சிதைக்கும்போது விபரீதமாகிறது என்றும் எச்சரித்துள்ளார்.

மனிதகுலத்தில் வளர்ச்சி

நாம் அனைவரும் ஒன்றிணைந்து, மனித நேயத்தில் வளர அழைக்கப்பட்டுள்ளோம் என்றும், சிக்கலான, பல இன, பன்மைத்துவ, பல மத மற்றும் பன்முகக் கலாச்சார சமூகமாக மாறுவதற்கு ஒரு தரமான முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது நமக்கு முன் சவாலாக உள்ளது என்றும் தெரிவித்துள்ள திருத்தந்தை, இந்தப் புதிய தகவல்தொடர்பு மற்றும் அறிவின் கோட்பாட்டு வளர்ச்சி மற்றும் நடைமுறை பயன்பாடு குறித்து மிகவும் கவனமாக சிந்திக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் விவரித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு தகவல் தொடர்புத் துறையில் நேர்மறையான பங்களிப்பைச் செய்ய முடியும் என்றும், அது ஊடகங்களின் பங்களிப்பை அகற்றாது, ஆனால் அதனை ஆதரிக்க உதவுகிறது என்றும் தெரிவித்துள்ள திருத்தந்தை, இது தகவல்தொடர்பு நிபுணத்துவத்தை மதிக்கிறது, ஒவ்வொரு தகவல் தொடர்பாளரும் தனது பொறுப்புகளைப் பற்றி மேலும் அறிந்திருக்க உதவகிறது, மேலும் அனைத்து மக்களும் தகவல்தொடர்பு பணியில் விவேகமான பங்கேற்பாளர்களாக இருக்க அழைப்பு விடுக்கிறது என்றும் கூறியுள்ளார்.

இன்றைய மற்றும் எதிர்காலத்திற்கான கேள்விகள்

இது சம்பந்தமாக, பல கேள்விகள் இயற்கையாகவே எழுகின்றன என்று கூறியுள்ள திருத்தந்தை, உலகம் முழுவதிலும் உள்ள பயனர்களுடன் இணைந்து தகவல் மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில் உள்ள தொழிலாளர்களின் தொழில்முறை மற்றும் மனித மாண்பை எவ்வாறு பாதுகாப்பது? இயங்குதளங்களின் இயங்குநிலையை எவ்வாறு உறுதி செய்வது? டிஜிட்டல் பணித்தளங்களை உருவாக்கும் வணிகங்கள், பாரம்பரிய தகவல் தொடர்பு ஊடகத்தின் ஆசிரியர்களைப் போலவே உள்ளடக்கம் மற்றும் விளம்பரம் தொடர்பான தங்கள் பொறுப்புகளை ஏற்க எப்படிச் செயல்படுத்துவது? என்பதுபோன்ற பல கேள்விகளையும் எழுப்பியுள்ள வேளை, இந்த மற்றும் பிற கேள்விகளுக்கு நாம் அளிக்கும் பதில்கள், செயற்கை நுண்ணறிவு, தகவல் அணுகல் அடிப்படையில் புதிய மாற்றங்களை உருவாக்கி, புதிய சுரண்டல் மற்றும் சமத்துவமின்மைக்கு வழிவகுக்குமா என்பதைத் தீர்மானிக்கும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

மேலும் இந்தக் கேள்விகளுக்கு நாம் அளிக்கும் பதில் முன்னரே தீர்மானிக்கப்பட்டதல்ல; அது நம்மைச் சார்ந்தது என்று எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, நிரல் நெறிமுறைகளுக்குத் தீவனமாக மாறுவதா அல்லது அந்தச் சுதந்திரத்தால் நம் இதயங்களை வளர்த்துக்கொள்வதா என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும் என்றும், அது இல்லாமல் நாம் ஞானத்தில் வளர முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

காலத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதன் வழியாகவும், நமது பலவீனங்களை நாம் ஏற்றுக்கொள்வதன் வழியாகவும் அத்தகைய ஞானம் முதிர்ச்சியடைகிறது என்றும், இது தலைமுறைகளுக்கு இடையேயான உடன்படிக்கையில், கடந்த காலத்தை நினைவில் வைத்திருப்பவர்களுக்கும், எதிர்காலத்தை எதிர்நோக்கும் நபர்களுக்கும் இடையில் வளர்கிறது என்றும் தனது செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.


கத்தோலிக்க ஆங்கிலிக்கன் ஆயர்களின் ஒன்றிப்புத் திட்டம்

 

கத்தோலிக்க ஆங்கிலிக்கன் ஆயர்களின் ஒன்றிப்புத் திட்டம்




ஒன்றிணைந்து வளர்வோம் என்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு வார நிகழ்வில், 27 நாடுகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கத்தோலிக்க மற்றும் ஆங்கிலிக்கன் ஆயர்கள், கலந்து கொள்கின்றனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கிறிஸ்தவ ஒன்றிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் 27 நாடுகளைச் சேர்ந்த 50 கத்தோலிக்க மற்றும் ஆங்கிலிக்கன் ஆயர்கள் உரோம் நகரிலும் கான்டர்பரியிலும் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.

