Tuesday 26 September 2023

அமெரிக்காவையே திரும்பி பார்க்கவைத்த கீழடி | Keezhadi | America | US | Bi...

Kamarajar The King Maker 👑 Story of All Time Greatest Political Leader o...

ஐரோப்பாவில் கால்பதித்த ராகுல்காந்தி | Rahul gandhi

NASA Mission Success: 'Dangerous' Asteroid-ல் இருந்து திரும்பி வந்த OSIR...

"சிந்துவில் இருந்து அல்ல; தமிழகத்தில் இருந்து தான்.."மொத்த இந்திய வரலாறு...

கடவுள் திருமுகத்தின் பிரதிபலிப்புக்களான சிறார்

 

கடவுள் திருமுகத்தின் பிரதிபலிப்புக்களான சிறார்



நம்மீது கொண்ட அன்பிற்காக தன் உயிரையே கையளித்த இயேசுவின் அன்பை விடப் பெரிய அன்பு எதுவுமில்லை என்பதை பாடுபட்ட இயேசுவின் திருமுகம் உணர்த்துகின்றது

மெரினா ராஜ் - வத்திக்கான்

நாம் சந்திக்கும் ஒவ்வொரு சிறாரும் கடவுள் திருமுகத்தின் பிரதிபலிப்பு என்று நம்பிக்கை கொண்டால் உலகம் மாறும் என்றும், துன்புறும் சிறார் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவரின் துன்பத்திலும், வெரோனிகா கிறிஸ்துவின் முகத்தைத் துடைத்த துணியில் பதிந்த அவரின் முகத்தைக் காண்கின்றோம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 25 திங்கள் கிழமை வத்திக்கானில் இலத்தீன் அமெரிக்க சங்கத்தின் சிறார் பாதுகாப்புக்கான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் பிரதிநிதிகளை சந்தித்து உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவை மற்றும் உலகில் நடைபெறும் சிறாருக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க பணியாற்றி வரும் அப்பிரதிநிதிகளை வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறாருக்கு எதிரான வன்முறைகள் சோகத்தின் பிரதிபலிப்பு என்றும், மனிதகுலம் மேல் தேவையான கவனம் செலுத்தப்படவில்லை என்பதை எடுத்துரைக்கும் ஒரு துயரமான நிகழ்வு என்றும் கூறினார்.

திருஅவை சிறார் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புப் பணியில் போதுமான முன்னேற்றம் அடைந்துள்ளது அதில் தொடர்ந்து முன்னேறும் என்று தான் உறுதியாகக் கூற முடியும் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அத்தகைய பணிகள் சமுதாயத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க பணியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இவ்வழியில் திருஅவையின் வளர்ச்சிகள் மற்றும் சாதனைகள் மற்ற நிறுவனங்களுக்கு கவனிப்பு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொருவரிலும் கிறிஸ்துவைக் கண்டறிந்து, செபத்தில் அவர்களை இயேசுவிடம் அர்ப்பணித்து செபிக்கவும் அழைப்பு விடுத்தார்.

உண்மையான தாழ்ச்சி மனப்பான்மைக் கொண்டு நம்மில் இருக்கும் சிறார் மத்தியில் நம்மை நாம் அடையாளம் காணவும், பாடுகள்பட்ட இயேசுவின் முகத்தில் நமது துன்பங்களை சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மை நாடி வருபவர்களை வரவேற்பவர்களாக அவர்களது அருகில் உடன் இருப்பவர்களாக வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நம்மை மன்னிக்கின்ற குணப்படுத்துகின்ற, மீட்கின்ற இயேசுவோடு உரையாடி அவரது வார்த்தைகளைக் கேட்போம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மீது கொண்ட அன்பிற்காக தன் உயிரையே கையளித்த இயேசுவின் அன்பைவிடப் பெரிய அன்பு எதுவுமில்லை என்பதை பாடுபட்ட இயேசுவின் திருமுகம் உணர்த்துகின்றது என்றும் கூறினார்.

ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள், உன்னை அன்பு செய்வது போல உன் அயலாரையும் அன்பு செய் என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கிணங்க, நமது காயங்கள், தாழ்ச்சி, மன்னிப்பு, ஆறுதல் ஆகியவற்றின் தேவையை அறிந்து கொள்ளுங்கள் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 1ஆம் நாள் திருஅவை சிறப்பிக்க இருக்கும் சிருமலர் குழந்தை இயேசுவின் புனித தெரசா நமக்கு வலியுறுத்துவது போல மகிழ்ச்சியற்ற மற்றும் அவநம்பிக்கையான பாவிகளின் மனமாற்றத்திற்காக செபிக்கவும், அதன்வழியாக அத்தகையவர்கள், "நீங்கள் ஏன் என்னைத் துன்புறுத்துகிறீர்கள்?" என்று பிறர் வழியாக இயேசு கேட்கும் கேள்விகளை உணர்ந்து வாழ வழிவகுக்கவும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை


Thursday 21 September 2023

ROBERT JOHN KENNEDY: சிவகங்கை மறைமாவட்ட புதிய ஆயராக அருள்பணி லூர்து ஆனந...

ROBERT JOHN KENNEDY: சிவகங்கை மறைமாவட்ட புதிய ஆயராக அருள்பணி லூர்து ஆனந...:   சிவகங்கை மறைமாவட்ட புதிய ஆயராக அருள்பணி லூர்து ஆனந்தம் அருள்பணி லூர்து ஆனந்தம் அவர்கள் சிவகங்கை மறைமாவட்டத்தில் உள்ள திருவரங்கத்தில் 1958 ...

சிவகங்கை மறைமாவட்ட புதிய ஆயராக அருள்பணி லூர்து ஆனந்தம்

 

சிவகங்கை மறைமாவட்ட புதிய ஆயராக அருள்பணி லூர்து ஆனந்தம்



அருள்பணி லூர்து ஆனந்தம் அவர்கள் சிவகங்கை மறைமாவட்டத்தில் உள்ள திருவரங்கத்தில் 1958 ஆகஸ்ட் 15 அன்று பிறந்தார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

தமிழ்நாட்டின் சிவகங்கை மறைமாவட்ட ஆயராக அருள்பணி முனைவர் லூர்து ஆனந்தம் (மதுரை ஆனந்த்) அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

செப்டம்பர் 21 வியாழன் அன்று ஆயராக நியமிக்கப்பட்டதற்கான, திருத்தந்தை அவர்களின் ஆணையை, மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டார். வரும் அக்டோபர் மாதம் முதல் தனது ஆயர் பணியை சிவகங்கையில் தொடர இருப்பதாகத் திருப்பீடத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அருள்பணி லூர்து ஆனந்தம் அவர்கள் சிவகங்கை மறைமாவட்டத்தில் உள்ள திருவரங்கத்தில் 1958 ஆகஸ்ட் 15 அன்று பிறந்தார். மதுரையில் உள்ள அருள் ஆனந்தர் கல்லூரியில் தத்துவம் மற்றும் திருச்சிராப்பள்ளியில் உள்ள புனித பவுல் குருத்துவக்கல்லூரியில் இறையியல் படித்தார்.

ஜெர்மனியின் Friburgo இல் உள்ள Albert Ludwig பல்கலைக்கழகத்தில் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார். 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி மதுரை மறைமாவட்டத்திற்கு குருவாக நியமிக்கப்பட்ட அருள்பணி ஆனந்த் அவர்கள், மதுரை பேராயரின் செயலாளர் (1986-1989);  கொடைக்கானல் திருஇருதய ஆலயப் பங்குத்தந்தை  (1995-1999); சென்னை திருஇருதய குருத்துவக்கல்லூரி பூவிருந்தவல்லி இறையியல் பேராசிரியர் (1999-2004); நம் வாழ்வு கத்தோலிக்க வார இதழின் தலைமை ஆசிரியர் - (2004-2011); மதுரை புனித பேதுரு குருமட அதிபர் (2011-2014). என பல பொறுப்புக்களை ஆற்றியுள்ளார்.

2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மதுரை டவுன்ஹால் சாலையில் உள்ள ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தையாகவும், வட்டார அதிபராகவும் பணியாற்றிக்கொண்டிருக்கும் அருள்பணி லூர்து ஆனந்தம் அவர்கள் மதுரை மறைமாவட்டத்தில் உள்ள நொபிலி அருள்பணி மையத்தின் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Life on Mars? NASA's Shocking Discovery!

