Friday 31 July 2020

ദൈവിക പരിപാലന പ്രകീര്‍ത്തിക്കുന്ന സങ്കീര്‍ത്തനം

FILES-FRANCE-BIODIVERSITY-ENVIRONMENT

19-Ɔο സങ്കീര്‍ത്തനം - സൃഷ്ടിയുടെ സ്തുതിപ്പിന്‍റെ പഠനം അവസാനത്തെ ഭാഗം – പൊതുവായ ഒരവലോകനം - ശബ്ദരേഖയോടെ... :

- ഫാദര്‍ വില്യം  നെല്ലിക്കല്‍

1. സൃഷ്ടിയുടെ സ്തുതിപ്പിന്‍റെ അവലോകനം
സങ്കീര്‍ത്തനം 19-ന്‍റെ വിവിധ ഘട്ടങ്ങളിലൂടെയുള്ള പഠനത്തിന്‍റെ അവസാനഭാഗത്ത് നമുക്കിന്ന് പൊതുവായ അവലോകനം ശ്രവിക്കാം. വരികളുടെ വ്യാഖ്യാനം, ആത്മീയ വിചിന്തനം എന്നിവയിലൂടെ സൃഷ്ടിയുടെ സ്തുതിപ്പും ഒരു കൃതജ്ഞതാഗീതവുമായ ഈ സങ്കീര്‍ത്തനത്തിന്‍റെ ഘടനയും, ഉള്ളടക്കവും സവിശേഷതകളും നാം മനസ്സിലാക്കിയതാണ്. ഇപ്പോള്‍ ഈ പൊതുവായ അവലോകനത്തില്‍ മൂന്നു ചിന്തകളാണ് പ്രധാനമായും പൊന്തിവരുന്നത്. അവ മൂന്നു വെളിപ്പെടുത്തലുകളായി ബൈബിള്‍ പണ്ഡിതന്മാര്‍ വ്യാഖ്യാനിക്കുന്നത് ശ്രവിക്കാം.

2. സൃഷ്ടിയിലെ ദൈവിക വെളിപ്പെടുത്തല്‍
ആദ്യമായി സൃഷ്ടി ദൈവത്തിന്‍റെ ദാനവും വെളിപ്പെടുത്തലുമാണ്. അതിനാല്‍ സങ്കീര്‍ത്തകന്‍ ഗീതത്തിന്‍റെ ആദ്യത്തെ 6 വരികളില്‍ സൃഷ്ടിയുടെ മനോഹാരിതയെ സ്തുതിച്ചുകൊണ്ട് സകലരെയും സ്രഷ്ടാവായ ദൈവത്തെ പ്രകീര്‍ത്തിക്കുവാന്‍ ക്ഷണിക്കുന്നു (സങ്കീ. 19, 1-6). മറ്റു വാക്കുകളില്‍ പറഞ്ഞാല്‍ പൊതുഭവനമായ ഈ ഭൂമിയില്‍ നാം സാഹോദര്യത്തോടും സമാധാനപൂര്‍ണ്ണമായും ജീവിക്കുവാനുള്ള മാര്‍ഗ്ഗമാണ് സൃഷ്ടിയോടുള്ള ആദരവും അത് ദൈവിക ദാനമാണെന്നുള്ള അവബോധവുമെന്ന് 19-Ɔο സങ്കീര്‍ത്തനം പഠിപ്പിക്കുന്നു.

3. കല്പനകളിലൂടെ വെളിപ്പെടുത്തുന്ന ദൈവം
രണ്ടാമതായി സൃഷ്ടിയുടെ സ്തുതിപ്പിന്‍റെ ഗീതത്തില്‍ സങ്കീര്‍ത്തകന്‍ ദൈവകല്പനകളെക്കുറിച്ചു പരാമര്‍ശിക്കുന്നു. പ്രാപഞ്ചികമായി എല്ലാം ഒരുക്കിയ ദൈവം സൃഷ്ടിയുടെ മകുടമായി മനുഷ്യനെ സൃഷ്ടിക്കുകയും, തുടര്‍ന്ന് അവന് ജീവിതനിയമങ്ങള്‍ കല്പനകളായി കാലക്രമത്തില്‍ നല്കുകയും ചെയ്തു. ദൈവജനമായ ഇസ്രായേലിന്‍റെ ചരിത്രപശ്ചാത്തലത്തില്‍ രചിക്കപ്പെട്ട ഈ ഗീതം ദൈവകല്പനകളെ അവിടുത്തെ സൃഷ്ടിപോലെതന്നെയുള്ള ആന്തരികമായ വെളിപ്പെടുത്തലായിട്ടാണ് വരികള്‍ വര്‍ണ്ണിക്കുന്നത്. മനുഷ്യജീവിതം നീതിനിഷ്ഠവും സമാധാന പൂര്‍ണ്ണവുമാക്കാന്‍ ദൈവം കല്പനകളിലൂടെ തന്നെത്തന്നെ മനുഷ്യനു വെളിപ്പെടുത്തിത്തരുന്നത് പുറപ്പാടുഗ്രന്ഥം രേഖപ്പെടുത്തിയിരിക്കുന്നു (സങ്കീ. 19, 7-11, പുറപ്പാട് 20, 2-17).

4. ദൈവം തരുന്ന രക്ഷയുടെ വെളിപാട്
മൂന്നാമതായി, സങ്കീര്‍ത്തനത്തിന്‍റെ അവസാനഭാഗത്ത് - മൂന്നുവരികളില്‍ അസ്തിത്വപരമായ സുസ്ഥിതിക്കായി ദൈവം തന്നെത്തന്നെ മനുഷ്യനു വെളിപ്പെടുത്തിക്കൊടുക്കുന്നു. ജീവിതത്തില്‍ വഴിതെറ്റിപ്പോകുന്ന മനുഷ്യനെ വീണ്ടും സ്രഷ്ടാവായ ദൈവം തന്നിലേയ്ക്കു വിളിക്കുന്നു. തെറ്റുകളില്‍നിന്നും തന്നെ വിശുദ്ധീകരിക്കണമെന്നും, തിന്മയുടെ ആധിപത്യത്തില്‍നിന്ന് തന്നെ മോചിക്കണമെന്നും സങ്കീര്‍ത്തകന്‍ പ്രാര്‍ത്ഥിക്കുന്നു. സ്രഷ്ടാവും നിയമദാതാവും അഭയശിലയും വിമോചകനുമായ ദൈവമേ, എന്നെ അങ്ങേ സന്നിധിയില്‍ സ്വീകരിക്കണമേയെന്ന പ്രാര്‍ത്ഥനയോടെയാണ് സങ്കീര്‍ത്തകന്‍ വരികള്‍ ഉപസംഹരിക്കുന്നത് (സങ്കീ 19, 12-14).

സങ്കീര്‍ത്തനം  ഗാനാവിഷ്ക്കാരംചെയ്തത് ഫാദര്‍ വില്യം നെല്ലിക്കലും ഹാരി കൊറയയും...
ആലാപനം മരിയ ഡാവിനയും സംഘവും.

Musical Version of Ps 19 Unit One
കര്‍ത്താവിന്‍ കല്പനകള്‍ നീതിപൂര്‍ണ്ണം
ഹൃദയത്തിനവയെന്നും സമ്മാനം (2).

5. സൃഷ്ടി ദൈവത്തിന്‍റെ ദാനവും വെളിപ്പെടുത്തലും
സൃഷ്ടി ദൈവത്തിന്‍റെ ദാനവും അവിടുത്തെ വെളിപ്പെടുത്തലുകളുമാണ്. ഭൂമിയും അത് ഉള്‍പ്പെടുന്ന സൃഷ്ടപ്രപഞ്ചവും മൊത്തമായി പരിഗണിക്കുമ്പോള്‍, മാനുഷികബുദ്ധിക്ക് അഗ്രാഹ്യമാംവിധം സങ്കീര്‍ണ്ണമാണത്. എന്നാല്‍ അവയ്ക്കു പിന്നില്‍ പ്രവര്‍ത്തിക്കുന്ന, സര്‍വ്വത്തിനും കാരണക്കാരനായ ദൈവം സൃഷ്ടിയുടെ ക്രമത്തിലൂടെ ആശ്ചര്യകരമാം വിധം അവിടുത്തെ മഹത്വമായും ദൈവിക ദാനമായും സ്വയം വെളിപ്പെടുത്തുന്നത് സങ്കീര്‍ത്തനവരികള്‍ ഏറ്റുപാടുന്നു. ആകാശവും ആകാശവിതാനവും ദൈവിക മഹിമാവിനെ വെളിപ്പെടുത്തുന്നു. മാറിമാറിവരുന്ന പകലും രാത്രിയും, മഞ്ഞും മഴയും, വെയിലും വേനലും ശൈത്യവുമെല്ലാം ദൈവിക വിജ്ഞാനത്തിന്‍റെ പ്രതീകമായി സങ്കീര്‍ത്തകന്‍ മനസ്സിലാക്കുകയും ഗീതത്തില്‍ വിവരിക്കുകയും ചെയ്യുന്നു.

6. പ്രകൃതിയുടെ പ്രതികാരം
ഇന്നു ലോകം നേരിടുന്ന മഹാമാരിയെ ഒരു പാരിസ്ഥിതിക കാഴ്ചപ്പാടില്‍ കാണുകയാണെങ്കില്‍, ദൈവം തന്ന പൊതുഭവനമായ ഭൂമിയെ മനുഷ്യന്‍ അശ്രദ്ധമായും സ്വാര്‍ത്ഥമായും കൈയ്യടക്കിയതിന്‍റെ പ്രത്യാഘാതമാണ് ഈ ദുരന്തമെന്നത് ശാസ്ത്രലോകം അംഗീകരിക്കുന്നുണ്ട്. പ്രകൃതിയെ നശിപ്പിച്ചുകൊണ്ടും മലീമസമാക്കിക്കൊണ്ടും, ജൈവവൈവിധ്യങ്ങളുടെ വംശനാശം സംഭവിക്കുവോളം ഭൂമിയെ ദുരുപയോഗംചെയ്തും കീഴ്പ്പെടുത്തിയും വെട്ടിവെളിപ്പിച്ചും മുന്നേറിയത് നേട്ടവും വികസനവുമെന്നു നാം വിചാരിച്ചു.

മനുഷ്യര്‍ക്കു നേരെയുള്ള പ്രകൃതിയുടെ തിരിച്ചടിയാണ് കാലാവസ്ഥാപരമായും, ആരോഗ്യപരമായും മനുഷ്യര്‍ ഇന്ന് അനുഭവിക്കുന്ന ദുരന്തങ്ങളെന്ന്, വൈകിയെങ്കിലും ശാസ്ത്രം കണ്ടെത്തിക്കഴിഞ്ഞു. ജുന്തുലോകത്തെയും അവരുടെ സ്വൈര്യവാസത്തെയും നശിപ്പിച്ച മനുഷ്യര്‍ ഇന്ന് സാര്‍സ്, മാര്‍സ്, എബോള, കോവിഡ്-19 എന്നിങ്ങനെയുള്ള ജന്തുജന്യരോഗങ്ങള്‍ക്ക് അടിമയായി വലയുകയാണ്. അപ്പോഴും സഹസ്രാബ്ദങ്ങള്‍ക്കു മുന്നേ കുറിച്ച സങ്കീര്‍ത്തന വരികള്‍ നമ്മെ ഇന്നും ഉദ്ബോധിപ്പിക്കുന്നത് സ്രഷ്ടാവിനെ സ്തുതിച്ചും, സൃഷ്ടിയെ പരിരക്ഷിച്ചും, ആവശ്യത്തിന് ഉപയോഗിച്ചും നന്ദിയുള്ളവരായി ഭൂമുഖത്ത് ജീവിക്കണമെന്നും, സഹജീവികളോടും ജന്തു-സസ്യലോകത്തോടും പരിഗണനയുള്ളവരായി മനുഷ്യര്‍ സാഹോദര്യത്തില്‍ വസിക്കണമെന്നുമാണ്.

Musical Version : Psalm 19 Unit two
കര്‍ത്താവിന്‍റെ നിയമങ്ങള്‍ അവികലമാണ്
ആത്മാവിനവയെന്നും നവജീവനേകുന്നു
അവിടുത്തെ സാക്ഷ്യം വിശ്വാസ്യമാണ്
താഴ്മയുള്ളോരെ അത് വിജ്ഞരാക്കുന്നു.

7. കല്പനകളുടെ ദൈവം
ചരിത്രത്തില്‍ മോശയ്ക്ക് ദൈവം സ്വയം വെളിപ്പെടുത്തിയ സംഭവം ഗീതത്തിന്‍റെ വരികളില്‍ പ്രതിഫലിപ്പിക്കുന്നുണ്ട്, കാരണം സങ്കീര്‍ത്തകന്‍ ഇസ്രായേലിന്‍റെ പുത്രനാണ്. ചരിത്രപുരുഷനായ മോശയിലൂടെ നല്കിയ 10 പ്രമാണങ്ങള്‍ ദൈവത്തിന്‍റെ വെളിപ്പെടുത്തലുകളായി സങ്കീര്‍ത്തകന്‍ വരികളില്‍ ചൂണ്ടിക്കാണിക്കുന്നു. അടിമത്വത്തില്‍നിന്നു മോചിപ്പിച്ച്, സ്വാതന്ത്ര്യം നല്കി വാഗ്ദത്ത ഭൂമിയിലേയ്ക്ക് തന്‍റെ ജനത്തെ നയിച്ച ദൈവം കാലക്രമത്തില്‍ കണ്ടത് വഴിതെറ്റിപ്പോവുകയും, ധിക്കാരപൂര്‍വ്വം സ്രഷ്ടാവും വിമോചകനും നിയമദാതാവുമായ അവിടുത്തെ മറന്നുജീവിക്കുകയും ചെയ്ത ജനത്തെയാണ്. മനുഷ്യരുടെ മനോഫലകങ്ങളില്‍ നന്മ-തിന്മയുടെ വിവേചനത്തിന്‍റെ മനഃസ്സാക്ഷി നല്കിയ ദൈവം, തിരഞ്ഞെടുക്കപ്പെട്ട നേതാവായ മോശയ്ക്ക് തന്നെത്തന്നെ വെളിപ്പെടുത്തികൊണ്ട്, ജനത്തിന് ജീവിതനിയമങ്ങള്‍ 10 കല്പനകളായി നല്കി. തന്നെതന്നെ നിയമദാതാവും നീതിനിഷ്ഠനുമായി ദൈവം വെളിപ്പെടുത്തുന്നു.

8. കല്പന ലംഘിക്കുന്നവര്‍

ഇന്നു ലോകത്ത് നാം കാണുന്ന അനീതിയും അഴിമതിയും അക്രമവും തട്ടിപ്പും നരഹത്യയുമെല്ലാം ലളിതമായ ഭാഷയില്‍ നിയമങ്ങളുടെ ലംഘനവും, ദൈവത്തെയും സഹോദരങ്ങളെയും അവഗണിച്ചുള്ള ജീവിതവുമാണെന്ന് സങ്കീര്‍ത്തകന്‍ വരികളില്‍ ചൂണ്ടിക്കാണിക്കുന്നു. ഇന്നു പ്രകടമായി കാണുന്ന മതമൗലികവാദവും വംശീയവാദവും, പാവങ്ങളോടും പാര്‍ശ്വവത്ക്കരിക്കപ്പെട്ടവരോടും അഭയാര്‍ത്ഥികളോടും സമൂഹം കാണിക്കുന്ന അവഞ്ജയും അവഹേളനവും നിസംഗതയും ചൂഷണവും കാലികമായി ദൈവികപദ്ധതിയോടും അവിടുത്തെ കല്പനകളോടും മനുഷ്യര്‍ കാണിക്കുന്ന ബോധപൂര്‍വ്വമായ തെറ്റുകളായി സങ്കീര്‍ത്തനവരികള്‍ പഠിപ്പിക്കുന്നു.

Musical Version : Psalm 19 Unit three
കര്‍ത്താവിന്‍റെ കല്പനകള്‍ നീതിയുക്തമാണ്
അവ ഹൃദയത്തിനെന്നും ആനന്ദമേകുന്നു
കര്‍ത്താവിന്‍റെ പ്രമാണങ്ങള്‍ പാവനമാണ്
അതു കണ്ണുകളെ പ്രകാശിപ്പിക്കുന്നു.

9. രക്ഷയിലേയ്ക്കുള്ള ദൈവത്തിന്‍റെ ക്ഷണം
സങ്കീര്‍ത്തനം 19-ന്‍റെ അവലോകനം അവസാനഭാഗം രക്ഷയുടെ വഴിയിലേയ്ക്കുള്ള ക്ഷണമാണ്. വഴിതെറ്റിപ്പോയ മനുഷ്യകുലത്തെ ദൈവിക വഴികളിലേയ്ക്ക് തിരികെ വിളിക്കുന്നതാണ് രക്ഷയുടെ വഴി. ദൈവത്തിന്‍റെ ആദ്യവെളിപ്പെടുത്തലായ സൃഷ്ടിയെ നശിപ്പിക്കുകയും സ്വാര്‍ത്ഥമായി ഉപയോഗിക്കുകയും ചെയ്യുന്ന മനുഷ്യന് ദൈവം കല്പനകള്‍ നല്കിയെങ്കിലും, കാലക്രമത്തില്‍ മനുഷ്യന്‍ അവയെല്ലാം അവഗണിക്കുകയും തന്‍റേതായ വഴികളില്‍ ഗമിക്കുകയും ചെയ്യുന്നു.