ஒன்றிணைந்து வளர்வோம் என்ற தலைப்பில் திட்டம் ஒன்றை வகுத்துள்ள இந்த ஆயர்கள், உரோம் நகரில் இடம்பெறும் கிறிஸ்தவ ஒன்றிப்பு கூட்டத்திலும், அதன்பின் இங்கிலாந்தின் கான்டர்பரியில் இடம்பெறும் கூட்டத்திலும் கலந்துகொண்டு கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிகளுக்கு தங்கள் பங்களிப்பை வழங்குவர்.

ஜனவரி மாதம் 22 முதல் 29 வரை என ஒரு வாரத்திற்கு திட்டமிடப்பட்டுள்ள இந்த ஒன்றிணைந்து வளர்வோம் என்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு வார நிகழ்வில், 27 நாடுகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஆயர்கள், கத்தோலிக்க மற்றும் ஆங்கிலிக்கன் திருஅவைகளிலிருந்து சரிவிகிதமாக கலந்துகொள்கின்றனர்.

இவர்கள் உரோம் நகரிலுள்ள புனித தலங்களை தரிசிப்பதுடன், 25ஆம் தேதி திருத்தூதர் பவுல் பசிலிக்காவில் இடம்பெறும் வழிபாட்டில், ஒரு கத்தோலிக்க ஆயர் மற்றும் ஆங்கிலிக்கன் ஆயர் என இருவர் இருவராக திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் ஆங்கிலிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி ஆகியோரிடமிருந்து, கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு சான்றாக விளங்க அனுப்பப்பட உள்ளனர்.

உரோம் நகரின் முக்கிய திருத்தலங்களை இந்த கத்தோலிக்க ஆங்கிலிக்கன் ஆயர் குழு சந்தித்தபின் இம்மாதம் 28ஆம் தேதி கான்டர்பரி பேராலயத்தில் இடம்பெறும் வழிபாட்டில் கலந்துகொள்ள உள்ளனர். இந்த வழிபாட்டில் ஹாங்காங் பேராயர் கர்தினால் Stephen Chow அவர்கள் மறையுரை வழங்க உள்ளார்.


சட்டத்தின் ஆட்சியைக் காப்பாற்ற வேண்டியதே முக்கியம்

 

சட்டத்தின் ஆட்சியைக் காப்பாற்ற வேண்டியதே முக்கியம்



கர்தினால் இரஞ்சித் : மக்களின் தோள்களில் பெரும் சுமைகளை சுமத்தும் புதிய சட்டங்கள் வழி சமூகத்தை மாற்றியமைக்க முடியும் என்பது இயலாதது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இலங்கை நாட்டில் பொதுத் தேர்தல்கள் இடம்பெறுவதற்கு முன்னர் மக்களின் குரலை ஒடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் புதிய சட்டங்கள் கொண்டுவரப்படுவது குறித்துத் தன் கண்டனைத்தையும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளது அந்நாட்டு தலத்திருஅவை.

இவ்வாண்டில் பொதுத்தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் இலங்கையின் இடைக்கால அரசு ஒவ்வொரு நாளும் புதிய சட்டங்களைக் கொண்டுவருவது தவறானது என உரைத்த கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், மேலும் புதிய சட்டங்கள் வழி சமூகத்தை மாற்றியமைக்க முடியும் என்பது இயலாதது எனக் கூறியுள்ளார்.

அரசுத் தலைவர் ரணில் விக்ரமசிங்கேயின் இடைக்கால அரசு அடுத்த சில வாரங்களில் பாராளுமன்றத்தில் பல்வேறு சட்டப் பரிந்துரைகளை முன்வைக்க உள்ளது குறித்து தன் கருத்துக்களை வெளியிட்ட கர்தினால் இரஞ்சித் அவர்கள், மக்களின் தோள்களில் பெரும் சுமைகளை சுமத்துவதாக இச்சட்டங்கள் இருக்கும் என்ற கவலையையும் வெளியிட்டார்.

மக்களுக்கு பலன்தருவதாக, அதேவேளை இன்றைய சூழல்களுக்கும் இயைந்ததாக புதிய சட்டங்கள் இருக்க வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த கர்தினால் இரஞ்சித் அவர்கள், நாட்டில் சட்டத்தின் ஆட்சியைக் காப்பாற்ற வேண்டியது முதன்மை முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் எடுத்துரைத்தார்.