Thursday 14 September 2023

பெங்களூருவில் பசியால் வாடுவோருக்கு உதவும் ரொட்டி மையம்

 

பெங்களூருவில் பசியால் வாடுவோருக்கு உதவும் ரொட்டி மையம்



ஏழைகளின் முகத்தில் இயேசுவைக் காணும் நோக்கத்தில் செயல்பட்டு, கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் ஒவ்வொரு நாளும் 750 பேருக்கு உணவு வழங்கிய கத்தோலிக்கச் சேவை மையம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கத்தோலிக்கக் கருணை நடவடிக்கைகளின் பாரம்பரியத் தொடர்ச்சியாக இந்தியாவின் பெங்களூரு நகரில் பசியால் வாடுவோர் மற்றும் வீடற்றோருக்கு ரொட்டி மையம் ஒன்றை நடத்தி வருகிறது பிரான்சிஸ்கன் துறவு சபை. 

புனித அந்தோனியார் சேவா நிலையா அல்லது புனித அந்தோனியார் ரொட்டி மையம் என அழைக்கப்படும் இந்த சேவை மையத்தின் வழியாக, அசிசியின் புனித பிரான்சிஸ் அவர்களின் கருணைப் பணிகளை உயிர்துடிப்புடன் தொடர்ந்து ஆற்றுவதாக உரைத்தனர் OFM பிரான்சிஸ்கன் துறவுசபையினர்.

பிரான்சிஸ்கன் துறவி, அருள்பணி Trevor D’Souza அவர்களால் 2003ஆம் ஆண்டு ஏழைகளுக்கான சேவை மையமாகத் துவக்கப்பட்ட இந்த பணித்தளம், ஏழைகளின் முகத்தில் இயேசுவைக் காணும் நோக்கத்தில் செயல்பட்டு கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் ஒவ்வொரு நாளும் 750 பேருக்கு உணவு வழங்கி சேவையாற்றியுள்ளது.

வேறு மாநிலங்களில் இருந்து குடியேறி பணியாற்றும் ஏழைத் தொழிலாளிகள், மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளின் உறவினர்கள்  என, உதவித் தேவைப்படும் அனைத்து ஏழைகளுக்கும் சுயவிருப்பப் பணியாளர்கள் வழி தன் செவையைத் தொடர்ந்து வருகிறது புனித அந்தோனியார் ரொட்டி மையம். 

பெங்களூருவில் உள்ள இந்த மையத்தில் பணியாற்றும் சுயவிருப்பப் பணியாளர்கள் எவ்வித ஊதியமும் இன்றி தாங்களே முன்வந்து சேவையாற்றும் அதேவேளையில், தனியார்கள் மற்றும் நிறுவனங்கள் வழங்கும் தாராளக் கொடைகளின் வழி இது இயக்கப்படுகிறது.

 

Tuesday 12 September 2023

Srilanka Easter Attack: Channel 4 Documentary-க்கு Rajapaksa Family கடும...

தமிழுக்கு வயது 3 லட்சம் வருடம் | Mannar mannan speech payitru on tamil h...

Chennai (madras) Old Photos 1900's | Madras Old Rare Photos

Chandrayaan-3 | Sleep Mode-க்கு சென்ற சந்திரயான் -3? கருவிகளை Switch Off...

Pope encourages Community of Sant'Egidio to persist in pursuing peace

 

Pope encourages Community of Sant'Egidio to persist in pursuing peace



Pope Francis calls for not losing hope and persisting in prayer to combat war and conflict, especially in Ukraine, in a message he sent to the annual international meeting of the Community of Sant'Egidio. This year's encounter in the “Spirit of Assisi” takes place in Berlin, Germany, from 10-12 September on the theme “The Audacity of Peace.”

By Deborah Castellano Lubov

"We cannot resign ourselves to the tragedies and war around us, but must believe there is hope through an audacity of peace."

Pope Francis gave this encouragement in the message he sent to the International Meeting promoted by the Community of Sant’Egidio in the “Spirit of Assisi.” The gathering is focusing on the theme “The Audacity of Peace” with participants meeting in Berlin, Germany, from 10 to 12 September 2023.