10. ക്രിസ്തുവില്‍ തുറന്ന രക്ഷണീയ മാര്‍ഗ്ഗം
ചരിത്രത്തില്‍ രക്ഷയുടെ വെളിപ്പെടുത്തല്‍ യാഥാര്‍ത്ഥ്യമാകുന്നത് ക്രിസ്തുവിലാണ്. ദൈവരാജ്യത്തിന്‍റെ സാന്നിദ്ധ്യം തന്നിലൂടെ ലോകത്തിന് ദൃശ്യനാക്കിയ ക്രിസ്തു, തന്‍റെ വാക്കുകളിലൂടെയും പ്രവൃത്തികളിലൂടെയും – അല്ലെങ്കില്‍ സുവിശേഷത്തിലൂടെ ദൈവപിതാവിന്‍റെ അളവറ്റ സ്നേഹവും കാരുണ്യവും മനുഷ്യകുലത്തിന് വെളിപ്പെടുത്തിക്കൊടുത്തു. അവിടുന്ന് പാപികളും ബലഹീനരുമായ മനുഷ്യര്‍ക്ക് രക്ഷയുടെ മാര്‍ഗ്ഗം തുറന്നുതന്നു. വഴിതെറ്റി അലയുന്നവര്‍ക്ക് ക്രിസ്തു രക്ഷയുടെ വഴികള്‍ തുറന്നിടുകയും, തിരികെവരുവാന്‍ സന്മനസ്സുള്ളവര്‍ക്കായ് സ്നേഹസമ്പന്നനായ സ്വര്‍ഗ്ഗീയ പിതാവ് എന്നും കാത്തിരിക്കുകയാണെന്ന് പഠിപ്പിക്കുകയും ചെയ്തു. ക്രിസ്തുവിന് ഒരായിരം വര്‍ഷങ്ങള്‍ക്കു മുന്നേ (BC 1015 circa) രചിച്ച 19-Ɔο സങ്കീര്‍ത്തന വരികളുടെ പ്രസക്തിയും പ്രാധാന്യവും ആത്മീയഭാവവും ഉള്‍ക്കൊണ്ടുകൊണ്ട് ലളിതമായ ഈ അവലോകനം ഉപസംഹരിക്കുന്നു.

Musical Version : Psalm 19 Unit 4.
കര്‍ത്താവിന്‍റെ നിയമങ്ങള്‍ അവികലമാണ്
ആത്മാവിനവയെന്നും നവജീവനേകുന്നു
അവിടുത്തെ സാക്ഷ്യം വിശ്വാസ്യമാണ്
താഴ്മയുള്ളോരെ അത് വിജ്ഞരാക്കുന്നു.
- കര്‍ത്താവിന്‍

ദൈവഭക്തി നിര്‍മ്മലമാണ്
അതെന്നേയ്ക്കും നിലനില്ക്കുന്നു
കര്‍ത്താവിന്‍റെ വിധികള്‍ സത്യമാണ്
അവ തികച്ചും നീതിപൂര്‍വ്വകം.
- കര്‍ത്താവിന്‍ കല്പനകള്‍

വത്തിക്കാന്‍ വാര്‍ത്താവിഭാഗത്തിന്‍റെ വചനവീഥി എന്ന ബൈബിള്‍ പഠനപരമ്പര.

അടുത്ത ആഴ്ചയില്‍ 30-Ɔο സങ്കീര്‍ത്തനത്തിന്‍റെ പഠനം ആരംഭിക്കും (ഭാഗം ഒന്ന്).
 

சமுதாயம் என்ற உடலில், மனித வர்த்தகம் ஒரு காயம்

மனித வர்த்தகத்திற்கு எதிரான வத்திக்கான் கருத்தரங்கில் திருத்தந்தை பிரான்சிஸ்

ஒவ்வோர் ஆண்டும், ஜூலை 30ம் தேதியன்று, மனித வர்த்தகத்தை எதிர்க்கும் உலக நாளும், நட்பின் உலக நாளும் சிறப்பிக்கப்படுவதால், இவ்விரு கருத்துக்களையும் மையப்படுத்தி திருத்தந்தை இரு டுவிட்டர் செய்திகளைப் பதிவு செய்திருந்தார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூலை 30, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட இரு உலக நாள்களை நினைவுகூரும் வண்ணம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார்.

மனித வர்த்தகத்தை எதிர்க்கும் உலக நாள்

ஒவ்வோர் ஆண்டும், ஜூலை 30ம் தேதியன்று, மனித வர்த்தகத்தை எதிர்க்கும் உலக நாளும், நட்பின் உலக நாளும் சிறப்பிக்கப்படுவதால், இவ்விரு கருத்துக்களையும் மையப்படுத்தி, திருத்தந்தை, இரு டுவிட்டர் செய்திகளைப் பதிவுசெய்திருந்தார்.

"இன்றைய மனித சமுதாயம் என்ற உடலில், மனித வர்த்தகம் ஒரு காயமாக தொடர்ந்து வருகிறது. விற்பனைப் பொருள்களாக மாற்றப்பட்டுள்ள மனிதர்களை விடுவிக்க உழைத்துவரும் அனைவருக்கும் நான் மனமார்ந்த நன்றி கூறுகிறேன். இன்னும் செய்யவேண்டியவை அதிகம் உள்ளது!" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியில் இடம் பெற்றிருந்தன.

2014ம் ஆண்டு முதல், உலகெங்கும் சிறப்பிக்கப்படும் மனித வர்த்தகத்தை எதிர்க்கும் உலக நாளுக்கென, இவ்வாண்டு, "மனித வர்த்தகத்தை முடிவுக்குக் கொணர முன்னணியில் இருந்து செயலாற்றுதல்" என்ற மையக்கருத்து தெரிவு செய்யப்பட்டது.

நட்பின் உலக நாள்

நாடுகள், கலாச்சாரங்கள் ஆகியவற்றின் இடையே பாலங்களை எழுப்பும் ஒரு முயற்சியாக, 2011ம் ஆண்டு முதல், ஐ.நா.அவை சிறப்பித்துவரும் நட்பின் உலக நாளுக்கென திருத்தந்தை, இவ்வியாழனன்று, தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

"நட்பு என்பது, வாழ்வின் கொடை, மற்றும் இறைவனின் கொடை. கடினமான நேரங்களில் நம் அருகிலிருக்கும் உண்மையான நண்பர்கள், ஆண்டவரின் பரிவு, ஆறுதல் மற்றும் அன்புநிறை பிரசன்னத்தை பிரதிபலிப்பவர்கள்" என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

மனித வர்த்தகத்தில் அதிக அளவில் சிக்கியுள்ள குழந்தைகள்

மனித வர்த்தகத்திலிருந்து மீட்கப்பட்ட சிறார்

மனித வர்த்தகத்தின் பல்வேறு வடிவங்களையும், இந்தக் கொடுமைக்கு பலியானோரையும் அடையாளம் காண்பதற்கு, உலக அரசுகள் கூடுதல் முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும் - அகில உலக காரித்தாஸ் நிறுவனம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனித வர்த்தகத்தின் பல்வேறு வடிவங்களையும், இந்த கொடுமைக்கு பலியானோரையும் அடையாளம் காண்பதற்கு, உலக அரசுகள் கூடுதல் முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும் என்று, அகில உலக காரித்தாஸ் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

மனித வர்த்தகத்தை வளர்க்க உதவிய கொள்ளை நோயும், முழு அடைப்பும்

மனித வர்த்தகத்தை எதிர்க்கும் உலக நாள் ஜூலை 30 சிறப்பிக்கப்பட்டதையொட்டி, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள காரித்தாஸ் நிறுவனம், இந்தக் கொள்ளை நோயும், அதன் விளைவாக சுமத்தப்பட்டுள்ள முழு அடைப்பும், மனித வர்த்தகத்தை வளர்ப்பதற்கு வாய்ப்புக்களாக அமைந்துவிட்டன என்று சுட்டிக்காட்டியுள்ளது.

மனித வர்த்தகத்தை ஒழிக்க பாடுபட்டுவரும் 46 கிறிஸ்தவ நிறுவனங்களின் கூட்டமைப்பான COATNET என்ற அமைப்புடன், அகில உலக காரித்தாஸ் நிறுவனமும் இணைந்து இந்தக் கொடுமையைப் போராடும் வழிகளைப் பரிந்துரைத்துள்ளது.

நலிவுற்றோர், மனித வர்த்தக இலக்குகள்

நலிவுற்ற சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள், மனித வர்த்தகம் என்ற கொடுமைக்கு எளிதில் இலக்காகின்றனர் என்பதை உணர்ந்து, இவர்களை மீட்பதற்கும், பாதுகாப்பதற்கும், இந்தக் கொள்ளைநோய் காலத்தில் கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அகில உலகக் காரித்தாஸ் நிறுவனத்தின் பொதுச் செயலர், திருவாளர் அலோய்சியஸ் ஜான் அவர்கள் கூறினார்.

கோவிட்-19 கொள்ளைநோயைக் கட்டுப்படுத்த அரசுகள் மேற்கொண்டுள்ள முழு அடைப்பு என்ற ஒழுங்குமுறையைப் பயன்படுத்தி, மனித வர்த்தகத்தில் சிக்கியிருப்போரை அடைத்து வைத்துள்ள வர்த்தகர்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் சிக்கியிருப்போரை விடுவிப்பது அவசரத் தேவை என்று, திருவாளர் ஜான் அவர்கள் கூறினார்.

இந்தக் கொள்ளைநோய் காலத்தில், மனித வர்த்தகத்தில் சிறுவர், சிறுமியர் அதிக அளவில் சிக்கியுள்ளனர் என்றும், இந்தியாவில் மட்டும் பத்துநாள் காலக்கட்டத்தில் 92,000 குழந்தைகள் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், அகில உலக காரித்தாஸ் நிறுவனத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஐரோப்பாவில் குழந்தைகள் வர்த்தகம்

மேலும், குழந்தைகள் நலனில் அக்கறை கொண்டு பணியாற்றும் "Save The Children Italy" என்ற அமைப்பு, மனித வர்த்தகத்திற்கு எதிரான உலக நாளையொட்டி வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், ஐரோப்பாவில் மனித வர்த்தகத்திற்கு பலியாவோரில், நான்கில் ஒருவர் குழந்தைகள் என்று கூறப்பட்டுள்ளது.

"காணமுடியாத சிறு அடிமைகள் 2019" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளில், வர்த்தகம் செய்யப்படும் மனிதர்களில், நான்கில் ஒருவர், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், இவர்களில் மூன்றில் இருவர் இளம்பெண்கள் அல்லது, சிறுமிகள் என்று கூறப்பட்டுள்ளது.

நைஜீரியா, ருமேனியா, பல்கேரியா மற்றும் ஆல்பேனியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இளம்பெண்கள் அல்லது சிறுமிகள், ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக விற்கப்படுகின்றனர் என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மனித வர்த்தகத்தை ஒழிக்க பாடுபடும் அருள் சகோதரிகள்

மனித வர்த்தகத்திலிருந்து மீட்கப்பட்ட பெண்களுக்கு  தலித்தா கும் அமைப்பின அருள் சகோதரிகள் மறுவாழ்வு

மனித வர்த்தகத்தை ஒழிப்பதற்கு, கத்தோலிக்கத் திருஅவையில், முன்னணி முயற்சிகளை மேற்கொண்டு வருபவர்கள், பெண் துறவிகளே - கர்தினால் மைக்கிள் செர்னி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனித வர்த்தகத்தை ஒழிப்பதற்கு, கத்தோலிக்கத் திருஅவையில், முன்னணி முயற்சிகளை மேற்கொண்டு வருபவர்கள், பெண் துறவிகளே என்று திருப்பீடத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

பெண் துறவிகளின் முன்னணி முயற்சிகள்

ஜூலை 30, இவ்வியாழனன்று, மனித வர்த்தகத்தை எதிர்க்கும் உலக நாள் கடைபிடிக்கப்பட்டதையொட்டி, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின், புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர் துறையின் நேரடிச் செயலராகப் பணியாற்றும் கர்தினால் மைக்கிள் செர்னி அவர்கள், வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில், மனித வர்த்தகத்தை ஒழிக்க முன்னணி முயற்சிகளை மேற்கொள்வோர் பெண் துறவிகள் என்று கூறினார்.

உலகின் பல நாடுகளிலும் பணியாற்றும் பெண் துறவிகள், அந்தந்த நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ப, மனித வர்த்தகத்தை தடுப்பதற்கும், ஒழிப்பதற்கும், படைப்பாற்றல் மிகுந்த தீர்வுகளைக் கண்டு, செயல்படுத்தி வருகின்றனர் என்று கர்தினால் செர்னி அவர்கள் எடுத்துரைத்தார்.

தடுத்தல், விடுவித்தல், மறுவாழ்வு வழங்குதல்...

மனித வர்த்தகம் என்ற குற்றத்தைத் தடுத்தல், இந்த வர்த்தகத்தில் சிக்கியுள்ளோரை விடுவித்தல், அவர்களை மீண்டும் மனித சமுதாயத்தில் இணைத்து, மறுவாழ்வு வழங்குதல், இந்த வர்த்தகத்தைத் தடுக்கும்வண்ணம் விழிப்புணர்வை வளர்த்தல் என்று, பல நிலைகளிலும் பெண் துறவிகள் பணியாற்றுகின்றனர் என்பதை, கர்தினால் செர்னி அவர்கள், தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

கோவிட்-19, மனித வர்த்தகம் – இரு கொள்ளைநோய்கள்

உலகெங்கும் பரவி, தற்போது இவ்வுலகில் தங்கிவிட்ட கொரோனா கொள்ளைநோய் போலவே, மனித வர்த்தகமும், உலகெங்கும் பரவி, மனித சமுதாயத்தில் தங்கிவிட்ட கொள்ளைநோயாக மாறிவிட்டது என்பதை உணர்ந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தக் கொள்ளைநோயை வேரோடு அழிக்க மிகுந்த பொறுமையும், அறிவுசார்ந்த நடவடிக்கைகளும் தேவை என்பதையும் வலியுறுத்தி வருகிறார் என்பதை, கர்தினால் செர்னி அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

கோவிட்-19 கொள்ளைநோயின் தாக்கத்தை ஒரு வாய்ப்பாகக் கருதி, மனித வர்த்தகம் என்ற கொடுமை அதிகரித்துள்ளது என்பதை வருத்தத்துடன் வெளியிட்ட கர்தினால் செர்னி அவர்கள், இந்த வர்த்தகத்தின் பல்வேறு வடிவங்கள் நம்மைச் சுற்றி இருப்பதால், நாம் ஒவ்வொருவரும் இந்தக் கொடுமையை ஒழிக்க ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

தியான இல்லங்கள் மூடப்பட்டாலும், தியான வாழ்வு மறையாது

ஆழ்நிலை தியான வாழ்வு வாழ்கின்ற அருள்சகோதரிகள்

இவ்வுலகிற்கு உணவும், நீரும் எவ்வளவு தேவையோ, அதேவண்ணம், ஆழ்நிலை தியான வாழ்வும் தேவை - அர்ப்பணிக்கப்பட்டோர் வாழ்வு பேராயத்தின் தலைவர் கர்தினால் João Braz de Aviz

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இவ்வுலகிற்கு உணவும், நீரும் எவ்வளவு தேவையோ, அதேவண்ணம், ஆழ்நிலை தியான வாழ்வும் தேவை என்று, அர்ப்பணிக்கப்பட்டோர் வாழ்வு பேராயத்தின் தலைவர், கர்தினால் João Braz de Aviz அவர்கள் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

Vida Nueva என்ற இஸ்பானிய இதழுக்கு, ஜூலை 27, இத்திங்களன்று வழங்கிய ஒரு பேட்டியில், கடந்த ஆண்டு, இஸ்பெயின் நாட்டில் 32 ஆழ்நிலை தியான இல்லங்கள் மூடப்பட்டன என்பது குறித்து எழுந்த ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், கர்தினால் Braz de Aviz அவர்கள், தியான இல்லங்கள் மூடப்பட்டாலும், தியான வாழ்வு திருஅவையிலிருந்து மறையாது என்று கூறினார்.

ஆழ்நிலை தியான வாழ்வோ, பொதுவாக, துறவு வாழ்வோ, ஒரு தீவில் உருவாகும் வாழ்வு அல்ல, மாறாக, அது, ஓர் இல்லத்தில், ஒரு குடும்பத்தில் உருவாகிறது என்று சுட்டிக்காட்டிய கர்தினால் Braz de Aviz அவர்கள், பொதுவாகவே, குடும்பங்களில் கிறிஸ்தவ வாழ்வுக்கு சான்று பகரும் பண்பு குறைந்துவருகிறது என்று கூறினார்.

