Friday 29 May 2020

Guterres: New global threats require new forms of unity and solidarity

Guterres: New global threats require new forms of unity and solidarity United Nations Secretary-General António Guterres

In an interview with Vatican Media, António Guterres, Secretary-General of the United Nations speaks among other things of his gratitude to Pope Francis for supporting his appeal for a global cease fire.
By Andrea Monda
"The pandemic should be a wake-up call. Deadly global threats require a new unity and solidarity," António Guterres, Secretary-General of the United Nations emphasizes in an exclusive interview with Vatican Media.

Recently you made an appeal for peace in the world, a world affected by the pandemic. This initiative links up once again with those taken by Pope Francis – whom you have met at the end of last year, when you delivered a video message together – who keeps asking to cease all wars. You said: The fury of the virus illustrates the folly of war.. Why, do you think, is it so difficult to get this message through?
First, I would like to renew my deep appreciation to Pope Francis for his support for my global ceasefire appeal and the work of the United Nations. His global engagement, compassion and calls for unity reaffirm the core values that guide our work: to reduce human suffering and promote human dignity.
When I launched the ceasefire appeal, my message to parties to conflict around the world was simple: fighting needs to stop so that we can focus on our shared enemy – COVID-19.
So far, the call has been endorsed by 115 Governments, regional organizations, more than 200 civil society groups as well as other religious leaders. Sixteen armed groups have pledged to end violence. Millions of people have also signed an on-line call for support.
But mistrust remains high, and it is difficult to turn these commitments into actions that make a difference in the lives of those impacted by conflict.
My special representatives and envoys are working tirelessly around the world, with my own direct involvement when necessary, to turn expressed intentions into effective cease-fires.
I continue to call on parties to conflict and on all those who can have influence on them, to place the health and safety of people first.
I would also like to mention another appeal I have made that I consider essential: an appeal for peace in the home. Across the globe, as the pandemic spreads, we are also witnessing an alarming increase in violence against women and girls.
I have asked Governments, civil society and all those who can help around the world to mobilize to better protect women. I have also appealed to religious leaders of every faith to unequivocally condemn all acts of violence against women and girls and to uphold the bedrock  principles of equality.

A few months ago, before the pandemic broke out, you said that fear is the best-selling brand. This is something which now, in these weeks, could be even more amplified. How, do you think, is it possible to fight the feelings of fear spreading among people, especially in these difficult times?

The COVID-19 pandemic is not just a global health emergency.
In recent weeks, there has been a surge of conspiracy theories and anti-foreigner sentiment. In some cases, journalists, health professionals, or human rights defenders have been targeted simply for doing their jobs.
From the very beginning of this crisis, I have been advocating for solidarity within societies and among countries. Our response must be based on human rights and human dignity.
I have also called on educational institutions to focus on digital literacy, and I have urged media, especially social media companies, to do much more to flag and remove racist, misogynist and other harmful content, in line with international human rights law.
Religious leaders have a crucial role to play to promote mutual respect in their communities and beyond. They are well-positioned to challenge inaccurate and harmful messages, and encourage all communities to promote non-violence and reject xenophobia, racism and all forms of intolerance.

Fear is certainly fostered by fake news, which, as you recently denounced, are spreading more and more. How is it possible to fight misinformation without risking to blot out fundamental freedoms and rights in the name of this battle

People around the world want to know what to do and where to turn for advice. Instead, they have to navigate an epidemic of misinformation that, at its worst, can put lives at risk.
I salute the journalists and others who are fact-checking the mountain of misleading stories and social media posts.
In support of these efforts, I have launched a UN Communications Response initiative, under the name Verified, aimed at getting accurate, factual information to people while encouraging solutions and solidarity as we move from crisis to recovery.  
Religious leaders also have a role to play to leverage their networks and communication capacities to support governments in promoting public health measures recommended by the World Health Organization— from physical distancing to good hygiene – and to dispel false information and rumors.

Among the groundless news that daily assail public opinion, currently there is a lot of criticism of UN agencies, as for example the World Health Organization (WHO). What is your opinion with regard to this?

As we mourn the lives lost to the virus, we despair that many more will follow, particularly in places least able to cope with a pandemic.
Looking back at how the pandemic unfolded, and at the international response, will be crucial. But, right now, the World Health Organization and the entire UN system are in a race against the clock to save lives.
I am particularly worried about the lack of adequate solidarity with developing countries -- both in equipping them to respond to the COVID-19 pandemic and to address the dramatic economic and social impacts on the world’s poorest.
The World Health Organization, and the entire United Nations system have mobilized fully to save lives, stave off famine, ease the pain and plan for recovery.
We set out a U.S.$7.6 billion Global Humanitarian Response Plan for the most vulnerable populations, including refugees and internally displaced persons. Donors have generously pledged close to $1 billion so far and I continue my advocacy to ensure that this plan is fully funded.
Our country teams are working in coordination with Governments to mobilize funding, to assist health ministries on preparedness, and to support economic and social measures, from food security and home schooling to cash transfers and many others.
Our peace operations continue to carry out their important protection mandates, and to support peace and political processes.
The UN system network of supply chains has been placed at the disposal of developing countries, with millions of test kits, respirators and surgical masks having now reached more than 100 countries. We have set up solidarity flights to bring more supplies and workers to dozens of countries in Africa, Asia and Latin America. 
And since the beginning, I have mobilized the expertise within the entire UN family to produce a series of reports and policy briefs to provide analysis and advice for an effective, coordinated response by the international community. (https://www.un.org/en/coronavirus/un-secretary-general)

We are living in a time where attacks against multilateralism are multiplying. Do you think there is a need to strengthen people’s trust in international institutions? And how could this be done?

The collaboration and contribution of all States - including the most powerful- is essential to not only fight COVID‑19 but also to address the peace and security challenges we are facing. It is also essential to help create conditions for an effective recovery in the developed and developing world.
The virus has demonstrated our global fragility. And this fragility is not limited to our health systems. It affects all areas of our world and our institutions.
The fragility of coordinated global efforts is highlighted by our failed response to the climate crisis, by the ever-increasing risk of nuclear proliferation, by our inability to come together to better regulate the web.
The pandemic should be a wake-up call. Deadly global threats require a new unity and solidarity.

You have openly commended the European initiative aimed at developing a vaccine for Covid-19. However, finding a vaccine might tempt someone to take up a dominant position within the international community. How can we avoid this risk? And even before finding a vaccine, what can be done in order to test the treatments that have proven to be of some efficacy?

In an interconnected world, none of us is safe until all of us are safe.
This was, in a few words, the essence of my message at the launch of  “ACT Accelerator” – the global collaboration to speed up the development, production and equitable access to new COVID-19 diagnostics, therapeutics and vaccines.
This must be seen as a global public good. Not a vaccine or treatments for one country or one region or one-half of the world — but a vaccine and treatment that are affordable, safe, effective, easily-administered and universally available — for everyone, everywhere. This vaccine needs to be the people’s vaccine.

How can we avoid having first rank and second rank countries in this fight against the virus? At any rate, there is a danger that the pandemic will widen the gap between rich and poor. How can we avoid this happening?

The pandemic is exposing inequalities everywhere. Economic inequalities, disparities in access to health services and so much more.
Poverty could rise by 500 million people – the first increase in three decades.
We cannot allow this to happen and this is why I continue to advocate for a global relief package
amounting to at least 10 per cent of the global economy.
The most developed countries can do this with their own resources, and some have already begun to put in place such measures. But developing countries need massive and urgent support.
The International Monetary Fund has already approved emergency financing to a first group of developing countries. The World Bank has indicated that with new and existing resources, it can provide $160 billion of financing over the next 15 months. The G20 has endorsed the suspension of debt service payments for the poorest countries.
I fully appreciate these steps, which can protect people, jobs and development gains. But even this will not be sufficient and it will be important to consider additional measures, including debt relief, to avoid prolonged financial and economic crises.

Some say that after this pandemic the world will never be the same again. What could the future of the United Nations be in tomorrow’s world?

The pandemic recovery brings opportunities to steer the world onto a safer, healthier, more sustainable and inclusive path.
The inequalities and gaps in social protection that have been so painfully exposed will need to be addressed. We will also have an opportunity to place women and gender equality at the forefront to help build resilience to future shocks.
Recovery also needs to go hand-in-hand with climate action.
I have been calling on Governments to ensure that spending to revitalize economies should be used to invest in the future, not the past.
Taxpayers’ money should be used to accelerate the decarbonization of all aspects of our economy and privilege the creation of green jobs. Now is the time to put a price on carbon and for polluters to pay for their pollution. Financial institutions and investors must take climate risks fully into account.
Our template remains the Sustainable Development Goals and the Paris Agreement on climate change.
Now is the time to be determined. Determined to defeat COVID-19 and to emerge from the crisis by building a better world for all.

Pope appoints scientist Eric Lander to Pontifical Academy of Sciences

Pope appoints scientist Eric Lander to Pontifical Academy of Sciences Professor Eric Lander

Pope Francis names Professor Eric Lander as an Ordinary Member of the Pontifical Academy of Sciences.
By Vatican News
Pope Francis has appointed Professor Eric Steven Lander, President and Founding Director of the Broad Institute of Massachusetts Institute of Technology and Harvard (Cambridge, United States of America), as Ordinary Member of the Pontifical Academy of Sciences the Illustrious
Curriculum vitae of Professor Eric Steven Lander
Professor Eric Steven Lander was born in New York (USA) on 3 February 1957. He graduated from Princeton University in 1978 and received his PhD from Oxford University as Rhodes Scholar in 1981.
As a geneticist, molecular biologist and mathematician, he has played a pioneering role in the definition, understanding and biomedical application of the human genome.
He is President and Founding Director of the Broad Institute of Massachusetts Institute of Technology and Harvard (MIT), Cambridge (USA). In addition, he teaches Biology at MIT and Systems Biology at Harvard Medical School.
He has received numerous national and international awards.

Pope appoints new Bishop for Wagga Wagga, Australia

Pope appoints new Bishop for Wagga Wagga, AustraliaThe cathedral in the diocese of  Wagga Wagga Australia

Pope Francis appoints Bishop Mark Stuart Edwards, O.M.I., as Bishop of Wagga Wagga, Australia.
By Vatican News
Pope Francis has appointed Bishop Mark Stuart Edwards, O.M.I., as Bishop of Wagga Wagga, Australia.
He has been serving as Auxiliary Bishop of Melbourne with the titular see of Garba.
Curriculum vitae of Bishop Mark Stuart Edwards O.M.I.
Bishop elect Mark Stuart Edwards was born in Balikpapan, Indonesia in 1959. He moved to Australia in 1962.
After attending Saint Leonard's Primary School in Glen Waverley and Mazenod College in Mulgrave, he received his Bachelor of Science degree at Monash University in Melbourne.
In 1980 he entered the Novitiate of the Oblate Missionaries of Mary Immaculate and completed his ecclesiastical studies at the Catholic Theological College in Melbourne and the Melbourne College of Divinity.
He was ordained a priest in 1986.
After priestly ordination he continued his training at Monash University in Melbourne, obtaining a Doctorate in Philosophy and a Baccalaureate in Literature and Education.
He held the following positions in the Congregation of the Oblates of Mary Immaculate: Professor at Mazenod College in Mulgrave (1986-1989); Vice-Rector of Iona College in Brisbane (1990-1997); Master Pre-novice Master at Saint Mary's Seminary in Mulgrave (1998-2004); Novice Master at Saint Mary's Seminary in Mulgrave (2004-2007); Professor at Catholic Theological College in Melbourne (2005-2010); Rector of Iona College in Lindum, Brisbane (since 2010).
In 2001, 2004, 2007 and 2011 he was elected Provincial Councillor of the Australian Oblate Missionaries Province.
He was appointed by Pope Francis, Bishop of Garba and appointed Auxiliary Bishop of Melbourne on 7 November 2014; he was consecrated the following 17 December.
He is a Member of the Committee for Catholic Education for the Australian Bishops Conference.
Diocese of Wagga Wagga
Wagga Wagga is the major city of the Riverina and the largest inland city in New South Wales.
Its population is estimated at nearly 56,500, of which over 31 per cent are Catholic.


ஏழைகளுக்கு பாகிஸ்தான் கத்தோலிக்க இளையோரின் பணி

ஏழைகளுக்கு பாகிஸ்தான் கத்தோலிக்க இளையோரின் பணி  பாகிஸ்தானில் ஏழைகளுக்கு உதவும் கத்தோலிக்க இளையோர்

பாகிஸ்தானில் கத்தோலிக்க இளையோரால் உருவாக்கப்பட்டுள்ள உணவு வங்கியில், இந்து, சீக்கிய, மற்றும் இஸ்லாமிய இளையோர் இணைந்து, உணவு விநியோகப் பணியில் ஈடுபட்டுள்ளனர்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள Sahiwal நகரின் கிறிஸ்தவ இளைஞர்கள் இணைந்து, ஏழை மக்களுக்கென உணவு வங்கி ஒன்றை துவக்கியுள்ளனர்.
தங்குமிடமும், போதிய வருமானமும் இன்றி தெருக்களில் வாடும் ஏழை மக்களுள் நூறு பேருக்கு ஒவ்வொரு நாளும் மாலை உணவை, இந்த கொரோனா தொற்றுக்காலத்தின்போது வழங்கிவருவதாக உரைத்த இவ்விளையோர் குழுவின் செயலர் Ashiknaz Khokhar அவர்கள், அருள்பணியாளர்களின் உதவியுடன் கத்தோலிக்க இளையோரால் உருவாக்கப்பட்ட இந்த உணவு வங்கியில், இந்து, சீக்கிய, மற்றும் இஸ்லாமிய இளைஞர்களும் இணைந்து, உணவு விநியோகப் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
உண்ண  உணவின்றி, தெரு ஓரங்களில் ஏழை மக்கள் தவித்ததைக் கண்டதனால், துவக்கப்பட்ட இந்த உணவு வங்கி, மதப்பாகுபாடின்றி அனைத்து மக்களையும் சென்றடைவதாகவும், கடந்த மாதத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 150 குடும்பங்களுக்கு மேல், உணவு உதவிகளைப் பெற்றதாகவும் கூறினார் Ashiknaz.
கத்தோலிக்க இளையோரால் துவக்கப்பட்டுள்ள இந்த முயற்சி குறித்துத் தன்  பாராட்டுக்களை வெளியிட்ட, இவர்களுடன் பணியாற்றும் இஸ்லாமிய பணியாளர் Mufti Sohail Shaukat அவர்கள், எவ்வித பாகுபாடும் இன்றி அனைவருக்கும் உதவிகளை வழங்கும் கிறிஸ்தவர்கள், ஏனைய மதத்தவரையும் இதில் இணைத்துப் பணியாற்றுவது, மதங்களிடையே நல்லுறவுகள் வளர உதவுகின்றது என்கிறார்.
இதுபோல், நற்செய்தி மதிப்பீடுகளின் உதவியுடன், கராச்சியிலுள்ள கத்தோலிக்க இளையோர் இணைந்து, 'வாழ்வுப்பாதை' என்ற பெயருடன் ஒரு குழுவைத் துவக்கி, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர், இந்துக்கள் என 800 பேருக்கு, ஒவ்வொருவருக்கும் 20 கிலோ உணவுப் பொருட்களை வழங்கியுள்ளதுடன், ஒவ்வொரு நாளும் 100 குடும்பங்களுக்கு காய்கறிகளையும் வழங்கி வருகின்றனர்.
கோவிட்-19 தொற்றுநோய் முழு அடைப்பு காரணமாக வறுமையில் வாடும் ஏழைக்குடும்பங்களுக்கு இந்த உதவிகளை ஆற்றி வருகின்றன, இந்த கத்தோலிக்க இளையோர் குழுக்கள். (Fides)

Covid-19: Vatican urges OSCE to promote religious freedom amid rising intolerance

Covid-19: Vatican urges OSCE to promote religious freedom amid rising intolerance A woman at Mass in Milan's Duomo

The Holy See warns that religiously-motivated hate crimes are on the rise, as the Covid-19 pandemic increases intolerance and inequality.
By Devin Watkins
Msgr. Janusz Urbańczyk took part this week in an OSCE conference aimed at raising awareness about intolerance and discrimination.
The Holy See’s Permanent Representative to the Organization for Security and Co-operation in Europe focused his remarks at the 25-26 May event on the impact that intolerance has on Christians.
The OSCE is an intergovernmental organization whose members include most countries of the Northern Hemisphere and is concerned with conflict prevention and crisis management.