Pope Francis has participated often in the encounter, especially in recent years as it was held at Rome's Colosseum or the Campidoglio with a modified format due to the pandemic. The Holy Father has been collaborated with the Community of Sant'Egidio in numerous initiatives in Rome and abroad since the start of his pontificate.

The Holy Father recalled their encounter among Christian leaders, leaders of world religions, and civil authorities takes place this year in the German capital, near the Brandenburg Gate, and "faithfully continues the pilgrimage of prayer and dialogue initiated by Saint John Paul II in Assisi in 1986."

The Pope called the location of their meeting particularly evocative, given it takes place precisely where the wall came down that separated the two Germanies and divided the two worlds of Western and Eastern Europe. The fall of the wall, the Pope observed, opened up new horizons, such as freedom for peoples, the reunification of families, and hope of a new world peace following the Cold War.

He lamented however that over the years, the promise of such a future was not built on this common hope, but on "special interests" and "mutual mistrust." 

War ravages on

Today, the Pope observed, war still ravages too many parts of the world.

"I am thinking of several areas in Africa and the Middle East, but also of many other regions of the planet, including Europe, which is enduring a war in Ukraine," the Pope said, calling it "a terrible conflict with no end in sight," which "has caused death, injury, pain, exile, and destruction."

Pope Francis recalled being at the Community's encounter last year at Rome's iconic Colosseum to pray for peace, acknowledging that "we listened to the cry of a peace that has been sullied and trampled upon."

"We cannot resign ourselves to this scenario," the Pope said, insisting, "Something more is needed. We need the 'audacity of peace,' which is at the heart of your meeting."

“We cannot resign ourselves to this scenario. Something more is needed...”

"Realism is not enough, political considerations are not enough, the strategic approaches implemented so far are not enough. More is needed, because war continues," he argued, appealing for this "audacity of peace."

Audacity of peace

The audacity of peace, he explained, is "the prophecy required of those who hold the fate of warring countries in their hands, of the international community, of us all." 

This audacity, the Holy Father continued, "challenges believers in a particular way to transform it into prayer, to invoke from heaven what seems impossible on earth."

“The audacity of peace challenges believers in a particular way to transform it into prayer, to invoke from heaven what seems impossible on earth.”

Insistent prayer, he said, is the first kind of audacity required. "In the Gospel," the Pope emphasized, "Christ points out the 'need to pray always and not to lose heart', saying: 'Ask, and it will be given you; search, and you will find; knock, and the door will be opened for you.'" 

The Pope made a plea to become "beggars for peace," together with all brothers and sisters of other religions, and all those "who do not resign themselves to the inevitability of conflict."

Praying without losing heart

Pope Francis told the encounter's participants that he joins them in their prayer for an end to war, and thanked them from the bottom of his heart for all they do. "It is indeed necessary to press forward in order to surmount the wall of the impossible, constructed on the apparently irrefutable reasoning arising from the memory of such great sorrow and so many wounds suffered in the past," he said.

He acknowledged that this is difficult, but not impossible.

"It is not impossible for believers, who live the audacity of a hopeful prayer," he stated, "but it must not be impossible for politicians, leaders or diplomats either," he added, inviting, "Let us continue to pray for peace without losing heart, to knock with a humble and insistent spirit at the ever-open door of God’s heart and at the doors of humankind."

Pope Francis concluded by exhorting, "Let us ask that ways to peace be opened, especially for beloved and war-torn Ukraine."

“Let us trust that the Lord always hears the anguished cry of His children.”

Pope: Blessed Ulma family a model of Christian care for others

 

Pope: Blessed Ulma family a model of Christian care for others



Pope Francis recalls the beatification of the 9 members of the Ulma family in Poland, and praises their heroism for giving their lives to save Jews during World War II.

By Devin Watkins

The nine members of the Ulma family were beatified on Sunday in their Polish hometown of Markowa, where they were martyred by Nazi soldiers for harbouring Jews during World War II.

Pope Francis upheld the family's actions as model of Christian life for everyone to follow, as he spoke at the Angelus prayer on Sunday.

