Friday 21 October 2022

ROBERT JOHN KENNEDY: THE MARRIED DEACONS IN THE CATHOLIC CHURCH.

ROBERT JOHN KENNEDY: THE MARRIED DEACONS IN THE CATHOLIC CHURCH.:   THE MARRIED DEACONS IN THE CATHOLIC CHURCH. The diaconate is one of three orders that make up the sacrament of holy orders — bishop, pries...

THE MARRIED DEACONS IN THE CATHOLIC CHURCH.

 THE MARRIED DEACONS IN THE CATHOLIC CHURCH.



The diaconate is one of three orders that make up the sacrament of holy orders — bishop, priest and deacon.
There are two types of deacons in the Catholic Church:
1. Permanent deacons
2. Transitional deacons.
Only men can be deacons; it is an ordained position and only men can be ordained clerics in the Catholic Church.
The main focus here will be on permanent deacons.
1.WHO IS A PERMANENT DEACON?
Permanent deacons are ordained clerics in the Catholic Church but have no intentions of becoming a priest. They can be married or not
married.
2.MUST A PERMANENT DEACON BE MARRIED?
Permanent deacons may be married or single. However, if they are not married at the time they are ordained, they cannot marry after and are expected to live a life of celibacy.
If it is permanent diaconate of one who is married, he must have completed at least 35 years of age, and with the consent of his wife.
If it is permanent diaconate of one who is not married, he must have completed at least 25 years of age.
3. WHAT ARE THE WORKS OF PERMANENT DEACONS?
Both permanent and transitional deacons perform the same duties in the church. Deacons aid priests in their parish duties by visiting the sick, providing spiritual guidance in the community and acting as a servant of God.
In addition, deacons can witness marriages, perform baptisms, preside over funeral and burial services outside of Mass, distribute the Holy Communion and preach the homily (a sermon given after the Gospel of Mass).
4. HOW DOES A PERMANENT DEACON SUPPORT HIS FAMILY?
Married deacons who dedicate themselves full-time to the ecclesiastical ministry are given remuneration sufficient to provide for themselves and their families. Those, however, who receive a remuneration by reason of a secular profession which they exercise or have exercised, are to see to their own and to their families’ needs from that income.”
Permanent Deacons are permitted to hold secular jobs to provide for themselves and their families.
5. REQUIREMENTS TO BECOME A PERMANENT DEACON
1. The person must be at least 35 years and practicing, baptized members of the Roman Catholic Church.
2. The person must satisfy certain marriage requirements. If married, he must ensure the Church recognizes the marriage.
3. The person must meet education requirements, as well.
4. The person should be in good health and be able to dedicate time to the formation program, a five-year course of study for prospective deacons.
5. The person should discuss the decision with God, their families and their priest. They should pray for guidance to ensure the path is sanctioned and discuss the desire to join the diaconate with their families.
6. If married, a deacon must receive the consent of his wife to proceed. Speaking with a priest will help a deacon decide if the life of a cleric is right for him.
Once a deacon has met these requirements, he may submit an application to the diocese of choice.

Tuesday 18 October 2022

Vatican's Diwali message: May Christians and Hindus work together for peace

 

The Dicastery for Interreligious Dialogue sends well-wishes to people celebrating the feast of Deepavali, and invites Christians and Hindus to work together for peace in a divided world.

By Joseph Tulloch

The Vatican’s Dicastery for Interreligious Dialogue released a message on Monday ahead of the Hindu feast of Deepavali (or Diwali), which this year will be celebrated on October 24.

The letter extends “joyous greetings” to all Hindus, and urges Christians and Hindus alike to strive for “conviviality and co-responsibility.”

The feast

The feast of Deepavali, which in Sanskrit means “row of oil lamps”, celebrates the victory of truth over falsehood, light over darkness, and good over evil. It is one of the most important Hindu feast days, and is celebrated with lamps, fireworks, prayers and large family meals.

The Vatican’s message, signed by Cardinal Miguel Ángel Ayuso Guixot and Msgr. Indunil Janakaratne Kodithuwakku Kankanamalage, respectively Prefect and Secretary of the Dicastery for Interreligious Dialogue, sends “joyous greetings and best wishes” to all Hindus.

“May this festival of lights give you the grace and happiness to enkindle,” it reads, “besides yours, the lives of everyone in your families, communities and in the larger society.”

Rising tensions

The message goes on to note the troubling increase in “instances of tensions, conflicts and violence in different parts of the world on the basis of religious, cultural, ethnic, racial and linguistic identities and supremacies.”

These problems, the document adds, are often “fuelled by competitive, populist and expansionist politics … and blatant misuse of social media”, and are “a cause of concern to all of us, since they grossly affect the fraternal and peaceful co-existence in society.”

Conviviality

Given these problems, the Vatican’s message stresses, the way forward is “conviviality”, defined as “the ability to live in the midst of others with their individualities, diversities and differences in a spirit of respect, love and trust.”

Conviviality can be built “through personal encounters and dialogue, in mutual listening and learning”, and leads to “co-responsibility”, or the recognition of “the transcendental dignity of every human person and his or her legitimate rights.”

The document ends with an appeal to readers of all religions.

“May we, Christians and Hindus, joining hands with those of all other religious traditions and people of good will, promote … the spirit of conviviality and co-responsibility to transform this world into a secure home for everyone to live in with peace and joy!”

And it adds: “Wishing you all a Happy Deepavali!”

Holy See: Digital technology must serve the common good

 


The UN “Plenipotentiary Conference” dedicated to telecommunications in Bucharest, saw the contribution of the Holy See in the persons of Sr. Raffaella Petrini and Fr. Lucio Adrian Ruiz who highlighted the need, in a technological world, to always respect the human person and to spread the Gospel in the digital continent.

By Michele Raviart

The development of digital technology in communications must pursue the common good of citizens and truly listen to their needs, because, as Pope Francis reminds us, listening is “the first indispensable ingredient of dialogue and good communication”.

This is according to Sister Raffaella Petrini, Secretary General of the Governorate and head of the Vatican delegation - flanked by Father Lucio Adrian Ruiz, Secretary of the Dicastery for Communication.

They were attending the “Plenipotentiary Conference” (PP-22) organized by the International Telecommunication Union (ITU), which took place in Bucharest from 26 September to 14 October.

Coordinating telecommunications around the world

A specialised agency of the United Nations based in Geneva and heir to the historic International Telecommunication Union, the ITU aims to coordinate the international use of the radio wave spectrum and satellite orbits. It establishes international telecommunications standards and promotes fair and affordable access to the integrated technologies needed for information and communications exchange (ICT).

It counts 193 member countries and Vatican City State is one of them. There are also some 800 other members including public and private companies, academic institutions and international telecommunications organisations. The “Plenipotentiaries” is the ITU's highest decision-making body, where the organisation's general policies are defined and its ability to influence the development of ICT on a global level is determined. It’s an area that by its very nature is constantly being updated.

Sr. Petrini: promoting platforms of social cohesion and solidarity

The participation of the Vatican delegation in the PP-22, explains Sister Raffaella Petrini, “is an opportunity to share - in a broad international context in which governments, faced with many difficult challenges, are questioning and debating the future directions of global connectivity - those principles that the Holy See and Vatican City State seek to apply in the development and concrete use of digital technology”.

In particular, she adds, it is a matter of "promoting the growth of global communication platforms that are effective instruments of social cohesion and solidarity, as Pope Francis has repeatedly reiterated. We must aim to develop instruments of integration that are accessible to all segments of the population while respecting human rights, cultural sensitivities and traditions, with particular attention to women, young people, and people with disabilities.