Religious intolerance on the rise

Hate crimes against Christians and members of other religions, said, Msgr. Urbańczyk, negatively impact the enjoyment of human rights and fundamental freedoms. “These include threats, violent attacks, murders and profanation of churches and places of worship, cemeteries and other religious properties,” he said.
The Vatican representative expressed “great concern” about a divide between religious belief and religious practice.
“The false idea that religions could have a negative impact or represent a threat to the well-being of our societies is growing,” he warned.
Believers are frequently told that prayer and religious convictions are a private matter that have no place in the public sphere.

Discrimination in digital space

The internet and social media, said Msgr. Urbańczyk, often become a place to put others down or incite hatred of cultural, national, and religious groups.
The Covid-19 pandemic has worsened the trend, since people are spending more time online during lockdowns.
Discrimination on social media, he noted, can lead to violence, the final step in a “slippery slope which starts with mockery and social intolerance.”

Dignity and unity

Msgr. Urbańczyk also urged OSCE member states to promote the inherent dignity of every person and the fundamental unity of the human race.
He said these two principles form the basis of all truly democratic societies. National minorities, he added, should be free to profess and practice their religion.

Rising inequalities

Lockdowns to stem the Covid-19 pandemic have contributed to rising inequalities and “de facto discriminatory treatment”.
“Rights and fundamental freedoms,” said Msgr. Urbańczyk, “have been limited or derogated throughout the whole OSCE area.” These include the closure of churches and restrictions on religious services.

Tolerance and freedom

In response to these threats, the Holy See’s representative urged OSCE member states to promote both tolerance and fundamental freedoms, which include religious liberty.
“Tolerance,” said Msgr. Urbańczyk, “cannot be an alibi for denying or guaranteeing fundamental human rights.”

Nobel Peace Prize winner calls for culture of solidarity

Nobel Peace Prize winner calls for culture of solidarity  Adolfo Pérez Esquivel

The founder of Servizio Paz y Justicia, and Nobel Peace Prize winner Adolfo Pérez Esquivel, speaks to Vatican Media about Covid-19 in Latin America and the need for a culture of solidarity.

By Vatican News
The 1980 Nobel Peace Prize winner, Adolfo Pérez Esquivel, was born in Buenos Aires, Argentina in 1931. After training as an architect and sculptor, he was appointed Professor of Architecture. In 1974, he gave up his academic career to devote his time and energy to found Servizio Paz y Justicia, a Christian based, non-violent organization committed to the defense of human rights in Latin America.
In an interview with L’Osservatore Romano, the 88-year-old Adolfo Pérez Esquivel shares his reflections on the Covid-19 pandemic and its effect on the world and Latin American countries in particular.

Covid-19 in Latin America

Esquivel notes that the pandemic has “spread to all countries of Latin America with serious consequences.” He points out that the poor and those who live in the slums are most affected as many do not have access to clean water, proper hygiene and food.
Even though the spread of Covid-19 is slowed down by precautionary health measures, Esquivel states that these same measures have had repercussions on “commercial, cultural, educational and religious activities.” He notes that despite the great social solidarity and government palliative measures to aid the poor, the efforts are not enough.
Turning his thoughts towards the Amazon, Esquivel appeals for an end to the violence against the indigenous people and the “destruction of the environment that is carried out by burning the forest and devastating the fauna and biodiversity.”

A culture of solidarity

Esquivel points out that new social and economic policies are needed to respond to the unprecedented situation caused by the coronavirus pandemic. He says many people have lost their jobs, making inequality between the rich and poor are more pronounced.
“It is necessary to promote a culture of solidarity and the sharing of goods with those most in need,” he adds. “We must not forget that the problem of others is a problem for everyone.”
The 88-year-old calls for the creation of a new social contract based on principles that “guarantee respect for fundamental rights such as health, education, peace and protection of the environment.” He also stresses the urgent need to protect common goods such “rivers and seas, forests, fauna and biodiversity.”

Underground rivers that emerge with life and hope

Perez Esquivel notes that many “social, political and economic attitudes that seemed commonplace are undergoing profound changes.” The unwanted confinement, he explains, “has put a brake on the acceleration of time” and has shown us the need to find balance. He invites everyone to see this time as an opportunity to “meditate, pray, reflect and take care of one’s physical and mental health.”
Looking to the future, Esquivel finds hope in young people whom he encourages to become “underground rivers that emerge with the power of life and hope.”

NEHRU ZOO HYDERABAD - HD Video - FULL Coverage || nehru zoological park

Fr. John Bartunek: A Former Atheist Who Became A Catholic Priest - The J...

Canonization of Popes John XXIII and John Paul the Great

Church History: Complete Documentary AD 33 to Present

The last days of Pope John Paul II - The untold stories (Cnn)

Thursday 28 May 2020

மறைபரப்புப்பணியைக் குறித்து திருத்தந்தையின் தாகமும், தெளிவும்

மறைபரப்புப்பணியைக் குறித்து திருத்தந்தையின் தாகமும், தெளிவும் திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே

மறைபரப்புப்பணியானது, மனிதர்களின் திட்டங்களாலும், செயல்பாடுகளாலும் உருவாகும் முயற்சி அல்ல, மாறாக, அது தூய ஆவியாரின் கொடை - திருத்தந்தை
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
பாப்பிறை மறைபரப்புப்பணி சபைகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எழுத்து வடிவில் வழங்கியுள்ள செய்தி, மறைபரப்புப்பணியைக் குறித்து அவர் கொண்டிருக்கும் தாகத்தையும், தெளிவையும் உணர்த்துகின்றது என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மே 21, கடந்த வியாழன்று, ஆண்டவரின் விண்ணேற்றப்பெருவிழா வத்திக்கானில் சிறப்பிக்கப்பட்ட வேளையில், பாப்பிறை மறைபரப்புப்பணி சபைகளைச் சேர்ந்த உறுப்பினர்களை சந்திக்க திட்டமிட்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்போதையச் சூழலில், அச்சந்திப்பு நடைபெறாமல் போனதால், தன் எண்ணங்களை ஒரு செய்தியின் வழியே அவர்களுக்கு வழங்கினார்.
திருத்தந்தை வழங்கிய இச்செய்தியைக் குறித்து, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், வத்திக்கான் செய்திக்கு வழங்கிய ஒரு பேட்டியில், மறைபரப்புப்பணியைக் குறித்து திருத்தந்தை கொண்டிருக்கும் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
மறைபரப்புப்பணியானது, மனிதர்களின் திட்டங்களாலும், செயல்பாடுகளாலும் உருவாகும் முயற்சி அல்ல, மாறாக, அது தூய ஆவியாரின் கொடை என்பதை திருத்தந்தை இச்செய்தியில் வலியுறுத்திக் கூறியிருப்பது, திருஅவையின் அனைத்து செயல்பாடுகளும் மனிதத் திறமையால் அல்ல, இறைவனின் அருளால் நடைபெறுகிறது என்பதை மீண்டும் நமக்கு நினைவுறுத்துகிறது என்று கர்தினால் தாக்லே அவர்கள் இப்பேட்டியில் சுட்டிக்காட்டினார்.
தன் பிம்பத்தை தானே கண்டு மயங்கிய நார்சிசுஸ் என்ற கிரேக்க புராணக் கதைநாயகன் போல, திருஅவை, தன் மறைபரப்புப்பணிகளின் விளைவுகளைக் கண்டு மகிழ்ந்து மயங்கியிராமல், தன்னிறைவு என்ற கண்ணாடியை உடைப்பதற்கு தயாராக இருக்கவேண்டும் என்ற பாணியில் திருத்தந்தை பேசியிருப்பது, மிக வலிமையான ஓர் உருவகம் என்பதையும், கர்தினால் தாக்லே குறிப்பிட்டுப் பேசினார்.
கோவிட் 19 உருவாக்கியுள்ள நெருக்கடி நிலையால், கத்தோலிக்கத் திருஅவை, தன் மறைபரப்புப்பணி என்ற இலக்கை மறந்துவிடக்கூடாது என்பதை, இப்பேட்டியின் இறுதிப்பகுதியில் எடுத்துரைத்த கர்தினால் தாக்லே அவர்கள், எதிர்மறையான பல விளைவுகளை உருவாக்கியுள்ள இந்த தொற்றுக்கிருமி காலத்தில், பரிவு, தன்னலமற்ற பணி, குடும்பங்களில் அன்பு, ஆழமான செப அனுபவம், இறைவார்த்தையை காணும் புதிய ஒளி என்ற பல்வேறு கொடைகளை தூய ஆவியார் வழங்கியுள்ளார் என்று கூறினார்.

விவிலியத்தேடல்: படிப்படியாக பார்வை பெற்ற புதுமை 2

விவிலியத்தேடல்: படிப்படியாக பார்வை பெற்ற புதுமை 2 இயேசு, பார்வையற்றவரது கையைப் பிடித்து, ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். - மாற்கு 8:23

பெத்சாய்தா நகரில் செய்யப்பட்ட வல்ல செயல்கள் அம்மக்களிடம் பெரும் மாற்றத்தை நிகழ்த்தவில்லை என்று வருத்தத்துடன் குறிப்பிடும் இயேசு, மீண்டும் ஒருமுறை, அதே நகருக்குச் சென்று, வல்ல செயலொன்றை நிகழ்த்துகிறார்.
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

