Monday, 30 March 2026

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

 

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!



கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத நிலையில், அதற்குப் பதிலாக அனைத்து நாடுகளின் பேராலயத்தில் வழிபாட்டுச் சடங்குகளை நிகழ்த்தியது எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறைத் தலைமைப்பீடம்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

புனித பூமியில் தொடரும் துயரங்களைச் சுட்டிக்காட்டி, அமைதிக்காக மீண்டும் இறைவேண்டல் செய்யுமாறு வலியுறுத்தினார் எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறையின் முதுபெரும் தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பித்தசபாலா.

மார்ச் 29, ஞாயிறன்று, எருசலேமில் உள்ள கெத்சமனித் தோட்டத்தில் நிகழ்ந்த குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டத்தின் போது இந்த அழைப்பை விடுத்த கர்தினால் பித்தசபாலா அவர்கள், தொடர்ந்து இடம்பெற்று வரும் போரின் காரணமாக, திருப்பயணிகள் இன்றி இந்தக் கொண்டாட்டங்கள் நடைபெற்ற வேளையில், பாரம்பரிய சடங்குகள் இல்லாவிட்டாலும் நம்பிக்கை நிலைத்திருக்கும் என்பதை எடுத்துக்காட்டினார்.

குருத்தோலை ஞாயிறு திருவழிபாட்டைத் தலைமை தாங்கி சிறப்பித்த கர்தினால் பித்தசபாலா அவர்கள், எருசலேமைப் பார்த்து இயேசு கண்ணீர் வடித்த நிகழ்வை எடுத்துக்காட்டி, இதனை இன்றைய மோதல்களுடன் ஒப்பிட்டுப் பேசிய அதைவேளை, "இந்த நகர் இன்றும் போர், பிளவு மற்றும் அமைதிக்கான வாய்ப்புகளைத் தவறவிடுதல் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது" என்று விவரித்தார்.

மேலும், "புறத்தோற்ற வெளிப்பாடுகளை விட, தற்போதைய கடினமான சூழல் ஆன்மிக உண்மையை  ஆழப்படுத்தும்" என்று  குறிப்பிட்ட கர்தினால் பித்தசபாலா அவர்கள், நம்பிக்கை என்பது வெளிப்படையான சடங்குகளை மட்டும் சார்ந்தது அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து கிறிஸ்துவின் திருப்பாடுகளை மேற்கோள் காட்டி, மனிதரின் தோல்விகளுடன் இறைவனின் அன்பு மற்றும் தியாகம் ஆகியவற்றை ஒப்பிட்டுக்காட்டிய கர்தினால் பித்தசபாலா அவர்கள், உண்மையான அமைதி என்பது அதிகாரத்தால் வருவதல்ல, மாறாகத் தன்னைத்தானே அர்ப்பணிக்கும் அன்பினால் மட்டுமே வருகிறது என்பதை விசுவாசிகளுக்கு எடுத்துக்காட்டினார்.

இந்த நகரில் வன்முறைத் தொடர்ந்து நீடித்து வரும் போதிலும், விசுவாசிகள் நம்பிக்கையுடன் இருக்கவும், அன்பு மற்றும் ஒப்புரவாக்குதலின் சாட்சிகளாகச் செயல்படவும் ஊக்குவித்து  தனது உரையை நிறைவு செய்தார் கர்தினால் பித்தசபாலா.

கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத நிலையில், அதற்குப் பதிலாக அனைத்து நாடுகளின் பேராலயத்தில் வழிபாட்டுச் சடங்குகளை நிகழ்த்தியது எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறைத் தலைமைப்பீடம்.


கத்தோலிக்க மக்கள்தொகை சீராக வளர்ந்து வருகிறது!

 

கத்தோலிக்க மக்கள்தொகை சீராக வளர்ந்து வருகிறது!



ஒட்டுமொத்தமாக, உலகின் தென்பகுதியில், குறிப்பாக ஆப்பிரிக்காவில், கத்தோலிக்க மதம் அதிகளவில் வளர்ந்து வருவதையும், அதேவேளையில் ஐரோப்பா மற்றும் பிற பகுதிகளில் அதன் வளர்ச்சியின் வேகம் குறைந்து வருவதையும் இந்தப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"திருத்தந்தை ஆண்டுக் குறிப்பேடு 2026" (Annuario Pontificio 2026) மற்றும் "திருஅவைப் புள்ளிவிவர ஆண்டு ஏடு 2024" (Annuarium Statisticum Ecclesiae 2024) ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ள புதிய உலகளாவியத் திருஅவையின் புள்ளிவிவரங்கள், உலகெங்கிலும் கத்தோலிக்கர்களின் சீரான வளர்ச்சியை வெளிப்படுத்துவதோடு, ஆப்பிரிக்கா மிக வேகமாக வளரும் பகுதியாக உருவெடுத்துள்ளது என்பதை எடுத்துக்காட்டியுள்ளன.

இவை இரண்டும் அளித்துள்ள புள்ளிவிபரங்களின்படி உலகளாவியக் கத்தோலிக்க மக்கள் தொகை 2024-ஆம் ஆண்டில் 142 கோடியைக் கடந்துள்ளது. இது 2023-ஆம் ஆண்டைவிட 1.14 விழுக்காடு அதிகமாகும். மேலும் இது ஒட்டுமொத்த மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏறக்குறைய இணையாக உள்ளது.

ஆப்பிரிக்காவில் மிக முக்கியமான அதிகரிப்பு பதிவாகியுள்ளது, அங்குக் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 28.1 கோடி முதல் 28.8 கோடிக்கு மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. உலகளாவியக் கத்தோலிக்க மக்கள் தொகையில் இக்கண்டத்தின் பங்கும் 19.9 விழுக்காட்டிலிருந்து 20.3 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இது திருஅவைக்குள் அதன் விரிவடைந்து வரும் செல்வாக்கை எடுத்துக்காட்டுகிறது.

