Saturday 27 May 2023

சுற்றுச்சூழல் கல்வி நகரங்கள் மாநாட்டின் முடிவில் திருத்தந்தை

 

சுற்றுச்சூழல் கல்வி நகரங்கள் மாநாட்டின் முடிவில் திருத்தந்தை



உலகின் பல்வேறு நகரங்களில் இருந்து 50 மேயர்கள் பங்கேற்ற மாநாடானது கடந்த ஆண்டு ஸ்கோலஸால் அறிமுகப்படுத்தப்பட்ட Laudato si' Giovani இன் அனுபவத் தொடர்ச்சியாக நடைபெற்றது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இளைஞர்களுக்கு கல்வி கற்பிப்பது பெற்றோர்கள் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் கடமை என்றும், பள்ளிப்படிப்பை முடிக்க முடியாத குழந்தைகள் சமூகங்களின் சுமையாக மாறுகிறார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 25 வியாழன் மாலை வத்திக்கானில் பன்னாட்டு Scholas Occurrentes அமைப்பு மற்றும் இலத்தீன் அமெரிக்க வளர்ச்சிக்கான வங்கி ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட "சுற்றுச்சூழல்-கல்வி நகரங்கள்" மாநாட்டின் நிறைவுப்பகுதியாக, ஸ்காலர்களின் 10 ஆண்டு விழா கொண்டாடப்பட்ட போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஓரினச்சேர்க்கை, இனவெறி, கொடுமைப்படுத்துதல் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொடுமைப்படுத்துதல் என்பது, எல்லாவற்றிற்கும் மேலாக, மிகவும் கொடுமையானது மற்றும் வாழ்க்கையை அழிக்கிறது என்றும் எடுத்துரைத்தார். மேலும் ஒவ்வோர் ஆணும்  பெண்ணும் உண்மையானவர்களாக இருக்க வேண்டியது அவர்கள் கடமை என்றும், மதிக்கப்பட வேண்டியது அவர்களது உரிமை என்றும் எடுத்துரைத்தார்.

உலகின் பல்வேறு நகரங்களில் இருந்து 50 மேயர்கள் பங்கேற்ற இம்மாநாடானது கடந்த ஆண்டு ஸ்கோலஸால் அறிமுகப்படுத்தப்பட்ட Laudato si' Giovani இன் அனுபவத்தின் தொடர்ச்சியாக, நடைபெற்ற நிலையில் அர்ஜென்டினா, பிரேசில், மெக்சிகோ, சிலி, கொலம்பியா, உருகுவே, பராகுவே, பெரு, கோஸ்டாரிகா, டிரினிடாட், டொபாகோ, ஏக்குவதோர், பனாமா, வெனிசுலா ஆகிய நாடுகளில் இருந்து இலத்தீன் அமெரிக்க மேயர்களும், ஐரோப்பாவைப் பொறுத்தவரை, போர்ச்சுகல் மேயர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

பெருந்தொற்று காலத்தின் போது ஸ்கோலாஸ் அமைப்பு ஏற்படுத்திய ஒன்றிணைந்து இருத்தல் என்னும் திட்டம் செயல்படுத்தப்படும் கிரானாடா என்னும் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுடன் நேரலையில் தொடர்பு கொண்டு மகிழ்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். தலைமுறைகளுக்கிடையேயான ஒற்றுமைக்காக, ஸ்கோலஸ் உறுப்பினர்கள் திருத்தந்தைக்கு "Reviviary" என்று அழைக்கப்படும் ஒரு கலைப்பொருளைக் கொடுத்தனர்.

2001 ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மறுமொழியாக கல்வி கருதப்பட்டு அப்போதைய பியூனஸ் அய்ரேஸ் பேராயராக இருந்த ஜார்ஜ் பெர்கோலியோவால் உருவாக்கப்பட்ட, ஸ்கோலாஸின் தோற்றத்தை நினைவு கூர்ந்தனர்.

உலகளாவிய ரீதியில் தொடங்கப்பட்ட Scholas Occurrentes அமைப்பின் பத்தாவது ஆண்டு விழா மற்றும் சுற்றுச்சூழல் கல்வி நகரங்கள் மாநாட்டின் நிறைவை 50 மேயர்களுடன் இணைந்து சிறப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளைஞர்கள் மற்றும் இளம்பருவ குடிமக்களின் பங்கேற்பில் விரிசலை குறைக்கவும் அரசியலுக்கு எதிரான ஒரு மருந்தாக கருதப்படும் கல்வியை பயிற்றுவிக்கவும் பேரியோ 31 ஸ்கோலஸ் கட்டிடத்தில் அமைந்துள்ள பியூனஸ் அயர்ஸ் பல்கலைக்கழகத்தின் புதிய தலைமையகத்தை ஆசீரளித்து திறந்து வைத்தார்.