புகழ்பெற்ற துப்பறியும் அறிஞர், ஷெர்லாக் ஹோம்ஸ் (Sherlock Holmes) அவர்கள், தன் நண்பர் வாட்சன் என்பவருடன் சுற்றுலா சென்றார். அன்றிரவு, திறந்த வெளியில் கூடாரம் அமைத்து, அவர்கள் இருவரும் உள்ளே உறங்கச் சென்றனர். நள்ளிரவில் ஏதோ ஓர் உணர்வால் உந்தப்பட்டு, கண்விழித்த ஷெர்லாக் ஹோம்ஸ் அதிர்ச்சியடைந்தார். பின்னர், அருகில் தூங்கிக்கொண்டிருந்த வாட்சனை எழுப்பி, அவரிடம், "வாட்சன், மேலே பார். என்ன தெரிகிறது?" என்று கேட்டார். "பல நூறு விண்மீன்கள் தெரிகின்றன" என்று வாட்சன் சொல்லவே, ஷெர்லாக் அவரிடம், "சரி, அது உனக்கு என்ன சொல்கிறது?" என்று அழுத்திக் கேட்டார்.
உடனே, வாட்சன், "கண்ணுக்குத் தெரியும் இந்த விண்மீன்களைத் தாண்டி, இன்னும் பலகோடி விண்மீன்கள் உள்ளன என்று வானியல் சொல்கிறது. பளிச்சென மின்னும் விண்மீன்கள், நாளை, நமக்குத் தெளிவான வானிலை இருக்கும் என்று சொல்கின்றன. இவை அனைத்தையும் படைத்த இறைவன் எவ்வளவு வல்லவர் என்று இறையியல் சொல்கிறது" என்று மூச்சுவிடாமல் பேசிய வாட்சன், ஷெர்லாக் பக்கம் திரும்பி, "சரி, அது உனக்கு என்ன சொல்கிறது?" என்று கேட்டார். ஷெர்லாக், தலையில் அடித்துக்கொண்டு, "என் முட்டாள் நண்பனே, நாம் போட்டிருந்த கூடாரத்தை யாரோ திருடிவிட்டார்கள்" என்று கத்தினார்.
இது ஒரு நகைச்சுவைத் துணுக்கு. பல நேரங்களில், நகைச்சுவைத் துணுக்குகள், வெறும் சிரிப்பை மட்டுமல்ல. சிந்தனையையும் தூண்டும் என்பது நமக்குத் தெரியும். இந்த நகைச்சுவைத் துணுக்கில், எது மிகவும் தெளிவாக, எளிதாகத் தெரியவேண்டுமோ, அதைத்தவிர ஏனையவற்றை வாட்சன் கண்டார் என்பதை எண்ணி, சிரிக்கிறோம். பல கோடி மைல்களுக்கு அப்பால் இருந்த விண்மீன்களைக் காணமுடிந்த வாட்சனுக்கு, தலைக்கு மேல் போடப்பட்டிருந்த கூடாரம் காணாமற்போன உண்மையை, காணமுடியாமல் போயிற்றே என்று, அவர் மீது பரிதாபப்படுகிறோம். வாட்சனை எண்ணி பரிதாபப்படும் நம் எண்ணங்களை நம்மீது திருப்பினால், நாமும், பல்வேறு தருணங்களில், இத்தகைய நிலையில் இருந்திருக்கிறோம் என்பதை உணர்வோம்.
கண் பார்வை இல்லாமல், காது கேளாமல், வாய் பேசாமல் வாழ்ந்த ஹெலன் கெல்லெர் (Helen Keller) அவர்கள் கூறிய அழகான சொற்கள் நினைவுக்கு வருகின்றன: "காணும் திறன்பெற்ற பலருடன் நான் நடந்து செல்கிறேன். ஆனால், அவர்கள், கடலிலும், வானிலும் எதையும் காண்பதில்லை. வெறும் பார்க்கும் திறன்பெற்று திருப்தியடையும் இவர்களைவிட, பார்வையற்ற ஒளியில் நான் பாய்மரம் விரித்துச் செல்வது எவ்வளவோ மேல்."
அதேவண்ணம், ஹெலன் கெல்லெர் அவர்கள் கூறிய மற்றொரு கூற்றும் மிக ஆழமான உண்மையை எடுத்துரைக்கிறது. "உலகில் மிக அழகானவற்றைக் கண்ணால் காண முடியாது, தொட்டும் உணர முடியாது. உள்ளத்தால் மட்டுமே உணரமுடியும்" என்பதே அவரது அழகியக் கூற்று.
இன்னுமா உணராமலும் புரிந்து கொள்ளாமலும் இருக்கிறீர்கள்? உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று? கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? காதிருந்தும் நீங்கள் கேட்பதில்லையா? (மாற்கு 8:17-18) என்று வேதனையுடன் தன் சீடர்களிடம் இயேசு கேள்விகளை எழுப்பிய நிகழ்வை சென்ற விவிலியத் தேடலில் சிந்தித்தோம். இயேசு எழுப்பிய இக்கேள்விகள், மாற்கு நற்செய்தியில், தொடர்ந்து பதிவுசெய்யப்பட்டுள்ள அடுத்த நிகழ்வுக்கு ஓர் அறிமுகம் போன்று பயன்படுகின்றன. கண்ணிருந்தும் காணமுடியாத தன் சீடர்களைப்பற்றி கவலையடைந்த இயேசு, பார்வையற்ற ஒருவரை குணமாக்குகிறார். மாற்கு நற்செய்தியில் மட்டுமே பதிவாகியுள்ள இப்புதுமையின் அறிமுக வரிகளை இவ்வாறு வாசிக்கிறோம்:
மாற்கு 8:22-23
அவர்கள் பெத்சாய்தா வந்தடைந்தார்கள். அப்பொழுது சிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைத் தொடும்படி வேண்டினர். அவர் பார்வையற்றவரது கையைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார்.
இப்புதுமையின் நிகழ்களம் 'பெத்சாய்தா' என்ற குறிப்பு, முதலில் நம் கவனத்தை ஈர்க்கிறது. 'பெத்சாய்தா' என்பது, 'பெத்' மற்றும் 'சாய்தா' என்ற இரு சொற்களின் இணைப்பில் உருவான சொல். 'பெத்' என்ற சொல்லின் பொருள், 'இல்லம்' அல்லது 'வீடு'. 'பெத்' என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டு, நற்செய்தியில், பெத்லகேம், பெத்தானியா, பெத்பகு போன்ற சொற்கள் ஒரு சில ஊர்களைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளன. 'பெத்லகேம்' என்றால், 'அப்பத்தின் வீடு' என்றும், 'பெத்தானியா' என்றால், 'துயரத்தின் வீடு' என்றும் 'பெத்பகு' என்றால், 'அத்திப் பழங்களின் வீடு' என்றும் பொருள். அதேவண்ணம், 'பெத்சாய்தா' என்ற சொல்லுக்கு, 'வேட்டையாடும் வீடு' அல்லது, 'மீன்பிடிக்கும் வீடு' என்ற பொருள் வழங்கப்படுகிறது. 'பெத்சாய்தா' என்ற ஊரில் வாழ்ந்தவர்களில் பெரும்பாலானோர் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டிருந்ததால், அந்நகருக்கு அப்பெயர் சூட்டப்பட்டிருக்கலாம் என்பது, விவிலிய விரிவுரையாளர்களின் கணிப்பு.
'பெத்சாய்தா' என்ற ஊரின் பெயர், நான்கு நற்செய்திகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. யோவான் நற்செய்தி முதல் பிரிவில், இயேசு தன் முதல் சீடர்களை அழைத்த நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. அச்சீடர்களில் ஒருசிலர், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த பெத்சாய்தா ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதை, நற்செய்தியாளர் யோவான் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டுள்ளார்:
யோவான் 1:43-44
மறு நாள் இயேசு கலிலேயாவுக்குச் செல்ல விரும்பினார். அப்போது அவர் பிலிப்பைக் கண்டு, "என்னைப் பின்தொடர்ந்து வா" எனக் கூறினார். பிலிப்பு பெத்சாய்தா என்னும் ஊரைச் சேர்ந்தவர். அந்திரேயா, பேதுரு ஆகியோரும் இவ்வூரையே சேர்ந்தவர்கள்.
இயேசு தன் பன்னிரு திருத்தூதர்களை பல்வேறு ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் நிகழ்வு, லூக்கா நற்செய்தி 9ம் பிரிவில் இடம்பெற்றுள்ளது. தங்கள் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றி திரும்பி வந்த திருத்தூதர்களை இயேசு பெத்சாய்தாவுக்கு அழைத்துச் சென்றதாக நற்செய்தியாளர் லூக்கா கூறியுள்ளார்:
லூக்கா 9:10
திருத்தூதர்கள் திரும்பி வந்து, தாங்கள் செய்த யாவற்றையும் இயேசுவிடம் எடுத்துக் கூறினார்கள். அவர்களை மட்டும் கூட்டிக்கொண்டு அவர் தனித்திருப்பதற்காகப் பெத்சாய்தா என்னும் நகருக்குச் சென்றார்.
இயேசுவும் சீடர்களும் பெத்சாய்தா சென்றிருப்பதை அறிந்த மக்கள் அவர்களைத் தொடர்ந்து அங்கு சென்றதாகவும், அவர்களுக்கு இயேசு இறையரசை அறிவித்ததோடு, அவர்கள் நடுவே புதுமைகள் செய்ததையும் நற்செய்தியாளர் லூக்கா 9ம் பிரிவில் குறிப்பிடுகிறார். குறிப்பாக, 5000த்திற்கும் அதிகமான மக்களுக்கு இயேசு உணவளித்தப் புதுமை, பெத்சாய்தா நகருக்கருகே பாலைநிலத்தில் நடைபெற்றதாக லூக்கா கூறியுள்ளார்.
சீடர்கள் ஒருசிலரின் வாழ்விடமாகவும், புதுமைகள் நிகழ்ந்த இடமாகவும் பெத்சாய்தா நகரை நற்செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதே நகரம், இயேசுவின் கண்டனத்தையும் பெற்றது என்பதை, நற்செய்தியாளர்கள் மத்தேயுவும், லூக்காவும் குறிப்பிட்டுள்ளனர்:
மத்தேயு 11:20-22 (காண்க. லூக்கா 10:13-14)
இயேசு வல்ல செயல்கள் பல நிகழ்த்திய நகரங்கள் மனம் மாறவில்லை. எனவே அவர் அவற்றைக் கண்டிக்கத் தொடங்கினார். "கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால் அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பல் பூசி மனம் மாறியிருப்பர். தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையை விட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்று கூறினார்.
பெத்சாய்தா நகரில் செய்யப்பட்ட வல்ல செயல்கள் அம்மக்களிடம் பெரும் மாற்றத்தை நிகழ்த்தவில்லை என்று வருத்தத்துடன் குறிப்பிடும் இயேசு, மீண்டும் ஒருமுறை, அதே நகருக்குச் சென்று, வல்ல செயலொன்றை நிகழ்த்துகிறார். அதனை நற்செய்தியாளர் மாற்கு மட்டுமே பதிவுசெய்துள்ளார்.
மாற்கு நற்செய்தி 7 மற்றும் 8ம் பிரிவுகளில் பதிவாகியுள்ள தனித்துவமானப் புதுமைகள் இரண்டையும் இணைத்து சிந்திக்கும்போது, ஒரு சில ஒப்புமைகளை நம்மால் காணமுடிகிறது. 7ம் பிரிவில் இடம்பெறும் புதுமையில், காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர் (மாற்கு 7:32) என்று கூறப்பட்டுள்ளது. அதேவண்ணம், 8ம் பிரிவில் இடம்பெறும் புதுமையிலும், அப்பொழுது சிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைத் தொடும்படி வேண்டினர் (மாற்கு 8:22) என்று வாசிக்கிறோம். குறையுள்ள இவ்விருவரையும் இயேசுவிடம் அழைத்து வந்த நல்ல உள்ளங்களைப் பற்றி சிந்திக்கும்போது, அத்தகைய நற்பணிகளை இன்றளவும் தொடர்ந்து ஆற்றிவரும் நல்லோருக்காக, குறிப்பாக, நோயுற்றோர் பலரை திருத்தலங்களுக்கு அழைத்துச்செல்லும் நல்ல உள்ளங்களுக்காக நாம் இறைவனுக்கு நன்றி கூறவேண்டும்.
அடுத்து, இவ்விருவரையும் இயேசு கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்றதாக நற்செய்தியாளர் மாற்கு குறிப்பிடுகிறார். இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று (மாற்கு 7:33). என்று முதல் புதுமையிலும், அவர் பார்வையற்றவரது கையைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். (மாற்கு 8:33) என்று இரண்டாவது புதுமையிலும் கூறப்பட்டள்ளது.
மூன்றாவது ஒப்புமையாக நாம் காண்பது, இயேசு இவ்விருவரையும் குணமாக்கிய முறை. இவ்விரு புதுமைகளிலும் இயேசு தன் உமிழ்நீரைப் பயன்படுத்தி, இவ்விருவரின் குறைகளை நீக்குகிறார். இயேசு பயன்படுத்திய இந்த முறையால், பார்வையற்றவர் படிப்படியாக பார்வை பெறும் நிகழ்வை, நாம் அடுத்த தேடலில் தொடர்ந்து சிந்திப்போம்.

வாழும் உரிமையும், நாட்டின் சட்டமும் அனைவருக்கும் பொதுவானவை

வாழும் உரிமையும், நாட்டின் சட்டமும் அனைவருக்கும் பொதுவானவை தாக்குதல் இடம்பெற்ற இடங்களை கர்தினால் கடந்த ஆண்டு பார்வையிட்டபோது

கர்தினால் இரஞ்சித் : உயிர்ப்புப் பெருவிழா நாளின் தாக்குதல்களுக்கு யார் பொறுப்பு என்பதை ஆராய்ந்துவரும் அதிகாரிகளை அச்சுறுத்துவதும், முடக்க நினைப்பதும், பெருங்குற்றம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்
வாழ்வதற்கென செல்வந்தர்கள் பெற்றிருக்கும் அதே உரிமையை, கடந்த ஆண்டு உயிர்ப்புப் பெருவிழாவின்போது குண்டு வெடிப்பால் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களும் பெற்றுள்ளனர் என்பதை உணர்ந்து, இந்தத் தாக்குதல் குறித்த விசாரணைகள் இடம்பெறவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார், இலங்கையின் கொழும்பு கர்தினால் மால்கம் இரஞ்சித்.
2019ம் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறு கொண்டாட்டங்களின்போது, கிறிஸ்தவ ஆலயங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் எண்ணற்றோர் கொல்லப்பட்டது குறித்த விசாரணைகள் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், பணம் மற்றும் செல்வாக்கு நிறையப்பெற்ற சிலரால் இதனை தடுத்து நிறுத்தும் முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக வந்துகொண்டிருக்கும் செய்திகள் குறித்து கவலையை வெளியிட்ட கர்தினால் இரஞ்சித் அவர்கள், அனைவருக்கும் வாழும் உரிமை ஒன்றே என்பதை, ஒவ்வொருவரும் நினைவில் கொள்ளவேண்டும் என அழைப்பு விடுத்தார்.
கடந்த ஆண்டு உயிர்ப்புப் பெருவிழா நாளின் தாக்குதல்களுக்கு யார் பொறுப்பு என்பதை ஆராய்ந்து வரும் அதிகாரிகளை அச்சுறுத்துவதும், மனித உரிமைகள் என்ற போர்வையில் குற்றங்களை மறைக்க  முயல்வதும், பெருங்குற்றம் என கூறினார் கர்தினால் இரஞ்சித்.
நாட்டின் சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்பதால், குண்டு வெடிப்புகள் குறித்த விசாரணைகளின் முக்கியத்துவத்தை குறைக்க முயல்வது தவறு எனவும் கூறும் கர்தினால் இரஞ்சித் அவர்கள், தவறிழைத்தோரை எவ்வித பாரபட்சமும் இன்றி கண்டறிய வேண்டியது, நீதித்துறையின் கடமை என்பதையும் வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி, உயிர்ப்புப் பெருவிழாவன்று நடைபெற்ற தாக்குதல்களில், 279 பேர் உயிரிழந்தனர், மற்றும், குறைந்தது 500 பேர் காயமடைந்தனர். இது குறித்த விசாரணைகள், ஓராண்டு தாண்டியும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. (UCAN)

ROBERT JOHN KENNEDY: இளைஞருக்கு அச்சுறுத்தலை வழங்கும் சமூகத்தொடர்புச் ச...

ROBERT JOHN KENNEDY: இளைஞருக்கு அச்சுறுத்தலை வழங்கும் சமூகத்தொடர்புச் ச...: இளைஞருக்கு அச்சுறுத்தலை வழங்கும் சமூகத்தொடர்புச் சாதனங்கள் முகநூல் பக்கம் வழியாக அல்ல, மாறாக, முகத்துக்கு முகம் பார்த்துச் சொல்லப்படும் ...

இளைஞருக்கு அச்சுறுத்தலை வழங்கும் சமூகத்தொடர்புச் சாதனங்கள்

இளைஞருக்கு அச்சுறுத்தலை வழங்கும் சமூகத்தொடர்புச் சாதனங்கள் கர்தினால் சார்லஸ் மாங் போ

முகநூல் பக்கம் வழியாக அல்ல, மாறாக, முகத்துக்கு முகம் பார்த்துச் சொல்லப்படும் கதைகளால், மக்களிடையே உறவுகள் வளர வேண்டும்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்
இன்றைய சமூகத் தொடர்பு சாதனங்கள், பகைமை, உரிமைமீறல் போக்கு, மற்றும், எதிர்மறை எண்ணங்கள் என்ற கலவையை இளையோருக்கு ஊட்டுவதன்வழியாக, பெரும் அச்சுறுத்தல்களை வழங்கி வருகின்றன என்ற கவலையை வெளியிட்டுள்ளார், ஆசிய ஆயர் பேரவை கூட்டமைப்பின் தலைவரான கர்தினால் சார்லஸ் மாங் போ.
தவறான எண்ணங்களையும் போக்குகளையும் ஊக்குவிப்பதன்வழியாக, இளைய சமுதாயத்திற்கு கேடு விளைவித்துவரும் சமுகத்தொடர்பு சாதனங்கள் குறித்து, உலக சமூகத்தொடர்பு நாளுக்குரிய செய்தியில் கூறிய, மியான்மாரின் யாங்கூன் பேராயர், கர்தினால் போ அவர்கள், இத்தகைய போக்குகளால் வருங்காலத் தலைமுறையின் நன்னெறி வாழ்வு பெருமளவில் பாதிக்கப்படும் என்ற கவலையையும் தெரிவித்துள்ளார்.
சமூகத்தொடர்பு சாதனங்கள் வழங்கும் பொய்ச் செய்திகளால், மனித உறவுகளும், சமுதாய இணைக்க வாழ்வும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன என்பதையும் குறிப்பிட்ட கர்தினால் போ அவர்கள், சில சமூகத்தொடர்பாளர்களால் வழங்கப்படும் தீய செய்திகள் வருங்காலத் தலைமுறையை பெருமளவில் தொடர்ந்து பாதித்து வருகின்றன என்று கூறினார்.
குழந்தைகளுக்கு பகைமை உணர்வுகளையும், தீய எண்ணங்களையும் ஊட்டிவரும் இந்த சமூகத் தொடர்பு சாதனங்களுக்கு, எவ்வித தடுப்பு மருந்தும் இல்லாதது கவலையாக உள்ளது எனவும், கூறினார் கர்தினால் போ.
முகநூல் பக்கம் வழியாக அல்ல, மாறாக, முகத்துக்கு முகம் பார்த்துச் சொல்லப்படும் கதைகளால், மக்களிடையே உறவுகள் வளரவேண்டும் என்று திருத்தந்தை விடுத்துள்ள விண்ணப்பத்தை, கர்தினால் போ அவர்கள் மீண்டும் நினைவுறுத்தியுள்ளார். (UCAN)

சாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-24

சாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-24 புனித திருத்தந்தை 6ம் பவுல்

திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1922ம் ஆண்டு முதல், 1954ம் ஆண்டு வரை திருப்பீட தலைமையகத்தில் பணியாற்றியவர். எனவே, அவர் அங்கு சீர்திருத்தங்களைப் படிப்படியாகக் கொண்டு வந்தார். மே 29 வருகிற வெள்ளி, திருத்தந்தை 6ம் பவுல் அவர்களின் விழா. அவரிடம் திருஅவைக்காகச் செபிப்போம்
மேரி தெரேசா: வத்திக்கான்
புனித திருத்தந்தை 6ம் பவுல்-6
திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1963ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தையர், உரோம் ஆயர் என்ற முறையில், திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், முதலில், தனது புதிய மறைமாவட்டத்தின் அருள்பணியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “மிலானில் நவீன உலகோடு உரையாடல் தொடங்கினேன், அதேபோல் நீங்களும், வாழ்வின் எல்லா நிலைகளிலும் உள்ள அனைத்து மக்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் வழிகளைத் தேடுங்கள்” என்று கூறினார். திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு நாள்கள் சென்று, 2ம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை மீண்டும் தொடர்ந்து நடத்தவிருப்பதாக அறிவித்தார். 1963ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி அப்பொதுச்சங்கத்தை மீண்டும் கூட்டினார். திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், உலகுக்கு வழங்கிய வானொலி செய்தியில், திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களின் ஆற்றல், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களின் ஞானம், அறிவு, மற்றும், திருத்தந்தை 23ம் ஜான் அவர்களின் அன்பு என, தனக்கு முந்தைய திருத்தந்தையரின் தனித்துவங்களை எடுத்துரைத்தார். 2ம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைத் தொடர்ந்து நடத்தி நிறைவுறச் செய்வது, திருஅவை சட்டத்தை சீர்திருத்துவது, உலகில் சமுதாய அமைதி மற்றும், நீதியை மேம்படுத்துவது போன்றவற்றை தனது “பாப்பிறை தலைமைத்துவத்தின் இலக்குகளாக”, திருத்தந்தை அறிவித்தார். அவரின் செயல்பாடுகளில் கிறிஸ்தவத்தின் ஒற்றுமை, மையமாக விளங்கியது.
பிரிந்த கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளுக்கு நன்றி
2ம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் பங்குபெற்ற தந்தையர்கள், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் வெளியிட்ட, கிறிஸ்துவின் மறையுடல் என்று பொருள்படும் Mystici corporis Christi (29 ஜூன்,1943) திருமடலை மனதில் வைத்து, செயல்பட வேண்டும் என்று  திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் கேட்டுக்கொண்டார். அதாவது, புதிய கோட்பாட்டு விளக்கத்தை உருவாக்காமல், அல்லது, அதை திரும்பச் சொல்லாமல், திருஅவை தன்னை எவ்வாறு நோக்குகிறது என்பதை எளிய சொற்களில் விளக்குமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை 6ம் பவுல். அவர், அப்பொதுச் சங்கத்தில் கலந்துகொண்ட, பிரிந்த கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளுக்கு நன்றி கூறினார். கத்தோலிக்கத் திருஅவை, பிரிவினைக்குக் காரணமாயிருந்ததால், அதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டார். அந்தப் பொதுச்சங்கத்தில் கலந்துகொள்ள பயணம் மேற்கொள்வதற்கு, அரசுகள் அனுமதி அளிக்காததால், உலகின் கிழக்கிலிருந்து பல ஆயர்கள் கலந்துகொள்ளவில்லை என்பதையும் திருத்தந்தை அறிவித்தார். 1964ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி, அப்பொதுச் சங்கத்தின் மூன்றாம் கட்ட அமர்வைத் தொடங்கியவேளை, திருஅவை பற்றிய தொகுப்பு, அப்பொதுச்சங்கத்தின் விளைவாக வெளிவரக்கூடிய மிக முக்கிய ஏடு என்று, தான் நோக்குவதாக அறிவித்தார். அப்பொதுச்சங்கத் தந்தையர், பாப்பிறைத் தலைமைப்பணி பற்றிய விவாதங்களை மேற்கொண்டபோது, இவர், பாப்பிறையின் முதன்மைத்துவத்தை உறுதி செய்தார். சமய சுதந்திரம் பற்றி விரைவாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் தீவிரப்படுத்தியபோது, திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், இது, கிறிஸ்தவ ஒன்றிப்போடு தொடர்புடைய தொகுப்புகளுடன் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
மரியா, திருஅவையின் அன்னை
திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1964ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி, அன்றைய பொதுச்சங்க அமர்வை நிறைவுசெய்தவேளை, “மரியா, திருஅவையின் அன்னை” என்பதை முறைப்படி அறிவித்தார். அப்பொதுச் சங்கத்தின் மூன்றாம் மற்றும், நான்காம் அமர்வுகளில், திருப்பீட தலைமையகத்தின் சில துறைகளில் சீர்திருத்தங்கள், திருஅவை சட்டத்தை திருத்தியமைத்தல், கலப்பு திருமணங்களை நெறிப்படுத்தல், குடும்பக் கட்டுப்பாடு போன்ற விவகாரங்கள் பற்றி அறிவித்தார். அப்பொதுச்சங்கத்தின் இறுதி அமர்வை, திருஅவை நசுக்கப்படும் நாடுகளிலிருந்து வந்திருந்த ஆயர்களுடன் கூட்டுத்திருப்பலியுடன் தொடங்கினார் அவர். இவரின் அங்கீகாரத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு தொகுப்புகள் மாற்றப்பட வேண்டியிருந்தன. இறுதியில் அனைத்து தொகுப்புகளும் அங்கீகரிக்கப்பட்டன. 1965ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, அன்னை மரியாவின் அமல பிறப்பு விழாவன்று, 2ம் வத்திக்கான் பொதுச்சங்கம் நிறைவுற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், தனக்கு முந்தைய திருத்தந்தையர் 12ம் பயஸ், திருத்தந்தை 23ம் ஜான் ஆகிய இருவரையும் புனிதர்களாக அறிவிக்கும் நடைமுறைகளைத் துவங்குவதாக அறிவித்தார்.
புனிதத்துவத்திற்கு உலகளாவிய அழைப்பு
திருத்தந்தை 6ம் பவுல் அவர்களைப் பொருத்தவரை, 2ம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் மிக முக்கிய பண்பு மற்றும், அறுதியான இலக்கு, புனிதத்துவத்திற்கு உலகளாவிய அழைப்பு என்பதாகும். கிறிஸ்தவர்கள் எல்லாரும், தங்கள் வாழ்வில் எந்த நிலையில் இருந்தாலும், அனைவரும் கிறிஸ்தவ வாழ்வின் முழுமைக்கும், பிறரன்பை நிறைவாய்   வாழவும் அழைக்கப்படுகின்றனர் என்று அவர் கூறினார்.
திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1922ம் ஆண்டு முதல், 1954ம் ஆண்டு வரை திருப்பீட தலைமையகத்தில் பணியாற்றியவர். எனவே, அவர் அங்கு சீர்திருத்தங்களைப் படிப்படியாகக் கொண்டு வந்தார். மே 29 வருகிற வெள்ளி, திருத்தந்தை 6ம் பவுல் அவர்களின் விழா. அவரிடம் திருஅவைக்காகச் செபிப்போம். 

பெத்லகேமில், கிறிஸ்து பிறப்பு பசிலிக்கா மீண்டும் திறக்கப்பட்டது

பெத்லகேமில், கிறிஸ்து பிறப்பு பசிலிக்கா மீண்டும் திறக்கப்பட்டது புனித பூமியின் பெத்லகேமில் உள்ள கிறிஸ்து பிறப்பு பசிலிக்கா

புனித பூமியின் பெத்லகேமில், கடந்த இரு மாதங்களாக மூடப்பட்டிருந்த கிறிஸ்து பிறப்பு பசிலிக்கா, மே 26, இச்செவ்வாய் முதல், மக்களின் வருகைக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
கோவிட் 19 தொற்றுக்கிருமி உருவாக்கிய நெருக்கடி நிலையால், புனித பூமியின் பெத்லகேமில், கடந்த இரு மாதங்களாக மூடப்பட்டிருந்த கிறிஸ்து பிறப்பு பசிலிக்கா, மே 26, இச்செவ்வாய் முதல், மக்களின் வருகைக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
பசிலிக்காவில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில், 50 பேருக்கு மேல் அனுமதி வழங்கப்படமாட்டாது என்பதையும், பசிலிக்காவில், நுழைவதற்குமுன் மக்களின் உடல் வெப்பநிலை அளக்கப்படும் என்றும் புனிதத் தலங்களின் காப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஒருவருக்கொருவர் இடைவெளிகளைக் காப்பது, முகக்கவசமும், கையுறைகளும் அணிவது போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படும் என்பதும், எக்காரணம் கொண்டும், புனிதப் பொருள்களைத் தொடுவது மற்றும் முத்தி செய்வது கூடாது என்பதும் தெளிவு படுத்தப்பட்டுள்ளன.
மேலும், இப்புனிதத்தலங்களுக்கு வெளிநாட்டவர்களின் வருகை இன்னும் சில வாரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும், தற்போதைக்கு, உள்ளூர் மக்களுக்கு கிறிஸ்து பிறப்பு பசிலிக்காவின் திறப்பு, மகிழ்வை உருவாக்கியுள்ளது என்றும், புனித பூமியின் காலவர்களில் ஒருவரான அருள்பணி Francis Patton அவர்கள் கூறியுள்ளார். இதற்கிடையே, ஆண்டவரின் கல்லறைக் கோவில், இன்னும் மக்களுக்காக திறந்து விடப்படவில்லை என்பதும், தற்போது, அக்கோவிலுக்குள், புனிதத்தலங்களைக் காக்கும் ஒரு சிலர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கன. (AsiaNews)

எந்த அளவையால் அளக்கிறீர்களோ...

எந்த அளவையால் அளக்கிறீர்களோ... 2020.05.26 con la misura con la quale misurate sarà misurato a voi - Mt 2,7

"நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்" (மத். 7:2; லூக் 6:38) என்று, இயேசு விடுத்த எச்சரிக்கையை நினைவில் கொள்வது நல்லது
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்
ஒரு கிராமத்தில் வாழ்ந்த ரொட்டிக்கடை உரிமையாளர், அக்கிராமத்தில், வெண்ணெய் விற்கும் ஒருவரிடம், தன் கடைக்கு, ஒவ்வொருநாளும், ஒரு கிலோ வெண்ணெய் தரும்படி சொன்னார். அதன்படி, வெண்ணெய் வியாபாரி, ஒவ்வொருநாளும் தவறாமல் ஒரு கிலோ வெண்ணெயை அவரது கடையில் கொடுத்துவந்தார். ஒருநாள், ரொட்டிக்கடைக்காரருக்கு மனதில் இலேசான சந்தேகம் வந்தது. வெண்ணெய் வியாபாரி கொடுக்கும் வெண்ணெய் ஒரு கிலோவுக்கு குறைவாக இருப்பதுபோல் அவருக்குத் தோன்றியது. அவர் உடனே கடையில் இருந்த தராசில் அதை நிறுத்துப் பார்த்தபோது, அது, ஒரு கிலோவுக்கு குறைவாக இருந்தது. அடுத்த சில நாள்கள், அவர் கடைக்கு வந்த வெண்ணெயை நிறுத்துப் பார்க்கையில், அது, ஒவ்வொருநாளும், எடை குறைவாகவே இருந்தது. எனவே, ரொட்டிக்கடை உரிமையாளர், காவல் துறையிடம் புகார் அளிக்கவே, அவர்கள் சென்று, வெண்ணெய் வியாபாரியை கைது செய்து, நீதி மன்றத்திற்கு இட்டுச் சென்றனர்.
இந்த வழக்கை விசாரிக்க வந்த நீதிபதி, வெண்ணெய் வியாபாரியிடம், "உங்களிடம் இருக்கும் எடைக்கல் சரியான அளவில்தான் உள்ளதா?" என்று கேட்டார். அதற்கு அந்த வெண்ணெய் வியாபாரி, "ஐயா, என்னிடம் எடைக்கல் எதுவும் இல்லை" என்று பதில் சொன்னார். இதைக் கேட்டு ஆச்சரியமடைந்த நீதிபதி, "பின் எப்படி நீங்கள் வெண்ணெயை எடைபோடுகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அந்த வெண்ணெய் வியாபாரி, "நான் ஒவ்வொருநாளும், 1 கிலோ வெண்ணெயை ரொட்டிக்கடையில் கொடுத்துவிட்டு, அங்கிருந்து 1 கிலோ எடையுள்ள ரொட்டியை வாங்கி வருவேன். அடுத்த நாள், அந்த ரொட்டியை என் தராசில் எடையாகப் பயன்படுத்தி, வெண்ணெயை எடைபோட்டு, ரொட்டிக்கடைக்கு எடுத்துச்செல்வேன்" என்று கூறினார். நீதி மன்றத்தில் அமர்ந்திருந்த ரொட்டிக்கடை உரிமையாளரின் முகம் அதிர்ச்சியில் உறைந்துபோனது.
"நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்" (மத். 7:2; லூக் 6:38) என்று, இயேசு விடுத்த எச்சரிக்கையை நினைவில் கொள்வது நல்லது.