He called the Ulmas “a model to imitate in our efforts to do good and serve those who are in need.”

“In response to the hatred and violence that characterized those times, they embraced evangelical love,” he said.

The Pope added that the Polish family “represented a ray of light in the darkness of the Second World War” and invited everyone to offer a round of applause for the new Blesseds.

Pope Francis went on to urge Christians to follow their example by “opposing strength of arms with charity, and violent rhetoric with tenacious prayer.”

“May we [pray] especially for the many countries that suffer due to war,” he said. “In a special way, let us intensify our prayers for martyred Ukraine… which is suffering greatly.”

Beatification Mass

Cardinal Marcello Semeraro, Prefect of the Dicastery for the Causes of Saints, presided over the beatification Mass in Markowa, which was concelebrated by 7 Cardinals and 1,000 priests, with over 32,000 faithful registered to attend.

The beatified family members are Jozef and Wiktoria Ulma, and their children Stanisława, Barbara, Władysław, Franciszek, Antoni, Maria, and an unnamed child who was born at the moment of Wiktoria's martyrdom.

In his homily at the Mass, Cardinal Semeraro said the Ulma’s family home became “an inn where the despised, outcast, and death-stricken was welcomed and cared for.”

He said Jozef and Wiktoria lived “a holiness that was not only marital but was fully embedded in their entire family.”

Blessed unnamed-babe

Cardinal Semeraro also upheld the Christian witness of the newly-beatified unnamed child.

“Without ever having uttered a word,” he said, “today the little Blessed cries out to the modern world to welcome, love, and protect life, especially that of the defenseless and marginalized, from the moment of conception until natural death.”

He said the child’s “innocent voice seeks to shake the consciences of a society where abortion, euthanasia, and contempt for life seen as a burden and not a gift are rampant.”

“The Ulma family,” said the Cardinal, “encourages us to react to that throwaway culture, which Pope Francis denounces.”


புனிதர்களாக அறிவிக்கப்பட்ட உல்மா குடும்பம்

 

புனிதர்களாக அறிவிக்கப்பட்ட உல்மா குடும்பம்



துன்புறுத்தப்பட்ட யூதர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக 1944 ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் நாள் ஜெர்மன் படைவீரர்களால் உல்மா குடும்பத்தார் அழிக்கப்பட்டனர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

நன்மையின் உந்து சக்தியாகவும், தேவையிலிருப்பவர்களுக்கு பணியாற்றுவதில் முன்மாதிரிகையாகவும் போலந்தின் உல்மா குடும்பம் இருக்கின்றது என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 10 ஞாயிற்றுக்கிழமை போலந்து நாட்டு உல்மா குடும்பத்தாரான கணவன் ஜோசப், நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவி விக்டோரியா, முழுவதும் பிறக்காத குழந்தை உட்பட அவர்களின் 7 குழந்தைகளும் புனிதர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் வத்திக்கான் வளாகத்தில் வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் இதனை நினைவுகூர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜெர்மன் படையால் துன்புறுத்தப்பட்ட சில யூதர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக போலந்து நாட்டின் மார்க்கோவாவில் உல்மா குடும்பம் கொலைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து போரின் இருளில் ஒளியின் கதிர்களாக அக்குடும்பம் திகழ்கின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

துன்புறுத்தப்பட்ட யூதர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக 1944 ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் நாள் ஜெர்மன் படைவீரர்களால் அழிக்கப்பட்ட இந்த முழு குடும்பமும் நற்செய்தியை அறிவிக்கும் அன்புடன் வெறுப்பையும் வன்முறையையும் பெற்றுக்கொண்டனர் என்றும், புனிதராக அறிவிக்கப்பட்ட அத்தகைய குடும்பத்தாரை வாழ்த்தும் வண்ணம் கரவொலி எழுப்பவும் திருப்பயணிகளைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

ஏறக்குறைய 20000 திருப்பயணிகள் கூடியிருந்த வத்திக்கான் வளாகத்தில் உக்ரைன் நாட்டுக்கொடியினைப் பலர் ஏந்தி இருக்க அதனைச் சுட்டிக்காட்டி, போரினால் இன்று வரை துன்புற்றுக் கொண்டிருக்கும் உக்ரைன் மக்களை நினைவுகூர்ந்த திருத்தந்தை, ஆயுத பலத்திற்கு எதிராக இரக்கச்செயல்களையும், வன்முறைக்கு எதிராக வலிமையான செபங்களையும் அளிக்க அழைப்புவிடுத்தார்.