இலங்கையில் ஜனநாயக உரிமைகளைக் கட்டுப்படுத்த புதியச் சட்டங்களைக் கொணரும் முயற்சிகளை இடைக்கால அரசு கைவிடவேண்டும் என ஏற்கனவே அந்நாட்டின் 50க்கும் மேற்பட்ட சமூக அமைப்புக்கள் இணைந்து அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்துள்ளன.

ROBERT JOHN KENNEDY: உலகை தலைகீழாக்கும் New Device... செல்போனுக்கு பதி...

ROBERT JOHN KENNEDY: உலகை தலைகீழாக்கும் New Device... செல்போனுக்கு பதி...

உலகை தலைகீழாக்கும் New Device... செல்போனுக்கு பதில் இனிமேல் எல்லார் கைய...

🔴நேரலை தமிழக ஆயர் பேரவையின் இடைக்கால கூட்டத்தொடர் திருப்பலி - தூய ஜென்மர...

Friday 19 January 2024

திருத்தந்தை ஆறாம் பவுல் என் மனம் கவர்ந்த மனிதர்!

 

திருத்தந்தை ஆறாம் பவுல் என் மனம் கவர்ந்த மனிதர்!



கிறிஸ்துவில உருமாற்றம் பெற்ற திருத்தந்தை புனித ஆறாம் பவுல் சிறந்த சிந்தனையாளர், படிப்பினையாளர், சான்றாளர் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருஅவையை அன்புகூர்வதற்கான அறிவுரை, திருத்தந்தை ஆறாம் பவுலின் ஆசிரியத்தில் அடிக்கடி மற்றும் மீண்டும் மீண்டும் கூறப்பட்டது என்றும், கிறிஸ்துவை நாம் காணும் கண்ணாடியாகவும், கிறிஸ்துவைச் சந்திக்கும் இடமாகவும் அவர் திருஅவையைக் கருதினார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஜனவரி 18, இவ்வியாழனன்று வெளியிடப்படவுள்ள ‘ஆறாம் பவுல், கிறிஸ்துவின் மறையுடலின் மறைவல்லுநர்’ "Paul VI, Doctor of the Mystery of Christ" என்ற புதிய நூலிற்கு எழுதியுள்ள அணிந்துரையில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.

கிறிஸ்துவிடம் திருத்தந்தை ஆறாம் பவுல் செய்த மிகவும் அவசியமான இறைவேண்டலை நாம் அனைவரும் நினைவில் கொள்கிறோம் என்றும், கிறிஸ்துவின் மீதான இந்தத் தனித்துவமான மற்றும் முழுமையான அன்பைத்தான் கர்தினால் செமராரோ இந்நூலில் குறிப்பிட்டுள்ளார் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

கிறிஸ்துவில உருமாற்றம்  பெற்ற திருத்தந்தை புனித ஆறாம் பவுல் சிறந்த சிந்தனையாளர், படிப்பினையாளர், சான்றாளர் என்று புகழாரம் சூட்டியுள்ள திருத்தந்தை, இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று திருத்தூதர்களின் தோழராக அவர் நற்செய்திக்குச் சான்று பகர விரும்பினார் என்றும் உரைத்துள்ளார்.

மேலும் தான் இயேசுவுடன் உருமாற்ற மலையில் இருக்கவேண்டும் (cum ipso in monte) என்ற ஆறாம் பவுலின் உள்ளார்ந்த ஆசைதான் அவரைக் கிறிஸ்துவில் உருமாற்றம் பெற்ற மனிதராக மாற்றியது என்றும், தனது அணிந்துரையில் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

திருத்தந்தை புனித ஆறாம் பவுலின் சிந்தனைகள் அடங்கிய இந்தப் புதிய நூல் வெளிவருவதில் தான் மிகவும் மகிழ்வதாகவும், அதற்குக் காரணம் அவரது பக்திநிறைந்த உருவம் எப்போதும் தனது மனம் கவர்ந்ததாக இருந்தது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

திருத்தந்தை புனித ஆறாம் பவுலின் நினைவு தினத்தை முன்னிட்டு புனிதர்பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர் கர்தினால் மார்செல்லோ செமராரோ அவர்கள், 2008-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் 2014-ஆம் ஆண்டு வரை வழங்கிய மறையுரைச் சிந்தனைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவருகின்றது.