Fr. Ruiz: bringing the Holy See's principles into technical spheres

"The Holy See's international representation in these decision-making bodies," Fr. Lucio Adrian Ruiz emphasises, "is an opportunity to bring to secular and technical spheres such as the International Telecommunications Conference, the challenges and risks that of innovation in an age of digital communication and global interconnection”.

He highlights the centrality of the human person, of relationships, of the need to include existential peripheries, and protect those who are most vulnerable, such as children, adolescents and the elderly.

“Sustainability, inclusiveness, development and new opportunities in the field of technology, guided by fundamental principles such as respect for human life, the dignity of work and care for our common home," says Fr. Ruiz, represent a challenge in which the Holy See can play a decisive role in the digital transformation of the third millennium.


கிறிஸ்தவர்களும் இந்துக்களும் நல்லிணக்கத்தை ஒன்றிணைந்து....

 

இம்மாதம் 24ம் தேதியன்று சிறப்பிக்கப்படும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு பல்சமய உரையாடல் திருப்பீட அவை உலகின் அனைத்து இந்தமத நண்பர்களுக்கும் நல்வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

மக்கள் அனைவரும் அமைதி மற்றும், மகிழ்வோடு, பாதுகாப்பாக வாழக்கூடிய ஓர் இடமாக இவ்வுலகை மாற்றுவதற்கு, கிறிஸ்தவர்களும் இந்துக்களும், மற்ற மத மரபினர், மற்றும், நன்மனம்கொண்ட மக்களோடு இணைந்து பணியாற்றுமாறு பல்சமய உரையாடல் திருப்பீட அவை, அக்டோபர் 17, இத்திங்களன்று கேட்டுக்கொண்டுள்ளது.

அக்டோபர் 24, வருகிற திங்களன்று சிறப்பிக்கப்படும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு  பல்சமய உரையாடல் திருப்பீட அவை உலகின் அனைத்து இந்தமத நண்பர்களுக்கும் வெளியிட்டுள்ள நல்வாழ்த்துச் செய்தியில், அனைவரும் பாதுகாப்பாக வாழக்கூடிய இடமாக இவ்வுலகை அமைப்பதற்கு, இந்துக்களும் கிறிஸ்தவர்களும் இணைந்து பணியாற்றவேண்டிய கூட்டுப்பொறுப்புணர்வு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தங்களின் மத நம்பிக்கைகள் மற்றும், உறுதிப்பாடுகளில் வேரூன்றியுள்ள அனைவரும், மனிதக் குடும்பம், மற்றும், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியின் நலனைப் பாதுகாக்கும் கடமையைக் கொண்டுள்ளனர் என்பதையும் அச்செய்தி நினைவுபடுத்தியுள்ளது.

நல்லிணக்க வாழ்வு, கூட்டுப்பொறுப்புணர்வு

மதம், கலாச்சாரம், இனம், மொழி, உயர்வுமனப்பான்மை போன்றவற்றின் அடிப்படையில் உலகின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் பதட்டநிலைகள், வன்முறை மற்றும் போர்கள், உடன்பிறந்த உணர்வு மற்றும், அமைதியான நல்லிணக்கத்தைப் பெரிய அளவில் பாதித்துள்ளன, இச்சூழலில்  மக்கள் மத்தியில் ஒன்றிணைந்த வாழ்வு மற்றும், கூட்டுப்பொறுப்புணர்வை ஊக்கப்படுத்தவேண்டியதன் தேவை ஏற்பட்டுள்ளது என்றும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

நல்லிணக்க வாழ்வு

நல்லிணக்கத்தோடு வாழ்வதென்பது, பன்முகத்தன்மைகொண்ட மக்கள் மத்தியில், நன்மதிப்பு, அன்பு மற்றும் நம்பிக்கை உணர்வில், நட்போடு வாழும் திறமையைக் கொண்டிருப்பதாகும் எனவும், இது, மனிதர் மத்தியில் மட்டுமன்றி, மக்களுக்கிடையேயும், இயற்கையோடும் நல்லிணக்க உறவோடு வாழும் ஒரு செயல் மற்றும் கலையாகும் எனவும் அத்திருப்பீட அவை தெரிவித்துள்ளது. 

இத்தகைய வாழ்வு, உரையாடல் மற்றும் சந்திப்புக் கலாச்சாரத்தின் வழியாக, பொறுமை மற்றும், மனஉறுதியோடு, ஒருவர் ஒருவருக்குச் செவிமடுத்தல் மற்றும் கற்றுக்கொள்வதன் அடிப்படையில் அமைக்கப்படவேண்டும், இவ்வாழ்வை ஊக்குவிப்பது, ஒருவர் ஒருவரையும், இயற்கையையும் பராமரிப்பதில் ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற கடமையுணர்வைச் சார்ந்துள்ளது என்று, அச்செய்தி எடுத்துரைக்கின்றது. 

குடும்பங்களில், பெற்றோர் மற்றும், மூத்தவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வால், அவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு, நல்லிணக்க வாழ்வு, கூட்டுப்பொறுப்புணர்வு ஆகிய  சிறந்த பண்புகளைக் கற்றுக்கொடுக்கவேண்டும், சமயத் தலைவர்கள், கல்வி நிறுவனங்கள், ஊடகத்துறையினர், அரசுகள், அரசு-சாரா அமைப்புகள் ஆகிய அனைத்தும் இப்பண்புகளைப் பேணி வளர்க்கும் கடமையைக் கொண்டிருக்கின்றனர் என்று பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தீபாவளிச் செய்தியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இத்தீபாவளிச் செய்தியில், பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Miguel Ángel l Ayuso Guixot    அவர்களும், அதன் செயலர் பேரருள்திரு Indunil Janakaratne Kodithuwakku Kankanamalage அவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்


நம்பமுடியாத கண்டுபிடிப்புகள் || Five Amazing Archaeological Discoveries ...

4000 year oldrock erosion (bruising)Bull Painting Tamil Nadu - Krishnagi...

Tuesday 4 October 2022

உலக விலங்குகள் நாள்- அக்டோபர் 4

 


உலக விலங்குகள் நாள்-அக்டோபர் 4

விலங்குகள் மனிதனின் உணவுத்தேவையை மட்டுமன்றி அடிப்படைத் தேவைகளான காற்று நீர் போன்றவை தடையின்றி கிடைக்கவும் வழிவகை செய்கின்றன.

மெரினா ராஜ் வத்திக்கான்

இறைவனால் பார்த்து பார்த்து படைக்கப்பட்டதாய், இயற்கையின் வரமாய் இருப்பன விலங்குகள். ஐந்தறிவு கொண்ட உயிரினமாய், பல்லுயிர்ப் பெருக்கத்திற்குக் காரணமாய், ஆறறிவு கொண்ட மனிதர்களுக்கும் மேலாய் விலங்குகள் செயல்படுகின்றன. வீட்டு விலங்குகளாக மனிதர்களின் தேவைகளுக்கும், காட்டு விலங்குகளாக இயற்கைப் பாதுகாப்பிற்கும் வழிவகைகள் செய்யும் இவ்விலங்குகள் சில நேரங்களில் மனித உறவுகளை மிஞ்சிய பாச உணர்வுடன் செயல்படுகின்றன. இவ்விலங்குகளைப் பாதுகாக்கவும் பரமாரிக்கவும் ஆண்டு தோறும் அக்டோபர் 4ஆம் நாள் உலக விலங்குகள் நாளானது கொண்டாடப்படுகின்றது. மனிதனின் வாழ்க்கை சூழலுக்கு மிக முக்கிய காரணமாக திகழும் விலங்குகளின் மதிப்பை உலக மக்களுக்கு உணர்த்தவும், விலங்குகளின் நலம் மற்றும் தரத்தை அதிகப்படுத்தவும் இந்நாள் கொண்டாடப்படுகின்றது.