செப்டம்பர் 12 செவ்வாய்க்கிழமை புத்தாண்டினைக் கொண்டாடும் எத்தியோப்பியா மக்களை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாட்டில் நல்லிணக்கம் மற்றும் அமைதி நிலவ செபிக்கக் கேட்டுக்கொண்டு எத்தியோப்பிய மக்களுக்குத் தன் செபத்துடன் கூடிய வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.


அமைதியில் முதலீடுச் செய்ய அழைக்கும் சான் எஜிதியோ அமைப்பு

 

அமைதியில் முதலீடுச் செய்ய அழைக்கும் சான் எஜிதியோ அமைப்பு



பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட நிகழ்வின் வழி கிட்டிய நம்பிக்கை, தற்போது உக்ரைனிலும் ஆப்ரிக்காவின் பல பகுதிகளிலும் இடம்பெறும் மோதல்களால் தகர்க்கப்பட்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் ஆகஸ்ட் 12, செவ்வாயன்று நிறைவுபெறும் அமைதிக்கான கருத்தரங்கில் பங்குபெறுவோரை நோக்கி, அமைதியில் முதலீடுச் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளது சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பு.

அமைதிக்கான துணிச்சல் என்ற தலைப்பில் செப்டம்பர் 10 முதல் 12 வரை பெர்லினில் இடம்பெறும் கருத்தரங்கிற்கு வழங்கிய செய்தியில் இவ்வாறு கூறியுள்ளது கத்தோலிக்க சான் எஜிதியோ அமைப்பு.

பெர்லின் கத்தோலிக்க தல திருஅவை மற்றும் எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபையுடன் இணைந்து இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பு, அதில் பங்குபெறும் அரசியல் தலைவர்கள், மதத்தலைவர்கள் மற்றும் கலாச்சார உலகத்தினருக்கு வழங்கிய செய்தியில், போர் என்பது மனிதகுலத்திற்கும் அரசியலுக்கும் கிடைத்த மிகப்பெரும் தோல்வி என்பதை சுட்டிக்காட்டி, அமைதிக்கென முதலீடு செய்யவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

1986ஆம் ஆண்டு இத்தாலியின் அசிசியில் புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் துவக்கப்பட்ட அமைதிக்கான பல்சமய ஜெபக்கூட்டத்தின் தொடர்ச்சியாக தற்போது 40 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் இந்த மூன்று நாள் கூட்டத்தில் சான் எஜிதியோ பிறன்பு அமைப்பின் நிறுவனர் Andrea Riccardi  உரையாற்றுகையில்,  1989ஆம் ஆண்டின் பெர்லின்  சுவர் தகர்க்கப்பட்ட நிகழ்வின் வழி கிட்டிய நம்பிக்கை, தற்போது உக்ரைனிலும் ஆப்ரிக்காவின் பல பகுதிகளிலும் இடம்பெறும் மோதல்களால் தகர்க்கப்பட்டுள்ளது எனவும், பேச்சுவார்த்தைகள், அரசியல் சாதுர்யம், சந்திப்பு போன்றவைகளில் முதலீடு செய்வதன் வழியாகவே அமைதியின் துணிச்சலை நாம் பெற முடியும் எனவும் கூறினார்.

இதே கூட்டத்தில் உரையாற்றிய ஜெர்மன் அரசுத்தலைவர் Frank-Walter Steinmeier அவர்கள், அனைவரும் ஒற்றுமையில் வாழவேண்டும் என்ற ஆசைகள் தகர்க்கப்பட்டு தற்போது ஆக்கிரமிப்பின் காலம் மீண்டும் துவங்கியுள்ளது என்ற கவலையை வெளியிட்டுள்ளதுடன், போரால் பெருந்துன்பங்களை அனுபவிக்கும் உக்ரைன் நாட்டிற்கு அனைத்துலக சமுதாயம் உதவ வேண்டிய கடமையையும் வலியுறுத்தினார்.