நம் குடும்பங்களிலும், துறவு இல்லங்களிலும் பின்பற்றப்படும் உருவாக்குதல் பணி இன்னும் ஆழமாக வேண்டும் என்றும், கிறிஸ்துவை சந்திப்பவர்கள், மற்றவருக்கு சாட்சிகளாக வாழ பல வழிகளிலும் அழைக்கப்படுகின்றனர் என்றும் கர்தினால் Braz de Aviz அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார். (CNA)

வெரித்தாஸ் வானொலி ஆசியப் பிரிவின் உருது சேவை

வெரித்தாஸ் வானொலி ஆசியப் பிரிவின் உருதுமொழிச் சேவையை பேராயர் அர்ஷத்  துவக்கிவைக்கிறார்

கிறிஸ்தவ உலகின் செய்திகளை பாகிஸ்தான் மக்கள் அறிந்துகொள்ளவும், அமைதி, அன்பு ஆகிய உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளவும் உதவியாக இருக்கும் வானொலி - பேராயர் ஜோசப் அர்ஷத்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வெரித்தாஸ் வானொலி ஆசியப் பிரிவின் உருதுமொழிச் சேவையை, பாகிஸ்தான் தலத்திருஅவை, ஜூலை 25, கடந்த சனிக்கிழமைத் துவங்கியது என்று பீதேஸ் செய்தி கூறியுள்ளது.

பாகிஸ்தான் சமூகத்தொடர்பு பணிக்குழுவின் தலைவரும், இஸ்லாமாபாத்-இராவல்பிண்டி உயர் மறைமாவட்ட பேராயருமான ஜோசப் அர்ஷத் அவர்கள், இலாகூரில் அமைந்துள்ள தேசிய கத்தோலிக்க சமூகத் தொடர்பு மையத்தில் நிறுவப்பட்டுள்ள இந்தச் சேவையை, ஆசீர்வதித்து, துவக்கிவைத்தார்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும், வலைத்தளத்தின் வழியே ஒலிபரப்பாகும் 20 நிமிட செய்தித் தொகுப்பு நிகழ்ச்சி, கிறிஸ்தவ உலகின் செய்திகளை பாகிஸ்தான் மக்கள் அறிந்துகொள்ளவும், அமைதி, அன்பு ஆகிய உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளவும் உதவியாக இருக்கும் என்று பேராயர் அர்ஷத் அவர்கள் கூறினார்.

இந்த 20 நிமிட ஒலிபரப்பு, சுற்றுச்சூழல், மனித உரிமைகள், அமைதி முயற்சிகள், கல்வி, பிறரன்புப் பணிகள், பல்சமய உரையாடல் ஆகிய பல பிரிவுகளில், உலகெங்கிலுமிருந்து செய்திகளைத் திரட்டி வழங்கும் என்று, தேசிய கத்தோலிக்க சமூகத் தொடர்பு மையத்தின் இயக்குனர் அருள்பணி Qaiser Feroz அவர்கள் கூறினார்.

பாகிஸ்தானில் இயங்கிவந்த கிறிஸ்தவ ஊடக முயற்சிகள் அனைத்தையும், அந்நாட்டு அரசு, PEMRA என்ற சட்டத்தின் வழியே, 2016ம் ஆண்டு தடை செய்துள்ளதால், வலைத்தளம் வழியே தலத்திருஅவை இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

வலுவுள்ளவர் வலுவற்றவருக்கு உதவ..

புலியும் நரியும்

வலிமையுள்ளவர் வலுவற்றவருக்கு உதவவே கடவுள் ஒவ்வொருவருக்கும் நல்ல உடல்நலத்தைக் கொடுத்திருக்கிறார்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஓர் ஊரில் இறைபக்தியுள்ள மனிதர் ஒருவர் இருந்தார். அவர் அடிக்கடி ஆலயம் சென்று இறைவேண்டல் செய்வார். அதற்குப் பிறகு காட்டுக்குப் போவார். விறகு வெட்டுவார். அதைக் கொண்டுபோய் விற்பனை செய்வார். ஓரளவுக்கு வருமானம் வந்தது அதை வைத்துக்கொண்டு நிம்மதியாக வாழ்க்கை நடத்திவந்தார்.  ஒரு நாள் அது அவர் காட்டுக்குப் போகும்போது, அங்கே ஒரு நரியைப் பார்த்தார். அந்த நரிக்கு முன்னங்கால்கள் இரண்டுமே இல்லை. ஏதோ விபத்தில் இழந்துவிட்டது போல இருந்தது. அது அமைதியாக ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருந்ததைப் பார்த்த அந்த மனிதர் மனதில் ஒரு சந்தேகம். இந்த நரிக்கு இரண்டு கால்களும் இல்லை. அப்படி இருக்கும்போது இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கிக் கொள்ளமுடியும்? என்று சிந்திக்கத் தொடங்கினார். அவ்வாறு சிந்தித்துக்கொண்டு இருந்தபோதே அந்தப் பக்கமாக ஒரு புலி வந்தது. அதைப் பார்த்த உடனே ஓடிப்போய் ஒரு மரத்துக்கு பின்னால் ஒளிந்துகொண்டு,  என்ன நடக்கிறது என்று கவனிக்க ஆரம்பித்தார். அந்த புலி ஒரு பெரிய மானை அடித்து இழுத்துக்கொண்டு வந்து அதை சாப்பிட்டது. சாப்பிட்டது போக மீதியை அப்படியே அங்கேயே போட்டுவிட்டுப் போய்விட்டது. புலி போனபின், கால் இல்லாத அந்த நரி மெதுவாக நகர்ந்து வந்து, அதில் மீதமிருந்ததைச் சாப்பிட்டது. திருப்தியாகவும் அது போய்விட்டது. இவ்வளவையும் மரத்துக்குப் பின்னால் நின்று கவனித்துக்கொண்டிருந்த அந்த மனிதர் சிந்திக்கதச் தொடங்கினார். இரண்டு கால்களும் இல்லாத ஒரு வயதான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடுகிறார். அப்படி இருக்கும்போது, தினமும் கோவிலுக்குப் போய் சாமி கும்பிடும் எனக்கு சாப்பாடு போடாமலா விட்டுவிடுவார்? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம், நாம் ஏன் அனாவசியமாக வெயிலிலும் மழையிலும் கஷ்டப்படவேண்டும்?  எதற்காக வேர்வை சிந்தி விறகு வெட்டவேண்டும்?  இப்படி யோசித்த அந்த மனிதர், அதற்குப் பிறகு காட்டுக்கே போவதில்லை. கோடலியைத் தூக்கி எறிந்துவிட்டார். ஆனால்  கோவிலுக்கு மட்டும் அவ்வப்போது சென்று வந்தார். கடவுள் நம்மை காப்பாற்றுவார், அவர் நமக்கு வேண்டிய உணவைக் கொடுப்பார் என்று நம்பி, கண்ணை மூடிக்கொண்டு கோயில் மண்டபத்திலேயே ஒரு தூணில் சாய்ந்து உக்கார்ந்துவிட்டார். இவ்வாறு ஒவ்வொரு நாளும் போய்க்கொண்டே இருந்தது. சாப்பாடு வரவில்லை. அவர் பசியால் வாடினார். எலும்பும் தோலுமாக அவர் ஆகிவிட்டார். ஒரு நாள் இரவில், அவர் மெதுவாக கண்ணைத் திறந்து கடவுளைப் பார்த்தார். கடவுளிடம் புலம்பினார். அப்போது கடவுள், மெதுவாக கண்ணைத் திறந்து சொன்னாராம் – அறிவிலியே, நீ பாடம் கற்றுக்கொள்ளவேண்டியது நரியிடம் இருந்து அல்ல, புலியிடமிருந்து என்று.

மரணதண்டனையை மீண்டும் கொணரும் முயற்சிக்கு எதிர்ப்பு

பிலிப்பீன்ஸ் நாட்டில் அடிப்படை உரிமைகள் கேட்டு போராட்டம்

மரணதண்டனை விதிக்கும் சட்டத்தை மீண்டும் கொணர்வதற்கு, பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் ரொட்ரிகோ துத்தெர்த்தே அவர்கள் விடுத்துள்ள அழைப்பை, அந்நாட்டு கத்தோலிக்கத் தலைவர்கள் வன்மையாக எதிர்த்துள்ளனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சட்டத்திற்குப் புறம்பான போதைப்பொருள் பயன்பாடு, மற்றும் சில குற்றங்களுக்கு, மரணதண்டனை விதிக்கும் சட்டத்தை மீண்டும் கொணர்வதற்கு, பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் ரொட்ரிகோ துத்தெர்த்தே (Rodrigo Duterte) அவர்கள் விடுத்துள்ள அழைப்பை, அந்நாட்டு கத்தோலிக்கத் தலைவர்கள் வன்மையாக எதிர்த்துள்ளனர்.

பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் சிறை மேய்ப்புப்பணிக்குழுவின் தலைவர் ஆயர் Joey Baylon அவர்கள், மரணதண்டனை உட்பட, எந்த ஒரு தண்டனையும், மனிதர்களை நல்வழிப்படுத்தியதில்லை என்பதை, வரலாறு நமக்குச் சொல்லித்தந்துள்ளது என்று கூறினார்.

மனிதர்களுக்கு அடிப்படையான மதிப்பை வழங்குவதற்கும், அவர்கள் மனம்மாறி, நல்வழியைத் தொடர வாய்ப்பளிப்பதற்கும் சட்டங்கள் உருவாக்கப்படவேண்டும் என்று ஆயர் Baylon அவர்கள், அழைப்பு விடுத்தார்.

ஜூலை 27ம் தேதி பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் மக்களுக்கு வழங்கிய தொலைக்காட்சி உரையில், மரணதண்டனையை மீண்டும் கொணர்வதுபற்றி பேசியது குறித்து, மரணதண்டனைக்கு எதிரான கூட்டணி என்ற அமைப்பின் தலைவர் அருள்பணி Silvino Borres அவர்கள் தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டார்.

பிலிப்பீன்ஸ் நாட்டில் மரணதண்டனை ஒழிக்கப்பட்டதன் 14ம் ஆண்டு நிறைவையொட்டி தன் கருத்துக்களை வெளியிட்ட அருள்பணி Borres அவர்கள், வாழ்வின் அடித்தளமாக விளங்கும் கடவுளுக்கு எதிராக எடுக்கப்படும் முடிவே மரணதண்டனை என்று கூறினார். (CNA)

எகிப்து நாட்டில், "ஏழைகளின் மருத்துவர்" மரணம்

"ஏழைகளின் மருத்துவர்" - Mohammed Mashaly

ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 15 மணி நேரங்கள் மக்களுக்காகப் பணியாற்றிய மருத்துவர் Mohammed Mashally அவர்கள், வறியோரிடமிருந்து எவ்வித கட்டணமும் வாங்காமல் பணியாற்றினார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

எகிப்து நாட்டில், "ஏழைகளின் மருத்துவர்" என்றழைக்கப்பட்ட மருத்துவர் Mohammed Mashaly அவர்கள், தன் 76வது வயதில் மரணமடைந்தார்.

"உடன்பிறந்த நிலை" என்ற இஸ்லாமிய கிறிஸ்தவ கூட்டறிக்கையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து வெளியிட்ட அல் அசார் தலைமை குருவான Ahmed Al-Tayyeb அவர்கள், மருத்துவர் Mashaly அவர்களின் மறைவுக்கு தன் இரங்கல் செய்தியை வழங்கிய வேளையில், Mashaly அவர்கள், தன் வாழ்வின் இறுதி நாள் வரை தேவையில் உள்ள நோயாளிகளுக்கு உதவினார் என்று கூறினார்.

1967ம் ஆண்டு மருத்துவப் படிப்பை நிறைவு செய்த Mashaly அவர்கள், எகிப்து நாட்டின் பல்வேறு கிராமப்புறங்களில் தன் பணிகளைத் துவக்கி, பின்னர் அந்நாட்டின் Tanta என்ற நகரில் மருத்துவமனையொன்றைத் துவங்கி நடத்திவந்தார்.

ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 15 மணி நேரங்கள் மக்களுக்காகப் பணியாற்றிய அவர், மக்களிடமிருந்து, குறிப்பாக, வறியோரிடமிருந்து எவ்வித கட்டணமும் வாங்காமல் பணியாற்றினார் என்று சொல்லப்படுகிறது.

கொள்ளைநோய் குறித்தும், குழந்தைகள் மருத்துவம் மற்றும் உட்கொள்ளப்படும் மருந்துகள் ஆகிய துறைகள் குறித்தும் சிறந்த அறிவு பெற்றிருந்த மருத்துவர் Mashaly அவர்கள், கடந்த ஓராண்டளவாக உடல்நலம் குன்றியிருந்த நிலையில், ஜூலை 28, இச்செவ்வாய் அதிகாலையில் மரணமடைந்தார்.

Wednesday 29 July 2020

கொரோனா தொற்று காலத்தில் விசுவாசத்திற்கு சான்று பகர்வது

திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை : வாழ்வில் எது முக்கியம் என்பதையும், மற்றவர்களுடன் ஒருமைப்பாட்டுடன் வாழவேண்டியதன் தேவையையும் கோவிட்-19 நெருக்கடி நமக்கு உணர்த்தியுள்ளது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
இந்த கொரோனா கொள்ளைநோய் காலத்தில் நம் விசுவாசத்திற்கு எவ்விதம் சான்று பகர்வது என்பதை மையப்படுத்தி, கர்தினால் வால்ட்டர் காஸ்பர் (Walter Kasper) அவர்கள் எழுதியுள்ள நூலுக்கு முன்னுரை வழங்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்புப் பேரவையின் முன்னாள் தலைவர், கர்தினால் வால்ட்டர் காஸ்பர் அவர்களும், பல்லோட்டைன் துறவுச்சபையைச் சேர்ந்த அருள்பணி ஜார்ஜ் அகஸ்டின் அவர்களும் இணைந்து எழுதியுள்ள ''ஒன்றிப்பு, மற்றும், எதிர்நோக்கு' என்ற நூலுக்கு முன்னுரை வழங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு புயல்போல் திடீரென தாக்கிய இந்த கொரோனா கொள்ளைநோயால் ஏற்பட்டுள்ள பல்வேறு பாதிப்புக்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த கொரோனா கொள்ளைநோய்க் காலம், நம் மகிழ்ச்சி, மற்றும், கிறிஸ்தவ விசுவாசம் என்ற கொடைகளைக் குறித்து அடிப்படைக் கேள்விகளை எழுப்பியுள்ளது என தன் முன்னுரையில் குறிப்பிடும்  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்வில் எது முக்கியம் என்பதையும், மற்றவர்களுடன் ஒருமைப்பாட்டுடன் வாழவேண்டியதன் தேவையையும் இந்த நெருக்கடி நமக்கு உணர்த்தியுள்ளது என கூறியுள்ளார்.
இந்த கொள்ளைநோயால், கிறிஸ்தவர்கள், முடக்கப்பட தங்களை அனுமதிக்கக்கூடாது, ஏனெனில், நம்பிக்கை, மனஉறுதி, ஒருமைப்பாட்டில் நம்மை பலப்படுத்துதல் போன்றவற்றை நமக்கு வழங்கும் கிறிஸ்துவின்  உயிர்ப்பு, நம் ஒவ்வொருவரையும் அன்பில் இணைக்கிறது எனவும், தன்  முன்னுரையில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த தொற்றுநோய்க்காலத்தில் மனஉறுதியுடன் செயல்பட்டு, தங்கள் உயிரையும் தியாகம் செய்த மருத்துவப்பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் அருள்பணியாளர்களுக்கு தன் நன்றியையும் இந்நூலின் முன்னுரையில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
பல நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு, மக்கள் சுதந்திரமாக இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய எதிர்நோக்குகளுடனும், புதிய ஒருமைப்பாட்டுணர்வுகளுடனும் செயல்படத் துவங்கி, 'அஞ்சாதீர்கள். நான் சாவை வென்றுவிட்டேன்' என்ற இயேசுவின் வார்த்தைகளுடன் முன்னோக்கிச் செல்வோம், என தன் முன்னுரையை நிறைவுசெய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நன்றியுணர்வும், பாராட்டும், கிறிஸ்தவர்களின் குணநலன்கள்

செபிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

விண்ணரசு என்பது, நம் ஒவ்வொருநாள் வாழ்வையும் புதுப்பித்து, பரந்து விரிந்த தொடுவானங்களை நோக்கி நம்மை வழிநடத்திச் செல்கின்றது,
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்
நாம் சேவையாற்றப்படுவதற்கு தகுதியுடைவர்கள் என்பதாலேயே, நமக்கு பிறர் சேவையாற்றுகிறார்கள் என நாம் ஒருநாளும் எண்ணக்கூடாது என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார்.
மருத்துவரும் மறைசாட்சியுமான புனித Pantaleone அவர்களின் திருவிழாவை முன்னிட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 'நமக்கு பணியாற்றப்படும்போது, நாம் அதற்கு தகுதியுடையவர்கள் என்பதாலேயே அது ஆற்றப்படுகிறது என எண்ணக்கூடாது. நன்றியுணர்வும், பாராட்டும் முதலில் நல்ல நடவடிக்கைகள், அதேவேளை, அவை கிறிஸ்தவர்களிடம் இருக்கவேண்டிய  பண்புகள். இறையரசின் எளிய, ஆனால், உண்மை அடையாளங்கள் அவை', என கூறியுள்ளார்.
மேலும், ஜூலை 26ம் தேதி, இஞ்ஞாயிறன்று இரு டுவிட்டர் செய்திகளை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் முதல் டுவிட்டரில், விண்ணரசு என்பது, இவ்வுலகம் வழங்கும் மேம்போக்கான பொருட்களுக்கு எதிரானது, மற்றும், ஆர்வமற்ற வாழ்வுக்கும் எதிரானது. இது நம் ஒவ்வொருநாள் வாழ்வையும் புதுப்பித்து, பரந்து விரிந்த தொடுவானங்களை நோக்கி நம்மை வழிநடத்திச் செல்கின்றது என எழுதியுள்ளார்.
'இயேசுவின் தாத்தா, பாட்டியான, புனிதர்கள் சுவக்கீன், மற்றும், அன்னாவின் நினைவு நாளான இஞ்ஞாயிறன்று, நான் இளையோருக்கு ஓர் அழைப்பு விடுக்கிறேன். முதியோர், குறிப்பாக, தனிமையில் வாழ்வோர் குறித்து அக்கறையுடன் செயல்படுமாறு அழைப்பு விடுக்கிறேன். அன்பு இளையோரே, ஒவ்வொரு முதியோரும் உங்கள் தாத்தா பாட்டியே’, என்ற சொற்களை, திருத்தந்தை, தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியாகப் பதிவுசெய்தார்.