புனித பிரான்சிஸ் அசிசியார்

இயற்கைப் பாதுகாவலரான புனித பிரான்சிஸ் அசிசியார் இறந்த நாளில் இந்த உலக விலங்குகள் நாள் கொண்டாடப்படுவது, இயற்கை மற்றும் விலங்குகள் மீது அவர் கொண்ட அன்பை இவ்வுலகிற்கு எடுத்துரைக்கும் விதமாக அமைகின்றது. இந்நாள் உருவாக மிக முக்கிய காரணமாக இருந்தவர் ஹென்ரிச் ஜெம்மர்மேன் என்னும் ஸ்பெயின் பத்திரிக்கையாளர் சமூக நல ஆர்வலர். இவர் விலங்குகள் மீது கொண்டிருந்த  அளவற்ற பாசமும் பற்றுமே இந்நாளைக் கொண்டாட காரணமாக அமைந்தது. விலங்குகளும் மனிதர்களைப் போலவே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு படைப்பு, அவைகளும் மாண்போடு நடத்தப்படவேண்டும் என விரும்பி இந்நாளைக் கொண்டாட தன்னாலான முயற்சிகள் அனைத்தையும் எடுத்தார். அக்டோபர் மாதம் நான்காம் நாள் புனித பிரான்சிஸ் அசிசியாரின் நினைவு நாளில் இந்நாளைக் கொண்டாடுவது மிக பொருத்தமாக இருக்கும் என்று எண்ணி பெர்லினில் உள்ள மிகப் புகழ்வாய்ந்த அரண்மனை விளையாட்டு மைதானத்தை அதற்காக  ஏற்பாடு செய்ய எண்ணினார். அம்மைதானம் அந்த நாளில் கிடைக்காத காரணத்தினால் 1925 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதன் முதலில் இந்நாள் கொண்டாடப்பட்டது. ஏறக்குறைய விலங்குகள் நல ஆர்வலர்கள் 500 பேர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சிலர் இந்நாள் 1931 ஆம் ஆண்டு தான் முதன் முதலில் கொண்டாடப்பட்டது என்று கருதுகின்றனர். உண்மையில் ஜெம்மர்மேன் முயற்சியால் தொடங்கப்பட்ட இந்நாள் ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, யூகோஸ்லோவாக்கியா, ஜெர்மனி போன்ற ஒரு சில நாடுகளில் மட்டுமே தொடக்கத்தில் கொண்டாடப்பட்டு வந்தது. ஜிம்மர் மேன் ஒவ்வொரு ஆண்டும் இந்நாளை மிகச்சிறப்பாக கொண்டாட கடுமையாக தளராது உழைத்தார். மிகச்சிறந்த பத்திரிக்கையாளராக, விலங்குகள் நலஆர்வலராக திகழ்ந்த இவர், விலங்குகள் நாள் குறித்த தன்னுடைய கருத்துக்களை பத்திரிக்கை வழியாக, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வழியாக உலகிற்கு எடுத்துரைத்தார். தனி நபராக இவர் மேற்கொண்ட முயற்சிகள் ஒட்டுமொத்த உலகமக்களாலும் எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி 1931 ஆம் ஆண்டு மே மாதம்  இத்தாலியின் பிளாரன்ஸ் நகரில் நடைபெற்ற உலகளாவிய காங்கிரஸ் மாநாட்டில் தனது கோரிக்கையை முன் வைத்தார். இவரது கருத்தை ஒருமனதாக அம்மாநாட்டில் கூடியிருந்தோர் ஏற்று ஒவ்வொரு ஆண்டும்  அக்டோபர் 4ஆம் தேதி உலக விலங்குகள் நாளாகக் கொண்டாட அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

உலகில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே நாம் வாழ்கின்ற சூழலியல் மண்டலம் இயங்குகின்றது என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். ஏனெனில் விலங்குகள் மனிதர்களின் அடிப்படை தேவைகள் கிடைக்க முக்கிய காரணமாக இருக்கின்றன. நதிகள் அருவிகள் வற்றாமல் இருக்க புலி, சிங்கம் போன்ற காட்டு விலங்குகள் உதவுவதாகக் கூறப்படுகின்றன. இயற்கையாக விளையும் ஒரு வகை புற்கள், அருவிகளில் இருந்து பாய்ந்து வரும் நீரை தேக்கி மனிதர்கள் பயன்படுத்தும் வகையில் உதவுகின்றன. இத்தகையப் புற்கள் மான், பசு போன்ற தாவர விலங்குகளால் உண்ணப்படாமல் தடுக்க அவைகளை உண்டு இவ்விலங்குகள் உணவுச்சங்கிலி அமைப்பில் செயல்படுகின்றன. இத்தகைய விலங்குகளும் இயற்கையும் ஒன்றோடொன்று இணைந்து செயல்பட்டால் தான் மனிதர்களாகிய நாம் சிறப்பாக வாழ முடியும் என்பதை மறந்து பல நேரங்களில் செயல்படுகின்றோம்.

மனிதர்களாகிய நாம் விலங்கினங்களுக்கு எந்தவிதமான தீங்கும் செய்யாமல் இருத்தலே அவைகளுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய உதவி. ஏனெனில் விலங்குகள் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ளவும், பெருக்கிக் கொள்ளவும் தகுதி படைத்தவைகள். இவைகள் பெரும்பாலும் காடுகளில் வாழ்வதால் இயற்கையின் வளத்திற்கும் மனிதர்களின் நலத்திற்கும் மிக முக்கிய காரணிகளாகத் திகழ்கின்றன. விலங்குகள் அடுத்த நாளுக்கென்று எதையும் சேர்த்து வைக்க விரும்புவதில்லை அன்றன்று கிடைப்பவற்றை உண்டு மன நிறைவுடன் வாழ்கின்றன. மனிதர்கள் தான் தனக்கு பின்வரும் தலைமுறையினருக்கு பொருள் சேர்க்க வேண்டும் என்ற பேராசையினால் காடுகளை அழிக்கின்றனர். இதனால் காடுகளை தங்களது உறைவிடமாகக் கொண்ட விலங்குகள், மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இயற்கை வளம், தாவர விலங்குகளின் பெருக்கம், இயற்கைவளப் பாதுகாப்பு போன்றவற்றிற்கு மிக முக்கிய காரணியாக திகழும் காட்டு விலங்குகளான யானை, புலி, சிங்கம் போன்றவைகள் மனிதர்களின் சுய நலத்தாலும் பேராசையாலும் வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. அரிய வகை விலங்கினங்கள், விலைமதிப்பற்ற காட்டுமரங்கள், தாவர வகைகள் போன்றவை மனித பயன்பாட்டிற்காக வெட்டப்படுவதும் கடத்தப்படுவதும் மிகுந்த வேதனை அளிக்கின்ற செயலாக இருக்கின்றது. இவ்வாறு மருந்து, தோல், ஆபரணம், அழகு, ஆசை என்று  பல தேவைகளுக்காக விலங்குகள் கடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக பல வனவிலங்கு தடுப்புச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. மனிதர்களின் பேராசையால் விலங்குகளின் எண்ணிக்கை பாதிக்கப்படுவதை தடுக்க அவற்றின் வளத்தை அதிகரிக்க உலகளவில் 1972 ஆம் ஆண்டு வன விலங்கு பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. இதன் வழியாக விலங்குகளை வேட்டையாடுவது குற்றம் என அறிவிக்கப்பட்டு தகுந்த தண்டனையும் வழங்கப்பட்டு வருகின்றது.

