Friday 2 September 2022

 

மூன்றாம் உலகப்போரில் நாம் வாழ்கின்றோம்: திருத்தந்தை பிரான்சிஸ்


“நன்மை, நீதி, ஒற்றுமை ஆகியவற்றைத் தினமும் தெளிந்துதேர்ந்துகொள்வதில் நமது அன்னை மரியா உங்களுக்குத் துணை இருக்கட்டும்” : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த கால அனுபவங்களின் நினைவு, உங்களிலும், உங்கள் குடும்பங்களிலும், சமூக மற்றும் அனைத்துலக வாழ்விலும் அமைதியை வளர்க்க உங்களைத் தூண்டட்டும் என்று தான் வழங்கிய புதன் பொது மறைக்கல்வியுரையின்போது தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 31, இப்புதனன்று, வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் அமர்ந்திருந்த பல்வேறு நாடுகளின் திருப்பயணிகளுக்கு வழங்கிய புதன் பொதுமறைக்கல்வி உரையின்போது, இரண்டாம் உலகப் போர் வெடித்த 83-வது ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்து இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குறிப்பாக, அங்குக் கூடியிருந்த போலந்து மொழி பேசும் விசுவாசிகளிடம் உரையாற்றியபோது, "போலந்து நாட்டை கொடியதாகப் பாதித்த இரண்டாம் உலகப் போர் வெடித்த ஆண்டு நிறைவை, நாளைய தினம் நீங்கள் நினைவு கூர்கிறீர்கள் என்று குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உக்ரைனில் நடந்துவரும் போரின் மீதும் தனது கவனத்தைத் திருப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்று நாம் ஒரு மூன்றாம் உலகப் போரில் வாழ்கிறோம் என்றும், இப்போர் உலகைத் துண்டு துண்டாக உடைக்கப் போராடுகிறது என்றும் கவலை தெரிவித்தார்.

உக்ரைன்  மக்களுக்காகச் செபிப்பதற்கான வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக் கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  "உங்கள் இதயங்களில் நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் உள்மனச் சுதந்திரத்தை உருவாக்கும், நன்மை, நீதி, ஒற்றுமை ஆகியவற்றைத் தினமும் தெளிந்துதேர்ந்துகொள்வதில் நமது அன்னை மரியா உங்களுக்குத் துணை இருக்கட்டும்” என்று இறைவேண்டல் செய்தார்.

இரண்டாம் உலகப் போர் 1 செப்டம்பர் 1939 இல் தொடங்கி 2 செப்டம்பர் 1945 வரை நிகழ்ந்தது.


No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...