இளையோரே, வயதுமுதிர்ந்தோரை கட்டித் தழுவுங்கள்

திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரையைக் கேட்க வந்திருந்த இளையோர்

தற்போதைய நலவாழ்வு விதிமுறைகள் நேரடியான சந்திப்பை தடைசெய்திருப்பதால், ஸ்மார்ட் தொலைபேசியில், நேரில் பார்த்து பேசுவதுபோன்ற அமைப்பில், வயதில் முதிர்ந்தோரை அழைத்து உரையாடுங்கள் – திருத்தந்தையின் விண்ணப்பம்
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
வயதுமுதிர்ந்தோரை அரவணைப்பது, சமுதாய ஊடகங்களிலுள்ள காணொளி வாய்ப்புக்களைப் பயன்படுத்தி, ஒருவரைப் பார்த்து உரையாடுவது போன்றவை வழியாக, அவர்களோடு தொடர்புகொள்ளவும், தங்களின் கனிவன்பை அவர்களுக்கு வெளிப்படுத்தவும் வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று வழங்கிய மூவேளை செப உரைக்குப்பின் இளையோரைக் கேட்டுக்கொண்டார்.
இயேசுவின் தாத்தா, பாட்டியான புனிதர்கள் சுவக்கீன், அன்னா திருவிழா, ஜூலை 26, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்டதை நினைவுபடுத்திய திருத்தந்தை, வயதுமுதிர்ந்தோர் பெரும்பாலான நேரங்களில், தனியாகவும், முதியோர் இல்லங்களிலும் வாழ்ந்து வருகின்றனர், இவர்கள், பல மாதங்களாக, தங்களின் அன்புக்குரியவர்களை நேரில் சந்திக்காமல் உள்ளனர் என்றும் கூறினார்.
அன்பு இளையோரே, வயதுமுதிர்ந்தோர் ஒவ்வொருவரும் உங்களின் தாத்தா பாட்டிகள், அதனால், அவர்களை, தனியே விட்டுவிடாதீர்கள் என்று உங்களை கெஞ்சிக்கேட்டுக்கொள்கிறேன், அவர்களோடு தொடர்புகொள்ள அன்பின் கற்பனை முறைகளைப் பயன்படுத்துங்கள் என்று கூறியத் திருத்தந்தை, அதற்கு சில பரிந்துரைகளையும் முன்வைத்தார்.
தற்போதைய நலவாழ்வு விதிமுறைகள் நேரடியான சந்திப்பை தடைசெய்திருப்பதால், ஸ்மார்ட் தொலைபேசியில், நேரில் பார்த்து பேசுவதுபோன்ற அமைப்பில், அவர்களை அழைத்து உரையாடுங்கள், இயலக்கூடிய சமயங்களில், அவர்களை, நேரில் சென்று சந்தியுங்கள், அவர்களைக் அரவணைத்து முத்தம் கொடுங்கள் என்று, இளையோரிடம் திருத்தந்தை கூறினார்.
வயதுமுதிர்ந்தோர் உங்களின் வேர்கள் என்பதை இளையோருக்கு நினைவுபடுத்திய திருத்தந்தை, வேரோடு பெயர்த்தெடுக்கப்பட்ட மரம், வளராது, அல்லது, மலர்களையோ கனிகளையோ தராது என்றும் கூறிய திருத்தந்தை, வயதுமுதிர்ந்தோருடன் தொடர்பில் இருப்பது முக்கியம், அவ்வாறுதான், நாம் நம் வேர்களோடு தொடர்பில் இருக்கமுடியும் என்று கூறினார்.
மரங்களில் நாம் பார்க்கும் மலர்கள், பூமிக்கு அடியிலிருந்து வருகின்றன என்று அர்ஜென்டீனா நாட்டு கவிஞர் ஒருவர் கூறியுள்ளார் என்றுரைத்த திருத்தந்தை, நம் தாத்தா பாட்டிகளுக்கு ஆரவாரமான கரவொலியை எழுப்புவோம் என்று, வளாகத்தில் நின்றவர்களைக் கேட்டுக்கொண்டதோடு, அவர்கள் கரவொலி எழுப்பிய வேளையில்,  அவர்களோடு சேர்ந்து கைதட்டினார்.

வயதுமுதிர்ந்தோருக்கு அன்பான அரவணைப்பை அனுப்புங்கள்

"ஒவ்வொரு வயதுமுதிர்ந்தோரும் உங்கள் தாத்தா பாட்டிகள்" - புதிய முயற்சி

வயதுமுதிர்ந்தோரைப் பாதுகாப்பதற்கு, பல பகுதிகளில், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள இன்றையச் சூழலில், இளையோர் அவர்களுக்கு, தங்களின் அன்பு அரவணைப்பை, சமுதாய ஊடகங்கள் வழியாக வெளிப்படுத்துமாறு திருப்பீடம் அழைப்பு விடுத்துள்ளது
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
கோவிட்-19 விதிமுறைகளால் தனிமையை அனுபவிக்கும் வயதுமுதிர்ந்தோருக்கு உங்கள் அன்பான ஆரத்தழுவலை அனுப்புங்கள் என்று இளையோருக்கு அழைப்பு விடுக்கும், புதிய நடவடிக்கை ஒன்றை, பொதுநிலையினர், குடும்பம் மற்றும், வாழ்வு திருப்பீட அவை, ஜூலை 27, இத்திங்களன்று தொடங்கியுள்ளது.
ஜூலை 26, இஞ்ஞாயிறன்று, இயேசுவின் தாத்தா பாட்டியான, புனிதர்கள் சுவக்கீன் அன்னா திருவிழா சிறப்பிக்கப்பட்டதை, தான் வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் இளையோருக்கு நினைவுபடுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு வயதுமுதிர்ந்தோரும் உங்கள் தாத்தா பாட்டிகள் என்று கூறியதால் தூண்டப்பட்டு, இந்த புதிய நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக, அத்திருப்பீட அவை, இத்திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
வயதுமுதிர்ந்தோரிடம் கனிவு
தனிமையை உணரும் வயதுமுதிர்ந்தோருக்கு கனிவன்பையும் பாசத்தையும் காட்டுவதற்கு, ஏதாவது செய்யுங்கள் என்று இளையோருக்கு அழைப்பு விடுத்துள்ள அத்திருப்பீட அவை, இக்கொள்ளைநோயால் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்போர் வயதுமுதிர்ந்தோர் என்றும், தலைமுறைகளுக்கு இடையே ஏற்கனவே நலிவடைந்துள்ள இடைவெளியை தற்போதைய சமுதாய விலகல் அதிகமாக்கியுள்ளது என்றும் கூறியுள்ளது.
கோவிட்-19 விலகியிருத்தல் விதிமுறைகளைக் கடைப்பிடித்தல் என்பது, தனிமை மற்றும், கைவிடப்பட்டநிலையை ஏற்பது ஆகாது என்றும், தொலைப்பேசி, வலைத்தளம் போன்ற ஊடகங்கள் வழியாக, அவர்களைத் தொடர்புகொள்ளலாம், முதியோர் இல்லங்களுக்குச் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தலாம் என்றும், திருப்பீட அறிக்கை, இளையோருக்குப் பரிந்துரைத்துள்ளது.
தனிமையை அகற்ற
பலரது தனிமைத் துன்பங்களை அகற்ற, இளையோர் ஏற்கனவே உதவி வருகின்றனர் என்றும், வயதுமுதிர்ந்தோரைப் பாதுகாப்பதற்கு, பல பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள இன்றையச் சூழலில், இளையோர் அவர்களுக்கு, தங்களின் அன்பு அரவணைப்பை, காணொளி அழைப்பு, புகைப்படங்களை அனுப்புதல் மற்றும் தொலைப்பேசி வழியாக வெளிப்படுத்தலாம் என்றும் திருப்பீட அறிக்கை கூறியுள்ளது.
நலவாழ்வு அமைப்புகள், வாய்ப்புகள் வழங்கக்கூடிய இடங்களில், இளையோர் வயதுமுதிர்ந்தோரை நேரிடையாகச் சென்று சந்தித்து அவர்களின் தனிமை உணர்வை அகற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ள, பொதுநிலையினர், குடும்பம் மற்றும், வாழ்வு திருப்பீட அவை, சமுதாய ஊடகங்கள் வழியாக, உங்கள் அன்பு அரவணைப்பை அனுப்புங்கள் என்று பொருள்படும் #sendyourhug ஹாஷ்டாக்குடன் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஒரே நாளில் 35 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்

மும்பையில் கோவிட்-19 சோதனைகள்

இந்தியாவில் தொடர்ச்சியாக 2வது நாளாக 5 இலட்சத்திற்கும் அதிகமான மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளதாக உரைக்கிறது, மத்திய நலத்துறை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
இந்தியாவில் ஒரே நாளில் 35 ஆயிரம் பேர் கொரோனா கொள்ளைநோயிலிருந்து மீண்டுள்ளதாகவும், நாட்டில் தற்போது நலமடைந்தோரின் எண்ணிக்கை, 64.23 விழுக்காடாக உயர்ந்துள்ளதாகவும், இந்திய நல அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் மேலும் 47,704 பேருக்கு கொரோனா உறுதியாகி, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.84 இலட்சத்தை தாண்டியுள்ள நிலையில், ஒரே நாளில் 654 பேர் பலியானதால், இறந்தவர்களின் எண்ணிக்கையும் 33,425 ஆக அதிகரித்துள்ளது, என கூறும் அரசின் அறிக்கை, ஜூலை 27ம் தேதி, ஒரே நாளில், நாடு முழுவதும், 35 ஆயிரத்து 176 பேர் குணமடைந்து, நாட்டில் தற்போது நலமடைந்தோரின் எண்ணிக்கை, 64.23 விழுக்காடாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கிறது.
இந்தியாவில் தொடர்ச்சியாக 2வது நாளாக 5 இலட்சத்திற்கும் அதிகமான மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளதாக கூறும் மத்திய நலத்துறை, ஜூலை 26ல் 5,15,000 மாதிரிகளும், ஜூலை 27ல்  5,28,000 மாதிரிகளும் சோதனை செய்யப்பட்டதாகவும் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடவுளுக்கும் கரி பூசும் சுயநலம்

கொளுத்தி வைக்கப்பட்ட ஊதுபத்திகளின் புகை

பக்தர் ஏற்றிவைத்த ஊதுபத்திகளின் புகை, நேராக, அவரது தெய்வத்தை மட்டுமே சேர்ந்தது. இவ்வாறு அவர் தொடர்ந்து செய்து வந்ததால், நாளடைவில், அந்தப் புகையால், அவருக்குப் பிடித்தமான தெய்வத்தின் முகம் கறுத்துப்போனது.
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்
பக்தர் ஒருவர், ஒவ்வொருநாளும் கோவிலுக்குச் செல்வார். கோவிலில் வைக்கப்பட்டிருந்த பல தெய்வங்களில், அவர் மனதுக்குப் பிடித்த ஒரு தெய்வத்தை மட்டும் தினமும் தொழுதுவிட்டுத் திரும்புவார். தான் வாங்கிச்செல்லும் ஊதுபத்திகளை, அந்தத் தெய்வத்திற்கு முன் கொளுத்தி வைத்து வணங்குவார்.
ஒவ்வொருநாளும், அவ்வாறு வணங்கும்போது, அவருக்குள் ஒரு சிறு நெருடல் உருவாகும். தனக்குப் பிடித்த தெய்வத்திற்கென்று தான் கொளுத்தி வைக்கும் ஊதுபத்திகளின் நறுமணப்புகை, மற்ற தெய்வங்களுக்கும் செல்கிறதே என்று, பக்தருக்குள் இலேசான எரிச்சல் உண்டாகும்.
தன் நெருடலையும், எரிச்சலையும் சமாளிக்க, அவர் ஒரு வழியைக் கண்டுபிடித்தார். அடுத்த நாள், அவர், ஊதுபத்திகளைக் கொளுத்தி வைத்தபோது, அந்தப் புகை, தன் தெய்வத்தை மட்டும் சென்று சேரவேண்டும் என்ற எண்ணத்துடன், அந்த ஊதுபத்திகளை சுற்றி, ஒரு குழாயையும் பொருத்தி வைத்தார். அவர் எதிர்பார்த்தவாறே, நறுமணப்புகை, நேராக, அவரது தெய்வத்தை மட்டுமே சேர்ந்தது. பக்தருக்கு பெரும் திருப்தி. இவ்வாறு அவர் தொடர்ந்து செய்து வந்ததால், நாளடைவில், அந்தப் புகையால், அவருக்குப் பிடித்தமான தெய்வத்தின் முகம் கறுத்துப்போனது.
தெய்வ வழிபாட்டிலும், தான், தனது என்ற குறுகிய வட்டங்களை வரையும் சுயநலம் புகுந்தால், கடவுளின் முகத்தில் நாம் கரி பூசிவிடக்கூடும், எச்சரிக்கை! இறைவனின் பெயரால் நாம் எழுப்பிவரும் தடுப்புச் சுவர்களை தகர்த்தெறிந்தால் மட்டுமே, உண்மை இறைவனை நம்மால் வழிபடமுடியும்.