விலங்குகளைக் காக்கும் தமிழகம்

தமிழ்நாடு இயற்கை மீதும்   விலங்குகள் மீதும் அதிக அக்கறை காட்டுகின்ற ஒரு மாநிலம். விலங்குகளைப் பாதுகாக்க சரணாலயங்கள் அமைத்து, அவற்றை பாதுகாத்து அவற்றின் இனம் பலுகி பெருக வழிவகைகள் செய்கின்றன. விலங்குகள் மட்டுமல்லாமல் பறவைகளையும் பாதுகாக்கும் பொருட்டு பறவைகள் சரணாலயங்களும் வேடந்தாங்கலில்  அமைக்கப்பட்டு பாதுகாப்புடன் செயல்பட்டுவருகின்றது.வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், முண்டந்துறை புலிகள் காப்பகம், போன்றவைகள் வன விலங்கு பாதுகாப்பு சட்டங்கள் உருவாக்கப்படும் முன்னரே தமிழ் நாட்டில் உருவாக்கப்பட்டு வனவிலங்கு பாதுகாப்பில் நம் நாட்டிற்கு இருக்கும் அக்கறையை வெளிப்படுத்தி விலங்குகள் பாதுகாப்பிற்கு முன்னோடியாகவும் திகழ்கின்றது. குறிப்பாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்கள் விலங்குகளைப் பாதுகாத்து பராமரிப்பதற்கென்றே சிறப்புற்றுத் திகழ்கின்றன. விவசாய நிலங்களை உழுவதற்கும், தொழில்முறை வேலைகளுக்கும் பயன்படும் விலங்குகளை தங்கள் குடும்பத்தில் ஒருவரைப் போல பார்க்கும் குணம் மக்களிடம் உள்ளது பாராட்டத்தக்கது. உலகிலேயே வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை முதன்முதலில் ஏற்படுத்திய நாடு இந்தியா. விலங்குகள் வாழ ஒவ் வொரு நாட்டிலும் உள்ள மொத்த காட்டுப் பகுதியில் 25 விழுக்காடு ஒதுக்கப் பட வேண்டும் என உலக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.  நமது மாநிலத்தில் மொத்த வனப்பரப்பில் 29.32விழுக்காடு  பரப்பளவில் வன உயிரின காப்பகங்கள் உள்ளன என்பது நம் சிறப்பு

மனித இனத்தைப் படைப்பதற்கு முன்பே இறைவன் விலங்குகளை படைத்தார் என்று திருவிவிலியமும், குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று அறிவியலும் கூறுகின்றது. ஆக மனித இனம் தோன்றுவதற்கு முன்பே இவ்வுலகில் தோன்றி இயற்கை வளத்தைக் காத்த விலங்கினங்களை நாமும் காப்பது நமது கடமை. இயற்கை சூழலியலுக்கு மட்டுமன்றி மனிதர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் விலங்குகள் உணவுச்சங்கிலி அமைப்பின் வழியாக இயற்கைக்கு உதவி வருகின்றன. உணவு தேவை மட்டுமன்றி மருத்துவ தேவைகளுக்காகவும், அழகுப் பொருட்களுக்காகவும் பயன்படும் விலங்குகள், மனிதர்களை இயற்கையோடு  இணைந்த வாழ்க்கை வாழ ஈர்க்கின்றன. இதனால் தான் மனதிற்கு மகிழ்வு தரும் சுற்றுலாக்களை மனிதர்கள் மேற்கொள்கின்றார்கள்.

இயற்கை மனிதனுக்கு மன அமைதியைத் தருகின்ற அற்புத மருந்து. அதனால் தான் இயற்கைசூழல் நிறைந்த இடங்களைத் தேடி இன்ப சுற்றுலா ஆன்மீக சுற்றுலா, விலங்குகள் மற்றும் பறவைகள் சரணாலயங்கள், அமைதியான தீவுகள், ஆழமான உயரமான பகுதிகள் என   மனிதர்களாகிய நாம் மேற்கொள்ளும் சுற்றுலாக்கள் இருக்கின்றன. இவற்றை நாம் செய்ய காரணமாக இருப்பவை இயற்கையைப் பேணிக்காக்கும் விலங்குகள் தான். மனிதன் விரைவாக பணம் சம்பாதிக்க விலங்குகளை வேட்டையாடி வருகின்றான் பல்லுயிர்களின் பெருக்கத்தால் மனிதனது அடிப்படைத் தேவைகளான காற்று நீர்  உணவு போன்றவவைகள் கிடைக்கின்றன. பல்லுயிர்ப்பெருக்கத்திற்குக் காரணமான விலங்குகள் வேட்டையாடப்பட்டு அதன் எண்ணிக்கை குறைவுபடும்போது, இயற்கைப் பேரிடர்கள் உருவாகின்றன.

விழிப்புணர்வு

அனைவருக்கும் பொதுவான இல்லமாகிய இப்பூமிப்பந்தில் நாமும் நலமாக வாழ விலங்கினங்களும் வாழ நாம் முயற்சி எடுக்கவேண்டும் விலங்கினங்கள் பாதிக்கப்படுவதற்கு நாம் ஒன்றிணைந்து குரல் கொடுக்கும் போது அவைகள் தடுக்கப்பட வாய்ப்பிருக்கின்றது. அண்மைக் காலங்களில் நிகழும் காடழித்தல் வனவிலங்குகள் அழித்தல் போன்றவைகள் நமது எதிர்காலம் அழிவுறுவதன் தொடக்கம் என்பதை உணர்ந்து செயல்படுவோம். இயற்கையை நாம் பாதுகாத்தால் அவை நம்மை பாதுகாக்கும். காடுகளை வாழ்வாதாரமாக கொண்ட எண்ணற்ற உயிரினங்கள் இருக்கின்றன. அவற்றைப் பாதுகாத்து பரமாரிப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

காலநிலை மாற்றம், பிளாஸ்டிக் பயன்பாடு, காடுகள் அழிப்பு, விலங்கினங்கள் வேட்டையாடப்படுதல், காடுகளை சுற்றுலாத் தளங்களாக்குதல், சாலைகள் விரிவுபடுத்தப்பட காட்டு மரங்கள் அழிக்கப்படுதல்  போன்றவற்றை தடுத்து நிறுத்த நம்மாலான முயற்சிகளை எடுப்போம். வளரும் தலைமுறையினருக்கு விலங்கினங்கள் பற்றிய நல்ல செய்திகளைப் பகிர்வோம். வன விலங்குகள் பாதுகாப்பு குறித்து  நடைபெறும் நிகழ்வுகளில் இளையோர்களை  அதிகமாக  பங்கேற்க வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.  வன விலங்குகளும் காடும் ஒன்றோடொன்று இணைந்தது.  இதில் ஒன்று அழிக்கப்பட்டால் மற்றொன்று தானாக அழிந்துவிடும். இவை இரண்டும் முற்றிலும் அழிந்துவிட்டால் மனித இனமும் கொஞ்ச காலத்தில் அழிந்துவிடும் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

மனிதனின்  சுயநலத்தால்  அரிய  வகை   விலங்கினங்களும்  மரங்களும்   வெட்டி  கடத்தப்பட்டு வருகின்றன.  விலங்குகளின்   இருப்பிடமாகவும்,  மறைவிடமாகவும்   உள்ள மரங்கள் வெட்டப்பட்டு மனித தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. மரத்தை வெட்டுவதால்   மழைவளம் குறைந்து சூழலியல் மாறுதல்கள் ஏற்படவும், இயற்கைப் பேரிடர்கள் நிகழவும் காரணமாகின்றன. இறைவனால் படைக்கப்பட்ட இவ்வுலகம் தனித்தன்மை கொண்ட ஒவ்வொரு உயிர்களாலும் அழகாகத் திகழ்கின்றது. அவர் அழகாக படைத்தவாறே அதை அப்படியே பரமாரிப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. முற்காலத்தில் விலங்குகளிடம் இருந்து மனிதர்களைக் காப்பாற்றவேண்டியிருந்தது. இக்காலகட்டத்திலோ மனிதர்களிடம் இருந்து விலங்குகளைக் காப்பாற்ற வேண்டிய சூழலாக மாறி இருக்கின்றது. இவ்வுலகம் மனிதர்களுக்காக மட்டும் படைக்கப்பட்டதல்ல என்ற எண்ணம் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்ந்தோமானால் இயற்கை சமநிலையோடு எல்லாரும் மகிழ்வாக வாழலாம். அனைவருக்கும் இனிய உலக விலங்குகள் நாள் நல்வாழ்த்துக்கள். 