நிகழ்வின் முடிவில், 50 மேயர்களும், லௌதாத்தோ சி திருமடலில் கூறப்பட்டுள்ள "ஒருங்கிணைந்த சூழலியல்" என்ற தலைப்பில் நடைபெற்ற 3 நாட்கள் பயிற்சிக்குப் பின் தங்களது பயிற்சி முடிவுகளை திருத்தந்தை பிரான்சிஸிடம் வழங்கினர்.

சீனக் கிறிஸ்தவர்களுடன் என் நெருக்கத்தை வெளிப்படுத்துகிறேன்

 

சீனக் கிறிஸ்தவர்களுடன் என் நெருக்கத்தை வெளிப்படுத்துகிறேன்



திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள், 2007-ஆம் ஆண்டு சீனாவிலுள்ள தலத் திருஅவைக்கான உலக இறைவேண்டல் தினத்தை நிறுவினார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சீனாவிலுள்ள நமது சகோதரர் சகோதரிகளுக்கு எனது எண்ணங்கள் மற்றும் நெருக்கத்தை உறுதிப்படுத்துகிறேன் என்றும், அவர்களின் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையில் பங்குகொள்ள விரும்புகிறேன் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 24, இப்புதனன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு தான் வழங்கிய புதன் பொதுமறைக்கல்வி உரைக்குப் பின்பு இவ்வாறு உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்

சீனாவில் துயருறும் மேய்ப்புப்பணியாளர்கள் மற்றும் நம்பிக்கையாளர்களுக்கு தான் ஒரு சிறப்பு சிந்தனையை வழங்குவதாகவும், இதனால் உலகளாவிய திருஅவையின் ஒன்றிப்பு மற்றும் ஆதரவினால் அவர்கள் ஆறுதலையும் ஊக்கத்தையும் அனுபவிக்க முடியும் என்றும் கூறினார்.

மே 24, சீனாவிலுள்ள தலத்திருஅவைக்கான உலக இறைவேண்டல் தினம் என்பதை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவை மற்றும் அனைவரின் நன்மைக்காகவும் துயரங்களைத் தாங்கி, சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் நற்செய்தி அதன் முழுமையிலும், அழகிலும், சுதந்திரத்திலும் அறிவிக்கப்படுவதற்காகக் கடவுளிடம் இறைவேண்டல் செய்யுமாறு அனைத்துக் கிறிஸ்தவர்களையும் அவர் கேட்டுக்கொண்டார்.

இச்சிறப்பு தினத்தை முன்னிட்டு, புதன்கிழமை புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த நமபிக்கையாளர்களில் இத்தாலியின் பல்வேறு பகுதிகளில் உள்ள சீனக் கத்தோலிக்கச் சமூகத்திற்குப் பணியாற்றி வரும் பல அருள்பணியாளர்களும் இருந்தனர்.

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள், 2007-ஆம் ஆண்டு சீனாவிலுள்ள தலத் திருஅவைக்கான உலக இறைவேண்டல் தினத்தை நிறுவினார். இத்தினம், ஆண்டுதோறும் மே 24-ஆம் தேதி கொண்டாடப்படும் கிறிஸ்தவர்களின் சகாய அனைனையின்  திருநாளன்று நினைவுகூரப்பட்டு செபிக்கப்படுகிறது.

Thursday 25 May 2023

Pope Francis expresses closeness to Chinese Catholics 'who suffer'

 

Pope Francis expresses closeness to Chinese Catholics 'who suffer'



Pope Francis expresses closeness to Catholics in China, including those who suffer, and calls on the faithful to pray that the Gospel may be proclaimed in its fullness, as the Church marks the World Day of Prayer for the Church in China.

By Deborah Castellano Lubov

"I wish to assure my thoughts and closeness to our brothers and sisters in China, and share in their joys and hopes. I offer a special thought to all those who suffer - pastors and the faithful - so that in the communion and solidarity of the universal Church they may experience consolation and encouragement."

Pope Francis made this appeal for the Church in China on Wednesday as he held his General Audience in St. Peter's Square.

The Pope recalled that 24 May marks the World Day of Prayer for the Church in China.