வலிமையுள்ள மனிதராக வாழ்ந்து காட்டுங்கள்

ஒரு காலத்தில் பிச்சை எடுத்த சிறுவன் கண்ணதாஸ்

வெற்றி என்பது மோசமான ஆசிரியர், தோல்வியே அதிகம் கற்றுத்தரும் ஆசிரியர்
மேரி தெரேசா: வத்திக்கான்
வாட்சப் என்ற புலனத்தில் அண்மையில் ஒரு நிகழ்வு பதிவுசெய்யப்பட்டிருந்தது. தமிழக இளைஞன் ஒருவன் படிப்பில் மிகவும் திறமைசாலி. அறிவியல் பாடத்தில் அவன் எப்போதும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள்தான் எடுப்பான். அவன் சென்னை IIT தொழில்நுட்ப (Indian Institute of Technology Madras) நிறுவனத்தில் மிக உயர்ந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றான். பின்னர், அமெரிக்க ஐக்கிய நாட்டு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் தொழில் மேலாண்மைக் கல்வி பயிலச் சென்றான். அங்கும் படிப்பை வெற்றியுடன் முடித்தான். அந்நாட்டிலே நல்ல ஊதியத்தில் வேலை ஒன்றும் அவனுக்குக் கிடைத்தது. அங்கேயே வாழ்வைத் தொடங்கினான். பெற்றோர், ஓர் அழகான தமிழ்ப்பெண்ணை அவனுக்குத் திருமணம் செய்து வைத்தனர். ஐந்து அறைகள் கொண்ட ஒரு பெரிய வீட்டையும், ஆடம்பர கார் ஒன்றையும் வாங்கினான். அவனது வாழ்வு மிகச் சிறப்பாக, வெற்றிகரமாகப் போய்க்கொண்டிருந்தது. ஆனால், சில ஆண்டுகளுக்குமுன், அவன், தன் மனைவி மற்றும் பிள்ளைகளைச் சுட்டுக்கொன்றுவிட்டு, அவனும் தற்கொலை செய்துகொண்டான். இவனது மரணம் குறித்து ஆய்வு நடத்த விரும்பிய கலிஃபோர்னிய உளவியல் ஆய்வு நிறுவனம், அவனின் நண்பர்கள் மற்றும் பெற்றோரைத் தொடர்பு கொண்டு, அவனைப் பற்றிக் கேட்டது.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடியில் அவன் வேலை இழந்தான். அதனால் அவன் நீண்டகாலம், வேலையின்றி இருக்கவேண்டிய சூழல் உருவானது. தான் செய்துகொண்டிருந்த வேலையில் கிடைத்த ஊதியத்தைவிட குறைந்த ஊதியத்திற்குக்கூட அவனுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. அதனால் அவன் தவணை முறையில் வாங்கிய வீட்டிற்கும் பணத்தைச் செலுத்த முடியவில்லை. அவனது குடும்பம் வீட்டை இழந்தது. மீதமிருந்த குறைந்த பணத்தில் சிறிது நாள்கள் அவனது குடும்பம் வாழ்ந்தது. இறுதியில் அவனும் அவனது மனைவியும் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவுசெய்தனர். அவன் முதலில், தன் மனைவியையும், குழந்தைகளையும் சுட்டுக்கொன்றான். பிறகு தானும் தற்கொலை செய்துகொண்டான். அந்த நிறுவனம், இறுதியில் தன் ஆய்வின் முடிவை இவ்வாறு எழுதி வைத்தது. இந்த மனிதர் வெற்றி என்பதை மட்டுமே தன் சிந்தனையிலும், மனதிலும், பதிவுசெய்து வைத்திருந்தார். தோல்வியை எவ்வாறு கையாள்வது, தோல்வியில் எவ்வாறு வாழ்வது என்பதற்கு அவர் பயிற்சிபெறவில்லை.
வாழ்வில் சிகரத்தை எட்டிய மனிதர்களில் ஏறத்தாழ எல்லாருமே தோல்விகளைக் கையாளும் முறைகளைக் கற்றுக்கொண்டவர்கள். வெற்றி என்பது மோசமான ஆசிரியர், தோல்வியே அதிகம் கற்றுத்தரும் ஆசிரியர் என்பதை, அவர்கள் அனுபவத்தால் உணர்ந்தவர்கள். தற்போதைய கோவிட்-19 கொள்ளைநோய் நெருக்கடி காலத்தில், இது சிந்திக்கவேண்டிய நல்லதொரு கூற்று.
மாணவி தெய்வானை
தமிழகத்தில் அண்மையில் வெளியான பிளஸ் 2 தேர்வில், மதுரையில் குடுகுடுப்பையைப் பயன்படுத்தி குறிசொல்லும் சமுதாயத்தைச் சேர்ந்த தெய்வானை என்ற மாணவி, பசியின் வலியை தோற்கடித்து 600க்கு 500 மதிப்பெண்கள் வாங்கி, சாதித்து காட்டியுள்ளார். அவர் பயின்ற திருப்பரங்குன்றம் அரசு பள்ளியில் முதலிடத்தை பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றத்தில் குடுகுடுப்பை வைத்து குறி சொல்லும் ஏறத்தாழ ஐம்பது குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இவர்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் வாழாமல் பயணம் செய்வது அல்லது ஒரு சில மாதங்கள் மட்டும் ஓரிடத்தில் தங்குவது என நாடோடி சமுதாயமாக உள்ளனர். தனது படிப்பு பற்றிக் கூறியுள்ள மாணவி தெய்வானை, ''என் சமுதாயத்தில் பெண்கள் பள்ளிப்படிப்பை முடிப்பது அரிதுதான். நான் ஒரு தொடக்கமாக இருக்க விரும்புகிறேன். நான் பி.காம் படிக்கப்போகிறேன். வங்கியில் வேலைசெய்வது என் கனவு. என் சமுதாய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவேண்டும். நேர்மையாக உழைத்து வாழவேண்டும் என்பதுதான் என் சமுதாயத்திடம் நான் கற்றுக்கொண்ட பாடம். குறி சொல்லுவதில் எங்களுக்கு கிடைக்கும் வருமானம் கொஞ்சம்தான். அதனால் பசியின் வலி எனக்குத் தெரியும். பல ஊர்களுக்கு பசியோடு நடந்து சென்றிருக்கிறேன். நான் படிக்கும் படிப்பு என்னை முன்னேற்றும் என்ற நம்பிக்கையில் படித்தேன் என்று சொல்லியுள்ளார். ஒய்வு நேரங்களில் கூடைகள் முடைந்து தனது படிப்புக்குப் பணம் சேர்த்திருக்கிறார் தெய்வானை.
ஒரு காலத்தில் பிச்சை எடுத்த சிறுவன் கண்ணதாஸ் இன்று...
ஒரு காலத்தில் பிச்சை எடுத்த சிறுவன் கண்ணதாஸ், இன்று, தெருச்சிறார் உலக கோப்பை கால்பந்து அணியில் உலகப் புகழ்பெற்றவராக உயர்ந்துள்ளார். Josh Talks என்ற யூடியூப்பில் இவர் தனது வாழ்வு பற்றி (ஏப்ரல் 2018) இவ்வாறு பதிவு செய்துள்ளார்.
என் பெயர் கண்ணதாஸ். எனது சொந்த ஊர் வாணியம்பாடி. எனது அப்பா ஒரு குடிகாரர். தினமும் குடித்துவிட்டு வந்து என் அம்மாவையும் என்னையும் அடிப்பார். அப்பா அம்மாவுக்கிடையே தினமும் சண்டை நடக்கும். ஒருநாள் எனது அப்பா இன்னொரு கல்யாணம் செய்துகொண்டது தெரியவரவே வீட்டில் சண்டை வலுத்தது. அதனால் ஒருநாள் இரயில் நிலையம் வந்தேன். நான் சிறுவனாக இருந்ததால் எந்த இரயில் எந்தப் பக்கம் போகிறது என எனக்குத் தெரியாது. அதனால் அப்போது வந்த இரயிலில் ஏறினேன். அது பெங்களூர் போனது. இரவானது. பசி வயிற்றைக் கிள்ளியது. இரயில் நிலைய உணவகம் ஒன்றில், இரவு 12 மணியானதும் மீதம் இருந்த உணவை மற்றவருக்குக் கொடுத்தார்கள். அப்படி எனக்கும் சாப்பாடு கிடைத்தது. இப்படியே ஒவ்வொரு நாளும் நீண்ட தூரம் போகும் இரயிலாகப் பார்த்து ஏறுவேன். இரவில் சீட்டுக்கு அடியில் படுத்துக்கொள்வேன். இரவு 12 மணிக்கு இரயிலிலிருந்து இறங்குவேன். கிடைக்கும் உணவைச் சாப்பிடுவேன். மழையும் குளிரும் வாட்டும். ஒருநாள் டிக்கெட் பரிசோதகர் வந்து என்னை இரயிலிலிருந்து இறக்கிவிட்டார். பின் எதிர் திசையில் போகிற இரயிலில் ஏறினேன். அந்த இரயிலில் ஒரு பாட்டியிடம், பாட்டி எனக்குப் பசிக்குது, காசு இருந்தா கொடு என்று கேட்டேன். அதற்கு அந்த பாட்டி, நானே பிச்சை எடுக்கிறேன், நீ பிச்சை எடுக்கவேண்டாம், என்னோடு கூடவந்து நில், உனக்கு காசு கொடுத்துடறேன் என்றார்கள். அந்தப் பாட்டிக்கு ஒரு கையில் விரல்கள் கிடையாது. அந்தப் பாட்டி ஒரு கையால் தரையைக் கூட்டிவிட்டு, அடுத்த கையால் காசு கேட்பார்கள். அந்தக் காசை நான் வைத்துக்கொள்வேன். பின் இரயிலைவிட்டு இறங்கும்போது அந்த பாட்டி பத்து ரூபாயை என் கையில் கொடுத்துவிட்டு, சாப்பாடும் வாங்கிக் கொடுப்பார்கள். இப்படி போய்க்கொண்டிருந்தபோது, ஒரு நாள் காவல்துறை என்னை இரயிலிலிருந்து இறக்கி இப்படி வாழக் கூடாது என்று அடித்தார்கள். அப்பா அடிக்குப் பயந்து இங்கே வந்தால், இங்கேயும் அடிக்கிறார்களே, எப்படியாவது வெளியே போய் படிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஒரு டீ கடையில் டம்ளர்களைக் கழுவும் வேலை கிடைத்தது. தினமும் காலையிலிருந்து இரவு 10 மணி வரை விடாது வேலை இருக்கும். மதியம் ஒருவேளை சாப்பாடும், பத்து ரூபாயும் கொடுப்பார்கள். ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம்தான் தூங்குவேன். இப்படி ஒரு மாதம் வேலை செய்தேன். இங்கு சாப்பாடும் பணமும் போதவில்லை. எனவே மீண்டும் முன்புபோல் இரயிலில் நான்கு மாதங்கள் பயணம் மேற்கொண்டேன். சாப்பாடு எல்லா நேரமும் கிடைக்காது. பசிக்கும். அந்த இரயிலில் கைகழுவும் குழாய்த் தண்ணீரைக் குடிப்பேன். அதிலே எனது சட்டையைத் துவைத்து அப்படியே ஈரத்தோடு போட்டுக்கொள்வேன். இப்படி இருக்கும்போது ஒரு நாள் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் வந்தேன். அது சென்னை என்றே எனக்குத் தெரியாது. அங்கு கருணாலய அமைப்பின் அலுவலகர்கள் என்னை விடுதிக்கு அழைத்துச் சென்றார்கள். முதலில் சாப்பாடுதான் கேட்டேன். பின் சிலநாள்கள் சென்று என்னைப் படிக்கப்போகச் சொன்னார்கள். நான் வேலைக்குத்தான் போவேன் என்று சொன்னதும், இந்த வயதில் வேலை செய்ய முடியாது, நீ படிக்கவேண்டும் என்று சொன்னார்கள். முதல் நாள் பள்ளிக்குச் சென்றேன். அங்கும் ஆசிரியர் அடித்தார். பையை அங்கேயே வைத்துவிட்டு விடுதிக்கு வந்துவிட்டேன். ஆசிரியர் அடிக்கமாட்டார் என்று சொல்லி, என்னை திரும்பவும் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்கள். எனக்கு விளையாட்டில், அதிலும் கால்பந்தில் அதிக ஆர்வம். படிக்கப் போனால்தான் கால்பந்து சொல்லித் தருவேன் என்று சொன்னதால், பள்ளிக்குத் தொடர்ந்து சென்றேன். பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் வாங்கினேன். பிளஸ் 2 படிப்பையும் முடித்தேன். பின் வானொலியியல் கல்வியில் சான்றிதழ் படிப்பு முடித்தேன். என்னைப்போன்ற சிறாருக்கு கால்பந்து சொல்லித்தரவேண்டுமென்று, அதற்கு எனக்கும் பயிற்சி கொடுத்தார்கள். அச்சமயத்தில் தெருச்சிறார் உலக கோப்பை விளையாட ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதில் நன்றாக விளையாடி, இந்திய அணிக்குத் தலைவனாக இருந்தேன். 2014ம் ஆண்டில் ரியோ நகரில் தெருச்சிறார் உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாட ஒரு வாய்ப்பு கிடைத்தது. என்னைப்போன்ற தெருச்சிறாரின் வாழ்வை முன்னேற்றுவதே எனது இலட்சியம். பல்வேறு காரணங்களால் வீட்டைவிட்டு வெளியே ஓடிவரும் சிறுவர்களை, சென்னை இரயில் நிலையத்தில் மீட்கும் வேலையை இப்போது நான் செய்துகொண்டிருக்கிறேன்.
பிச்சை எடுத்த நான் சாதித்துவிட்டேன், அப்படியானால் நீங்கள் என்று கேட்கிறார், கண்ணதாஸ். பூமியில் விதைக்கப்பட்ட விதைகூட எதிர்ப்பை சமாளித்து, முளைத்துக் காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் காட்டில் சிங்கத்தால் கொல்லப்படுகின்ற மான்கூட பிரச்சனைகளைச் சமாளிக்கின்றது. பெரிய மீன்களால் உணவுக்காக விழுங்கப்படும் நிலையிலிருக்கும் சிறிய மீன்களும் கடலில் புலம்பாமல் வாழ்கின்றன. மனிதர்களால் எப்பொழுது வேண்டுமானாலும் வெட்டப்படுகின்ற வாழ்வை அனுபவிக்கின்ற மரங்களும் நிமிர்ந்து நிற்கின்றன. ஒவ்வொரு நாளும் உணவுக்காக பல கிலோ மீட்டர்கள் தூரம் பறக்கவேண்டிய பறவைகளும் மனம் சலிப்படையாமல் முயற்சி செய்கின்றன. தண்ணீரே இல்லாத பாலைநிலத்தில் உயிர் வாழவேண்டிய நிலையிலிருக்கும் ஒட்டகங்களும் எங்கும் ஓடிப்போகாமல் வாழ்ந்து காட்டுகின்றன. ஒரு நாள் மட்டுமே வாழ்வு என்ற நிலையிலிருக்கும் பலவகை பூச்சிகளும், அந்த ஒரு நாளில் உருப்படியாக வாழ்கின்றன. (நன்றி இணையதளம்) எனவே, மனமே, நீ மட்டும் தோல்விகள் கண்டு துவண்டு விடலாமா, வாழ்ந்து காட்டு, வலிமையுள்ள மனிதனாக, வெற்றி உன் கையில் என்று, தோல்விகளில் துவண்டுவிடாமல் வெற்றிப்படிகளில் கால் பதிப்போமா.

கடவுளை எப்போது தேடவேண்டும்?

படகுப் பயணம்

கடைசி நேரத்தில் கடவுளைத் தேடுவதால் வரும் நன்மையைவிட, தொடக்கத்திலேயே கடவுளைத் தேடினால் கிடைக்கும் நன்மை மிகப்பெரியது
மேரி தெரேசா: வத்திக்கான்
ஓர் ஊரில் படகோட்டி ஒருவர் இருந்தார். அவர் ஊருக்கு மிக அருகில் இருந்த ஆற்றில் படகோட்டி, அதிலிருந்து வரும் வருமானத்தை வைத்து, தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். அவர் சிறந்த பக்திமானும்கூட. ஒருநாள் அவருடைய படகில், படகு சவாரி செய்ய துடுக்கான சில இளைஞர்கள் வந்திருந்தார்கள். படகோட்டி படகு சவாரியைத் தொடங்குவதற்கு முன்பாக, சிறிதுநேரம் கடவுளை நோக்கி மன்றாடிவிட்டு படகைச் செலுத்தத் தொடங்கினார். இதைப் பார்த்த அந்த இளைஞர்கள், “காலச் சூழ்நிலை எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறது. பிறகு எதற்கு செபிக்க வேண்டும்” என்று நினைத்து தங்களுக்குள் ஏளனமாகப் பேசி சிரித்துக் கொண்டார்கள். படகு ஆற்றில் சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென்று ஆற்றில் நீர்வரத்து அதிகமாக ஏற்பட, படகு நிலைகுலையும் அபாயம் ஏற்பட்டது. உடனே இளைஞர்கள் யாவரும் அலறியடித்துக்கொண்டு கடவுளிடம் செபிக்கத் தொடங்கினார்கள். ஆனால் படகோட்டி மட்டும் செபிக்காமல், படகை ஓட்டுவதிலே மும்முரமாக இருந்தார். இதைக் கண்ட இளைஞர்கள் அவரிடம், “நாங்களெல்லாம் செபிக்க, நீர் மட்டும் செபிக்காமல், இப்படி படகோட்டுவதிலே குறியாய் இருக்கிறீரே?” என்று அவரைக் கடிந்துகொண்டார்கள். அதற்கு அவர், “நான்தான் தொடக்கத்திலேயே இறைவனிடம் மன்றாடிவிட்டேனே, ஆபத்து வருகிறபோது படகை எப்படி சரியாக ஓட்டுவது என்று சிந்திக்கவேண்டுமே ஒழிய, இந்நேரத்தில் செபித்துக் கொண்டிருப்பது நல்லதல்ல” என்றார்.
ஆம். நாமும் பல நேரங்களில் இந்த நிகழ்வில் வரும் இளைஞர்கள் போன்றுதான் ஆபத்து வரும்போது மட்டும் இறைவனைத் தேடுகின்றோம் அல்லது இறைவனை அழைக்கின்றோம். அதனால் கிடைக்கும் பயன் சிறியது. கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம் எதற்கு என்பதுபோல, கடைசி நேரத்தில் கடவுளைத் தேடுவதால் வரும் நன்மையைவிட, தொடக்கத்திலேயே கடவுளைத் தேடினால் கிடைக்கும் நன்மை மிகப்பெரியது. ஆதலால் எல்லாவற்றிற்கும் மேலாக, எல்லா நேரங்களிலும் கடவுளை முதன்முதலாகத் தேடுவோம்.

Monday 27 July 2020

பரமக்குடி அருகே பழமையான உறைகிணறு - அகழ்வாராய்ச்சி நடக்குமா? | Keezhadi E...

தாமிரபரணி ஆற்றில் கொற்கை மன்னர் கால தூண்கள் கண்டெடுப்பு || Thamirabarani

மாலத் தீவில் மூழ்கியிருக்கும் தமிழ் நகரங்கள் - ஒரிசா பாலு | மெய்ப்பொருள...

