Monday 27 July 2020

தொழில் மரியாதை

காலணிகள் விற்கும் கடை

நீங்கள் ஒரு கோடி கொடுத்தாலும், உங்களுக்கு உதவுவதை நிறுத்தமாட்டேன். இது என் தொழில் மரியாதை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்
செருப்புக் கடைக்கு ஒருவர் சென்றார். பணியாளர் அவரை வரவேற்று, செருப்பை எடுத்துக்காட்டினார். அவரை அமர வைத்து அவர் காலடியில் அமர்ந்து, ஒவ்வொரு செருப்பாக அணிவித்துக் காட்டினார். கடைக்கு வந்தவருக்குச் சங்கடமாக இருந்தது..
"நானே போட்டு பார்க்கிறேன்" என்றார் அவர்.
பணியாளர் விடவில்லை. அவரே அவருக்கு உதவினார். கடைக்கு வந்தவர் பணியாளரிடம், "அய்யா.. நானும் மனிதன்.. நீங்களும் மனிதன்.. என் கால்களை நீங்கள் தொடுவது எனக்கு ஒரு மாதிரி இருக்கிறது" என்று சொன்னார்
பணியாளர் சிரித்தபடி சொன்னார், "இந்த கடைக்கு வெளியே போய்விட்டால், ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும், நான் உங்கள் கால்களைத் தொடமாட்டேன். அது, என் சுய மரியாதை. கடைக்குள், நீங்கள் ஒரு கோடி கொடுத்தாலும், உங்களுக்கு உதவுவதை நிறுத்தமாட்டேன். இது, என் தொழில்மீது நான் கொண்டிருக்கும் மரியாதை"
இதுதான் தொழில் தர்மம்!

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...