இந்தியா பங்களாதேஷ் நாடுகளுக்கு ஐ.நா. பாராட்டு

இந்தியா பங்களாதேஷ் நாடுகளுக்கு ஐ.நா. பாராட்டு அம்பான் புயலின்போது உதவிய இந்திய இராணுவத்தினர்

ஐ.நா. பொதுச்செயலர் : புயலுக்கு முன்னர் இந்தியாவும் பங்களாதேஷும் முப்பது இலட்சத்திற்கும் மேற்பட்ட கடலோர மக்களை வேறு இடங்களில் குடியமர்த்தியது பாராட்டுக்குரியது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்
அம்பான் புயலுக்கு முன்னர், இந்தியாவிலும் பங்களாதேஷிலும் எடுக்கப்பட்ட தற்காப்பு நடவடிக்கைகளுக்கும்,  இப்புயலுக்குப்பின் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளுக்கும் தன் பாராட்டுகளை வெளியிட்டுள்ளார் ஐ.நா. பொதுச் செயலர்.
மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய இப்புயலால், இந்தியாவின் மேற்கு வங்கம், ஒடிசா, மற்றும், பங்களாதேஷின் கடலோர மக்கள் பலர் உயிரிழந்துள்ளது குறித்து தன் கவலையை வெளியிட்ட, ஐ.நா பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட காலத்தில், இந்த இயற்கை பேரிடர், வாழ்க்கையை மேலும் சிரமமாக்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 தொற்றுநோயால் மக்கள் ஒருவருக்கொருவர் விலகி நிற்கவேண்டிய இந்த காலக்கட்டத்திலும், இப்புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இவ்விரு நாடுகளும் ஆற்றிவரும் சேவைகளும், புயலுக்கு முன்னர் இவ்விரு நாடுகளும் 30 இலட்சத்திற்கும் மேற்பட்ட கடலோர மக்களை வேறு இடங்களில் குடியமர்த்தியதும் பாராட்டுக்குரியது என்று கூறினார், ஐ.நா. பொதுச்செயலர்.
இந்தியாவிலும், பங்களாதேஷிலும் இப்புயலால் ஏறத்தாழ 102 பேர் உயிரிழந்துள்ளனர், மற்றும், 1 கோடியே 30 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன. (UN)

மக்களுடன் மக்களாக வாழ்ந்த முதல்வர்

மக்களுடன் மக்களாக வாழ்ந்த முதல்வர் தமிழக முன்னாள் முதல்வர், பெருந்தலைவர் காமராஜர்

மன்னிப்புக் கேட்க முயன்றவரைத் தட்டிக்கொடுத்த காமராஜர் அவர்கள், அவரது கடமை உணர்வை பாராட்டினார். அந்த காவலரின் உள்ளமும் அமைதியானது.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்
காமராஜ் அவர்கள், முதலமைச்சராக இருந்தவரை, அவருக்கு பாதுகாப்பாகச் சென்ற காவல்துறை வாகனங்கள் "சைரன்" என்ற மிகுவொலி எழுப்பியதே இல்லை. தன்னை தலைவராக எண்ணிக்கொள்ளாமல் மக்களுள் ஒருவராகவே தன்னைப் பாவித்துக் கொண்டவர் அவர். ஒரு நாள், சாலை சந்திப்பில் போக்குவரத்தைச் சீர்செய்துகொண்டிருந்த காவலர் ஒருவர், முதல்வர் வருவது தெரியாமல், முதல்வர் சென்ற சாலையில் வரும் வாகனங்களை நிறுத்திவிட்டு, காத்திருந்த மற்ற வாகனங்கள் செல்ல அனுமதியளித்தார். ஆனால், முதல்வர் காருக்குமுன் நின்ற மேலதிகாரி கடுங்கோபம் கொண்டு,  அந்த காவலரைத் திட்டுவதற்காக கதவைத் திறந்தார். காமராஜர் அவர்களோ, அந்த போக்குவரத்துக் காவலரின் கடமையாற்றலைக் கண்டு வியந்தவராக, காரிலிருந்து இறங்கிய அதிகாரியை நோக்கி, எங்க போறீங்கன்ணேன். அவர் தன் கடமையச் செய்றார். போக்குவரத்து விதி எல்லாருக்கும் தான்னேன், என்று சொல்லி அதிகாரியை வாகனத்திலேயே அமரச் செய்தார். காவலரைத் தாண்டி இவரது கார் செல்லும்போதுதான், காவலருக்கு காமராஜர் அவர்கள் போய்க்கொண்டிருப்பது புரிந்தது. முதல்வர் காரையே நிறுத்திவிட்டோமே என்று பதறிப்போன காவலர், அன்று மாலை காமராஜர் அவர்கள் வீடு திரும்பியபோது வாசலில் காத்து நின்று மன்னிப்புக் கேட்க முயன்றபோது, அவரைத் தட்டிக்கொடுத்த காமராஜர் அவர்கள், அவரது கடமை உணர்வை பாராட்டினார். அந்த காவலரின் உள்ளமும் அமைதியானது.
அது ஒரு காலம். கனவில் மட்டுமே திரும்ப வரக்கூடியது.

Tuesday 26 May 2020

மனச்சான்றின் வலிமை

மனச்சான்றின் வலிமை மனச்சான்றின் குரல்

அந்த மாணவனை அழைத்துக் கேட்டபோது, அந்த பணப்பையை தான் எடுக்கவில்லை என உறுதியாக மறுத்துவிட்டான். அந்த பெண்மணியும் எதுவும் சொல்லவில்லை. அதற்குப்பின் அவனது மனசாட்சி அவனைத் துரத்தி துரத்தி விரட்டியது
மேரி தெரேசா: வத்திக்கான்
கிராமத்திலிருந்து வந்த இளைஞன் ஒருவன், சென்னை போன்ற மாநகரம் ஒன்றில் கல்லூரியில் சேர்ந்தான். அவனுக்கு அப்பா இல்லை. அவனது அம்மா கல் உடைத்து, பீடி சுற்றி, தன் மகனையும் மகளையும் படிக்க வைத்துக்கொண்டிருந்தார். எனவே அந்த மாணவன், பகுதி நேர வேலை ஒன்றிலும் சேர்ந்தான். ஒவ்வொரு நாளும் மாலையில், வீடு வீடாகச் சென்று உணவு பொட்டலங்களைக் கொடுத்துவந்தான். ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் பணத்தில் தனது படிப்பு, வாடகை, மற்றும், இதரச் செலவுகள் போக, மீதி ஏறத்தாழ 600 ரூபாயை தன் அம்மாவுக்கும் அனுப்பி வந்தான். இவ்வாறு அவன் ஒருநாள் இரவு உணவை, முதல் மாடியில் வாழ்ந்த ஒரு பெண்மணி வீட்டில் கொடுத்துவிட்டு திரும்புகையில், படிக்கட்டில் ஒரு பணப்பை கிடந்தது. சுற்றிலும் பார்த்துவிட்டு அதை எடுத்து, ஓரிடத்தில் ஒளித்து வைத்தான். பின் அதை எடுத்துக்கொண்டுபோய் தான் வாடகைக்கு இருக்கும் அறையிலுள்ள மற்ற மாணவர்களுக்குத் தெரியாதவாறு, தனது பையில் அதை மறைத்து  வைத்தான். அச்சமயத்தில், அவனது பகுதிநேர வேலைக்கு இரண்டுசக்கர மோட்டார் வாகனம் ஒன்று வாங்குவதற்கு அவனுக்கு பணம் தேவைப்பட்டது. இப்படியிருக்க, அந்த பணப்பையை தொலைத்த அந்தப் பெண்மணி வீட்டில் எங்கும் தேடினார். ஏனெனில் அவர் அன்றுதான் ஒரு இலட்சம் ரூபாயை ஒரு முக்கிய செலவுக்காக வங்கியிலிருந்து எடுத்து வந்திருந்தார். அவர் வழக்கமாகப் பயணிக்கும் ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்டார். அன்று அவர் பணம் எடுத்த வங்கி அலுவலகரிடம் கேட்டார். காவல்நிலையத்தில் புகார் கொடுக்குமாறு மற்றவர்கள் வலியுறுத்தினர். அவர் வீட்டில் விசிடி புகைப்பட கருவி பொருத்தப்பட்டிருந்ததால், அந்தப் பையை எடுத்தவர் அந்த கல்லூரி மாணவன்தான் என்பதை உறுதிசெய்தார். பின், அந்த மாணவனை அழைத்துக் கேட்டபோது, அதை தான் எடுக்கவில்லை என உறுதியாக மறுத்துவிட்டான். அந்த பெண்மணியும் எதுவும் சொல்லவில்லை. அதற்குப்பின் அவனது மனசாட்சி அவனைத் துரத்தி துரத்தி விரட்டியது. அந்த பையை எடுத்து, காவல்நிலையம், கடல், குப்பை போன்ற பல இடங்களில் வீசினான். ஆனால் அது அவன் கையைவிட்டு விலகவே இல்லை. அவனது பயம்நிறைந்த முகத்தைப் பாரத்த அவனது நண்பனும் காரணம் கேட்டான். கடைசியாக அவன் அந்தப் பெண்மணியிடம் வந்து தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புகேட்டான். அப்போது அந்தப் பெண்மணி அவனிடம், அதை எடுத்த காரணத்தைக் கேட்டார். அவனின் நிலையை கேட்டறிந்த அவர், தம்பி தவறு என் பக்கமும் உள்ளது. எனது கவனக்குறைவும் ஒரு காரணம் என்று அவனிடம் மன்னிப்புக் கேட்டார். பின்னர், தான் ஒரு வருடமாக பாதுகாத்துவந்த தனது இறந்த கணவரின் வாகனச் சாவியை அவனிடம் கொடுத்தார். அவன் அதை பணம் கொடுக்காமல் வாங்க மறுத்தான். எனவே, அந்தப் பெண்மணி,  அவன் வாகனம் வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த கொஞ்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டார். அவனும் மன நிம்மதியுடன் புதிய வாழ்வைத் தொடங்கினான். (மனம் என்ற குறும்படத்தின் சுருக்கம்)

பிறரைத் தீர்மானிக்கும் பொறுப்பைக் கொடுத்தது யார்?

பிறரைத் தீர்மானிக்கும் பொறுப்பைக் கொடுத்தது யார்?  பிறரை மட்டுமல்ல, தன்னையும் தீர்ப்பிடக் கூடாது

 நாம் ஒவ்வொருவரும், தன்னைப் பற்றிக்கூட தீர்ப்பிடக்கூடாது. அதற்கு மாறாக, மற்றவர் நம்மைப் பற்றிச் சொல்லும் தீர்ப்புக்களிலே நம் வாழ்வை முடக்கிவிடாமல், ஆண்டவன் கொடுத்துள்ள திறமைகளைக் கண்டுணர்ந்து முன்னேற முயற்சிப்போம், மனதில் உறுதியுடன்