இன்றும் வாழும் இராவணன் வாரிசுகள் | Gondi tribes and Indus Valley Civiliz...

பாகிஸ்தானில் தமிழ் ஊர் பெயர்கள் | Tamil place names in Pakistan | Sangat...

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் வெண்கல பொருட்கள் கண்டெடுப்பு | Adichanallur | E...

தொல்லியல் துறை அகழாய்வில் தங்க அணிகலன் கண்டெடுப்பு | Orakadam Excavation

தமிழ்நாட்டின் கஜுராஹோவா கீழ்ராவந்தவாடி சிற்பகுளம் ? | கீழ்ராவந்தவாடி | ...

25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் அகழ்வாராய்ச்சி பணிகள் | NewsJ

Keezhadi மிஞ்சும் ஒரே கண்டூப்புடிப்பு ?| 12,000-year-old artefacts near ...

Saturday 24 September 2022

ROBERT JOHN KENNEDY: கொல்லி மலை

ROBERT JOHN KENNEDY: கொல்லி மலை:   பழந்தமிழ் நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு முதலியவற்றில் கொல்லிமலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன கிறிஸ்டோபர் பிரான்...

ROBERT JOHN KENNEDY: அகத்தியமலை (பொதிகைமலை)

ROBERT JOHN KENNEDY: அகத்தியமலை (பொதிகைமலை):   பொதியமலையில் இருந்துகொண்டு அகத்தியர் தமிழ் வளர்த்ததாகக் கூறுகின்றனர். மலை முகட்டில் அகத்தியருக்கு ஒரு சிறு கோவில் அமைந்துள்ளது கிறிஸ்டோபர்...

ROBERT JOHN KENNEDY: ஏலக்காய் மலை

ROBERT JOHN KENNEDY: ஏலக்காய் மலை:   ஏலக்காய் மலை வனங்களும், மலைகளும் மனிதகுலத்தின் வளத்திற்கான ஆதாரங்கள் என்கிற மனநிலைக்கு நாம் மாறவேண்டும் கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கா...

ROBERT JOHN KENNEDY: ஆப்ரிக்காவின் 2வது மிக உயரமான கென்யா மலை

ROBERT JOHN KENNEDY: ஆப்ரிக்காவின் 2வது மிக உயரமான கென்யா மலை:   ஆப்ரிக்காவின் 2வது மிக உயரமான கென்யா மலை கென்யா மலையில் தற்போது உள்ள 11 சிறிய பனி ஆறுகள் வேகமாகச் சிறியதாகி வருவதாகவும், இவை 2025ஆம் ஆண்டு...

ROBERT JOHN KENNEDY: சேர்வராயன் மலை

ROBERT JOHN KENNEDY: சேர்வராயன் மலை:   சேர்வராயன் மலை கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள சேர்வராயன் மலையில், புகழ்பெற்ற சுற்றுலா மையமாக ஏற்காடு மலை அமைந்துள்ளது. கிறிஸ்டோபர்...

காடுகளால் சூழப்பட்ட வால்பாறை

 


கிராமிய வசீகரத்துடன், காடுகளால் சூழப்பட்டதாக, தேயிலைத் தோட்டங்களும் காபி பண்ணைகளும் ஒன்றுசேர்ந்து கண்கவர் காட்சியை உருவாக்கும் வால்பாறை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அழகான, மலைப்பாங்கான குக்கிராமத்தில், அனைத்து சலசலப்புகளிலிருந்தும் விலகி ஓர் அமைதியான, மறக்கமுடியாத நேரத்தைச் செலவிட விரும்புவோருக்கு வால்பாறை சிறந்த இடம். விலைமதிப்பற்ற பசுமை பரவல், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வளைந்த பாதைகள், நம் நிம்மதியின் தேடலுக்கு நிறைய உதவுவதாக உள்ளன.

மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆனைமலை மலைத்தொடரில், கடல் மட்டத்திலிருந்து 3,500 அடி உயரத்தில் அமைந்துள்ள வால்பாறை, கிராமிய வசீகரத்துடன், காடுகளால் சூழப்பட்டதாக, தேயிலைத் தோட்டங்களும் காபி பண்ணைகளும் ஒன்றுசேர்ந்து கண்கவர் காட்சியை உருவாக்குகின்றது. மேல்சோலையாறு அணை, நீராறு அணை, ஆழியாறு அணை, குரங்கு அருவி, பாலாஜி கோவில் (கரிமலை), வேளாங்கண்ணி ஆலயம் (கரிமலை), பஞ்ச முக விநாயகர் கோயில் (சோலையாறுக்கு அருகில்) ஆகியவை நம்மை பார்க்க ஈர்க்கும் சில முக்கிய இடங்கள். மலையேறுபவர்களுக்கு, வால்பாறை ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. வால்பாறை மலைத்தொடர், நீலகிரி வரையாடுகளின் வாழ்விடமாகவும் உள்ளது. இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம், வால்பாறையின் மிகவும் பிரபலமான ஈர்ப்புகளில் ஒன்றாகும். சோலைமந்தி, கேளையாடு (குரைக்கும் மான்கள்), காட்டுப்பன்றிகள், நீலகிரி மற்றும் பொதுவான மந்தி (லங்கூர்)  போன்றவற்றை இங்கு காணலாம். மலை இருவாட்சி, மலபார் வெள்ளை கறுப்பு இருவாச்சி, மலபார் சாம்பல் இருவாச்சி ஆகியவை இங்கே இருப்பதால், பறவை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமான இடமாகவும் வால்பாறை உள்ளது.

காடுகளால் மூடப்பட்ட குறுகலான வளைந்த பாதை சின்னக்கல்லார் அருவிக்குச் செல்கிறது. இந்த இடம் மூன்றாவது அதிக மழையைப் பெறும் பெருமைக்குரியது.  மழையின் காரணமாக மூடுபனியால் மூடப்பட்டிருக்கும் சின்னக்கல்லாறு, பசுமையால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. (சுற்றுலாத் துறை,தமிழ்நாடு அரசு)

திருப்பதியின் திருமலை

 


புகழ் பெற்ற திருப்பதி வெங்கடாசல பெருமாள் திருக்கோயில், திருமலையின் ஏழாவது சிகரமான வெங்கடாத்திரி மலையில் உள்ளது

இனியது இயற்கை - திருப்பதியின் திருமலை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஆந்திர மாநிலத்தின் திருமலை என்பது திருப்பதி நகரத்திலுள்ள திருவேங்கடமலைப் பகுதியைக் குறிப்பதாகும். திருப்பதியின் பழைய பெயரான திருவேங்கடத்தை தமிழ்ச் சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரமும், சாத்தனாரின் மணிமேகலையும் குறிப்பிட்டுள்ளன.