இதற்கு மாறாக, ஐரோப்பா வெறும் 0.8 விழுக்காடு என்ற மிக மெதுவான வளர்ச்சியைக் காட்டியுள்ளதுடன், அதன் உலகளாவிய பங்கும் சற்றே சரிந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்களில் 47.7 விழுக்காடு  என்ற மிகப்பெரிய விகிதத்தை அமெரிக்கக் கண்டங்கள் தொடர்ந்து கொண்டுள்ளன. அதேவேளையில், ஆசியா மற்றும் ஓசியானியா நிலையானதாக உள்ளன.

2024-ஆம் ஆண்டில் திருஅவையின் ஆன்மிகப் பணியாளர்களின் எண்ணிக்கை 0.7 விழுக்காடு அதிகரித்து, 44.6 இலட்சத்தைக் கடந்துள்ளது என்று தரவுகள் காட்டுகின்றன. மேலும் அருள்பணியாளர்களின் எண்ணிக்கை சிறிதளவு அதிகரித்துள்ள அதேவேளையில், நிரந்தரத் திருத்தொண்டர்கள் மற்றும் பொதுநிலை மறைப்பணியாளர்களின் எண்ணிக்கை, குறிப்பாக ஆப்பிரிக்காவில், குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது.

இந்த முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், அருள்பணித்துவப் பணிக்கான அழைப்புகள் உலகளவில் 2.7 விழுக்காடு குறைந்துள்ளன; ஆப்பிரிக்கா மட்டுமே அருள்பணித்துவப் பயிற்சி மாணவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ள ஒரே பகுதியாக அமைத்துள்ளது. 

அருளடையாளப் பங்கேற்பு கலவையான போக்குகளைக் காட்டியுள்ளது. அதாவது, திருமுழுக்குகள் சற்றே குறைந்துள்ள அதேவேளையில், முதல் திருவிருந்துகளும் உறுதிப்பூசுதல்களும் மிதமாக உயர்ந்துள்ளன.

ஒட்டுமொத்தமாக, உலகின் தென்பகுதியில், குறிப்பாக ஆப்பிரிக்காவில், கத்தோலிக்க மதம் அதிகளவில் வளர்ந்து வருவதையும், அதேவேளையில் ஐரோப்பா மற்றும் பிற பகுதிகளில் அதன் வளர்ச்சியின் வேகம் குறைந்து வருவதையும் இந்தப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Wednesday, 25 March 2026

ராஜேந்திர சோழனின் கடல் கடந்த படையெடுப்புக்கு காரணம் இதுவா?

https://youtu.be/u5itROx3JFo?si=taGv_gsy1KutykxY

குழித்துறை மறைமாவட்ட முதல் ஆயர் மேதகு ஆயர் ஜெறோம் தாஸ் வறுவேல் SDB - அடக்கச் சடங்கு திருப்பலி

https://www.youtube.com/live/Ws_2iMLcUHY?si=GAvoHCJeUFDDHrfw

ROBERT JOHN KENNEDY: The Shepherd of the Salt and Soil (In Memoriam: Bi...

ROBERT JOHN KENNEDY: The Shepherd of the Salt and Soil (In Memoriam: Bi...:   The Shepherd of the Salt and Soil (In Memoriam: Bishop Jerome Dhas Varuvel, SDB -  by Rev. Robert John Kennedy) The miter rests. The silve...

The Shepherd of the Salt and Soil (In Memoriam: Bishop Jerome Dhas Varuvel, SDB - by Rev. Robert John Kennedy)

 

The Shepherd of the Salt and Soil

(In Memoriam: Bishop Jerome Dhas Varuvel, SDB - 
by Rev. Robert John Kennedy)



The miter rests. The silver crosier stands 

Against the granite of a nascent wall; 

The Master Builder leaves to higher lands, 

Beyond the reach of any earthly call. 

From Loyola’s gates, I watch the evening star 

Hang low o’er Kanyakumari’s surging foam, 

And trace the path of him who traveled far 

To lead a wandering, coastal people home.

He was the Son of Bosco—marked by joy, 

The "Preventive" heart that shielded every lad, 

Who saw the hidden saint in every boy 

In the green silences of Thalavadi. 

He knew that grace, like any Roman verse, 

Needs structure first to let the spirit sing; 

He took a young diocese, as if to nurse 

A fledgling bird and teach its soul to wing.



No ivory tower held his quiet mind, 

Though Latin rolled like thunder from his tongue; 

His was a wisdom of a different kind— 

Of nets cast wide and parish hymns well-sung. 

And when the "Liturgy of Silence" came, 

When Parkinson’s became his heavy cross, 

He whispered still the One Essential Name, 

Turning to gold the leaden weight of loss.



The "Fiat" spoken at the dawn of light, 

The Shepherd’s scent upon his weary fleece; 

He walked through shadows, looking for the height, 

And found at last the Annunciation’s peace. 

Sleep now, Jerome, where salt and incense meet, 

Beside the waves that murmur on the shore; 

Lay down your sandals at the Master’s feet— 

The Architect has passed the Final Door.

ROBERT JOHN KENNEDY: The Miter and the Mentor (A Personal Eulogy for My...

ROBERT JOHN KENNEDY: The Miter and the Mentor (A Personal Eulogy for My...:   The Miter and the Mentor (A Personal Eulogy for My Father in Christ, Bishop Jerome Dhas - Rev. Robert John Kennedy) The halls of Loyola ta...

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...