Thursday 18 January 2024

திருவள்ளுவர் காட்டும் கடவுள்

 

திருவள்ளுவர் காட்டும் கடவுள்



பல திருக்குறள்களில் பண்பு நலன்களை வைத்துத்தான் வள்ளுவர் கருத்தை தெரிவிக்கிறாரே அன்றி எந்த தனிப்பட்ட கடவுளைப் பற்றியும் அவர் பேசவில்லை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பொங்கல் கொண்டாட்டம் என்பது எப்போதும் ஒரு நாளில் முடிவு அடைவதில்லை. தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டுவருகிறது. தை 2ஆம் தேதி மாட்டுப் பொங்கலாகவும், திருவள்ளுவர் தினமாகவும் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. திருக்குறள்கள் மூலம் வாழ்க்கையின் அனைத்து நெறிகளையும் கற்பித்துச் சென்ற திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்று முடிவெடுத்து அதனைக் கணக்கிட்டு திருவள்ளுவர் ஆண்டு கொண்டாடப்படுகிறது. இப்போது நாம் 2055ஆம் திருவள்ளுவர் ஆண்டில் உள்ளோம். செந்நாப்போதர், தெய்வப்புலவர், நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபங்கி, பெருநாவலர், பொய்யில்புலவர் என பல சிறப்புப் பெயர்களால் போற்றப்படும் திருவள்ளுவரை, அண்மைக்காலங்களில் சில குழுக்கள், தங்களுக்குரியவர் மட்டுமே என சொந்தம் கொண்டாட முயல்வதையும் கவலையுடன் காணகிறோம். ஒரு காலத்தில் இவரை கிறிஸ்தவர் என அடையாளம் காட்ட முயன்றனர் சிலர். இன்றோ, அவருக்கு காவி உடை அணிவித்தும், உத்ராட்சை மாலை போட்டும் புகைப்படம் வெளியிட்டு வருகிறார்கள். உலகப்பொதுமறையைத் தந்த இந்த சமூகப்புரட்சியாளரை ஒரு மதத்திற்கு மட்டும் உரியவர் என்றோ, ஓர் இனத்திற்கு மட்டுமே சொந்தமானவர் என்றோ கூறமுயல்வது, அறியாமையின் வெளிப்பாடு என்றுதான் சொல்லவேண்டும். சமணமும் பௌத்தமும் இருந்த காலத்தில் வாழ்ந்த வள்ளுவப் பெருந்தகை, கடவுள் நம்பிக்கை உடையவராகத்தான் இருந்தார், ஏனெனில் அவர் கடவுள் வாழ்த்தை எழுதியுள்ளார். திருக்குறளில் கடவுள் பற்றிய கருத்துக்கள் இருந்தாலும், எந்த தனிப்பட்ட கடவுளைப் பற்றியும் அவர் பேசவில்லை. பல திருக்குறள்களில் பண்பு நலன்களை வைத்துத்தான் அவர் கருத்தை தெரிவிக்கிறாரே அன்றி எந்த தனிப்பட்ட கடவுளைப் பற்றியும் அவர் பேசவில்லை. அதில் அவரின் பொதுமை பண்பை நாம் காணலாம்.

ஆதிகாலத்தில் இருந்தே கடவுள் நம்பிக்கை இருந்து வருகிறது. மனிதன் எப்போது இயற்கைக்கு பயந்தானோ அப்போது இருந்தே கடவுள் நம்பிக்கை இருந்து வருகிறது என்பதை வரலாற்றில் நாம் காண்கிறோம். இறை நம்பிக்கை இருப்பதாக திருவள்ளுவர் நம்பினாரே அன்றி, அவர் ஒரு குறிப்பிட்ட சமயத்தை சார்ந்தவர் என்று எப்போதும் அவர் நினைக்கவில்லை. அவரின் குறள்கள் எல்லாம் சமுதாயப் புரட்சிக்குத்தான் வித்திட்டன என்பதை எவராலும் மறுக்கமுடியாது. கடவுளைவிட மனிதனுக்குத்தான்  அவர் முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை திருக்குறள் ஆய்வாளர்கள் ஒத்துக்கொள்கின்றனர்.

கி.மு. ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய தொல்காப்பியர் பிறமொழித் தாக்குதலால் தமிழ் அழிந்து போவதைத் தடுத்து நிறுத்தினார் என்றால், திருவள்ளுவர் அயல் மக்கள் செல்வாக்கால் தமிழ்ப் பண்பாடு அழிந்து போவதைத் தடுத்து நிறுத்தினார் என்றுதான் கூறவேண்டும்.

திருக்குறளில் இறை என்ற சொல் 10 குறள்பாக்களில் இடம் பெற்றுள்ளது. இறைவன் என்ற சொல் 3 குறள்பாக்களில் இடம் பெற்றுள்ளது. ஆனால் குறள் 5 மற்றும் 10 ஆகிய இரண்டு குறள்பாக்களைத் தவி மற்றபிற குறள்களில் எல்லாம் இறை என்பது மன்னனைக் குறிக்கும் சொல்லாகவே அமைந்துள்ளது.

கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் குறள்பாக்களில், பகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இருள் சேர் இருவினையும் சேரா இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண் குணத்தான், என பண்புகளைக் குறிப்பிட்டு அப்பண்பிற்கு உரியவராகக் கடவுளை திருவள்ளுவர் வாழ்த்துவதைக் காண்கிறோம்.