மேரி தெரேசா: வத்திக்கான்
அமெரிக்காவில் ஆரம்பப் பள்ளி ஒன்றில், இசை ஆசிரியராகப் பணியாற்றிய ஒருவர், மாலை நேரங்களில், இசையில் ஆர்வமுள்ள சிறார்க்கு, பியானோ, ஆர்கன், வயலின் போன்ற இசைக்கருவிகள் மீட்டுவதற்குக் கற்றுக்கொடுத்து வந்தார். அந்த ஆசிரியர், தனது ஏழ்மை நிலையால், இந்த மாலைநேர வகுப்புக்கு கட்டணமும் வாங்கினார். அந்த வகுப்பில் ஏறத்தாழ எட்டு வயது மதிக்கத்தக்க, ராபி என்ற ஓர் ஏழைச் சிறுவனையும் கொண்டுவந்து சேர்த்தனர். ஒவ்வொரு நாளும் ஒரு பழைய காரில் அவனது அம்மா வந்து இறங்கி, மகனை இறக்கிவிட்டு, கையசைத்துச் செல்வார். முதல்நாள் வகுப்பில் அந்த ஆசிரியர் சிறுவன் ராபியிடம், பியானோ கற்றுக்கொள்வதற்கு இது சரியான வயது. இன்னும் பத்து ஆண்டுகள் சென்று நீ பெரியவனாக வளரும்போது, பெரிய இசைக்கலைஞனாக வர வாய்ப்புள்ளது என்று உற்சாகப்படுத்தினார். அன்று ஆசிரியர் சொன்ன அறிவுரைகளையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ராபி, அதெல்லாம் எனக்குத் தெரியாது டீச்சர், ஆனால் நான் பியானோ வாசிப்பதை என் அம்மா கேட்கவேண்டும், அதுதான் எனது ஆசை என்று சொன்னான். வகுப்பும் ஆரம்பமானது. வகுப்பு  தொடங்கி பத்து பதினைந்து நாள்கள் ஆகியிருக்கும். ராபியிடம் இசைஞானம் இருப்பதாகவே ஆசிரியருக்குத் தெரியவில்லை. ஒரு மாதம் ஆகியது. ராபியிடம் முன்னேற்றம் எதுவுமில்லை. பெரிய பெரிய இசைஞானிகளாக மாறுகிற எனது வகுப்புச் சிறாரையும், இசைஞானமே இல்லாத சிறாரையும் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த வகுப்பில், இசைஞானமே இல்லாத சிறாரை வரிசைப்படுத்தினால், ராபிதான் முதலில் வருவான் என்று அந்த இசை ஆசிரியர் நினைத்தார், எனவே ஒருநாள் ராபியிடம், தம்பி, நீ படித்து பயனில்லை என அவனது நிலைமையை விவரித்தார் ஆசிரியர். அப்போது ராபி, டீச்சர், நான் இசைக்கருவி மீட்டுவதை, எனது அம்மா ஒருநாள் கேட்கவேண்டும், எனது ஆசையெல்லாம் அதுதான் எனச் சொன்னான். ராபி தொடர்ந்து இசை வகுப்புக்கு வந்துகொண்டிருந்தான். நான்கைந்து மாதங்கள் சென்று, ராபி திடீரென வகுப்புக்கு வருவதை நிறுத்திவிட்டான். இசை ஆசிரியரும் ராபி பற்றி கவலைப்படவே இல்லை. நல்ல முடிவுதான் எடுத்திருக்கிறான் என்று அவர் நினைத்துக்கொண்டார்.
ஆறு மாதங்கள் சென்று, தன் வகுப்பு மாணவர்களின் இசைத் திறமைகளை பொதுவில் காட்டுவதற்காக, ஓர் அரங்கேற்ற நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தார், இசை ஆசிரியர். ராபி வாழ்ந்த வீடு உட்பட அனைத்துச் சிறார் வீடுகளுக்கும் அவர் அழைப்பிதழ்களை அனுப்பினார். உடனே ராபி, இந்த நிகழ்வில் கட்டாயம் நான் பங்கேற்பேன் என்று, பதில் மடலும் அனுப்பினான். ஆசிரியர் எவ்வளவோ மறுத்தும் அவன் விடுவதாயில்லை. அரங்கேற்றம் நடைபெறவிருந்த நாளுக்கு முந்தியநாள் முன்னோட்டம் பார்க்கும் நிகழ்வுக்கும் ராபி வரவில்லை. அதனால் ஆசிரியர் ஒரு முடிவுக்கு வந்தார். அந்நிகழ்வில் கடைசியாக ராபியை மேடையில் ஏற்றி, திரையை உடனடியாக மூடிவிடவேண்டியதுதான் என்று அவர் தீர்மானித்திருந்தார். அந்த நாளும் வந்தது. நிகழ்ச்சி ஆரம்பமானது. சிறார் ஒவ்வொருவராக வந்து தங்கள் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். பலத்த கரவொலிகளையும் பெற்றனர். அப்போதெல்லாம் ராபி வரவில்லை. கடைசிக் கட்டத்தில் அழுக்குச் சட்டையுடன் ஓடோடிவந்த ராபி மேடை ஏறினான். நான் உலக இசைஞானிகளில் மிகப்பெரிய இசைமேதையின் இசை ஒன்றை இசைக்கப் போகிறேன் என்று, அவன் பியானோவைத் தொட்டான். அடுத்து ஆறரை நிமிடங்களுக்கு அரங்கமே அமைதியில் உறைந்திருந்தது. ஆசிரியருக்கு ராபி வாசித்தது, அவன் வாசிப்பது போலவே இல்லை. ஏனெனில் அவனுக்கு பியானோ வாசிப்பது சுத்தமாகத் தெரியாது என ஆசிரியர் நினைத்திருந்தார். ராபி வாசித்து முடித்ததும், அரங்கமே அதிரும்வண்ணம் அவனுக்கு கைதட்டல் கிடைத்தது. ஆசிரியர் மேடைக்கு ஓடிவந்து ராபியை அணைத்து உச்சி முகந்தார், தேம்பித் தேம்பி அழுதார். ராபி என்னால் நம்பவே முடியவில்லை என்றார் ஆசிரியர். அப்போது ராபி அனைவரையும் பார்த்துச் சொன்னான்
நான் ஏன் இப்படி அழுக்கான ஆடையுடன், தலைவாராமல் இங்கு வந்தேன் என்று நீங்கள் எல்லாரும் நினைக்கலாம். இன்று காலையில்தான் என் அம்மா இறந்துபோனார். மேலும் என் அம்மாவுக்குப் பிறவியிலேயே காதுகேட்காது. ஆனால் நான் பெரிய இசைக்கலைஞனாக வரவேண்டுமென்ற ஆசை மட்டும் அவருக்கு இருந்தது. நான் எதை வாசித்தாலும் அவர்களுக்கு கேட்காது. ஆனால் இன்று என் அம்மா ஆண்டவரிடம் சென்றுவிட்டார்கள். அதனால் அவர்களுக்கு இன்று நிச்சயம் காதுகேட்கும். அந்த நம்பிக்கையில்தான் இப்போது பியானோ வாசித்தேன். எனது இந்த இசையையும் என் அம்மா கேட்டு இரசித்திருப்பார்கள்.
இவ்வாறு ராபி சொன்னதும் அரங்கத்தில் ஆழ்ந்த அமைதி நிலவியது. ராபி, அப்பா இல்லாமல் வளர்ந்தவன். இப்போது அவனுக்கு அம்மாவும் இல்லை. அந்த இசை ஆசிரியர் ராபியை அணைத்தபடியே, அந்த அரங்கத்தில் அமர்ந்திருந்தவர்களிடம் இவ்வாறு சொன்னார். அடுத்தவர் பற்றி தீர்மானிப்பதற்கு நாம் யார்? அந்தப் பொறுப்பை இயற்கை நம்மிடம் எப்போது கொடுத்தது? பிறரைத் தீர்மானிக்கும் பொறுப்பை நமக்குக் கொடுத்தது யார்? எந்த குழந்தையும், பெரிய ஆளாக அல்லது மதிப்புக்குறைந்த ஆளாக வளரும் என்பது யாருக்குத் தெரியும்? ஏன், நாம் இவ்வுலகைவிட்டு மறைந்தபின்னரும்கூட, அந்தக் குழந்தை பெரிய மரமாக வளரலாம், வளராமலும் இருக்கலாம். எது எப்படி நடக்கும் என்பது யாருக்குத் தெரியும்?
முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்
இது அமெரிக்காவில் நடந்த உண்மை நிகழ்வு என்று, முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள், மனதில் உறுதி வேண்டும் என்ற தலைப்பில் ஆற்றிய ஓர் உரையில் இதைப் பகிர்ந்துகொண்டார். ஒருவரைப் பற்றி தவறாகப் புரிந்துகொள்ள ஒரு விநாடி போதும். ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகத்தில் பிறந்ததற்கான காரண காரியத்தைப் புரிந்துகொள்வதற்கு நம் வாழ்நாள் முழுவதும்கூட போதாமல் போகலாம். யாரைப் பற்றியும் அவசரமாக முடிவு எடுப்பதற்குமுன், நாம் ஒரு சில விநாடிகள் சிந்தித்துப் பார்ப்போம். இறைவனும் இயற்கையும் மிக அதிக அறிவாளிகள். இவர்கள் உருவாக்கிய எதுவுமே வீணாகப் போகாது. ஜெயந்தஸ்ரீ அவர்களின் இந்தப் பகிர்வை, யூடியூப் ஒன்றில் கேட்டபோது, அவர் இன்னும் ஓர் ஆழமான, அருமையான கருத்தையும் பதிவுசெய்திருந்தார். அதாவது, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் எல்லாரையும் பற்றி உயர்வாகப் பேசுவதோடு, உண்மையாகப் பேசுவதையும் ஒரு கொள்கையாகவே வைத்துக்கொள்ளுங்கள். காரணம் என்னவெனில், நம்மில் பலர், மற்றவர்களை, மிக எளிதாக, ஏன் அவசரம் அவசரமாகக்கூட தவறாகப் புரிந்துகொள்ளுகிறோம். ஆனால், சரியாகப் புரிந்துகொள்ள வாய்ப்புக் கிடைக்கும்போது, அந்த நபரிடம் சென்று, நான் உங்களை இவ்வாறு தவறாகத் தீர்மானித்துவிட்டேன் என்று நாம் மன்னிப்புக் கேட்பதும் இல்லை. இதெல்லாம் சாதாரணமாக நடக்கக்கூடியதுதான் என்று, நமக்கு நாமே நியாயம் சொல்லிக்கொள்கிறோம். கடவுள், இந்த உலகில் நம் எல்லாரையும் ஏதோ ஒரு காரணத்திற்காகப் படைத்திருக்கிறார். அது நமக்குப் புரிகிறதோ புரியவில்லையோ, ஆனால் அவர் நம்மை மிக அழகான காரணத்திற்காகப் படைத்திருக்கிறார். இந்த ஒரு  பார்வையோடு, நம் கண்களை அகலத் திறந்து பார்த்தால், நாம் வாழ்கின்ற இந்த உலகம் இன்னும் ஒளிமயமாகத் தெரியும்.    
தன்னைப் பற்றிக்கூட தீர்ப்பிடக்கூடாது
“பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள் (லூக். 6,37)” என்று, இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், “பிறரைத் தீர்ப்பிடுவது மாபாதகம். மற்றவர் பற்றி தீர்ப்பிடுவதற்கு நான் யார்? ஒவ்வொருவரும் மற்றவரைத் தீர்ப்பிடுவதற்கு முன்னர், அவர்களின் இடத்தில் தன்னை வைத்துப் பார்க்கவேண்டும் என்று” பலமுறை சொல்லியிருக்கிறார்.
பெரியோர்களின் அறிவுரைகளும் இதுதான். பிறரைக் குறைகூறும் அதிகாரம் எவருக்கும் கிடையாது. பிறரைப் பற்றிக் குறைகூறுவதற்குமுன், தன் நிலை என்னவென்று, ஒருமுறைக்கு இரண்டு முறை சிந்திப்பதே, சிறந்த மனிதருக்கு அழகு. அடுத்தவரை குறைகூறுமுன் உன்னுள் இருக்கும் குறைகளை உற்றுநோக்கினால், உன் உயிருள்ளவரை, வாய்பேசாதாவனாகவே இருந்துவிடுவாய். அதேநேரம், நீ எங்கு போனாலும், என்ன செய்தாலும், உன்னைப் பற்றிக் குறைகூற நாலுபேர் இருக்கத்தான் செய்வார்கள். உன்னைக் குறைகூறும் அளவுக்கு அவர்கள் நல்லவர்களும் அல்ல, அதைக்கேட்டு கவலைப்படும் அளவுக்கு நீ மோசமானவனும் அல்ல என்றும் பெரியவர்கள் சொல்லியுள்ளனர். ஆதலால், மற்றவர் பற்றி தீர்ப்பிடுவதற்குமுன் ஒரு நிமிடம் நம்மைப் பற்றி சிந்தித்துப் பார்ப்போம். யாரைத் தீர்ப்பிடுகிறோமோ அவர் இடத்தில் நம்மை நிறுத்திப் பார்ப்போம். மேலும், நாம் ஒவ்வொருவரும், தன்னைப் பற்றிக்கூட தீர்ப்பிடக்கூடாது. அதற்கு மாறாக, மற்றவர் நம்மைப் பற்றிச் சொல்லும் தீர்ப்புக்களிலே நம் வாழ்வை முடக்கிவிடாமல், ஆண்டவன் கொடுத்துள்ள திறமைகளைக் கண்டுணர்ந்து முன்னேற முயற்சிப்போம், மனதில் உறுதியுடன்.  

தலைகனம் தரும் தவிப்பு

தலைகனம் தரும் தவிப்பு

 https://www.vaticannews.va/content/dam/vaticannews/multimedia/2020/04/25/Match-stick.jpg/jcr:content/renditions/cq5dam.thumbnail.cropped.250.141.jpeg

'உனக்குத் தலைக்கனம் அதிகம். அதனால், சும்மா இருக்கும் என்னிடம், வலிய வந்து உரசிப் பார்க்கிறாய். எரிந்துபோகிறாய்' என்று, தீப்பெட்டி, தீக்குச்சியிடம் சொன்னது.
ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்
பலநாளாக கேட்கவேண்டும் என்று எண்ணியிருந்த கேள்வியை, தீக்குச்சி, அன்று தீப்பெட்டியிடம் கேட்டது: 'நாம் இரண்டு பேரும் உரசுகிறோம். ஆனால், நான் மட்டும் பற்றி எரிகிறேனே, ஏன்?', என்று தீக்குச்சி கேட்டது.
'உனக்குத் தலைக்கனம் அதிகம். அதனால், சும்மா இருக்கும் என்னிடம், வலிய வந்து உரசிப் பார்க்கிறாய். எரிந்துபோகிறாய்' என்று தீப்பெட்டி பதில் சொன்னது.
தலைகனம் மிகுந்தால், அந்த தலைகனத்துடன் மற்றவர்களை உரச விழைந்தால், தணலாகித் தவிக்க வேண்டியிருக்கும். தணிந்தால், பணிந்தால், தவிப்பின்றி வாழமுடியும்.

தாயின் மன்னிக்கும் மனம்

தாயின் மன்னிக்கும் மனம் புனித அன்னை தெரேசா

புனித அன்னை தெரேசா - அப்போது அந்த தாயின் முகத்தில் தோன்றிய புன்னகையே, உலகிலேயே மிகச் சிறந்த புன்னகை
மேரி தெரேசா: வத்திக்கான்
அந்த வயது முதிர்ந்த தாய்க்கு தொழுநோய். கை நிறைய ஊதியத்தோடு வளமாய் வாழ்ந்துகொண்டிருக்கும் அவரது அருமை மகன் அவரைத் தெருவில் வீசிவிட்டார். அந்த தாய், தெருவில், தொழுநோய் முற்றிப்போய், உடல் அழுகிய நிலையில், அன்னை தெரேசா அவர்களது பிறரன்பு இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டார். மற்ற நோயாளிகளுடன், அந்த தாய்க்குப் பணிவிடை செய்த புனித அன்னை தெரேசா அவர்கள், அவரிடம், உங்கள் மகனை மன்னிப்பது கடினம்தான், ஆனாலும் மகனை மன்னிக்க மாட்டீர்களா என்று அடிக்கடி கேட்டு வந்தார். அந்த தாய் தனது இறுதி மூச்சை விடுவதற்குமுன், தன் மகனை மனதார மன்னித்துவிட்டதாக ஒரு புன்னகையை உதிர்த்தார். அந்த நேரத்தை நினைவுகூர்ந்த புனித அன்னை தெரேசா அவர்கள், “அப்போது அந்த தாயின் முகத்தில் தோன்றிய புன்னகைதான், உலகிலேயே மிகச்சிறந்த புன்னகை” என்று சொன்னார்.
மன்னிப்பதே மனித மாண்பு. மன்னிப்பவர் மனிதர், மன்னிக்கத் தூண்டுபவர் மாமனிதர். செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பவர் மனிதர். செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்பவர் மாமனிதர்.