திருத்தந்தை: இந்த உலகில் நாம் மட்டும் தனியாக இல்லை

புலம்பெயர்ந்தோர் சந்திப்பு

மனித வாழ்வின் தெருமுனையில் இருப்பவர்கள், நம்மைப் போன்ற ஆண்களும் பெண்களும்தான். வயது முதிர்ந்தோரும், சிறாரும், நம் கடைக்கண் பார்வைக்காகவும், உதவும் கரத்திற்காகவும் காத்திருக்கின்றனர் – திருத்தந்தை பிரான்சிஸ்
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
இந்த உலகில் நாம் மட்டும் தனியாக இல்லை என்ற புரிதலில், தேவையில் இருப்போரைக் கருத்தில்கொண்டு அடுத்திருப்பவருக்கும் பணியாற்றுங்கள் என்று, அர்ஜென்டீனா நாட்டில் நடைபெறும் ஆன்மீக பயிற்சி ஒன்றிற்கு அனுப்பிய காணொளிச் செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
அர்ஜென்டீனா நாட்டு Patagonia மாநிலத்திலுள்ள, Comodoro Rivadavia மறைமாவட்டம், நடத்திய நான்காவது மெய்நிகர் கருத்தரங்கிற்கு, ஜூலை 24, இவ்வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பிய இந்த காணொளிச் செய்தியை, அம்மறைமாவட்டம், தனது யூடியூப் ஊடகத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த ஆன்மீகப் பயிற்சி, “திருஅவையில் ஒன்றிப்பைப் புதுப்பித்தலுக்காக மனமாற்றம்” என்ற தலைப்பில் நடைபெற்றது என்பதை, தனது காணொளிச் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இவ்வுலகில், பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல், ஆன்மீகத்திலும் உதவி தேவைப்படுகிறவர்கள் மீது அக்கறை காட்டவேண்டும் என்று, இந்த தலைப்பு வலியுறுத்துவதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
நமது தன்னலத்தின் காரணமாக, துன்புறுவோரை நோக்காமல் கடந்துசெல்ல பழகிக்கொண்டுள்ளோம், ஆயினும், நல்ல சமாரியர் போல நாம் பணியாற்றுமாறு இயேசு அழைப்பு விடுக்கிறார் என்றுரைத்துள்ள திருத்தந்தை, மனித வாழ்வின் தெருமுனையில் இருப்பவர்கள், நம்மைப் போன்ற ஆண்களும் பெண்களும்தான் என்றும், வயது முதிர்ந்தோரும், சிறாரும், நம் கடைக்கண் பார்வைக்காகவும், உதவும் கரத்திற்காகவும் காத்திருக்கின்றனர் என்றும் கூறியுள்ளார். 
மற்றவருக்கு உதவிசெய்ய வேண்டும் என, தன் நாட்டு மக்களை ஊக்குவித்துள்ள திருத்தந்தை, "இச்சிறியோருள் ஒருவருக்கு, அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" (மத்.10:42) என்ற இயேசுவின் திருச்சொற்களையும் குறிப்பிட்டுள்ளார்.
துணிவோடிருந்து செயல்படுங்கள், மற்றவை அனைத்தும் உங்களை வந்தடையும் என்றும் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னைமரியாவிடம் அவர்களை அர்ப்பணித்துள்ளதோடு, தனக்காகச் செபிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த மெய்நிகர் கருத்தரங்கில் அந்த மறைமாவட்டத்தில் பணியாற்றும் ஏறத்தாழ 600 மேய்ப்புப்பணியாளர்கள் பங்குபெற்றனர். திருத்தந்தை தற்போது அனுப்பியுள்ள காணொளிச் செய்தி குறித்துப் பேசிய, அந்த மறைமாவட்ட ஆயர் Joaquin Gimeno Lahoz அவர்கள், திருத்தந்தை பெர்கோலியோ அவர்கள், புவனஸ் அய்ரஸ் உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றிய காலக்கட்டத்தில், Patagonia மாநிலம் மீது எப்போதும் அக்கறை கொண்டிருந்தார் என்று கூறினார்.

இயேசு, நம் திருப்பயணத்தில் உடன்வருபவர்

திருத்தூதரான புனித யாக்கோபு

கி.பி. 831ம் ஆண்டில், இஸ்பெயின் நாட்டின் வடமேற்கே, Liberon மலைக்கருகில் துறவி ஒருவருக்கு வியப்புக்குரிய ஒளிவெள்ளம் ஒன்று தெரியவே, அந்த இடத்தில் இருந்த ஒரு கல்லறையில், "இங்கே செபதேயு மற்றும், சலோமியின் மகனான Jacobusவின் உடல் உள்ளது" என்று பொறிக்கப்பட்டிருந்தது
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
“ஓர் உண்மையான திருப்பயணி, மிக மெதுவாக நடப்பவரின் வேகத்தில் செல்வதற்குத் திறன் படைத்தவர், இவ்வாறு செய்ய வல்லவர் இயேசு. அவர் நம் திருப்பயணத்தின் தோழர், அவர் நம் நிலைமையை மதிப்பவர், மற்றும், அந்த வேகத்தை விரைவுபடுத்துபவர் அல்ல  அவர், பொறுமையின் ஆண்டவர் அவர்” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கூறியுள்ளார்.
 உண்மையான திருப்பயணி யார் என்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 25, இச்சனிக்கிழமையன்று, தன் டுவிட்டர் செய்தி வழியாக, இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.
சந்தியாகோ பாதை
ஜூலை 25, இச்சனிக்கிழமையன்று, திருஅவை, திருத்தூதரான புனித யாக்கோபுவின் திருவிழாவைச் சிறப்பிக்கின்றது. இவர் *பெரிய யாக்கோபு* எனவும் *சந்தியாகப்பர்* எனவும் அழைக்கப்படுகிறார். இஸ்பெயின் நாட்டில், இப்புனிதரின் திருத்தலம் நோக்கிச் செல்லும், புனித சந்தியாகோ அதாவது புனித யாக்கோபு நடை திருப்பயணம் அல்லது, புனித யாக்கோபுவின் பாதை என்பது, வரலாற்றிலும், கிறிஸ்தவத்திலும், மிக முக்கியமான சாலைகளில் ஒன்றாக உள்ளது.
பிரேசில் நாட்டு புகழ்பெற்ற நாவல் ஆசிரியரும், சிறந்த பாடலாசிரியருமான Paulo Coelho de Souza அவர்கள், இது குறித்து இவ்வாறு எழுதியுள்ளார்: பழங்கால திருப்பயணிகளின் பாரம்பரிய உணர்வு, உங்களது திருப்பயணத்திலும் உடன்வருகிறது. இப்பயணத்தில் நீங்கள் தலையில் அணிந்திருக்கும் தொப்பி, கதிரவனின் வெப்பம் மற்றும், தீய எண்ணங்களிலிருந்து உங்களைக் காக்கின்றது. உங்களது மேலாடை மழை மற்றும், தீய சொற்களிலிருந்து உங்களைக் காக்கின்றது. உங்களது ஊன்றுகோல், பகைவர்கள் மற்றும், தீய செயல்களிலிருந்து உங்களைக் காக்கின்றது. கடவுள், புனித யாக்கோபு, அன்னை மரியா ஆகிய மூவரும், உங்கள் பயணத்தின் ஒவ்வோர் இரவிலும், ஒவ்வொரு நாளிலும் உங்களை ஆசீர்வதிப்பார்களாக.
புனித யாக்கோபுவின் கல்லறை
புனித யாக்கோபுவின் கல்லறை பற்றி மரபு வழியாக ஒரு செய்தி சொல்லப்படுகிறது. கி.பி. 831ம் ஆண்டில், இஸ்பெயின் நாட்டின் வடமேற்கே, Liberon  மலைக்கருகில் துறவி ஒருவருக்கு வியப்புக்குரிய ஒளிவெள்ளம் ஒன்று தெரியவே, அந்த இடத்தில் ஒரு கல்லறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. "இங்கே செபதேயு மற்றும், சலோமியின் மகனான யாக்கோபுவின் (Jacobus) உடல் உள்ளது" என்று அதில் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தின் பெயர் "கம்போஸ்த்தெல்லா (Compostela) அதாவது விண்மீன் வயல்" என்பதாகும். இந்த இடத்தை வைத்து, பிற்காலத்தில் அங்கு விரிவடைந்த நகரத்திற்கு, Santiago de Compostela என்று பெயரிடப்பட்டது. இந்த இடத்தில் 1075ம் ஆண்டில் பசிலிக்கா எழுப்பப்பட்டு, அது புனித யாக்கோபுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. மத்திய காலத்திலிருந்து, இந்த திருத்தலத்திற்கு, திருப்பயணிகள் பெருமளவாகச் செல்கின்றனர்.

நாட்டுக்குள்ளே புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு..

இந்தியாவில், நாட்டுக்குள்ளேயே புலம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்கள்

இந்தியாவில், 1979ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டம், தொழிலாளர்களின் கூலி, வேலை நேரம், நலவாழ்வு போன்றவற்றிற்கு உறுதி அளிக்கின்றது, ஆயினும், இந்த கொள்ளைநோய் காலத்தில் இந்த தொழிலாளர்கள் எதிர்கொண்ட துன்பங்களை அனைவரும் அறிந்தே உள்ளோம் - அருள்பணி ஜெய்சன்
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
இந்தியாவில், நாட்டுக்குள்ளேயே புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்கள், கோவிட்-19 கொள்ளைநோய்க்கு அதிகம் பலியாகும்வேளை, சரியான சட்டங்கள் வழியாக, அவர்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்று, இந்திய ஆயர் பேரவையின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்திய ஆயர் பேரவையின் புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவின் செயலர் அருள்பணி ஜெய்சன் வடச்சேரி (Jaison Vadassery) அவர்கள், இந்தியாவில், வெளிமாநிலங்களில் குடிபெயர்ந்துள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி, 1979ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமாறு வலியுறுத்தியுள்ளார்.
1979ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டம், தொழிலாளர்களின் கூலி, வேலை நேரம், நலவாழ்வு போன்றவற்றிற்கு உறுதி அளிக்கின்றது, ஆயினும், இந்த கொள்ளைநோய் காலத்தில் இந்த தொழிலாளர்கள் எதிர்கொண்ட துன்பங்களை அனைவரும் அறிந்தேயுள்ளோம் என்றும், அருள்பணி ஜெய்சன் அவர்கள், ஆசியச் செய்தியிடம் கூறியுள்ளார்
இந்த தொழிலாளர்களில் பலர், தங்களின் சொந்த கிராமங்களில் கோவிட்-19 விதிமுறைகளின்படி தங்கியிருந்தபின், நகரங்களுக்குத் திரும்பிவருகின்றனர் என்று கூறியுள்ள அருள்பணி ஜெய்சன் அவர்கள், இம்மக்களின் நிலை, உண்மையிலேயே, மனிதாபிமான நெருக்கடியாக மாறியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதத்தில், ஔரங்கபாத் மாவட்டத்தில் குறைந்தது 16 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்தனர் என்பதையும், மேலும், நாடெங்கும் சாலை விபத்துகளில் நூறு பேர் இறந்துள்ளனர் என்பதையும், அருள்பணி ஜெய்சன் அவர்கள் குறிப்பிட்டார்.
இந்த தொழிலாளர்களில் பலர், பீகார், சட்டீஸ்கார், ஜார்க்கண்ட், ஒடிசா, இராஜஸ்தான், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றுரைத்த அருள்பணி ஜெய்சன் அவர்கள், இம்மக்கள் எவ்வித சமுதாய அல்லது, சட்டமுறைப்படியான பாதுகாப்பு இல்லாமல், ஆபத்தான சூழல்களில் வேலை செய்கின்றனர் என்பதையும் எடுத்துரைத்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கென வாழ்வை அர்ப்பணித்த அருள்சகோதரி ரூத்

மாற்றுத்திறனாளிகளுக்கென வாழ்வை அர்ப்பணித்த அருள்சகோதரி ரூத்

அருள்சகோதரி ரூத் அவர்களின் 51 ஆண்டுகால தன்னலமற்ற சேவையைப் பாராட்டி, 2014ம் ஆண்டில் கராச்சியின் பெருமை என்ற விருதையும், 2008ம் ஆண்டில் Hakeem Muhammad Saeed என்ற விருதையும், அவர் பெற்றுள்ளார்
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
அருள்சகோதரி ரூத் லூயிஸ் (Ruth Lewis) அவர்கள், மனித சமுதாயத்திற்கும், பாகிஸ்தான் நாட்டிற்கும் ஆற்றிய மிகச்சிறந்த சேவைகளைப் பாராட்டும் விதமாக, அச்சகோதரிக்கு, 2020ம் ஆண்டின் Sitara-e-Imtiaz என்ற, அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
அமைதியின் இல்லம் என்று பொருள்படும், Darul Sukoon என்ற இல்லத்தில், மாற்றுத்திறனாளி சிறாருக்குச் சேவையாற்றிவந்த 77 வயது நிரம்பிய அருள்சகோதரி ரூத் அவர்கள், கொரோனா தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டு, 12 நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும், அது பலனின்றி, ஜூலை 20, இத்திங்களன்று இறைபதம் சேர்ந்தார்.
1946ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி பிறந்த அருள்சகோதரி ரூத் அவர்கள், கிறிஸ்து அரசர் பிரான்சிஸ்கன் மறைப்பணியாளர்கள் துறவு சபையின் உறுப்பினராவார்.
அருள்சகோதரி ரூத் அவர்கள், Gertude Lemmens, Margared D’Costa ஆகிய அருள்சகோதரிகளுடன் இணைந்து, 1969ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி, உடலிலும், மனத்தளவிலும் குறையுள்ள ஏறத்தாழ 150 மாற்றுத்திறனாளிச் சிறார் மற்றும், இளையோருக்கென, Darul Sukoon இல்லத்தைத் தொடங்கினார். இவர், இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து அந்த இல்லத்தின் தலைவராகப் பணியாற்றினார்.
இவர் ஆற்றிய 51 ஆண்டுகால தன்னலமற்ற சேவையைப் பாராட்டி, 2014ம் ஆண்டில் கராச்சியின் பெருமை என்ற விருதையும், 2008ம் ஆண்டில் Hakeem Muhammad Saeed என்ற விருதையும், இவர் பெற்றுள்ளார்.
1998ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டியில், இந்த இல்லத்தைச் சேர்ந்த நான்கு சிறார் பதக்கங்களைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அருள்சகோதரி ரூத் அவர்கள், எங்கள் அனைவரின் பெருமைக்கு ஊற்றாக உள்ளார் என்று, பாகிஸ்தான் கத்தோலிக்கர் கூறியுள்ளனர்.
அருள்சகோதரி ரூத் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த சிந்து மாநிலத்தின் முதலமைச்சர் Syed Murad Ali Shah அவர்கள், அச்சகோதரிக்கு அந்நாட்டின் Sitara மற்றும் Imtiaz விருது வழங்கப்படவேண்டும் என்று, பாகிஸ்தானின் குடியரசுத்தலைவர் Arif Alvi அவர்களிடம் நேரிடையாகப் பரிந்துரைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிந்து மாநில ஆளும் கட்சித் தலைவரான Bilawal Bhutto Zardari அவர்களும், அருள்சகோதரி ரூத் அவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தினார் என்று செய்திகள் கூறுகின்றன. (UCAN/AsiaNews)

கியூபாவில் முதல் கத்தோலிக்க இணையதள வானொலி

கியூபாவில் துவக்கப்பட்டுள்ள முதல் கத்தோலிக்க இணையதள வானொலியின் இலச்சனை

திருஅவையின் சமுதாயப் போதனைகளின்படி, இளைஞர்கள், கிறிஸ்தவ வாழ்வுக்குத் தங்களை தெளிவான முறையில் அர்ப்பணிக்க உதவும் நோக்கத்தில், கியூபாவில் இணையதள கத்தோலிக்க வானொலி துவக்கப்பட்டுள்ளது
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
கியூபா நாட்டு கத்தோலிக்க இளைஞர்களின் முயற்சியால், அந்நாட்டில் 24 மணி நேரமும் செயல்படும் முதல் கத்தோலிக்க இணையதள வானொலி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Radio El Sonido de la Esperanza" என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த இணையதள வானொலி வழியாக, இளைஞர்கள், திருஅவையின் செய்தியை இணையதளம் வழியாகப் பரப்புவதற்கு தங்களை அர்ப்பணித்துள்ளனர்.
2019ம் ஆண்டு பிப்ரவரியில், RCJ எனப்படும் கத்தோலிக்க இளைஞர் இணையதள அமைப்பை ஆரம்பித்தவர் மற்றும் அதன் இயக்குனர்களில் ஒருவரான Rubèn de la Trinidad அவர்கள், இந்த கத்தோலிக்க இணையதள வானொலி பற்றிக் கூறுகையில், கியூபா நாட்டு கத்தோலிக்க சமுதாயத்தின் உறுப்பினர்கள், ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ள உதவும் நோக்கத்தில் இது ஆரம்பிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
மேலும், கியூபா நாட்டு கத்தோலிக்கரை, வெளிநாடுகளுடன் தொடர்புபடுத்தவும், அவர்களிடையே பாலங்களைக் கட்டியெழுப்பவும், திருஅவையின் சமுதாயப் போதனைகளின்படி, இளைஞர்கள் கிறிஸ்தவ வாழ்வுக்குத் தங்களைத் தெளிவான முறையில் அர்ப்பணிக்க உதவவும், இந்த இணையதள கத்தோலிக்க வானொலியைத் துவக்கினோம் என்றும், ரூபன் அவர்கள், பீதேஸ் செய்தியிடம் கூறியுள்ளார்.
கியூப கத்தோலிக்க இளைஞர் இணையதள அமைப்பு, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவையின் ஆதரவுடன், முகநூல், டுவிட்டர், இன்ஸ்டகிராம், டெலகிராம், வாட்சப் போன்ற சமுதாய ஊடகங்கள் வழியாக, அந்நாட்டு கத்தோலிக்கருக்கு உதவி வருகிறது.
Rubèn de la Trinidad அவர்கள், பவுல் மறைப்பணி சபையைச் சார்ந்த திருத்தொண்டர் ஆவார். (Fides)

ஹாயா சொஃபியா குறித்து கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் தலைவர்கள்

ஹாயா சொஃபியா முஸ்லிம்களின் தொழுகைக்கு மாற்றப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு

துருக்கி நாட்டின் ஹாயா சொஃபியா அருங்காட்சியகம், இஸ்லாமியத் தொழுகைக்கூடமாக மாற்றப்பட்டுள்ள முடிவு, இஸ்லாமியருக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே நிலவும் பதட்டநிலைகளை மோசமடையச் செய்யும் - ஆஸ்திரேலிய கிறிஸ்தவத் தலைவர்கள்
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரிலுள்ள புகழ்பெற்ற ஹாயா சொஃபியா (Hagia Sophia) அருங்காட்சியகம், 86 ஆண்டுகளுக்குப்பின், முதல்முறையாக, ஜூலை 24, இவ்வெள்ளியன்று, முஸ்லிம்களின் தொழுகைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு, உலகளாவிய கத்தோலிக்க மற்றும், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவத் தலைவர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த, இந்த பைசன்டைன் பேராலயத்தின் தன்மையை மாற்றுவதற்கு, துருக்கி அரசு எடுத்துள்ள தீர்மானம் பற்றி, மின்னஞ்சல் வழியாக அறிக்கை வெளியிட்டுள்ள, ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரான, கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள், இந்த நடவடிக்கை, இஸ்லாமியருக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே பிளவுகளை ஆழப்படுத்தும் மற்றும், காயங்களை மீண்டும் திறக்கும் என்று தெரிவித்துள்ளார்.
புனித ஞானம் என்று பொருள்படும் ‘ஹாயா சொஃபியா’ என்ற பெயருடன், பல நூற்றாண்டுகளுக்கு முன், புகழுடன் திகழ்ந்த உலகின் மிகப்பெரிய பேராலயம், இஸ்லாமியரின் தொழுகைக்கூடமாக மாற்றப்பட்டிருப்பது, மக்கள் மத்தியில் பதட்டநிலைகள், பிரிவினைகள் மற்றும், வேதனையை விதைக்காமல் வேறு என்ன செய்யும்? என்ற கேள்வியை, மியான்மார் நாட்டு கர்தினால் போ அவர்கள் எழுப்பியுள்ளார்.
உண்மையான மதச் சுதந்திரம் என்பது, ஒருவர் தனது மதம் சார்ந்த நடவடிக்கைகளைச் சுதந்திரமாகச் செயல்படுத்துவதும், அவரின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பதுவுமே என்று கூறியுள்ள கர்தினால் போ அவர்கள், இக்காரணத்தினால், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, உலகின் மிகப்பெரிய கிறிஸ்தவப் பேராலயமாக இருந்த ஹாயா சொஃபியா, மசூதியாக மாற்றப்பட்டிருப்பது வேதனையளிக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
கி.பி.537ம் ஆண்டில் பேரரசர் ஜூஸ்தீனியன் அவர்களால் கட்டப்பட்ட ஹாயா சொஃபியா, கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும்தந்தையின் பேராலயமாக இருந்துவந்தது. 1453ம் ஆண்டில் ஒட்டமான்கள், அந்நகரைக் கைப்பற்றியபின், அது மசூதியாக மாற்றப்பட்டது. பின்னர், சமயச்சார்பற்ற துருக்கி குடியரசின் முதல் அரசுத்தலைவராகிய Mustafa Kemal Atatürk அவர்கள், 1923ம் ஆண்டில் அதை ஓர் அருங்காட்சியகமாக மாற்றினார். (CNA)
ஆஸ்திரேலிய கிறிஸ்தவ தலைவர்கள்
மேலும், ஆஸ்திரேலிய கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், ஹாயா சொஃபியா அருங்காட்சியகம், இஸ்லாமியத் தொழுகைக்கூடமாக மாற்றப்பட்டுள்ள முடிவு,  இஸ்லாமியருக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே நிலவும் பதட்டநிலைகளை மோசமடையச் செய்யும் என்ற தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல, மாறாக, இயேசு கிறிஸ்துவால் அவரின் அமைதியை அனைவருக்கும் அறிவிக்க அனுப்பப்பட்டவர்கள் என்றும், ஒரு காலத்தில் கிறிஸ்தவ வழிபாட்டு இடமாகவும், பின்னர் மிக அண்மை காலத்தில், உலக கலாச்சார கருவூலத்தின் சின்னமாகவும் மாற்றப்பட்டிருந்த Hagia Sophia/Aya Sofyaவின் தன்மையை மாற்றுவது குறித்த துருக்கி அரசின் தீர்மானம் பற்றி வருத்தம் தெரிவிக்கும் பல்வேறு உலகின் குரல்களோடு எங்களையும் இணைக்கின்றோம் என்றும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (Zenit)

வெறுப்பும், வன்முறையும், குழப்பங்களை இன்னும் அதிகரிக்கும்

புனித கபிரியேல் மறைப்பணித் தளத்தின் ஆலயத்தைப் பாதுகாப்பதில் காவல்துறை

கலிபோர்னியா மாநிலத்தின் புனித கபிரியேல் மறைப்பணித் தளத்தின் பழமைவாய்ந்த கோவில் ஜூலை மாதத் துவக்கத்தில் தீக்கிரையானது. புளோரிடா மாநிலத்தின் கோவில் ஒன்றின் மீது கார் ஒன்றை மோதி, அக்கோவிலை தீக்கிரையாக்க முயற்சி நடந்தது
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
வெறுப்பு மற்றும் வன்முறையால் தூண்டப்பட்டு, அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள கோவில்களுக்கு தீயிடுதல் மற்றும் அப்புனித தலங்களை அவமதிக்கும் வகையில் சேதங்களை உருவாக்குதல் ஆகிய செயல்பாடுகளை நிறுத்துமாறு, அந்நாட்டு ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கத்தோலிக்க ஆலயங்கள், திரு உருவங்கள், மற்றும் ஏனைய அடையாளங்களை அகற்றுதல் மற்றும் சேதப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளோருக்கு, அமெரிக்க ஆயர் பேரவையின் மதச் சுதந்திரம் பணிக்குழுவின் தலைவரும், நீதி மற்றும் மனித முன்னேற்றப் பணிக்குழுவின் தலைவரும் இந்த விண்ணப்பத்தை விடுத்துள்ளனர்.
இப்பணிக்குழுக்களின் தலைவர்களான மியாமி பேராயர் தாமஸ் வென்ஸ்கி (Thomas Wenski) அவர்களும், ஓக்லஹோமா பேராயர் பால் கோக்லி (Paul Coakley) அவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், வெறுப்பும், வன்முறையும் நம்மிடையே ஏற்கனவே நிலவி வரும் பிரிவுகளையும், குழப்பங்களையும் இன்னும் அதிகரிக்குமே தவிர குறைக்காது என்று கூறியுள்ளனர்.
கலிபோர்னியா மாநிலத்தின் புனித கபிரியேல் மறைப்பணித் தளத்தின் பழமைவாய்ந்த கோவில் ஜூலை மாதத் துவக்கத்தில் தீக்கிரையானது என்பதும், ஃபுளோரிடா மாநிலத்தின் ஒரு கோவில் மீது கார் ஒன்றை மோதி, அக்கோவிலை தீக்கிரையாக்க முயற்சி நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கன.
இன்னும் சில இடங்களில், புனிதர்களின் உருவச்சிலைகளும், இயேசு, மற்றும் அன்னை மரியாவின் உருவச் சிலைகளும் சேதமடைந்துள்ளன என்றும் கூறப்படுகிறது.
"கறுப்பினத்தவரின் உயிர்கள் மதிப்பிற்குரியவை" (#BlackLivesMatter) என்ற அறைக்கூவலுடன், உலகின் பல நாடுகளில் நிகழ்ந்துவரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக, அடிமை வர்த்தகத்தை ஆதரித்த பல வெள்ளையினத்தவரின் உருவச் சிலைகள் அகற்றப்பட்டும், சேதமாக்கப்பட்டும் வருகின்றன.

இரு பழமை வாய்ந்த ஆலயங்கள், தேசியக் கருவூலங்களாக...

பாகிஸ்தானின் இரு பழமை வாய்ந்த ஆலயங்கள், தேசிய கலாச்சாரக் கருவூலங்களாக அங்கீகரிக்கப்பட  அழைப்பு

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள திரு இருதயப் பேராலயம், மற்றும், ஆங்கிலிக்கன் சபையின் இயேசு உயிர்ப்பு ஆலயம் ஆகிய இரண்டும், அந்நாட்டின் மிகப் பழம்பெரும் சின்னங்கள் என்று கருதப்பட விண்ணப்பம்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியைச் சேர்ந்த மனித உரிமை, மற்றும் சிறுபான்மையினர் விவகாரத்தின் அமைச்சர், Ijaz Alam Augustine அவர்கள், அந்நாட்டிலுள்ள இரு பழமை வாய்ந்த ஆலயங்கள், தேசிய கலாச்சாரக் கருவூலங்களாக கருதப்பட்டு, சீரமைக்கப்பட வேண்டும் என்று விண்ணப்பம் விடுத்துள்ளார்.
லாகூரில் உள்ள திரு இருதயப் பேராலயம், மற்றும், ஆங்கிலிக்கன் சபையின் இயேசு உயிர்ப்பு ஆலயம் ஆகிய இரண்டும், அந்நாட்டின் மிகப் பழம்பெரும் சின்னங்கள் என்றும், அவை தற்போது மிகவும் சீர்குலைந்த நிலையில் இருப்பதால், பாகிஸ்தான் அரசு, இவ்விரு ஆலயங்களையும் பராமரிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்றும், அமைச்சர் அகஸ்டின் அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.
இவ்விரு ஆலயங்களையும் நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் அகஸ்டின் அவர்கள், இவ்விரு ஆலயங்களின் தரவுகள் அனைத்தையும் திரட்டி, அரசிடம் ஒப்படைத்துள்ளதாக, ஆசிய செய்தி கூறுகிறது.
லாகூரில் அமைந்துள்ள திரு இருதயப் பேராலயம், 1907ம் ஆண்டு, அப்போதைய ஆயராகப் பணியாற்றிய Fabien Antoine Eestermans அவர்களால் கட்டப்பட்டது என்றும், இதற்குத் தேவையான நிதி உதவியை, பெல்ஜியம் நாட்டவர் வழங்கினர் என்றும் ஆசிய செய்தி கூறுகிறது.
இதே நகரில் அமைந்துள்ள ஆங்கிலிக்கன் சபையின் இயேசு உயிர்ப்பு ஆலயம், 1887ம் ஆண்டு,  John Oldrid Scott என்ற கட்டடக்கலை வல்லுனரால், இளம் சிவப்பு கற்களால் உருவாக்கப்பட்டது என்று ஆசிய செய்தி கூறுகிறது.
இவ்விரு ஆலயங்களையும் புதுப்பிக்கும் பணிக்கு, பாகிஸ்தான் பணத்தில், 5 கோடி ரூபாய் தேவைப்படும் என்றும், அதனை அரசு வழங்குமாறு, தான் விண்ணப்பித்திருப்பதாக, அமைச்சர் அகஸ்டின் அவர்கள் கூறியுள்ளார்.
அமைச்சரின் இந்த முயற்சி குறித்து, லாகூர் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தலைவர்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்துள்ள அதே வேளையில், இந்த முயற்சிக்கு மக்களின் ஒத்துழைப்பையும் நாடி விண்ணப்பித்துள்ளனர். (AsiaNews)

மகிழ்ச்சி யாருக்கு?

பறவைகள் பலவிதம்

கடவுள் கொடுத்துள்ளதற்கு நன்றி கூறி, அவர் கொடுத்துள்ளதை மதித்து, நம்மை நாமே அன்புகூர கற்றுக்கொள்ளவேண்டும்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்
ஓர் ஊரில் ஒரு காகம் இருந்தது. அது அதிக மகிழ்ச்சியாக இருந்தது, ஒரு கொக்கை பார்க்கும்வரை. அது கொக்கை பார்த்துச் சொல்லியதாம், நீ வெள்ளையாக  எவ்வளவு அழகா இருக்க. கறுப்பா இருக்கும் என்னை எனக்குப் பிடிக்கவில்லை, என்று.
கொக்கு சொன்னது, நானும் அப்படிதான் நினைத்தேன், கிளியைப் பார்க்கும்வரை. அது இரண்டு நிறங்களில் எவ்வளவு அழகா இருக்கிறது தெரியுமா? என்றது.
காகமும் கிளியிடம் சென்று கேட்டவுடன், அது சொன்னது, உண்மைதான். நான் மகிழ்ச்சியாகத்தான் இருந்தேன், ஆனால் ஒரு மயிலை பார்க்கும்வரை. அது பல நிறங்களில் எவ்வளவு அழகா இருக்கிறது தெரியுமா? என்றது.
உடனே காகமும், மயில் இருக்கும் ஒரு மிருகக் காட்சிசாலை சென்று, அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் மயிலை பார்க்கக் காத்திருப்பதைப் பார்த்து நினைத்தது, இதுதான் மகிழ்ச்சி என்று.
அழகு மயிலே, உன்னைக்காண இவ்வளவு பேர். என்னைப்பார்த்தாலே இவர்கள் முகத்தைத் திருப்பிக்கொள்கிறார்கள். என்னைப்பொருத்தவரை, உலகிலேயே நீதான் அதிக மகிழ்ச்சியானவர், என்றது.
மயில் சொன்னது, அன்பு காகமே, நான் எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தேன், நான் தான் அழகு, மற்றும், மகிழ்ச்சியான பறவை என்று. ஆனால், எனது இந்த அழகுதான் என்னை ஒரு சிறையில் பூட்டி வைத்துவிட்டது. இந்த மிருகக் காட்சிசாலை முழுதும் நான் பார்த்ததில், காகம் மட்டுமே பூட்டி வைக்கப்படவில்லை. எனவே, நான் யோசிப்பது எல்லாம், நானும் காகமாக இருந்தால், உலகம் முழுதும் ஆனந்தமாகச் சுற்றி வரலாமே, என்றுதான்.
நமது பிரச்சனையும் இதுதான். நாம் தேவை இல்லாமல் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு நம்மை நாமே கவலை கொள்ளச் செய்கிறோம்.
கடவுள் கொடுத்துள்ளதற்கு நன்றி கூறி, அவர் கொடுத்துள்ளதை மதித்து, நம்மை நாமே அன்புகூரக் கற்றுக்கொள்ளவேண்டும். நம்மை, நம்மைவிட வேறு யாரும் நேசிக்க முடியாது.

தொழில் மரியாதை

காலணிகள் விற்கும் கடை

நீங்கள் ஒரு கோடி கொடுத்தாலும், உங்களுக்கு உதவுவதை நிறுத்தமாட்டேன். இது என் தொழில் மரியாதை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்
செருப்புக் கடைக்கு ஒருவர் சென்றார். பணியாளர் அவரை வரவேற்று, செருப்பை எடுத்துக்காட்டினார். அவரை அமர வைத்து அவர் காலடியில் அமர்ந்து, ஒவ்வொரு செருப்பாக அணிவித்துக் காட்டினார். கடைக்கு வந்தவருக்குச் சங்கடமாக இருந்தது..
"நானே போட்டு பார்க்கிறேன்" என்றார் அவர்.
பணியாளர் விடவில்லை. அவரே அவருக்கு உதவினார். கடைக்கு வந்தவர் பணியாளரிடம், "அய்யா.. நானும் மனிதன்.. நீங்களும் மனிதன்.. என் கால்களை நீங்கள் தொடுவது எனக்கு ஒரு மாதிரி இருக்கிறது" என்று சொன்னார்
பணியாளர் சிரித்தபடி சொன்னார், "இந்த கடைக்கு வெளியே போய்விட்டால், ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும், நான் உங்கள் கால்களைத் தொடமாட்டேன். அது, என் சுய மரியாதை. கடைக்குள், நீங்கள் ஒரு கோடி கொடுத்தாலும், உங்களுக்கு உதவுவதை நிறுத்தமாட்டேன். இது, என் தொழில்மீது நான் கொண்டிருக்கும் மரியாதை"
இதுதான் தொழில் தர்மம்!