இறைவன் என்ற சொல்லை, கடவுளையும், அரசனையும், தலைவனையும் குறிப்பிட வள்ளுவர் உபயோகப்படுத்தி இருக்கிறார். 7 குறள்பாக்களில் 3 குறட்பாக்களில் உள்ள இறைவன் என்ற சொல் கடவுளையும், அடுத்து 3 குறள்பாக்களில் உள்ள இறைவன் என்ற சொல் அரசனையும், ஒரு குறள்பாவின் இறைவன் என்ற சொல், தலைவனையும் குறிப்பிடுகின்றன.

திருக்குறளில் முதல் அதிகாரமான 'கடவுள் வாழ்த்து' என்பதில், கடவுள் என்ற சொல், தலைப்பில் மட்டுமே இருக்க, திருக்குறளில் வேறு எங்கும் கையாளப்படவில்லை என்பது பலருக்கு வியப்பான ஒன்றுதான். ஏனெனில், கடவுள் என்ற சொல் முழுமையான தமிழ்ச் சொல். அதுபோல், தமிழ் என்ற சொல்லும் திருக்குறளில் இல்லை.

'அ என்ற எழுத்துத் தான் முதல் எழுத்து. அது போல ஆதிபகவன் தான் உலகத்திற்கு முதல்வன்' என்று கடவுளைத் தொழுது, தன் திருக்குறளை ஆரம்பிக்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

திருக்குறள், மாந்தர்தம் அகவாழ்வில் சுமுகமாகக் கூடி வாழவும், புற வாழ்வில் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்றால், நாலும் இரண்டும் சொல்லுக்குறதி என்று கூறி நாலடியாரையும், திருக்குறளின் அருமையையும் பறைசாற்றுவதை நாம் அறிவோம்.  இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் திருக்குறள் "உலகப் பொது மறை" என்று அழைக்கப்படுகிறது. உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறள், அற நூலாக தோன்றினாலும் இதில் சமூக சிந்தனை, சமூக தேடல், விழிப்புணர்வு, வாழ்வியல் சிந்தனை என பல்வேறு நிலைகளை உடையது. அவ்வகையில் மனிதநேயக் கருத்துக்களும் நிறைந்து வழிகின்ற ஊற்றாகத் திகழ்கிறது.

சமுதாயம் விழிப்புப் பெறவும், மக்களிடையே மறுமலர்ச்சிக்கான விழிப்புணர்வை ஊட்டவும் கருத்தக்களை வழங்கிய சிந்தனைகளில் வள்ளுவர் முன்னணியில் நிற்கின்றார். வள்ளுவரின் பார்வை முழுமையான மானுட வாழ்வியல் பார்வையாகவே தடம் பதித்துள்ளது. மக்கள் கல்வியறிவு அற்றவர்களாக இருந்த போது அவர்களிடம் பரப்பப்பட்டு வந்த மதச் சடங்குகளும் மூடப்பழக்கங்களையும் சீர்திருத்த விழைந்தார் பெரியார். அதன் தொடர்ச்சியாக, மொழியிலும், இலக்கியங்களிலும் மறைந்தும், மறையாமலும் வழங்கிவந்த கருத்துகளையும் களைந்து புதிய புதிய சிந்தனைகளுக்கு வழிகோலிய பெரியார், உலக இலக்கியங்களில் நீதி வழங்கியதில் சிறந்த நூல் திருக்குறள் ஒன்றுதான் என்பதை தமது கருத்தாக வெளிப்படுத்தி இருக்கிறார். நம் மக்களின் நல்வாழ்வுக்குத் தேவையான உயர்ந்த நெறிகளையும் மனிதனிடம் மனிதன் நடந்து கொள்ளும் முறையையும் வழி வகுக்கக் குறளுக்கு மேலான ஒரு நீதி நூல் வேறு கிடையாது என்பது பெரியாரின் கருத்து. தமிழ் சமுதாயத்தில் மண்டிக் கிடந்த மூட நம்பிக்கைகளை அகற்றி சாதி, மதம் போன்ற கூறுகள் இல்லாத சமத்தவ சமுதாயத்தை உருவாக்க நினைத்த பெரியாருக்கு, அவருடைய கருத்துகளை அரண் செய்வது போலவும், அவரது கொள்கைகளுக்கு வலுவூட்டுவதாகவும் அமைந்துள்ள பல்வேறு கருத்துகளை தனக்கேவுரிய ஆய்வாகப் பெரியார் திருக்குறளை அணுகி இருக்கிறார் என்று கூறலாம்.

இதற்கு பலம் சேர்ப்பதாக, வள்ளுவரின்,

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொக்கும்

செய்தொழில் வேற்றுமையான், என்பதை ஓர் உதாரணமாகக் கூறலாம்.