திருமலை, கடல் மட்டத்திலிருந்து 3200 அடி உயரத்தில் 10.33 சதுர மைல்கள் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலைச் சிகரமாகும். கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சேசாலம்- வெளிகொண்டா மலைத் தொடரில் அமைந்துள்ள இம்மலையைச் சுற்றிலும் சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி,அஞ்சனாத்திரி, விருசபத்திரி, நாராயணாத்திரி மற்றும் வெங்கடாத்திரி என ஏழு சிகரங்கள் உள்ளன. புகழ் பெற்ற திருப்பதி வெங்கடாசல பெருமாள் திருக்கோயில் ஏழாவது சிகரமான வெங்கடாத்திரி மலையில் உள்ளது. திருமலைக்கு, திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து நடந்து செல்ல இரு பாதைகள் உள்ளன.

திருப்பதியில் இருந்து சில கிலோ மீட்டர்கள் தொலைவில் தென்மேற்கில் இருக்கும் சந்திரகிரி என்னும் கிராமம் விஜய நகர பேரரசரின் இரண்டாம் தலைநகரமாக விளங்கியது.

 

Friday 23 September 2022

மேகங்கள் ஆட்சிபுரியும் மேகமலை

 


மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி பச்சை பசேல் என விரிந்து பரந்து கிடக்கும் மேகங்களின் தாய்வீடுதான், மேகமலை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேகமலை, நான்கைந்து மலைச்சிகரங்கள் நடுவே உள்ள ஒரு பள்ளத்தாக்கு ஆகும். இது தமிழ்நாட்டில் உள்ள மலைவாழிடங்களில் சிறந்த நில அமைப்பு கொண்டதாக இருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து ஏறத்தாழ 1,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மலை முழுவதும் மேகங்களின் ஆட்சி என்பதால் மேகமலை என்று பெயர். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி பச்சை பசேல் என விரிந்து பரந்து கிடக்கும் மேகங்களின் தாய்வீடுதான், இந்த மேகமலை.

பசுமையான நிலபரப்புடன், பெரிய பெரிய மரங்களுடன் இந்தப் பகுதி காணப்படுகிறது. மிக அழகான, சாய்ந்த நிலப்பரப்பில் உள்ள தேயிலை மற்றும் காபி பயிர் தோட்டங்களைக்  காண, கண்கள் கோடி வேண்டும். உயர்ந்த மலை, மிக ஆழமான பள்ளம், அழகிய ஏரி என பல இயற்கை அழகுகள் கொட்டிக்கிடக்கும் பகுதி மேகமலை.

18 ஊசி வளைவுகளில் ஆர்வம் மிகுந்த பயணத்திற்கு பிறகு இங்கு வந்தவுடன், இந்த இடம் எவ்வளவு பொருத்தமாக பெயரிடப்பட்டுள்ளது என்பதை அறியமுடியும். மூடுபனி இங்கு நிரந்தரமாக இருப்பதுபோல் தெரிகிறது. கட்டடங்களின் பெருக்கத்தால் தீண்டப்படாத மேகமலை, ஒரு சிறப்புக் கவர்ச்சியில் திளைக்கிறது. எப்போதும் இதமான காலநிலை, அமைதியான காற்று, மற்றும் கண்கவர் காட்சிகள், இதனை மிகவும் விரும்பப்படும் இடமாக மாற்றுகின்றன. வனவிலங்கு சரணாலயம், மேகமலை அருவி, சுருளி அருவி, அணைகள், மகாராஜா மெட்டு காட்சிமுனை, வெள்ளிமலை, ஏலக்காய் மற்றும் தேயிலை தோட்டங்கள் ஆகியவை, இங்கு குறிப்பிடத்தக்க அடையாளங்களாகும்.

மணலார் அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கின் மூச்சடைக்கக்கூடிய காட்சி, மற்றும் அழகான குக்கிராமங்களின் பரந்த காட்சியை அனுபவிக்க, நெடுஞ்சாலை அணைக்கும், சுருளி தீர்த்தத்திற்கும் சென்று வரலாம். எந்த பருவமாக இருந்தாலும் தண்ணீர் குறையாமல் கொட்டும் மேகமலை அருவி, ஒரு காட்சி விருந்தாகும். யானை, காட்டெருது, புள்ளிமான் போன்ற காட்டு விலங்குகளையும் இங்கு காணலாம். (விகடன் & சுற்றுலாத் துறை, தமிழ்நாடு அரசு)


கேரள வயநாடு மலைகள்

 


ஏறக்குறை 300 மீட்டர் உயரத்திலிருந்து விழும் மூன்று நிலை அருவியான மீன்முட்டி நீர்வீழ்ச்சி, வயநாடு மாவட்டத்தின் மிகப்பெரிய அருவியாகும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தமிழகத்துக்கு வட மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது வயநாடு எனும் மலை சூழ் பசுமை மாவட்டம். இந்த மாவட்டம் அடர்ந்த காடுகளும், பச்சை பசேலென்று படர்ந்திருக்கும் சூழல்களையும் கொண்டது. இங்குக் கண்டு இரசிப்பதற்கு, முக்கியமாக மீன் முட்டி நீர்வீழ்ச்சி, சூச்சிப்பாறா நீர்வீழ்ச்சி, செம்பரா சிகரம், பானசுரா அணைக்கட்டு, காட் காட்சி முனை, முத்தங்கா காட்டுயிர் பூங்கா, எனப் பல உள்ளன.

கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரத்திலிருக்கும் செம்பரா சிகரம் வயநாட்டின் தென்பகுதியிலுள்ள மேப்பாடி அருகில் அமைந்துள்ளது. இது இந்தப் பகுதியில் அமைந்துள்ள மிக உயரமான சிகரம் ஆகும்.

வடநாட்டின் தென்கிழக்குப் பகுதியில் கல்பேட்டாவிற்கு அருகில் அமைந்துள்ளது நீலிமலை. நீலிமலை உச்சியிலிருந்து மீன்முட்டி அருவிகள் மற்றும் அருகிலுள்ள பள்ளத்தாக்குகளைக் காண்பது சிலிர்ப்பூட்டும் காட்சிகளாகும். நீலிமலையில் அமைந்துள்ள, கண்கவர் மீன்முட்டி நீர்வீழ்ச்சி ஊட்டியையும் வயநாட்டையும் இணைக்கும் முக்கியச் சாலையிலிருந்து 2 கி.மீ. நடந்து செல்லும் துரத்தில் உள்ளது. ஏறக்குறைய 300 மீட்டர் உயரத்திலிருந்து விழும் மூன்று நிலை அருவியான இது வயநாடு மாவட்டத்தின் மிகப்பெரிய அருவியாகும்.

வயநாட்டில் வருகையாளர்களை ஈர்க்கும் மற்றுமொரு நீர்வீழ்ச்சி செதலயம் நீர்வீழ்ச்சியாகும், இது வயநாட்டின் சுல்தான் பத்தேரிக்கு அருகில் அமைந்துள்ளது. மீன்முட்டியை ஒப்பிடும்போது இது சிறிய நீர்வீழ்ச்சியாகும்.

பட்சபாதாளம் என்பது கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பிரம்மகிரி குன்றுகளில் உள்ள அடர்ந்த காடுகளின் நடுவே அமைந்துள்ளது. இங்குள்ள மிகவும் ஆழமான குகைகள், பல்வேறு காட்டுப் பறவைகள், விலங்குகள் மற்றும் வெவ்வேறு வகையான தாவரங்கள் ஆகியவற்றின் வாழிடமாக உள்ளன.