சமய நல்லிணக்கத்தின் வழியாக உலக அமைதி, நிலையான வளர்ச்சி

 

சமய நல்லிணக்கத்தின் வழியாக உலக அமைதி, நிலையான வளர்ச்சி



இந்தியாவிலுள்ள பல மதங்களும் மொழிகளும் இந்தியாவின் வளமான சொத்துக்கள் - தல்பிர்சிங்

ஜான் போஸ்கோ - வத்திக்கான்

நம்முடைய இதயம், குடும்பம், சமூகம் மற்றும் உலகத்தில் மகிழ்ச்சி இல்லாதபோது நாம் அடையும் பொருளாதார முன்னேற்றத்தால் நன்மை ஏதும் இல்லை என்றும், சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட உலகில் நன்றியுணர்வு, உரையாடல் மற்றும் ஒற்றுமை ஆகிய உணர்வுகளே நம்மை ஆள வேண்டும் என்றும் கூறியுள்ளார் பேராயர் பெலிக்ஸ் மச்சாடோ.

கடந்த வாரம் இந்தியாவின் புனேவில் உள்ள உலக அமைதி மண்டபத்தில்  சமயத்தலைவர்களும் உலகத்தலைவர்களும் பங்கேற்ற ஜி20 உச்சிமாநாட்டில் பேசிய போது இவ்வாறு கூறினார் மும்பையின் வசை பேராயரும் அகில இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பொதுச்செயலாளருமான பேராயர்  பெலிக்ஸ் அந்தோணி மச்சாடோ.

அமைதியே நமது நிகழ்ச்சியின் முதன்மையான இடத்தில் இருக்கும் என மகிழ்வோடும் நம்பிக்கையோடும் தான் எதிர்பார்ப்பதாக எடுத்துரைத்த பேராயர் மச்சாடோ அவர்கள், அகில இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை இந்நிகழ்வின் வெற்றிக்காக கத்தோலிக்க மக்களை செபிக்க அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என உரைக்கும் நமது பண்டைய இந்திய ஞானமான வசுதைவ குடும்பகத்தை ஜி20 உச்சிமாநாடு நினைவுபடுத்துவதாக் எடுத்துரைத்த திரிச்சூர் பேராயர் அன்ரூஸ் அவர்கள், உலகளாவிய உண்மை, உரையாடல், ஒத்துழைப்பு மற்றும் பொறுப்புகளை பகிர்தல் வழியாக வெளிப்படுத்துவதற்கான ஒர் வாய்ப்பாக இம்மாநாடு திகழ்வதாகவும் எடுத்துரைத்துள்ளார்.

வேற்றுமைகளுக்கு மத்தியிலும், பொதுவான சாவால்கள் மற்றும் பொறுப்புகளை பகிர்ந்துகொள்ளும் ஒரே மனித குடும்பதத்தால் நாம் பிணைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதனை இம்மாநாடு நினைவுபடுத்துகின்றது என்று கூறிய பேராயர் ஆண்ட்ரூஸ் அவர்கள், இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்குமிடையிலான நமது தொடர்பினை அடிக்கோடிட்டுக்காட்டுவதாகவும் இம்மாநாடு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 

நூற்றுக்கும் அதிகமாக பேச்சாளர்கள் மற்றும் 2000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு, சமய நல்லிணக்கத்தின் வழியாக உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சியை வடிவமைத்தல் என்னும் கருப்பொருளில் கலந்துரையாடினர்.

தொற்றுநோய், போர் மற்றும் மோதல்கள் விட்டுச்சென்ற விளைவுகள், காலநிலை மாற்றம், குழந்தைகளின் நிலை என இந்த உரையாடல் பரந்த அளவிலான தலைப்புகளை தொட்டது.

தொடக்க விழாவின் சிறப்பு விருந்தினராக உரையாற்றிய காங்கிரஸின் தேசிய செயலாளரான தல்பிர்சிங் அவர்கள், இந்தியாவிலுள்ள பல மதங்களும் மொழிகளும் இந்தியாவின் வளமான சொத்துக்கள். இவை உலகளாவிய நல்லிணக்கத்தை வளர்க்க முடியும் என்றும், வேறுபாடுகள் பிரிவினைகளுக்கு இட்டுச் செல்லாமல் இருக்க வேற்றுமைகளை புரிந்துகொள்வது மற்றும் அவற்றை மதிப்பதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்துள்ளார்.