இதேபோல், மனிதன் பிற மனிதனிடத்தில் பிற உயிர்களிடத்தும் காட்டும் நேயமே, மனிதநேயம் ஆகும். பழங்காலத்தில் மனிதநேயம் என்பது அருளுடைமை என்ற சொல்லால் அழைக்கப்பட்டது. பிறர் ஒருவருக்கு இடர் ஏற்பட்டிருந்தும், அது தமக்கு ஏற்பட்ட துன்பம் போல் கருதி பிறருக்கு உதவுமாறு செய்யும் ஈகைக் குணமே, அருளுடைமை. ஓர் உயிர் துன்பப்படும் போது, அவர் உயிர் பால் கசியும் ஈரமுடைமையை அருளுடைமை எனலாம். ஒரு மதம் கூறிய சில கருத்துக்களை பிற மதங்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தாலும், அனைத்து மதங்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துக்களில் ஒன்றுதான் அருளுடைமை என்னும் மனிதநேயம். "உன் உயிரைப் போல் பிற உயிரையும் நேசி" என்ற மனிதநேயக் கருத்தை அனைத்து சமயங்களும் கூறுகின்றன. இதனையே வள்ளுவர்,

"நல்லா ட்டால் நாடி அருளாள்க பல்லாற்றால்

தேரினும் அஃதே துணை" என உரைக்கிறார். நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும், என இதற்கு விளக்கமளிக்கிறார் மு. வரதராசனார்.

இதையே மீண்டும் வள்ளுவர்,

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ

டியைந்துகண் ணோடா தவர், என்கிறார்.

ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவரே ஆவார் என்பது இதன் பொருள்.

இதையும் கொஞ்சம் தாண்டிச் சென்று,

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.

அதாவது, அன்பில்லாதவர் எல்லாப் பொருளும் தமக்கு மட்டும் உரியது என எண்ணுவர், அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர் என்பதையும்,

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வேம் எனல்.

அதாவது, அடுத்தவர் பொருளைத் திருடி எடுத்துக் கொள்ளலாம் என்று உள்ளத்தில் எண்ணுவது கூடத் தீமையானது என்பதையும் வள்ளுவம் கூறியுள்ளதை நாம் அறிவோம்.

இதை தவறு என்று எந்த மதமாவது கூறுமா, அல்லது இதற்கு எதிரானக் கருத்துக்களை எந்த மதமாவது கூறியதுண்டா? ஆகவேதான் அழுத்திக் கூறுகிறோம், வள்ளுவர் கூறும் நெறிகள் அனைத்துச் சமயத்தவரும் ஏற்றுப் போற்றத் தக்கன. திருக்குறள் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாய் நின்று நன்னெறி புகட்டும் அருமறையாக உள்ளது. “வள்ளுவன் தன்னை உலகிற்கு தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்ற வரிகளில், வள்ளுவனால் நாம் கண்ட பெருமையை உணர்கிறோம்.

உலகிற்கு இந்த தமிழர்தம் பெருமையை அறிமுகம் செய்தவர்கள் என்றுப் பார்த்தோமானால், திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு,போப், திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்த வீரமாமுனிவர், திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதிய மணக்குடவர் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

இறுதியாக ஒன்றைச் சொல்லி இன்றைய நிகழ்ச்சியை நிறைவுச் செய்கிறோம். திருவள்ளுவரை எந்த மதத்திற்குள்ளோ, இனத்திற்குள்ளோ இழுத்து முடக்கிவிடாதீர்கள். அவர் எந்த மதத்தையும் சார்ந்தவரல்ல. தனியொருவனுக்கு உணவில்லையெனில் இஜ்ஜகத்தினை அழித்திடுவோம் என்று கூறிய பாரதியைப்போல் அல்லாமல்,

இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டி பரந்து

கெடுக உலக இயற்றியான். 

என்றவர் வள்ளுவர். அதாவது, ஒருவன் மற்றவனை இரந்து பிச்சை எடுத்துத்தான் உயிர் வாழ வேண்டும் என்ற நிலை வருமாயின் இந்த உலகம் மட்டுமல்ல அதற்கெல்லாம் அடிப்படையாகக் கருதப்படும் கடவுள்தான் முதலில் அழிக்கப்பட வேண்டியவனாவான் என்ற வள்ளுவரின் கூற்று சிந்திக்கத் தக்கது. 

ஆகவே அன்புள்ளங்களே, திருவள்ளுவரை ஒரு மனித நேயச் சிந்தனையாளராக, சமுதாயப் புரட்சியாளராக வாழ்வில் எடுத்துக்கொண்டு அவர் வழி நடப்போம்.

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு, என்பவரும் வள்ளுவரே.

Monday 15 January 2024

Mini Tamilnadu Near Himalaya! இமயமலை அருகே குட்டி தமிழ்நாடு! Moreh Tamil...

