Friday, 2 September 2022

சேர்வராயன் மலை

 

சேர்வராயன் மலை


கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள சேர்வராயன் மலையில், புகழ்பெற்ற சுற்றுலா மையமாக ஏற்காடு மலை அமைந்துள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

சேலம் மாவட்டத்திற்கு அருகில் காணப்படும் சேர்வராயன் மலை, தமிழகத்தின் இதயம் போன்று அமைந்துள்ளது. இது மலைத்தொடரலிருந்து விலகித் தனக்கென 400 ச.கி.மீ. பகுதியை ஆக்கிரமித்துள்ளது. இந்த மலையில் இயற்கையின் ஊற்றாக நிறைய மரங்களும், மூலிகைச் செடிகளும், வன விலங்குகளும் இருக்கின்றன. கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலையில், புகழ்பெற்ற சுற்றுலா மையமாக ஏற்காடு மலை அமைந்துள்ளது. ஏரிக்காடு என்பதே ஏற்காடு என்று மருவி விட்டது. இதனை “ஏழைகளின் ஊட்டி” என்றும் அழைப்பார்கள்.

சேர்வராயன் மலை, மல்லாபுரம் மலைத்தொடருக்கும் மஞ்சவாடிக் கணவாய்க்கும் இடையில் பரந்து கிடக்கின்றன. இம்மலைத் தொடரானது, நடுவில் ஓடும் வாணியாற்றின் பள்ளத்தாக்கால் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்படுகிறது. இவ்விரண்டு பிரிவுகளும் அமைப்பில் வேறுபடுகின்றன. சேர்வராயன் மலையில் மிதமான தட்பவெப்பம் நிலவுகிறது. இங்கு அருவியில் குளித்து மகிழ கிள்ளியூர் நீர்வீழ்ச்சி எனும் அருவி ஒன்றும் உள்ளது.

சேர்வராயன் மலை உச்சியில் ஒரு மெல்லிய குகையில் அமைந்துள்ள சேர்வராயன் கோவில், தேவி காவேரிக்கும் சேர்வராயன் கடவுளுக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. காவேரி தேவியும் சேர்வராயன் கடவுளும் சுற்றியுள்ள கிராமங்களைப் பாதுகாக்கும் கடவுள்களாக கருதப்படுகிறார்கள். இந்த கோயில் குகை மிகவும் ஆழமாக இருப்பதால் அது காவேரி ஆற்றை தொடுகிறது என்று நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment

ROBERT JOHN KENNEDY: New Decree clarifies discipline on Mass Intentions...

ROBERT JOHN KENNEDY: New Decree clarifies discipline on Mass Intentions... :   New Decree clarifies discipline on Mass Intentions and collec...