In his appeal, the Holy Father invited all Christians to "raise their prayers to God, so that the Good News of Christ crucified and risen may be proclaimed in its fullness, beauty and freedom, bearing fruit for the good of the Catholic Church and all of Chinese society."

Among the faithful present in St. Peter's Square on Wednesday were several chaplains who serve the Chinese Catholic community in various parts of Italy.

Pope Benedict XVI instituted the World Day of Prayer for the Church in China in 2007, to be held annually on the Feast of Mary Help of Christians, venerated and invoked at the Shrine of Our Lady of Sheshan in Shanghai. The late Pope also composed the following prayer to Our Lady of Sheshan in 2008:

Virgin Most Holy, Mother of the Incarnate Word and our Mother,
venerated in the Shrine of Sheshan under the title "Help of Christians",
the entire Church in China looks to you with devout affection.
We come before you today to implore your protection.
Look upon the People of God and, with a mother’s care, guide them
along the paths of truth and love, so that they may always be
a leaven of harmonious coexistence among all citizens.

When you obediently said "yes" in the house of Nazareth,
you allowed God’s eternal Son to take flesh in your virginal womb
and thus to begin in history the work of our redemption.
You willingly and generously cooperated in that work,
allowing the sword of pain to pierce your soul,
until the supreme hour of the Cross, when you kept watch on Calvary,
standing beside your Son, who died that we might live.

From that moment, you became, in a new way,
the Mother of all those who receive your Son Jesus in faith
and choose to follow in his footsteps by taking up his Cross.
Mother of hope, in the darkness of Holy Saturday you journeyed
with unfailing trust towards the dawn of Easter.
Grant that your children may discern at all times,
even those that are darkest, the signs of God’s loving presence.

Our Lady of Sheshan, sustain all those in China,
who, amid their daily trials, continue to believe, to hope, to love.
May they never be afraid to speak of Jesus to the world,
and of the world to Jesus.
In the statue overlooking the Shrine you lift your Son on high,
offering him to the world with open arms in a gesture of love.
Help Catholics always to be credible witnesses to this love,
ever clinging to the rock of Peter on which the Church is built.
Mother of China and all Asia, pray for us, now and for ever. Amen!


“ஆப்ரிக்காவிலிருந்து கையை எடுங்கள்!” என்ற புதிய நூல்

 

“ஆப்ரிக்காவிலிருந்து கையை எடுங்கள்!” என்ற புதிய நூல்


காங்கோ குடியரசு, மற்றும் தென்சூடான் நாடுகளில் திருத்தந்தை ஆற்றிய உரைகளுடன், அந்நாடுகளில் பாதிக்கப்ப்பட்டுள்ள மக்களின் சாட்சியங்களுடன் புது நூல்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இவ்வாண்டு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 5ஆம் தேதி வரை காங்கோ குடியரசு மற்றும் தென்சூடானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டபோது ஆற்றிய உரைகள் அடங்கிய தொகுப்பு நூல் வத்திக்கான் அச்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

“ஆப்ரிக்காவிலிருந்து கையை எடுங்கள்!” என்ற தலைப்புடன் திருத்தந்தையின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலுக்கு நைஜீரிய பெண்ணுரிமை எழுத்தாளர் Chimamanda Ngozi Adichie  அவர்கள் முகவுரை எழுதியுள்ளார்.

உள்நாட்டு மோதல்களால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும் காங்கோ குடியரசு, மற்றும் தென்சூடான் நாடுகளில் திருத்தந்தை ஆற்றிய உரைகளுடன், அந்நாடுகளில் பாதிக்கப்ப்பட்டுள்ள மக்களின் சாட்சியங்களும், அவர்களின் வாழ்க்கைச் சம்பவங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

மேற்கத்திய பணக்கார நாடுகளால் ஆப்ரிக்கக் கண்டம் சுரண்டப்படுவது குறித்து, திருத்தந்தை தன் கண்டனங்களை வெளியிட்டுள்ளது குறித்து எடுத்துரைக்கும் இந்த நூல், “ஆப்ரிக்காவிலிருந்து கையை எடுங்கள். ஆப்ரிக்காவை மூச்சுத் திணற வைக்காதீர்கள். இது சுரண்டப்படுவதற்கான சுரங்கமோ, கொள்ளையடிக்கப்படுவதற்கான நிலமோ அல்ல. தன் தலைவிதியை ஆப்ரிக்காவே நிணயித்துக் கொள்ளட்டும்!” என காங்கோ குடியரசில் திருத்தந்தை ஆற்றிய முதல் நாள் உரையும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

இரு நாடுகளிலும் அமைதிக்கு அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசியல் மற்றும் பொருளாதார காலனி ஆதிக்கங்களால் இந்நாடுகள் அடிமைத்தனத்திற்கு ஈடான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தன் திருத்தூதுப் பயணத்தின்போது அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.