இஸ்ரேலைச் சூழ்ந்து வரும் மிகப் பெரிய ஆபத்து களமிறங்கத் தயாராகிவிட்ட பட...

செம்பருத்திவிளை, தூய அந்தோணியார் ஆலயம்,பொதுக்காலம் 2ஆம் வாரம் - ஞாயிறு ,...

"விசா வேண்டாம்; நீங்க வந்தா மட்டும் போதும்" இந்தியர்களுக்கு ரத்தின கம்பள...

நாசா அழைத்த ஈழத் தமிழர் !! பறக்கும் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு !! |...

Rev. Fr. Albert George Alexander Anastas, the Bishop of Kuzhithurai

ROBERT JOHN KENNEDY: இந்திய மறைமாவட்டங்களுக்குப் புதிய ஆயர்கள் நியமனம்

ROBERT JOHN KENNEDY: இந்திய மறைமாவட்டங்களுக்குப் புதிய ஆயர்கள் நியமனம்:   இந்திய மறைமாவட்டங்களுக்குப் புதிய ஆயர்கள் நியமனம் பேரருள்திரு ஆல்பர்ட் அலெக்சாண்டர் அனஸ்தாஸ் அவர்கள், கோட்டாறு மறைமாவட்டத்தில் உள்ள மணவிளை...

Ayodhya: புதுப்பொலிவு பெறும் ராமர் கோவில் Area - மற்ற இடங்கள் எப்படி இரு...

Israel: “யாராலும் எங்களை தடுக்க முடியாது” - Genocide வழக்குக்கு மத்தியில...

Frederik X becomes King of Denmark after historic succession

 Frederik X becomes King of Denmark after historic succession



Frederik X became the King of Denmark on Sunday following the formal abdication of his mother, Queen Margrethe II, who had been on the throne for 52 years. Tens of thousands of Danes gathered in Copenhagen to witness the historic succession.

By Stefan J. Bos

Danish Prime Minister Frederiksen proclaimed 55-year-old Frederik X the new King of Denmark, watched by an enthusiastic crowd. 

Standing next to him on the balcony of Christiansborg Palace in Copenhagen, the prime minister turned three ways to show she was proclaiming him the King to the whole of Denmark.

It followed the formal abdication of his mother, Queen Margrethe II, who was on the throne for 52 years.

The queen announced she was stepping down on television on New Year’s Eve.

Frederik’s Australian-born wife, Mary Donaldson, takes on the role of Queen Consort.

The new King paid tribute to his mother, wife, and family before being joined by the new Queen Mary, dressed in white, followed by their four children.

Queen Mary, born in Australia

Australian-born Mary is the first commoner to become queen in Denmark.

Frederik automatically became the new King earlier in the day when his mother signed an abdication declaration in the Council of State. She left the room with tears in her eyes, saying: “God bless the king.”

She had left the nation reeling after announcing her abdication.

Even Prime Minister Frederiksen, a Social Democrat and previously not considered a royalist, has reportedly said the queen’s handling of the role has converted her.

While mainly a ceremonial role, the King is seen by supporters as having an essential uniting role for the nation while facing significant challenges.

These include concerns about immigration and aiming to strengthen defense ties with other Nordic countries to protect critical infrastructure and counter what the country views as the Russian threat both in the Arctic and the Baltic Sea region amid the ongoing war in Ukraine.

But those difficulties seemed briefly forgotten as the crowds welcomed their new King Frederik X.

இந்திய மறைமாவட்டங்களுக்குப் புதிய ஆயர்கள் நியமனம்

 

இந்திய மறைமாவட்டங்களுக்குப் புதிய ஆயர்கள் நியமனம்



பேரருள்திரு ஆல்பர்ட் அலெக்சாண்டர் அனஸ்தாஸ் அவர்கள், கோட்டாறு மறைமாவட்டத்தில் உள்ள மணவிளை எனும் ஊரில் 1966ஆம் ஆண்டு டிசம்பர் 16 அன்று பிறந்தவர். இறையியல் மற்றும் தத்துவஇயலை திருச்சி புனித பவுல் கல்லூரி, மற்றும் கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் பயின்றவர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இந்தியாவின் கும்பகோணம், குழித்துறை, ஜபல்பூர், விஜயபுரம், கர்வார், மீரட், ஆகிய 6  மறைமாவட்டங்களுக்குப் புதிய ஆயர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 13 சனிக்கிழமை வெளியிடப்பட்ட தகவல்களின்படி கும்பகோணம் மறைமாவட்ட ஆயராக அருள்பணி ஜீவானந்தம் அமலநாதன், குளித்துறை மறைமாவட்ட ஆயராக பேரருள்திரு ஆல்பர்ட் அலெக்சாண்டர் அனஸ்தாஸ், ஜபல்பூர் மறைமாவட்ட ஆயராக பேரருள்திரு வளன் அரசு, விஜயபுரம் மறைமாவட்ட துணைஆயராக பேரருள்திரு ஜஸ்டின் அலெக்சாண்டர் மடத்திபரம்பில், மீரட் மறைமாவட்ட ஆயராக பேரருள்திரு பாஸ்கர் ஜேசுராஜ், கர்வார் மறைமாவட்ட ஆயராக பேரருள்திரு Duming Dias  ஆகியோர் திருத்தந்தையால் புதிய ஆயர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் அருள்பணி ஜீவானந்தம்