போராட்டம் என்ற நூல்

போராட்டம் என்ற நூல்  பஞ்சாபில் பொது இடத்தில் இசைக் கலைஞர்கள்

கோவிட்-19 காலத்தில், பணியாற்றும் அனைத்து நலப்பணியாளர்கள், மருத்துவமனை சார்ந்த மற்ற பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் போன்ற அனைவரும் தற்போது, உழைக்கும் கடவுள்களாக, மனித தெய்வங்களாகப் போற்றப்படுகின்றனர்
மேரி தெரேசா: வத்திக்கான்
முடியாது என்று நினைத்த பல விடயங்கள் இப்போது நடந்து வருகின்றன. மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. துறை சார்ந்து, அறம் தவறியவர்களாக, சில திரைப்படங்களில் காட்டப்பட்ட மருத்துவர்களும், காவல்துறையினரும்தான், தற்போது உயிரைப் பணயம் வைத்து முன்வரிசையில் எங்கும் நிற்கிறார்கள். அவர்கள் அதிகம் வராத செய்திகளில், இப்போது அவர்கள் மட்டுமே வருகிறார்கள். இதுவரை நிமிர்ந்து ஏறிட்டுப் பார்க்கப்படாத துப்பரவுத் தொழிலாளர்களின் கால்களில், பாதபூஜைகள் செய்யப்படுகின்றன. சுவீடனில் ஒருவர், தான் சேர்த்து வைத்த பணத்தையெல்லாம் தெருவில் வீசியிருக்கிறார், ஆனால் அந்தப் பணத்தை எடுப்பதற்கு ஆள் இல்லை. நகரத்தில் இருந்த தன் மகனை அழைத்து வருவதற்காக, ஒரு தாய் தனியாக இருசக்கர வாகனத்தில் ஏறத்தாழ 1,400 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு ஊருக்கு அழைத்து வந்துள்ளார்... அடுத்த அத்தியாயத்தை தற்போது இயற்கை எழுதிக்கொண்டிருக்கிறது. உலகம் தன்னைத்தானே தூய்மைப்படுத்த ஆரம்பித்துவிட்டது. நாகரீகம் என்ற பெயரில் நாம் மறந்த பண்புகள் எல்லாவற்றையும், ஒரேயொரு கிருமி நமக்குத் திருப்பித் தந்துவிட்டது...  வத்திக்கான் வானொலியின் அன்பு இதயங்களே, இத்தகைய வரிகளை இந்நாள்களில் சமூக ஊடகங்கள் மிக அதிகமாகவே வெளியிட்டு வருகின்றன.
ஒரேயொரு நுண்கிருமி பரவல் காரணமாக, உலகெங்கும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு, மற்றும், சமூக விலகல் சூழல், வேலையின்மை, நிதிப்பிரச்சனை, செய்துவந்த வேலை பறிபோகும் நிலை, மனச்சோர்வு, பயம், பதற்றம், எரிச்சல், சலிப்பு, பணிச்சுமை அதிகரிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கியிருக்கிறது. இந்நிலையில் உளவியல் மருத்துவர்கள் சிலரின் பதிவுகள் வாழ்வில் நம்பிக்கையூட்டுகின்றன. உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த் அவர்கள் கூறுவது இதுதான். “கொரோனா கிருமித் தொற்றுப் பிரச்சனைக்குத் தீர்வு நம் கையில் இல்லை என்பதையே நாம் முதலில் புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். இருந்தபோதிலும், இந்த நேரத்தில் நாம் நம்பிக்கையை இழக்காமல் உடன்பாட்டுச் சிந்தனைகளோடு, நேர்மறை எண்ணங்களோடு இருப்பது, நம் உடல் மற்றும், மன நலனுக்கு மிகவும் அவசியம். வாழ்வே நம்பிக்கையில்தானே செல்கிறது. எனவே நல்லது நடக்கும் என்ற நல்ல சிந்தனையில் வளருவோம்.”  சித்ரா அரவிந்த் அவர்கள், இவ்வாறு வாழ, சில வழிமுறைகளையும் சொல்லியிருக்க. உளவியலாளரான, கப்புச்சின் துறவு சபை அருள்பணியாளர் L.K.சுரேஷ் ராஜ் அவர்கள், வாழ்வெனும் போராட்டத்தில், அதிலும், இப்போது, உலகின் பெரும் பகுதி நாடுகள், ஒரு கிருமியை ஒழிப்பதற்கு மேற்கொள்ளும் போராட்டத்தில் எப்படி வாழ்வது என்பதற்கு நம்பிக்கையூட்டும் தகவல் ஒன்றை, யூடியூப்பில் அருமையாகப் பதிவுசெய்திருக்கிறார்.
ஒருமுறை ஓர் அப்பாவும், அவரது மகனும் பட்டம் விட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். அந்தப் பட்டத்தின் நூல் அப்பாவின் கையில் இருந்தது. பட்டம் இன்னும் உயர உயரப் பறக்க வேண்டும் என்பதற்காக, அப்பா, அந்த நூலை இடையிடையே இழுத்தார். அவர் இழுக்க இழுக்க, அந்தப் பட்டம் உயர உயரப் பறந்தது. ஆனால் அப்பாவின் செயல் மகனுக்கு எரிச்சலூட்டியது. அவன் அப்பாவிடம், “அப்பா, எனக்கு இந்தப் பட்டத்தை மேலே மேலே பறக்க விடணும் என்ற ஆசை, ஆனா, நீங்க இதைப் பறக்கவிடாம, நூலைக் கையில பிடிச்சிருக்கீங்களே” என்று எரிச்சலோடு சொன்னான். உடனே அப்பா அந்த நூலை மகன் கண்முன்னாலேயே இரண்டாக அறுத்து விட்டார். அவ்வளவு நேரம் உயர உயரப் பறந்துகொண்டிருந்த அந்தப் பட்டம், மகனின் கண்முன்னாலேயே கீழே விழுந்தது. அதைப் பார்த்த மகன் அதிகமாக வருந்தினான். அப்போது அப்பா மகனிடம், “தம்பி, இவ்வளவு நேரம் இந்தப் பட்டத்தை உயரப் பறக்கவிடாமல் தடை செய்தது இந்த நூல் என்றுதானே நீ நினைத்தாய், அது உண்மை அல்ல, இந்த நூல் இருந்த காரணத்தினால்தான் பட்டம் உயர உயரப் பறந்தது” என்று விளக்கினார்.
ஆம். நம் வாழ்வும் இந்தப் பட்டம் போன்றது. அதைத் தாங்கிப் பறக்க வைத்துக்கொண்டிருக்கும் நூல், நம் வாழ்வின் பிரச்சனைகளும் கவலைகளும், போராட்டங்களும்தான். எப்போது நமக்குப் பிரச்சனைகளும் போராட்டங்களும் இல்லாமல் போகிறதோ, அப்போது நம் வாழ்வு எனும் பட்டம் உயரப் பறக்க முடியாது. இதைத்தான் சார்லஸ் டார்வின் என்பவர் தன் பரிணாமக் கொள்கையில் சொல்கிறார் – இந்த உலகத்திலுள்ள எல்லா உயிரினங்களும் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள போராடிக்கொண்டே இருக்க வேண்டும். ஒருவேளை அந்த உயிரினம் போராடாமல் இருந்தாலோ, அந்தப் போராட்டத்திற்கான சூழ்நிலை இல்லாமல் போனாலோ, அந்த உயிர் தானாக அழிந்துவிடும் என்று சொல்கிறார். இது அறிவியலில் மட்டுமல்ல, உளவியல் உண்மையும்கூட. நாம் உடல்நலத்துடன் மனநிம்மதியுடன் வாழ, பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்றால், போராட்டம் என்ற நூல் நமக்குத் தேவைப்படுகின்றது. இப்போதுள்ள கொரோனா கொள்ளை நோய் சூழலையும்கூட, ஒரு களமாக நினைக்க வேண்டுமேயொழிய நம்மை அழிக்கப்போகின்ற ஒரு பெரிய துன்பமாக நினைக்கக் கூடாது. இந்தக் களத்தில் போராட்டம் என்பது நிச்சயம் தேவையானது, அதற்கான வழிவகையையும், யுக்தியையும், முறையையும் நாம் கண்டறிய வேண்டுமே தவிர, இந்தப் போராட்டத்தால் நாம் அழிந்துபோய் விடுவோம் என்று எதிர்மறையாக நினைக்கக் கூடாது. நம்மால் எந்த போராட்டத்தையும் வெற்றிகொள்ள முடியும் என்பதை மனத்தளவில் நினைக்க வேண்டும். அது நம் ஒவ்வொருவராலும் இயலும். ஏனெனில் நாம் பிறக்கும்போதுகூட முப்பதுகோடி உயிரினங்களோடு சண்டைபோட்டுத்தான் இந்த உடலாகவும், உயிராகவும் மாறியிருக்கிறோம். அப்படிப்பட்ட போராட்டத்தை எதிர்கொண்ட நமக்கு, இப்போதைய கொள்ளை நோய்க்கெதிரான போராட்டம் அவ்வளவு பெரிதானதல்ல.  கவியரசு வைரமுத்து அவர்கள்கூட, சுடும்வரை நெருப்பு, சுற்றும்வரை பூமி, போராடும் வரை மனிதன் என்று சொல்லியிருக்கிறார். எனவே இந்தப் போராட்டத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நினைத்துப் போராடுவோம், வெற்றி என்பது நமக்கு உறுதி. வாழ்வு எனும் பட்டத்தை எப்போதும் பறக்க வைப்போம். இவ்வாறு கப்புச்சின் துறவு சபை அருள்பணியாளர் L.K.சுரேஷ் ராஜ் அவர்கள், பதிவு செய்திருக்கிறார்.
வாழ்வென்னும் படகு, நம்பிக்கை எனும் கடலில்தானே பயணிக்கிறது. இந்த நெருக்கடி காலத்திலும் தங்களைப் பற்றி, தங்களின் வருங்காலத்தைப் பற்றி கவலைப்படாமல், கருணையுள்ள இதயங்கள் பல ஆற்றி வரும் அரும்பணிகள் பற்றி ஊடகங்கள் பாராட்டி வருகின்றன. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த, தாஜம்முல் பாஷா, முஷம்மில் பாஷா ஆகிய இரு சகோதரர்கள் அந்நகரில் உள்ள, தங்களுக்குச் சொந்தமான 25 இலட்சம் ரூபாய் மதிப்புகொண்ட நிலத்தை நண்பருக்கு விற்று, ஏழைகளுக்கு இப்போது உணவளித்து வருகின்றனர். பாஷா சகோதரர்கள் இவ்வாறு சொல்கின்றனர். ``நாங்கள் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து கோலாரில் பாட்டி வீட்டிற்கு வந்தோம். நாங்கள் உணவின்றி துன்புற்றபோது சீக்கியர், இஸ்லாம், இந்து போன்ற அனைத்து மதத்தவரும் எங்களுக்கு உணவளித்தனர். சாதி, மதப் பாகுபாடின்றி மனிதநேயத்தோடு எங்களுக்கு உதவியதால், அதே பண்பால் நாங்கள் இதனைச் செய்து கொண்டிருக்கிறோம், எல்லா குடும்பங்களுக்கும் மூன்று வேளையும் உணவு கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்" என்று அவர்கள் கூறியுள்ளனர். பாஷா சகோதரர்கள், பன்னிரண்டாயிரத்துக்கும் அதிகமான நபர்களைக்கொண்ட 2,800-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்களை வழங்கியிருக்கின்றனர். ஏறக்குறைய இரண்டாயிரம் மக்களுக்கு, தினசரி உணவு அளித்து வருகின்றனர்.
உடுப்பியில், ஒரு தகரக் குடிசையில் வாழ்ந்துகொண்டு, மீன் விற்று வாழ்க்கை நடத்தி வரும் சாரதம்மா என்ற பெண்மணி, தனது வீட்டைச் சீரமைப்பதற்காகச் சேமித்து வைத்திருந்த முப்பதாயிரம் ரூபாயில், எழுநூறு கிலோ அரிசி வாங்கி, ஏழை மக்கள் 150 பேருக்கு அவற்றைப் பகிர்ந்தளித்துள்ளார். இப்படிச் செய்வதற்கு எப்படியம்மா மனது வந்தது என்று ஒருவர் கேட்டபோது, “மனதுதான் சார் கடவுள்” என்று, உயர்ந்த உள்ளம் சாரதம்மா அவர்கள், பளிச்சென பதில் சொல்லியிருக்கிறார்.
அகமதாபாத் நகரைச் சேர்ந்த ஸ்மிரிதி தாக்கர் என்பவர், இந்தியாவின் முதல் கோவிட்-19 பிளாஸ்மா நன்கொடையாளர் என்ற புகழைப் பெற்றுள்ளார். ஸ்மிரிதி அவர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். அதன் பின்னர், தனது வீட்டில் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டார். இதையடுத்து மருத்துவர்கள் அவரைத் தொடர்புகொண்டு பிளாஸ்மா சிகிச்சைமுறை குறித்து கூறியுள்ளனர். பிளாஸ்மா சிகிச்சை முறை, கொரோனா கிருமித் தொற்று நோயாளிகளைக் குணப்படுத்த ஓரளவு கைகொடுக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஸ்மிரிதி அவர்கள் பிளாஸ்மா தானம் வழங்கியுள்ளார். பிளாஸ்மா என்பது, இரத்த அணுக்களை ஏந்திச் செல்லும் திரவம். கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்த நோயாளியின் இரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு உடலில் செலுத்தும் முறைதான் பிளாஸ்மா சிகிச்சைமுறை. இம்முறையில், நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் உடலில் உள்ள எதிர்ப்பு புரதத்தைப் பயன்படுத்தி, சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் எதிர்ப்புசக்தி அதிகரித்து, கொரோனாவுக்கு எதிராகப் போராட, அவர்களது உடல் தயாராகிறது என்று சொல்லப்படுகிறது.
பதட்ட உணர்வு ஆபத்தானது என்று உணர்ந்து, அச்சத்தைத் தவிர்த்து, நேர்மறைச் சிந்தனைகளைப் பரப்புவோம். சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து, மற்றவரின் பணிச்சுமையைக் குறைப்போம். இல்லாதவரை நினைத்து சிக்கன வாழ்வை மேற்கொள்வோம். வாழ்வு எனும் பட்டத்தில், எப்போது போராட்டம் எனும் நூல் அறுந்துபோகின்றதோ, அப்போது நம் வாழ்வு எனும் பட்டம் உயரப் பறக்க முடியாது என்பதை உணருவோம். நம்பிக்கையில் நகர்வதே வாழ்வு. நம்பிக்கையுடன் வாழ்ந்து, மற்றவரையும் வாழ வைக்கும் உயர்ந்த உள்ளங்களை வாழ்த்துவோம். வருகிற வெள்ளியன்று உழைப்பாளர் நாள் சிறப்பிக்கப்படுகின்றது. உழைக்கும் மக்கள் எல்லாருக்கும், சிறப்பாக, இந்த கோவிட்-19 காலத்தில், தங்கள் உயிரையும், குடும்பத்தையும், உறவுகளையும் பற்றிச் சிந்திக்காது பணியாற்றும் அனைத்து நலப்பணியாளர்கள், மருத்துவமனை சார்ந்த மற்ற பணியாளர்கள், காவல்துறையினர், தொற்றுக்கான ஆபத்து, மற்றும், வேதிய நச்சுப்பொருள்கள் உள்ள பல்வேறு பகுதிகளிலும் பணியைத் தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போன்ற அனைவரும் தற்போது, உழைக்கும் கடவுள்களாக, மனித தெய்வங்களாகப் போற்றப்படுகின்றனர். இவர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைத்து வாழ்த்துவோம். அவர்களின் குடும்பங்களுக்காகச் செபிப்போம்.

பூமியில் விழும் கீறல்கள், படைத்தவர் மீதும்..

பூமியில் விழும் கீறல்கள், படைத்தவர் மீதும்.. 2020ம் ஆண்டு பூமி நாள்

நாம் காயப்படுத்தியிருக்கும் பூமியும், சுற்றுச்சூழலும், முழு அடைப்பு காலத்தில் குணமாகியிருப்பதை உணர்கிறோம். இந்த முழு அடைப்பு நீங்கியதும், மீண்டும், நாம், பூமியையும், சுற்றுச்சூழலையும், காயப்படுத்தப்போகிறோமா?
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்
இந்து மதப் பாரம்பரியத்தில் சொல்லப்படும் ஓர் அழகிய கதை இது:
சிறுவன் கணேசன், ஒரு நாள், தெருவில் சென்ற ஒரு பூனைக்குட்டியைக் கண்டான். அதனுடன் விளையாடுவதாக எண்ணிக்கொண்டு, அப்பூனைக்குட்டியின் காதுகளையும், வாலையும் இழுத்தான். அப்பூனையின் முகத்தில் கீறி, அதன் தலைமுடியை இழுத்து நேராக்க முயன்றான். அருகில் கிடந்த ஒரு பிரம்பை எடுத்து, பூனைக்குட்டியின் முதுகைக் காயப்படுத்தினான். வலியில் அலறியபடி, பூனைக்குட்டி, ஓடி மறைந்தது.
சிறுவன் கணேசன் வீடு திரும்பியதும், தன் அன்னையைக் கண்டு அதிர்ச்சியடைந்தான். அவனது தாயின் முகத்தில் கீறல்கள் இருந்தன. அவரது தலைமுடி அலங்கோலமாய் கிடந்தது. அவரது முதுகில் பிரம்படியால் உண்டான காயங்கள் இருந்தன. அவர் வேதனையில் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார்.
அதிர்ச்சியடைந்த சிறுவன் கணேசன், தாயிடம் சென்று, "அம்மா, உங்களை யார் இந்நிலைக்கு உள்ளாக்கியது?" என்று கேட்க, அம்மா, வலியைப் பொறுத்துக்கொண்டு, "நீதான் மகனே" என்று கூறினார்.
"என்ன சொல்கிறீர்கள்? நான் ஒருபோதும் அப்படி செய்யமாட்டேன்" என்று, அதிர்ச்சியிலும், கோபத்திலும், கத்தினான் கணேசன்.
"சிறிது நேரத்திற்கு முன், ஒரு பூனைக்குட்டியிடம் நீ எவ்விதம்  நடந்துகொண்டாய் என்பது நினைவிருக்கிறதா?" என்று தாய் கேட்டார்.
தான் அடித்து விரட்டிய பூனைக்குட்டியின் சொந்தக்காரர்தான் அம்மாவை அடித்துவிட்டார் என்று எண்ணிய கணேசன், "எங்கே அந்த ஆள்? சொல்லுங்கள்" என்று மீண்டும் கத்தினான்.
அம்மா அவனிடம் பொறுமையாக, "கணேசா, நான் உனக்கு மட்டும் தாயல்ல. இந்த பூமியின் அனைத்து உயிர்களுக்கும் நான் தாய். மிகச் சிறிய உயிரினத்திற்கு நீ செய்வதையெல்லாம் எனக்கேச் செய்கிறாய்" என்று கூற, கணேசன் தன் தவறை உணர்ந்து, கண்ணீர் சிந்தினான்.
பூமியின் மீது விழும் கீறல்கள், பூமியைப் படைத்த ஆண்டவன் மீது விழும் காயங்கள். ஏப்ரல் 22ம் தேதி, பூமி நாளின் 50ம் ஆண்டு நிறைவைச் சிறப்பித்தோம். அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், "நம் பொதுவான இல்லமான பூமிக்கோளம், நாம் தாறுமாறாக சீரழிப்பதற்கென தரப்பட்டுள்ள விற்பனைப்பொருள் கிடங்கு அல்ல. இந்த பூமியையும், அங்கு வாழும் நலிவுற்றோரையும் பேணிக்காப்போமாக" என்ற சொற்கள், இடம்பெற்றன.
கொரோனா தொற்றுக்கிருமிக்கு அஞ்சி. நம்மில் பலர், இல்லங்களில் சிறைப்பட்டிருக்கும் நேரத்தில், நாம் இதுவரை காயப்படுத்தியிருக்கும் பூமியும், சுற்றுச்சூழலும், ஓரளவு குணமாகியிருப்பதை உணர்கிறோம். இந்த முழு அடைப்பு நீங்கியதும், மீண்டும், நாம், பூமியையும், சுற்றுச்சூழலையும், இதே அளவு காயப்படுத்தப்போகிறோமா என்பது, நமக்கு முன்னிருக்கும் முக்கியக் கேள்வி.