ஒன்பது புதிய இறையடியார்களின் வீரத்துவ வாழ்வு ஏற்பு

 

ஒன்பது புதிய இறையடியார்களின் வீரத்துவ வாழ்வு ஏற்பு



இத்தாலியைச் சார்ந்த ஐவரும், பிரேசிலில் இருவரும், கேமரூன் மற்றும் இஸ்பெயினில் இருவருமாக மொத்தம் ஒன்பது புதிய இறையாடியார்களின் புண்ணிய வாழ்வானது ஏற்கப்பட்டுள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

கிறிஸ்தவ நம்பிக்கையின் பொருட்டு கொல்லப்பட்ட இத்தாலி நாட்டின் மறைசாட்சியாளரான அருள்பணியாளர் Giuseppe Beotti  உட்பட ஒன்பது இறையடியார்களின்  புண்ணிய மற்றும் வீரத்துவ வாழ்வு பற்றிய விவரங்களானது மே 20 சனிக்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு ஏற்கப்பட்டது.

இத்தாலியைச் சார்ந்த அருள்பணியாளர், அருள்சகோதரி, ஓர் ஆண் பொது நிலையினர் மற்றும் இரண்டு பெண் பொதுநிலையினர் என ஐவரும், பிரேசிலில் அருள்சகோதரி அருள்பணித்துவமாணவர் என இருவரும், கேமரூன் மற்றும் இஸ்பெயினில் ஓர் அருள்பணியாளர் என இருவருமாக மொத்தம் ஒன்பது புதிய இறையாடியார்களின் புண்ணிய வாழ்வானது ஏற்கப்பட்டுள்ளது.

இதற்கான அங்கீகாரத்தை புனிதர் மற்றும் அருளாளர்களாக உயர்த்தப்படும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் மார்செல்லோ செமெராரோ (Marcello Semeraro) அவர்கள், மே 20, சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து சமர்ப்பித்தார்.

இவர்கள் முறையே இத்தாலியைச் சார்ந்த மறைசாட்சியாகக் கொல்லப்பட்ட அருள்பணியாளர் Giuseppe Beotti, அருள்சகோதரி Edda Roda, ஆண் பொதுநிலையினர் Arnaldo Canepa மற்றும் பெண் பொதுநிலையினர் Maria Cristina Ogier, Lorena D’Alessandro என்னும் ஐவர் ஆவர்.  

பிரேசில் நாட்டு அருள்சகோதரி Tereza Margarida do Coração de Maria, அருள்பணித்துவ மாணவர் Guido Vidal França Schäffer மற்றும் கேமரூன் நாட்டின் அருள்பணியாளர் Simon Mpeke இஸ்பெயின் நாட்டின் அருள்பணியாளர் Pedro de la Virgen del Carmen ஆகியோராவர்.

வத்திக்கான் நகருக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த நபர் கைது

 

வத்திக்கான் நகருக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த நபர் கைது



திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கியிருக்கும் இடமான வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லம், தூய பேதுரு பெருங்கோவில், வத்திக்கான் தோட்டம் ஆகியவற்றிற்கு செல்லும் மற்றொரு நுழைவாயிலான சாந்தா அன்னா ஆலய நுழைவாயிலில் இந்நிகழ்வு நடந்தது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

வத்திக்கானின் சுவிஸ் காவலர் மற்றும் வத்திக்கான் காவல்துறை ஆகிய இரண்டு சோதனை நிலையங்களை அத்துமீறி வத்திக்கான் நகரத்திற்குள் வேகமாக வாகனத்தில் சென்ற மனிதர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மே 18 வியாழன் உரோம் உள்ளூர் நேரம் இரவு 8.00 மணிக்கு வத்திக்கான் சாந்தா அன்னா ஆலய நுழைவு வழியாக அனுமதியின்றி அதிவேகமாக காரில் சென்ற 40 வயது மனிதர் வத்திக்கான் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உரோம் உள்ளூர் நேரம் இரவு 8.00 மணி அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 11.30 மணிக்கு நுழைந்த வாகனமானது வத்திக்கான் சுவிஸ் காவலர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகிய இரு சோதனை நிலையங்களின் அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும் மீண்டும் வேகமாக  உள்ளே நுழைந்தது.