கும்பகோணம் மறைமாவட்ட ஆயராக அருள்பணி ஜீவானந்தம் அமலநாதன் அவர்கள் திருத்தந்தையால் ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் மிக்கேல்பட்டியில் 1963ஆம் ஆண்டு ஏப்ரல் 2 அன்று பிறந்த புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள ஜீவானந்தம் அமலநாதன் அவர்கள், மேய்ப்புப்பணி இறையியலில் முனைவர் பட்டத்தை உரோம் இலாத்தரன் பல்கலைக்கழகத்தில் பெற்றவர்.

பேரருள்திரு அமிர்தசாமி அவர்கள் தனது இளம் குருமட வாழ்வை கும்பகோணத்திலும் இறையியல் மற்றும் மெய்யியலை பூந்தமல்லி திரு இருதய குருகுலத்திலும் மே 6, 1990 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.  பாத்திமாபுரம் கபிஸ்தலம் ஆகிய பங்குகளில் பங்குத்தந்தையாக பணியாற்றி விட்டு பூந்தமல்லி திரு இருதய குருமடத்தில்  பேராசிரியராக (1998 - 2002 |பணியாற்றிய நிலையில் உரோமையில் உயர் கல்வியையும் (2003-2008)  பூந்தமல்லி திரு இருதய குரு மடத்தில் 2008 முதல் 2014 வரை பேராசிரியராகவும் பணியாற்றினார். 2015- 2016 ஆண்டுகளில் பூண்டி மாதா பங்குத்தந்தையாகவும், 2016 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கும்பகோணம் மறைமாவட்ட முதன்மை குருவாக பணியாற்றி வருகின்றார். 

குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஆல்பர்ட் அலெக்சாண்டர் அனஸ்தாஸ்      

குளித்துறை மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருள்திரு ஆல்பர்ட் அலெக்சாண்டர் அனஸ்தாஸ் அவர்கள், கோட்டாறு மறைமாவட்டத்தில் உள்ள மணவிளை எனும் ஊரில் 1966ஆம் ஆண்டு டிசம்பர் 16 அன்று பிறந்தவர். இறையியல் மற்றும் தத்துவஇயலை திருச்சி புனித பவுல் கல்லூரி, மற்றும் கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் பயின்றவர்.

ஜபல்பூர் மறைமாவட்ட ஆயர் வளன் அரசு

தென்இந்தியாவின் ஜபல்பூர் மறைமாவட்ட ஆயராக பணியாற்றி வந்த ஆயர் ஜெரால்டு அல்மேதா அவர்களின் பதவி விலகலை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை அவர்கள், தூய அலாய்சியஸ் கல்லூரியின் தலைவராகப் பணியாற்றி வந்த கோட்டாறு மறைமாவட்டத்தைச் சார்ந்த பேரருள்திரு வளன் அரசு அவர்களை அம்மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயராக நியமித்துள்ளார்.

புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருள்திரு வளன் அரசு அவர்கள்,  1967 ஆம் ஆண்டு ஜூன் 13 அன்று கோட்டார் மறைமாவட்டத்தில் உள்ள ஏனாயத்தில் பிறந்தவர். தத்துவஇயல், இறையியல், வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம், பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும்  முனைவர் பட்டமும் பெற்றவர்.

விஜயபுரம் மறைமாவட்ட துணைஆயர் ஜஸ்டின் அலெக்சாண்டர் மடத்திபரம்பில்

விஜயபுரம் மறைமாவட்ட துணைஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருள்திரு ஜஸ்டின் அலெக்சாண்டர் மடத்திபரம்பில் அவர்கள், விஜயபுரம் மறைமாவட்டத்தில் உள்ள பாம்பனார் எனும் ஊரில் பிறந்தவர்.   

மீரட் மறைமாவட்டத்திற்கு தஞ்சாவூர் மறைமாவட்டத்தைச் சார்ந்த பேரருள்திரு பாஸ்கர் ஜேசுராஜ் அவர்களையும் கர்வார் மறைமாவட்டத்திற்கு பேரருள்திரு Duming Dias அவர்களையும், புதிய ஆயராக  நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மைசூர் மறைமாவட்ட ஆயராகப் பணியாற்றி வந்த ஆயர் கன்னிகாதாஸ் அந்தோணி வில்லியம் அவர்களின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.