2023 ஆம் ஆண்டிற்கான ரமோன் மகசேசே விருது

 

2023 ஆம் ஆண்டிற்கான ரமோன் மகசேசே விருது



'ஆசியாவின் நோபல் பரிசு' என அழைக்கப்படும், 'ரமோன் மகசேசே' விருது, தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பீன்ஸ் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே நினைவாக வழங்கப்பட்டு வருகிறது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஆசியாவின் நம்பிக்கை வெளிச்சங்களாக இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளியேற்றுபவர்கள், வாழ்வின் மிக முக்கியமான சில சவால்களுக்கு வெற்றிகரமான தீர்வுகளை அந்தந்த சமூகங்களுக்கு வழங்குபவர்கள் ஆகியோர் ரமோன் மகசேசே விருதினைப் பெறத் தகுதியுள்ளவர்கள் என்றுக் கூறியுள்ளார் Susanna Afan.

ஆகஸ்ட் 31, வியாழன் அன்று 65ஆவது ஆண்டு ராமன் மகசேசே விருது - 2023 குறித்த செய்திகளை வெளியிட்ட அவ்வறக்கட்டளையின் நிர்வாகக்குழு 2023 ஆம் ஆண்டிற்கான விருதினைப் பெறும் நான்கு வெற்றியாளர்களை அறிவித்துள்ள நிலையில், வெரித்தாஸ் வானொலிச் செய்திகளுக்கு இவ்வாறு கூறியுள்ளார் அவ்விருது அறக்கட்டளையின் தலைவர் Susanna Afan.

1958இல் நிறுவப்பட்டதும், ஆசியாவின் முதன்மையான மற்றும் பெருமைக்குரிய விருதாகப் புகழப்படுவதுமான ரமோன் மகசேசே விருதினை 2023ஆம் ஆண்டிற்காக பெறும் நால்வரில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த ரவி கண்ணன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த ரவி கண்ணன் புற்று நோய்ப் பிரிவில் சிறப்பாக செயல்பட்டதற்காகவும், பிலிப்பீன்ஸைச் சார்ந்த மிரியம் கரோனல்-ஃபெரர் பெண்களின் அமைதிக்காகப் பணியாற்றியதற்காகவும், கிழக்குத்திமோரைச் சார்ந்த யூஜேனியோ உணவுப்பாதுக்காப்புத் துறையில் சிறப்புடன் செயலாற்றியதற்காகவும், பங்களாதேஷைச் சார்ந்த  Korvi Rakshand  அனைவருக்கும் கல்வி என்ற முறையில் செயல்பட்டதற்காகவும் விருதினைப் பெற உள்ளார்கள்.

மக்களின் பொது நலன்,  திறமை, அர்ப்பணிப்பு மற்றும் இரக்கத்துடன் கூடிய பணி, ஏழைகளுக்கான நலவாழ்வுப்பணி, புற்றுநோய் பராமரிப்பு ஆகியவற்றை செய்துவரும் தமிழரான ரவி கண்ணன் அவர்கள், பலனை எதிர்பார்க்காமல் இந்திய மாநிலமான அஸ்ஸாமில் இலட்சக் கணக்கானவர்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக, முன்மாதிரியாகத் திகழ்கின்றார்.

இந்த ஆண்டு ரமோன் மகசேசே விருதாளர்கள் ஒவ்வொருவரும் மறைந்த பிலிப்பீன்ஸ் அரசுத் தலைவரின் உருவம் கொண்ட பதக்கமும், சான்றிதழும், பணமும் பரிசாகப் பெறுவார்கள்.

2023 ஆம் ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருது வரும் நவம்பர் 11 அன்று பிலிப்பீன்ஸின் தலைநகர் மணிலாவில் நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது.


பாலாற்று படுகையில் காணக்கிடைக்கும் அரிய பொருட்கள்: Archeology Department...

Friday 8 September 2023