நிலைமை அறிந்து வத்திக்கான் காவல்துறையினர் வாகனத்தின் முன்பக்க சக்கரத்தினை துப்பாக்கியால் சுட வாகனம் வத்திக்கான் அரண்மனையின் டமாசஸ் வளாகத்தில் போய் நின்றது. அங்கு அவ்வாகனத்தை ஓட்டிவந்த 40 வயது மதிக்கத்தக்க மனிதர் வத்திக்கான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

வத்திக்கான் மருத்துவர்களால் உடல் மன பரிசோதனை செய்யப்பட்ட பிறகு வத்திக்கான் நீதித்துறை அதிகாரிகளின் கீழ் உள்ள Gendarmerie barracks, புதிய வளாகத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கியிருக்கும் இடமான வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லம், தூய பேதுரு பெருங்கோவில், வத்திக்கான் தோட்டம் ஆகியவற்றிற்கு செல்லும் மற்றொரு நுழைவாயிலான  சாந்தா அன்னா ஆலய நுழைவாயிலில் இந்நிகழ்வு நடந்தது.

கைது செய்யப்பட்ட அம்மனிதர் முதலில் சுவிஸ் காவலர்களால் வத்திக்கானுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டார் என்றும், நுழைவாயிலை விட்டு வெளியேறிய பிறகு, மீண்டும் அதிவேகமாகத் திரும்பி, சுவிஸ் காவலர்கள், ஜென்டர்மேரி என்னும் வத்திக்கான் காவலர்கள் ஆகிய இரண்டு சோதனை நிலையங்களையும்  அத்துமீறி நுழைந்தவர் என்றும் தெரியவருகின்றது.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் : கர்தினால் பரோலின்

 

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் : கர்தினால் பரோலின்



ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்ட திருப்பீடம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் : கர்தினால் பியெத்ரோ பரோலின்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உக்ரைனில் தொடரும் ஆக்கிரமிப்புப் போரை ஐரோப்பா அனுமதிக்கக் கூடாது என்றும், அந்நாட்டில் ஒரு உறுதியான மற்றும் நியாயமான அமைதியை நிலைநாட்ட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

ஐஸ்லாந்தின் ரெய்க்ஜாவிக் நகரில், மே 16, 17 ஆகிய இருநாள்கள் நடைபெற்ற ஐரோப்பிய கவுன்சிலின் 4-வது உச்சி மாநாட்டில் ஐரோப்பா முழுவதிலும் இருந்து மாநில மற்றும் அரசுத் தலைவர்கள் கலந்துகொண்ட வேளை, அதில் பங்கேற்று உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார் கர்தினால் பரோலின்.

தனது உரையின்போது, இம்மாநாட்டில் பங்கேற்ற நாட்டுத் தலைவர்கள் அனைவருக்கும் திருத்தந்தையின் வாழ்த்துக்களையும் செபங்களையும் தெரிவித்தார் கர்தினால் பரோலின்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி, உக்ரைனில் நிகழ்ந்து வரும் போர், சமூக அரசியல் மற்றும் பலதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான உணர்வுப்பூர்வமானத் தேடலானது தொலைதூர கடந்த காலத்திலிருந்து ஒரு விரும்பத்தகாத நினைவாக தெரிகிறது என்று சுட்டிக்காட்டினார்  கர்தினால் பரோலின்.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனைப் பற்றி சிந்திக்காமல், அமைதிக்கான ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எப்படி சாத்தியப்படுத்துவது என்ற கேள்வியை முதலில் ஐரோப்பிய தலைவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார் கர்தினால் பரோலின்.

ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்ட திருப்பீடம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று உறுதியுடன் கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், உக்ரைனிலும் ஐரோப்பாவின் 'சாம்பல்' பகுதிகள் என்று அழைக்கப்படும் மற்ற எல்லா பகுதிகளிலும் ஒரு உறுதியான மற்றும் நியாயமான அமைதியை நிலைநாட்டுவதற்கான நேரம் இது என்பதையும் எடுத்துரைத்தார் கர்தினால் பரோலின்

மனித உரிமைகள் மற்றும் ஐரோப்பாவில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த முற்படும் அனைத்துலக அமைப்பான ஐரோப்பிய கவுன்சிலில் திருப்பீடம் பார்வையாளராகப் பங்குபெறும் உயர்மதிப்பைப் பெற்றுள்ளதால், அதன் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார் கர்தினால் பரோலின்.