மற்றவர்களை தீர்ப்பிட நாம் யார்?

மற்றவர்களை தீர்ப்பிட நாம் யார்? இந்திய மதவழிபாடு ஒன்றில்

ஒருவரை நல்லவர் என்றோ, தீயவர் என்றோ கூற உங்களிடமோ, என்னிடமோ என்ன அளவுகோல் உள்ளது?
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்
புகழ்பெற்ற ஜென் ஞானி ஒருவரைத் திரளாக மக்கள் வந்து தரிசித்து அவர் கருத்துக்களைக் கேட்பது வழக்கம். அவர் இருந்த ஊரில் ஓர் இசைக் கலைஞர் இருந்தார். அவர் மிகத் திறமைசாலி. அதே சமயம் அவரிடம் எல்லாவித கெட்ட பழக்கங்களும் இருந்தன. ஞானியிடம் வந்த ஒருவர் அந்தக் கலைஞரைப் பற்றி மிகக் கேவலமாகப் பேசினார். உடனே ஞானி, ''அவன் சிறப்பாக இசை வாசிப்பானே! நாளெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாமே!'' என்று புகழ்ந்து பேச ஆரம்பித்தார்.
உடனே அங்கிருந்த இன்னொருவர், ''ஆமாம், அவன் இசைக்க ஆரம்பித்தால் அந்தக் கடவுளே வந்த மாதிரி இருக்கும். இசையே அவனுக்கு அடிமையாக இருக்குமே,'' என்று ஞானியின் கருத்தை ஒத்துப் பேசினார். அப்போது ஞானி, ''அப்படியா, அவன் ஒரு ஏமாற்றுக்காரன் ஆயிற்றே! அவனை யாரும் நம்ப முடியாதே,'' என்றார். குறை சொன்னவர், புகழ்ந்தவர் இருவருக்கும் குழப்பம். ஞானி இப்படி ஏடாகூடமாகப் பேசுகிறாரே, அவனைப் பற்றி, அவர் உண்மையில் என்னதான் நினைக்கிறார் என்று அறிந்துகொள்ள விரும்பி, அவரையே கேட்டனர்.
ஞானி சொன்னார், ''நான் அவனைப் புகழவும் இல்லை, இகழவும் இல்லை. எந்த மனிதனையும் எடை போட நாம் யார்? ஒருவனை நல்லவன் என்றோ, தீயவன் என்றோ கூற உங்களிடமோ, என்னிடமோ என்ன அளவுகோல் உள்ளது? எதையும் ஒப்புக் கொள்வதோ, மறுப்பதோ என் வேலை அல்ல. அவன் நல்லவனும் இல்லை, கெட்டவனும் இல்லை. அவன் அவனாகவே இருக்கிறான். அவன் அவனே! அவன் செயலை அவன் செய்கிறான். உங்கள் செயல் எதுவோ அதை நீங்கள் செய்யுங்கள்.
இதுதான் ஞானியின் அறிவுரையாக இருந்தது.

நகைச்சுவை உணர்வுடைய நெப்போலியன்

நகைச்சுவை உணர்வுடைய நெப்போலியன் இரண்டாம் உலகப்போரின்போது ஐரோப்பிய படைகள்

எதிரி நாட்டுப் படைகள் எப்பக்கமும் சுற்றி வளைத்து விட்டார்களா, அதனால் என்ன? எப்பக்கமும் சுடலாம் என மகிழுங்கள், என்று சொன்னவர் மாவீரன் நெப்போலியன்.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இரஷ்யாவில் தோல்வியுற்ற நெப்போலியன், அங்கிருந்து திரும்பும் வழியில், இரஷ்ய படைகளின் கண்ணில்பட்டு, தப்பமுயன்று, ஒரு தையல்காரரிடம் சரண் புகுந்தார். "என்னை காட்டிகொடுக்காவிட்டால் மூன்று வரங்கள் தருகிறேன்!" என்று சொல்லிவிட்டு ஒரு பெரிய துணிமூட்டைக்குள் ஒளிந்துகொண்டார் நெப்போலியன். இரஷ்ய படைகள் வந்தன. துணிமூட்டைக்குள் தங்கள் கத்திகளை சொருகிப் பார்த்தார்கள் வீரர்கள். ஆனால் ஒன்றும் ஆகாமல் நெப்போலியன் தப்பிவிட்டார். அதற்குபின் பிரெஞ்சு படைகள் வந்து அவரைக் காப்பாற்றின. தையல்காரரிடம், வரங்களை கேட்கச் சொன்னார், நெப்போலியன்.
"முதலில் கடையை சீரமைக்க வேண்டும்", என்று அவர் கேட்க, "முடிந்தது" என்றார் நெப்போலியன். "அடுத்து" என கம்பீரமாக கேட்க, "எதிர்க்கடை தையல்காரனை நாடு கடத்தி விடுங்கள், ஒரே தொழில் போட்டி" என்று அவர் சொல்லவும், சிரித்துக்கொண்டே, "சரி, அடுத்து?" எனக் கேட்க, "அந்த துணிமூட்டைக்குள் இருக்கும்பொழுது கத்தியால் குத்தினார்களே, எப்படி உணர்ந்தீர்கள் என்று தெரிஞ்சாகணும்!" என தையற்காரர் கேட்க, பதில் சொல்லாத நெப்போலியன், "கிளம்புங்கள்!" என படைகளிடம் சொல்லிவிட்டு, வெளியேறும்போது, சட்டென்று திரும்பி, படை வீர்ர் ஒருவரைப் பார்த்து, தையல்காரரின் தலையில் துப்பாக்கியை வைக்கச்சொல்லி, ஒன்று, இரண்டு, மூன்று என்றதும் சுட்டுவிடு என்றார். துப்பாக்கி, தையல்காரரின் தலையை குறிபார்த்தது. "ஒன்...டூ...த்ரீ!" என்றதும், அதீத மௌனம். குண்டு வெடிக்கவில்லை. வியர்த்துப்போன தையல்காரரைப் பார்த்து, "இப்படிதான் இருந்தது எனக்கு!" என்று சொல்லிவிட்டு கிளம்பினார் நெப்போலியன். அந்த அளவுக்கு நகைச்சுவை உணர்வும் அவரிடம் இருந்தது.
மற்றொரு சமயம், நெப்போலியனின் படைத்தளபதி வேகமாக ஓடி வந்தார். கண்களில் கலக்கம். "அரசே! எதிரி நாட்டுப் படைகள் எப்பக்கமும் சுற்றி வளைத்து விட்டார்கள். அவ்வளவு தான்!" என்றபோது நெப்போலியன், "அதனால் என்ன? எப்பக்கமும் சுடலாம் என மகிழுங்கள்" என்றார்.
எத்துன்ப வேளையிலும், மனம் தளராமல் செயல்பட்டவர், மாவீரன் நெப்போலியன்.

இழந்தவற்றை எண்ணி நொந்துபோகாதே

இழந்தவற்றை எண்ணி நொந்துபோகாதே பறவை

யார் எதைச் சொன்னாலும், அதை உன் பகுத்தறிவுகொண்டு சிந்தித்துப் பார், அதை அப்படியே நம்பிவிடாதே
மேரி தெரேசா: வத்திக்கான்
வேட்டையாடச் சென்ற ஒருவரின் கையில், அன்று பறவை ஒன்று சிக்கியது. அந்தப் பறவை, அவரிடம், உனக்கு நான் மூன்று அறிவுரைகள் தருகிறேன், என்னை விட்டுவிடு என்று கெஞ்சியது. சரி அந்த அறிவுரைகளைச் சொல் என்று கேட்டார், அவர். அதற்கு அந்தப் பறவை, உன் கையிலிருந்து என்னை விட்டுவிட்டதற்குப் பிறகு முதல் அறிவுரை சொல்கிறேன் என்றது. நான் மரத்தில் போய் உட்கார்ந்த பிறகு, இரண்டாவது அறிவுரையையும், நான் அதிலிருந்து பறந்ததற்குப் பிறகு மூன்றாவது அறிவுரையையும் சொல்கிறேன் என்று சொன்னது பறவை. வேடரும், அந்தப் பறவையை, தனது பிடியிலிருந்து விட்டார். அப்போது அந்தப் பறவை, முதலில் உன் கடந்தகாலத் தவறுகளையும், நீ இழந்தவைகளையும் எண்ணி சுமைகளாக்கி, உன் வாழ்வைப் பாழாக்கிக்கொள்ளாதே என்று சொன்னது. பின்னர், அருகிலிருந்த மரத்திற்குச் சென்று உட்கார்ந்தபின், யார் எதைச் சொன்னாலும், அதை உன் பகுத்தறிவுகொண்டு சிந்தித்துப் பார், அதை அப்படியே நம்பிவிடாதே. உன் அறிவுகொண்டு நீ சிந்தனை செய்தால்தான், அதை நீ சரியாகச் செய்ய முடியும் என்று தனது இரண்டாவது அறிவுரையைச் சொன்னது பறவை. இவ்வாறு சொன்ன அந்தப் பறவை, வேடரைப் பார்த்து, பைத்தியக்காரா, என் உடலுக்குள் இரண்டு அற்புதமான பெரிய வைரங்கள் இருக்கின்றன, என்னை நீ கொலை செய்திருந்தால் அவற்றை நீ அடைந்திருக்கலாம், உன் பிடியிலிருந்து என்னை விட்டுவிட்டாயே என்று சொன்னது. அதற்கு அந்த மனிதர், சரி இப்ப என்ன, விட்டுவிட்டேன், வேதனைதான், பெரிய இழப்புதான், பெரிய தவறுதான் என்று சிறிதுநேரம் புலம்பிவிட்டு, அந்த மூன்றாவது அறிவுரையைச் சொல் என்றார். அதற்கு அந்தப் பறவை, உன் கடந்தகாலத் தவறுகளையும், நீ இழந்தவற்றையும் எண்ணி நொந்துபோகாதே என்று, நான் உனக்கு முதலில் சொன்னது நினைவிருக்கிறதா, நீ அதைத்தான் இப்போது செய்கிறாய் என்று சொன்னது. அடுத்து, இரண்டாவது அறிவுரையாக, யார் எதைச் சொன்னாலும், அதை உன் பகுத்தறிவுகொண்டு சிந்தித்துப் பார், அதை அப்படியே நம்பிவிடாதே என்று சொன்னேன். இவ்வளவு சிறிய பறவையாகிய என் வயிற்றில் இவ்வளவு பெரிய இரண்டு வைரங்கள் இருக்கின்றன என்று, நான் சொன்னால் அதை நீ நம்பிய உனது அறிவற்றதனத்தை என்ன சொல்வது? எனவே உனக்கு எது சொன்னாலும் பயன்படாது என்பதே மூன்றாவது அறிவுரை என்று சொல்லவிட்டுப் பறந்தது, அந்த அறிவாளிப் பறவை.

உணவில் உப்பை காணமுடியாது, சுவையை மட்டுமே உணரலாம்

உணவில் உப்பை காணமுடியாது, சுவையை மட்டுமே உணரலாம் கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ்

மாணவன் என்பவன், கொக்கைப் போலவும், கோழியைப் போலவும், உப்பைப் போலவும் மட்டுமல்ல, கேள்விகளால் தெளிவுபெற விரும்புபவனாகவும் இருக்க வேண்டும்.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
சாக்ரடீஸிடம் ஒரு மாணவன் வந்து, ''ஐயா, மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?'' என்று கேட்டான். அதற்கு சாக்ரடீஸ், ''மாணவன் என்பவன், கொக்கைப்போல இருக்க வேண்டும். கோழியைப்போல இருக்க வேண்டும். உப்பைப்போல இருக்கவேண்டும். உன்னைப்போல இருக்கவேண்டும்'' என்றார்.
மாணவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ''கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்'' என்றான்.
''கொக்கு, ஒற்றைக் காலில் நீண்டநேரம் பொறுமையாக நிற்கும். மீன்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட்டுப் பிடித்துவிடும். அதுபோல, ஒரு மாணவன் சரியான வாய்ப்புக் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி, அரிய செயல்களைச் செய்யவேண்டும். கோழி என்ன செய்யும்? குப்பையைக் கிளறும். ஆனால், அந்தக் குப்பைகளை விட்டுவிட்டு தனக்குத் தேவையான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும். அதுபோல, மாணவர்கள் தாங்கள் சந்திக்கும் தீமைகளைத் தூரம் தள்ளி, நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். உப்பை எந்த உணவோடு கலக்கினாலும், அது இருக்கிறது என்று கூற முடியும். ஆனால், கலக்கிய உணவில் உப்பு கண்ணுக்குத் தெரியாது. அதன் சுவையை மட்டுமே உணர முடியும். அதுபோல, மாணவர்கள் எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் சிறப்பான தனித்தன்மையை வெளிப்படுத்தி, தனது மறைவுக்குப் பின்னும் அதை இவர்தான் செய்தார் என்று கூறும்படி விளங்க வேண்டும்'' என்றார்.
''எல்லாம் சரி, உன்னைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே... அதற்கு என்ன அர்த்தம்?'' என்று கேட்டான் மாணவன்.
''மாணவன் என்பவன் தனக்குள் எழக்கூடிய சந்தேகங்களை, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெறவேண்டும். அதற்காகத்தான் உன்னைப்போல இருக்கவேண்டும் எனச் சொன்னேன்'' என்று புன்னகைத்தார் சாக்ரடீஸ்.