Tuesday, 13 September 2022

சிறுமலை

 

அனுமன் இமய மலையை கையில் கொண்டு செல்லும்போது சிந்திய சிறு மண்ணே பிறகு சிறுமலை என உருவாகியது என கூறப்படுகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

சிறுமலை, திண்டுக்கல்லுக்கு 25 கிலோ மீட்டர்கள் அருகிலும், மதுரைக்கு 40 கிலோ மீட்டர்கள் அருகிலும் அமைந்துள்ளது. அனுமன் இமய மலையை கையில் கொண்டு செல்லும்போது சிந்திய சிறு மண்ணே பிறகு சிறுமலை என உருவாகியது என அங்குள்ள மக்களால் கூறப்படுகிறது

இம்மலையில் மொத்தம் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. 17வது கொண்டை ஊசி வளைவில் ஒரு கண்காணிப்பு கோபுரம் உள்ளது, மற்றும் கீழே உள்ள இயற்கைக் காட்சிகளைக் கவரும்வண்ணம் இங்கு பார்வையாளர்கள் நிறுத்தம் உள்ளது. அன்னை வேளாங்கண்ணி ஆலயம் மற்றும் வெள்ளிமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் இங்கு வருகிறார்கள். மலை உச்சியில் ஒரு சிவன் கோவில் உள்ளது, 500 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் உள்ளது.

இங்கு அரிய வகை மூலிகைகள் உள்ளன. எலுமிச்சம் பழம், வாழைப் பழம், பலாப் பழம் போன்றவை அதிகமாக விளைகின்றன. சிறுமலை வாழைப் பழம் பழனி முருகன் கோவிலுக்கு பஞ்சாமிர்தம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. 60,000 ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ள இது, அழிந்துவரும் அரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் களஞ்சியமாக உள்ளது. புள்ளிமான், குரைக்கும் மான், எலி மான் போன்ற மான் வகைகள் இங்கு காணப்படுகின்றன. காட்டுப்பன்றி, சோம்பல் கரடி, குள்ளநரி, மெல்லிய லோரிஸ், சிறுத்தை போன்ற மற்ற காட்டு விலங்குகளும் இம்மலையில் வாழ்கின்றன.

மனிதரால் உருவாக்கப்பட்ட சிறுமலை ஏரி, 2010ஆம் ஆண்டில் கட்டப்பட்டது, அங்கு படகு வசதிகள் உள்ளன.


No comments:

Post a Comment

ROBERT JOHN KENNEDY: New Decree clarifies discipline on Mass Intentions...

ROBERT JOHN KENNEDY: New Decree clarifies discipline on Mass Intentions... :   New Decree clarifies discipline on Mass Intentions and collec...