வயநாடு மாவட்டத்தின் தென்பகுதியில் கரலாடு ஏரிக்கு அருகில் அமைந்துள்ள வயநாடு பாரம்பரிய அருங்காட்சியகம், காந்தன்பாரா நீர்வீழ்ச்சி, வயநாடு வனவிலங்கு சரணாலயம், நீலிமலா காட்சி முனை, குருவத்வீப், எடக்கல் குகைகள் எனப் பலவற்றைத் தன்னுள்ளே அடக்கி அழகுடன் நிற்கிறது வயநாடு மலை.

 

Tuesday 13 September 2022

பறம்பு மலை

 

கபிலர், ஔவையார், நக்கீரர், பெருஞ்சித்திரனார், திருஞான சம்பந்தர், திருஞான சம்பந்தர் ஆகியோர் வள்ளல் பாரியையும் பறம்பு மலையையும் பாடியுள்ளனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பறம்பு மலை, சங்க காலத்தில் முல்லைக்குத் தேர் ஈந்த வள்ளல் பாரி வாழ்ந்த மலையாகும். இம்மலை கபிலர் முதலான புலவர்களால் பாடப்பெற்ற புகழுடையதாகும். சங்க காலத்தில் பறம்பு மலை எனவும், பின்னர் திருநெலக்குன்றம் எனவும், சமய இலக்கியங்களில் திருக்கொடுங்குன்றம் எனவும் பெயர் பெற்ற இம்மலை, தற்போது பிரான்மலை எனவும் வழங்கப்படுகிறது. 2,450 அடி உயரத்துடன் நெடுந்தூரத்திலிருந்து பார்க்கவும் தெரிவதாக இம்மலை அமைந்துள்ளது.

பறம்பு மலை சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளது. காரைக்குடியிலிருந்து மேற்கே 42 கி.மீ. தொலைவிலும், மதுரையிலிருந்து வடக்கே 63 கி.மீ. தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து தென்மேற்கே 45 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பறம்பு மலையைத் தலைமையிடமாகக் கொண்டது பறம்பு நாடு. இது பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.

சங்க காலத்து நல்லிசைப் புலவர்களான கபிலர், ஔவையார், மிளைக்கந்தனார், நக்கீரர், புறத்திணை நன்னாகனார், பெருஞ்சித்திரனார், நல்லூர் நத்தத்தனார் முதலியோர் வள்ளல் பாரியையும் பறம்பு மலையையும் பாடியுள்ளனர். பக்தி இலக்கியக் காலத்து திருஞான சம்பந்தரும், அருணகிரி நாதரும் பாடியுள்ளனா்.

விடுதலைப் போராட்டக் காலத்தில் கட்டப்பொம்மன் சிறைப்பட்டவுடன் அங்கிருந்து தப்பித்த ஊமைத்துரை மருதுபாண்டியர்களை நாடி வந்தபோது அவரை மனிதர்கள் யாரும் காணமுடியாதபடி பிரான்மலையுச்சியில் ஒளித்து வைத்துள்ளனர். இந்த இடம் இன்றும் ஊமையன் குடம்பு என்று வழங்கப்படுகிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான மருதுபாண்டியர்களின் போரில் பறம்புமலை எனப்படும் பிரான்மலை ஒரு முக்கியக் கோட்டையாக விளங்கியிருக்கிறது. மலையுச்சியில் இன்றும் ஒரு பெரிய பீரங்கி அதன் நினைவாக இருக்கிறது.

முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்ததை நினைவுபடுத்தி இன்றும் இப்பகுதிகளில் கொடி தளும்பினால் குடி தளும்பும் என்னும் சொலவடை வழக்கில் இருந்து வருகிறது. இப்பகுதியில் குழந்தைகளுக்கு பாரி, கபிலன், முல்லைக்கொடி, நல்லமங்கை, அங்கவை, சங்கவை என்னும் பெயர்கள் வைக்கப்படுகின்றன.

 

மருந்துவாழ் மலை (மருத்துவா மலை)

 

இந்திய தென்முனையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மருத்துவ மூலிகைகள் நிறைந்து மருத்துவாமலையில் காணப்படுகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மருந்துவாழ் மலை இந்தியாவில் முக்கியமான மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்முனையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. மருத்துவ மூலிகைகள் நிறைந்துள்ளதால் மருத்துவாமலை என அழைக்கப்படுகிறது. இதன் உயர்ந்த முகடு 1800 அடி உயரமுள்ள மலையாகும். இது நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பொற்றையடி கிராமத்திற்கு வடகிழக்கு திசையில் அமைந்துள்ளது.

இராமாயணத்தில் இராவணனுடனான போரில் இலட்சுமணனைக் காப்பாற்ற அனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்துச் சென்றதாக உள்ளது. பெயர்த்துச் சென்றது இந்த மலைதான் என்று வாய்மொழி கதைகளில் கூறப்படுகிறது. வடக்கில் இருந்து பெயர்த்து வந்தபோது தமிழ்நாட்டில் சிதறி விழுந்த பல்வேறு துண்டுகளில் இம்மலை ஒன்று என்ற கருத்தும் உள்ளது. இம்மலையின் உயர்ந்த முகட்டில் பாறை வெடிப்புக்குள் பிள்ளைத்தடம் எனும் குகை உள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலையின் தென்கோடி முனையான இதனருகில் அய்யா நாராயணசாமி ஏற்படுத்திய வைகுண்டபதி அமைந்துள்ளது. இம்மலையில் அய்யா வைகுண்டர் தங்கியிருந்து தவம் செய்தார். இம்மலை குறித்தும் அவர் பாடியுள்ளார். எனவே அய்யாவழி சமயத்தில் இம்மலை புனிதமானதாய் மதிக்கப்படுகிறது. சுவாமித்தோப்பில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலும் நாகர்கோவிலிலிருந்து 11 கி.மீ தொலைவிலும் உள்ளது. கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை பண்டிகையன்று இம்மலையின் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.

இந்த ஊரில் ஸ்ரீ நாராயணகுரு போதித்த சாதி, சமய வேறுபாடற்ற சமுதாயத்தை அமைக்கும் பணியில் உருவாக்கப்பட்ட சதயபூஜா சங்கத்தின் நிர்வாகத்தில் 1992ஆம் ஆண்டில் “ஸ்ரீ நாராயணகுரு தர்ம மடம்” எனும் பெயரில் மடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.


கொல்லி மலை

 


பழந்தமிழ் நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு முதலியவற்றில் கொல்லிமலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கொல்லி மலை, தமிழ்நாட்டின் நடுப்பகுதியில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டது. ஆத்தூர் வட்டத்துக் கொல்லி மலையிலுள்ள மிக உயர்ந்த சிகரம் வேடக்கார மலையாகும். அதன் உயரம் 4,663 அடி ஆகும். இதை வேட்டைக்காரன் மலை என்றும் கூறுவர். இம்மலைகளில் காணப்படும் அதிகப்படியான மூலிகைகளினால், இது 'மூலிகைகளின் ராணி' என்றும் அழைக்கப்படுவதுண்டு. கொல்லி மலைப் பகுதியில் தேன் கரடி, கருத்த வரையாடுகள், காட்டுப் பன்றி போன்ற வனவிலங்குகள் உள்ளன.

பழந்தமிழ் நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு முதலியவற்றில் கொல்லிமலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இராமாயணத்தில் சுக்ரீவன் ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள 'மதுவனம்' எனும் மலைப் பகுதி இதுவாக இருக்கக்கூடும் என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றன.

கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாய கங்கை அருவி, அய்யாறு ஆற்றின் மீது உள்ளது. 600 அடி உயரமுடைய இந்த அருவியில் குளித்தால் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பப்படுகிறது. கொல்லி மலையில் கொல்லிப் பாவைக்கு ஒரு கோவில் உள்ளது. அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களில் பாடப்பெற்ற பழமை வாய்ந்த முருகன் கோவில் கொல்லி மலையில் அமைந்துள்ளது. கொல்லி மலையின் ஒரு மலை உச்சியில் பொியசாமிக்கு என்று ஒரு கோவில் உள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைத்திருக்கும் வாசலூர்பட்டி படகுத் துறை பார்க்கவேண்டிய இடமாகும்.

சிறுமலை

 

அனுமன் இமய மலையை கையில் கொண்டு செல்லும்போது சிந்திய சிறு மண்ணே பிறகு சிறுமலை என உருவாகியது என கூறப்படுகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

சிறுமலை, திண்டுக்கல்லுக்கு 25 கிலோ மீட்டர்கள் அருகிலும், மதுரைக்கு 40 கிலோ மீட்டர்கள் அருகிலும் அமைந்துள்ளது. அனுமன் இமய மலையை கையில் கொண்டு செல்லும்போது சிந்திய சிறு மண்ணே பிறகு சிறுமலை என உருவாகியது என அங்குள்ள மக்களால் கூறப்படுகிறது

இம்மலையில் மொத்தம் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. 17வது கொண்டை ஊசி வளைவில் ஒரு கண்காணிப்பு கோபுரம் உள்ளது, மற்றும் கீழே உள்ள இயற்கைக் காட்சிகளைக் கவரும்வண்ணம் இங்கு பார்வையாளர்கள் நிறுத்தம் உள்ளது. அன்னை வேளாங்கண்ணி ஆலயம் மற்றும் வெள்ளிமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் இங்கு வருகிறார்கள். மலை உச்சியில் ஒரு சிவன் கோவில் உள்ளது, 500 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் உள்ளது.

இங்கு அரிய வகை மூலிகைகள் உள்ளன. எலுமிச்சம் பழம், வாழைப் பழம், பலாப் பழம் போன்றவை அதிகமாக விளைகின்றன. சிறுமலை வாழைப் பழம் பழனி முருகன் கோவிலுக்கு பஞ்சாமிர்தம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. 60,000 ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ள இது, அழிந்துவரும் அரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் களஞ்சியமாக உள்ளது. புள்ளிமான், குரைக்கும் மான், எலி மான் போன்ற மான் வகைகள் இங்கு காணப்படுகின்றன. காட்டுப்பன்றி, சோம்பல் கரடி, குள்ளநரி, மெல்லிய லோரிஸ், சிறுத்தை போன்ற மற்ற காட்டு விலங்குகளும் இம்மலையில் வாழ்கின்றன.

மனிதரால் உருவாக்கப்பட்ட சிறுமலை ஏரி, 2010ஆம் ஆண்டில் கட்டப்பட்டது, அங்கு படகு வசதிகள் உள்ளன.


அகத்தியமலை (பொதிகைமலை)

 

பொதியமலையில் இருந்துகொண்டு அகத்தியர் தமிழ் வளர்த்ததாகக் கூறுகின்றனர். மலை முகட்டில் அகத்தியருக்கு ஒரு சிறு கோவில் அமைந்துள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அகத்தியமலை அல்லது பொதிகைமலை என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு மலைமுடியாகும். இதன் உயரம் 1,868 மீட்டர்கள். இது தமிழக - கேரள மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட எல்லைகளையும், கேரளத்தில் கொல்லம், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா மாவட்ட எல்லைகளையும் கொண்டதாகப் பரவி அமைந்துள்ளது.

தாமிரபரணி ஆறு, கரமனை ஆறு, நெய்யார் ஆறு போன்றவை இந்த மலையிலிருந்து உற்பத்தியாகின்றன. இம்மலை அகத்திய முனிவரின் பக்தர்களால் புண்ணியத் தலமாகக் கருதப்படுகிறது. மலை முகட்டில் அகத்தியருக்கு ஒரு சிறு கோவில் அமைந்துள்ளது. பொதியமலையில் இருந்துகொண்டு அகத்தியர் தமிழ் வளர்த்ததாகக் கூறுகின்றனர். இந்த மலை  சங்ககால இலக்கியங்களில் பொதியம் என்றும் பொதியில் என்றும் அழைக்கப்பெற்றது.

2,000க்கும் மேற்பட்ட மருத்துவ குணம் கொண்ட தாவரங்களுடன், பல அரிதான காட்டு விலங்குகளின் வாழ்விடமாகவும் அகத்திய மலை இருப்பது குறிப்பிடத்தக்கது. புலி, சிங்கவால் குரங்கு, மலைமொங்கான், தேவாங்கு போன்ற விலங்குகள் இக்காப்பகத்தில் காணப்படுகின்றன. தமிழகத்தின் 5-வது யானைகள் காப்பகமாக அகத்தியமலை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நீலகிரி, நிலாம்பூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆனை மலை காப்பகங்கள் ஏற்கனவே உள்ள நிலையில், 5ஆவது காப்பகமாக அகத்தியமலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Friday 2 September 2022

ஏலக்காய் மலை

 

ஏலக்காய் மலை


வனங்களும், மலைகளும் மனிதகுலத்தின் வளத்திற்கான ஆதாரங்கள் என்கிற மனநிலைக்கு நாம் மாறவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

"காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம், நோக்க நோக்க களியாட்டம் நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை'' என்றார் பாரதி.

வனங்களும், மலைகளும் மனிதகுலத்தின் வளத்திற்கான ஆதாரங்கள் என்கிற மனநிலைக்கு நாம் உடனே மாறவேண்டும், மற்றும், மலைகள் இயற்கை வளங்களோடு மதிக்கப்பட வேண்டும். இந்நோக்கத்துடன் அண்மை நாள்களில் நாம் வழங்கும் இனியது இயற்கை நிகழ்ச்சியில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் தென் பகுதியில் அமைந்துள்ள ஏலக்காய் மலை குறித்து காண்போம்

இது தமிழ்நாட்டின் தென் மேற்குப் பகுதியிலும் கேரளாவின் தென் கிழக்குப் பகுதியிலும் உள்ளது ஏலக்காய் மலை. இம்மலைப் பகுதியில் ஏலக்காய் அதிகம் பயிராவதால் இதற்கு ஏலக்காய் மலை என பெயர் ஏற்பட்டது. ஏலக்காய் தவிர, காப்பி மற்றும் மிளகும் இங்கு பயிராகின்றன. ஆழமான பள்ளத்தாக்குகள் உடைய மலைப் பகுதிகளைக் கொண்ட இதன் பரப்பு 2,800 சதுர கி.மீ ஆகும். மேற்கு நோக்கிப் பாயும் பெரியாறு, பம்பை ஆறு ஆகியவை இம்மலைப் பகுதி வழியாகப் பாய்கின்றன. இடுக்கி அணை, முல்லைப் பெரியாறு அணை ஆகியவை இம்மலைத்தொகுதியில் உள்ளன. இதன் வடமேற்கில் ஆனை மலையும் வடகிழக்கில் பழனி மலையும், தென் பகுதியில் அகத்திய மலையும் உள்ளன.

குளிர் காலத்தில் இம்மலைப் பகுதியின் வெப்பநிலை சராசரியாக 15° செல்சியசும் கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் 31° செல்சியசும் இருக்கும். ஆண்டு சராசரி மழைப்பொழிவு பெரியாறு உள்ள பகுதிகளில் 2,000 - 3,000 மி.மீ ஆகும்.