தனனலமற்ற அன்புக்கு கிடைத்த பரிசு

வால்டோர்ப் ஆடம்பரப் பயணியர் மாளிகை

ஒருவர், பிறர் மீது காட்டும் தன்னலமில்லா அன்பும், தியாக உள்ளமும், உதவியும், அவரைப் புகழின் உச்சியில் அமர்த்தும்
மேரி தெரேசா: வத்திக்கான்
பல ஆண்டுகளுக்குமுன், அமெரிக்க ஐக்கிய நாட்டின் பிலடெல்பியா நகரில், ஓர் இர்வில் கனமழையோடு புயலும் வீசிக்கொண்டிருந்தது. அந்த இரவில் வயதுமுதிர்ந்த ஒரு தம்பதியினர், ஒரு சிறிய பயணியர் விடுதியை அடைந்தனர். அங்கு வரவேற்பு அறையில் இருந்த பணியாளரிடம், அந்த இரவில் தங்குவதற்கு அவர்கள் இடம் கேட்டனர். புன்னகையோடு அவர்களை வரவேற்ற அந்த பணியாளர், அந்த வாரம் அந்த நகரில் மிகப்பெரிய மாநாடு ஒன்று நடப்பதால் அனைத்து அறைகளும் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டுவிட்டன என்று மிகுந்த பணிவன்புடன் கூறினார். சற்றே ஏமாற்றம் அடைந்த அந்த தம்பதியர், அங்கிருந்து செல்லத் துவங்கியபோது, அந்த பணியாளர், அவர்களிடம், ஐயா! மணி இரவு ஒன்றைக் கடந்துவிட்டது மேலும், வெளியில் மழையும் புயலுமாக உள்ளது. இந்த நேரத்தில் தங்களை வெளியே அனுப்ப எனக்கு மனமில்லை. தங்களுக்கு சரி என்றால், என்னுடைய அறையில் நீங்கள் தங்கிக்கொள்ளலாம், ஆனால் அது மிகப்பெரிய சொகுசு அறை இல்லை என்று அன்புடன் கூறினார். அந்த தம்பதியினர், சிறிது தயக்கம் காட்டவே, அந்தப் பணியாளரோ, என்னைப் பற்றி கவலைவேண்டாம். நான் சமாளித்துக் கொள்வேன் என்று சொல்ல, அந்த தம்பதியினர் அரை மனதுடன் அறைக்குச் சென்றனர். அன்று இரவு நன்றாகத் தூங்கியபின், மறுநாள் காலை, அந்த வரவேற்பு அறை பணியாளருக்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர். சற்றே உணர்ச்சிவசப்பட்ட அந்த பெரியவர், இந்த காலத்தில் அன்பும் உதவிசெய்யும் உள்ளமும் கொண்ட நபரைச் சந்திப்பது மிக அரிது என்றார். இந்த துறையில் நீ சிறந்து விளங்குவாய் என்றும், நீ இந்த சிறிய விடுதியில் இருக்க வேண்டியவன் அல்ல என்றும், அன்புடன் கூறினார்.  மேலும் நான் பெரிய பயணியர் மாளிகை ஒன்றைக் கட்டுவேன், அதற்கு நீ தான் மேலாளர் என்று சொல்லிவிட்டு விடைபெற்றார் அந்த பெரியவர். இரண்டு ஆண்டுகள் சென்று ஒரு நாள், அந்த பணியாளருக்கு ஒரு மடல் வந்தது. ஆவலுடன் அதைப் பிரித்து வாசித்த அவர், சற்றே குழப்பத்துடன் மகிழ்ச்சி அடைந்தார். அந்த மடலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற அந்த நிகழ்வை குறிப்பிட்டு, தன்னை வந்து நியூயார்க்கில் சந்திக்குமாறு கூறி, விமான பயணச்சீட்டையும் அனுப்பி வைத்து இருந்தார். நியூயார்க் சென்ற அந்த பணியாளர் அந்த பெரியவரை Fifth Avenue 34வது தெரு சென்று அடைந்து, அந்த பெரியவரை சந்தித்தார். அங்கு புதிதாக விண்ணைமுட்டும்படி சிகப்பு கற்களால் கட்டப்பட்ட அந்த பெரிய மாளிகையைக் காட்டினார். அந்த பெரிய ஆடம்பர பயணியர் மாளிகைக்கு நீதான் மேலாளர் என்றும் கூறினார் அந்தப் பெரியவர். அந்த வயதுமுதிர்ந்த பெரியவர்தான், வில்லியம் வால்டோர்ப் ஆஸ்டர் (William Waldorf Astor).  அந்த விடுதியின் முதல் மேலாளரான ஜார்ஜ் சி. போல்டட் (George Charles Boldt) அவர்கள்தான் அந்த பணியாளர். அமெரிக்க ஆடம்பரப் பயணியர் மாளிகைகளின் அன்னை என அழைக்கப்படும் இந்த ஆஸ்டர் மாளிகை, உலகின் மிகப் புகழ்பெற்ற பயணியர் மாளிகைகளில் ஒன்றாகும். இது 1893ம் ஆண்டில் 13 அடுக்கு மாளிகையாக அமைக்கப்பட்டது.

கொடைவள்ளல் யார்?

சாலையோரத்தில் இரந்துண்ணும் ஒருவர்

தானமோ, அன்போ, நம் மனதின் ஆழத்திலிருந்து எழுவதாக, முழுமையானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவைகளின் உண்மை மதிப்பு வெளிப்படும்.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
அர்ஜுனனுக்கு, கண்ணன் இன்னும் கர்ணனை கொடை வள்ளல் என்று சொல்வது பிடிக்கவில்லை. அவருடன் வாதிட்டார்.
கண்ணன் உடனே தங்கக்குன்று ஒன்றை உருவாக்கினார். அர்ஜுனனை அழைத்து, ''இன்று மாலைக்குள் இந்தக் குன்று முழுவதையும் நீ தானம் செய்து முடித்துவிட்டால், நான் உன்னை கர்ணனைவிட சிறந்த கொடை வள்ளல் என்று ஒத்துக் கொள்கிறேன்,'' என்றார்.
அர்ஜுனனும் ஊர் முழுக்க செய்தியை பரப்பச்செய்து, ஆட்கள் வரவர, தங்கத்தை வெட்டி எடுத்து வழங்க ஆரம்பித்தார். எவ்வளவோ முயற்சிசெய்தும் அவரால் அன்று மாலைக்குள் பாதி அளவுகூட தானம் செய்து கொடுக்க முடியவில்லை.
அப்போது அந்தப் பக்கம் கர்ணன் வரவே, கண்ணன் அவரை அழைத்து, ''கர்ணா, இந்தத் தங்கக் குன்றை நாளை காலைக்குள் தானம் செய்து கொடுத்துவிட வேண்டும், உன்னால் முடியுமா?''என்று கேட்டார்.
கர்ணனும், ''இது என்ன பெரிய வேலையா?'' என்று கூறிக்கொண்டே அந்தப் பக்கம் வந்த வறியவர் இருவரை அழைத்தார். அவர்களிடம், ''உங்கள் இருவருக்கும் இந்த தங்க மலையை தானம் அளிக்கிறேன். வெட்டி உபயோகித்துக் கொள்ளுங்கள்,''என்று கூறியபடியே சென்று விட்டார்.
அப்போது கண்ணன் அர்ஜுனனிடம் சொன்னார், ''இப்போது உனக்கு வேறுபாடு தெரிகிறதா? உனக்கு,  முழுமையாகக் கொடுக்கலாம் என்ற எண்ணம் கடைசிவரை வரவில்லை".
தானமோ, அன்போ, நம் மனதின் ஆழத்திலிருந்து முழுமையாக கொடுக்காதவரை அதன் சிறப்பு தெரிவதில்லை.

ஏழை நாடுகளின் கடன் தள்ளுபடி குறித்து ஜி-20 நாடுகள்

காணொளி வழியாக தங்களிடையே விவாதங்களை நடத்திய ஜி.20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் கூட்டத்தில், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஏற்கனவே 73 நாடுகளின் கடன்சுமை குறைக்கப்பட்டிருக்க, தற்போது, ஜூலை மாதம் வரை, 42 நாடுகள், தங்கள் கடன்சுமையைக் குறைக்கவேண்டும் என, ஜி-20 நாடுகள் கூட்டமைப்பிடம் விண்ணப்பித்துள்ளன.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்
உலகிலுள்ள ஏழை நாடுகளின் கடன் நிவாரணம் குறித்து, இவ்வாண்டு ஏப்ரல் மாதம் அறிவித்த ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பு, கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை நாடுகளின் கடன் தள்ளுபடி குறித்து, இவ்வாண்டின் இறுதிக்குள் கூடி விவாதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் கடன் தள்ளுபடி, நிரந்தர கடன் குறைப்பு, கோவிட்-19 நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் கடனை தள்ளுபடி செய்தல் போன்றவை குறித்து விவாதிக்கும் ஜி-20 கூட்டமைப்பின் நிதி அமைச்சர்கள் கூட்டம், இவ்வாண்டு இறுதியில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று காணொளி வழியாக தங்களிடையே விவாதங்களை நடத்திய ஜி.20 நாடுகளின் நிதி அமைச்சர்கள், அக்கூட்டம் குறித்து வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளனர்.
ஜி-20 பணக்கார நாடுகளிடம் பட்டுள்ள கடனுக்குரிய வட்டியை இவ்வாண்டு முழுவதும் செலுத்தத் தேவையில்லை என ஏற்கனவே 73 நாடுகளிடம், ஜி-20 நிதி அமைச்சர்கள் ஏப்ரல் கூட்டத்தில் அறிவித்திருக்க, தற்போது ஜூலை மாதம் வரை 42 நாடுகள், தங்கள்  கடன் சுமையைக் குறைக்க வேண்டும் என ஜி-20 நாடுகள் கூட்டமைப்பிடம் விண்ணப்பித்துள்ளன.
கடந்த சனிக்கிழமையன்று, ஜி-20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் காணொளி வழியாக விவாதம் நடத்துவதற்கு முன்னரே, அவர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள 'ஜூபிலி யு.எஸ்.ஐ.' என்ற மதத்தலைவர்கள், வளர்ச்சித்திட்ட நிறுவனங்கள் ஆகியவை இணைந்த கூட்டமைப்பு, ஏழைநாடுகளின் கடன் நிவாரணம், வளரும் நாடுகளுக்கு உதவிகள், ஊழலை ஒழிக்க உதவுதல், அவர்களின் வர்த்தகத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றை அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.

பாகிஸ்தான் முழுக்க தூய தமிழ் ஊர் பெயர்கள் | சிந்துவெளியில் தமிழ் ஊர் பெய...

Wednesday 22 July 2020

Indian Bishops to implement CDF guidelines on abuse

Pope Francis with the Bishops of India

Indian bishops say they are ready to implement the guidelines of the Congregation for the Doctrine of the Faith on sexual abuse in the Church
By Vatican News
Bishops in India are ready to implement the instructions contained in the new Vademecum of the Congregation for the Doctrine of the Faith on procedures to be followed in cases of sexual abuse of minors committed by members of the clergy.

Implementation

Archbishop Felix Anthony Machado, secretary-general of the Catholic Bishops’ Conference of India (CBCI) told the UCA News agency,  “We will implement the guidelines in accordance with our civil laws.”
 “The Vatican has always been concerned about all forms of abuses including the [sexual abuse of children],” he said, adding that “The July 16 set of guidelines is nothing entirely new but is a follow-up of what it has already been doing.”

Guidelines in India

In 2015 Indian bishops drew up guidelines on the procedures to be followed in dealing with cases of sexual abuse of children by clerics.
In 2017 another document was drawn up on the sexual harassment of women working in institutions run by the Church. It was prepared by the Bishops with the aim of "creating a safe and healthy working environment, where employees can move peacefully without fear of prejudice or harassment of any kind".

CDF Guidelines

On July 16 the Congregation for the Doctrine of the Faith (CDF) published an “instruction manual”, to help ascertain the truth in cases of minors who have suffered abuse on the part of a member of the clergy.
It is a tool designed to help Ordinaries and legal professionals who need to apply canonical norms to actual cases regarding the delicta graviora (more serious delict or crime).
The request for this guide was made during the Global Meeting of the Presidents of the Episcopal Conferences on the Protection of Minors held in the Vatican in February 2019.
In his 2019 apostolic letter Vos estis lux mundi, Pope Francis stipulated that all priests and members of religious orders are obligated to report any suspicions of abuse to their superiors. The Vatican also wants bishops to report such cases to civil authorities in countries where there is no mandatory reporting protocol. It says that “failure to do so can lead to their removal from office for dereliction of duty.”
In India the reporting of the sexual abuse of children is mandatory and those failing to do so face a minimum of one year in prison.

Zero Tolerance

Speaking to the UCA News Agency, Father Abraham Kavilpurayidathil, public relations officer of the Eastern-rite Syro-Malabar Church based in Kerala, said all its dioceses have already formed safe environment committees for the proper execution of Vatican guidelines to deal with cases of sexual abuse.
The committees, established on June 1, will look into allegations referring to Vatican guidelines in accordance with India’s civil law.
In February of this year, 192 bishops at the plenary of the CBCI in Bengaluru affirmed that they will not tolerate any kind of sexual abuse.

எகிப்த்தை மிஞ்சிய கீழடி ஆச்சர்யம் -தோண்ட தோண்ட புதையல்

झारखंड में प्रस्तावित कोयला ब्लॉक नीलामी का कलीसिया द्वारा विरोध

कोयला उठाते मजदूर

खान के लिए जमीन उपलब्ध कराना एक बड़े क्षेत्र में जंगल को नष्ट करेगा एवं आदिवासी समुदाय की जीविका को प्रभावित करेगा।
उषा मनोरमा तिरकी-वाटिकन सिटी
झारखंड, बृहस्पतिवार, 16 जुलाई 2020 (उकान) – 15 जुलाई को मामले की सुनवाई करते हुए, सुप्रीम कोर्ट ने झारखंड राज्य सरकार से संघीय सरकार की राय पूछी थी, जिसने कोयला क्षेत्रों की नीलामी के साथ संघीय सरकार के फैसले को चुनौती दी थी।
दिल्ली में भारतीय सामाजिक संस्थान के आदिवासी अध्ययन विभाग के प्रमुख जेस्विट फादर भिन्सेंट एक्का ने कहा, "राज्य में आदिवासी खेती और वानिकी पर निर्भर हैं, इसलिए खनन के लिए भूमि आवंटित करने से, जंगल और साथ ही खेती के विशाल क्षेत्र नष्ट हो जाएंगे और विस्थापन भी बढ़ेगा।"
फादर एक्का ने कहा, "मैं केंद्र सरकार द्वारा स्थानीय लोगों के लिए नौकरी के अवसर के दावे पर भी संदेह करता हूँ। खनन कई राज्यों में इस प्रभाव पर ध्यान दिये बिना दशकों से जारी है। यदि वह स्थानीय लोगों को नौकरी देती है तो इन राज्यों से क्यों बहुत अधिक लोग पलायन करते?"
उन्होंने कहा, "सरकार को आदिवासी जो पर्यावरण के रक्षक हैं, उनकी आजीविका में बाधा डाले बिना, दूसरी तरह से आमदनी अर्जित करनी चाहिए और देश की आर्थिक स्थिति को स्थिर करना चाहिए।"
प्रधानमंत्री नरेंद्र मोदी ने 18 जून को वीडियो कॉन्फ्रेंस के माध्यम से राज्य में वाणिज्यिक खनन के लिए 41 कोयला ब्लॉकों की नीलामी की घोषणा की थी। एक महत्वपूर्ण नीतिगत बदलाव में, मोदी सरकार ने खनन पर सरकार के एकाधिकार को समाप्त कर दिया है और निजी भागीदारी की अनुमति दी है।
मोदी ने कहा है कि कोयला खनन क्षेत्र में सुधार से लाखों रोजगार सृजित होंगे और यह सभी के लिए एक जीत की स्थिति होगी।
कोयला खदान की नीलामी कोविद -19 महामारी के दौरान अर्थव्यवस्था को बढ़ावा देने का एक प्रयास है। वाणिज्यिक कोयले की नीलामी घरेलू और वैश्विक कंपनियों के लिए 100 प्रतिशत प्रत्यक्ष विदेशी निवेश के तहत खुली है। कोयला क्षेत्र छत्तीसगढ़, झारखंड, मध्य प्रदेश, महाराष्ट्र और ओडिशा राज्यों में स्थित हैं जहां अधिकांश आदिवासी रहते हैं। 41 कोल क्षेत्र में से नौ झारखंड में हैं। 84 बिलियन टन कोयले के साथ झारखंड, देश के 26% कोयले का भंडार है तथा अन्य सभी राज्यों में आगे है।
हालांकि, राज्य के मुख्यमंत्री हेमंत सोरेन ने कहा है कि वाणिज्यिक खनन के लिए कोयला क्षेत्रों की नीलामी करने के संघीय सरकार के फैसले से "सहकारी संघवाद की अपमानजनक उपेक्षा हुई है।" उन्होंने आरोप लगाया कि केंद्र ने राज्य सरकार से इस बारे में सलाह नहीं ली है।
झारखंड सरकार ने 20 जून को सुप्रीम कोर्ट में एक याचिका दायर की थी और "विशाल जनजातीय आबादी और वनभूमि पर" खनन के सामाजिक और पर्यावरणीय प्रभावों का आकलन करने को कहा था।
याचिका में कहा गया था कि "यह बड़े पैमाने पर विस्थापन एवं आनुषंगिक पुनर्वास तथा बसने की समस्या जैसे मुद्दों को जन्म देगा। राज्य [झारखंड] अपने क्षेत्र के भीतर स्थित खानों और खनिजों का मालिक है।"
इसमें दावा किया गया है कि कोरोनोवायरस की महामारी दुर्लभ प्राकृतिक संसाधनों को क्षति पहुँचाये जाने का परिणाम है। झारखंड राज्य ने आरोप लगाया कि नीलामी का निर्णय पर्यावरणीय मानदंडों का उल्लंघन करता है और जंगलों और भूमि को "अपूरणीय क्षति" पहुंचा सकता है।
झारखंड की तरह, छत्तीसगढ़ की सरकार ने अरंड वन प्रभाग में पांच कोयला ब्लॉकों की नीलामी का विरोध करते हुए कहा कि इससे लेमरू हाथी अभ्यारण्य प्रभावित होगा।
मध्य प्रदेश राज्य के कार्यकर्ता सुनील मिंज, जो फादर एक्का और मुख्यमंत्री सोरेन का समर्थन करते हैं, कहा, "उन स्थलों में जहाँ खान खोदे जायेंगे और जिन क्षेत्रों को सरकार निलाम करना चाहती है वह कई आदिवासी समुदायों का निवास स्थान है जिनकी जीविका का मुख्य साधन खेती और जंगल हैं और यदि उसके छेड़छाड़ किया गया तो वे प्रभावित होंगे।"
उन्होंने कहा, "वनभूमि और खेत उनके लिए सब कुछ है, और अगर उन्हें उससे अलग कर दिया जाए तो उनके पास कुछ भी नहीं रह जाएगा। यह उसी प्रकार है जिस प्रकार नमक से स्वाद निकाल दिये जाने पर वह बेकार हो जाती है। आदिवासी और जंगल आपस में जुड़े हुए हैं - अगर आप एक को परेशान करेंगे तब दूसरा परेशान होगा।"
आदिवासी नेता ने कहा कि "राज्यों में वाणिज्यिक खनन से आगे बढ़ने से पहले आदिवासियों को विश्वास में लिया जाना चाहिए।"