Friday 2 September 2022

இனியது இயற்கை – ஜவ்வாது மலை

 

இனியது இயற்கை – ஜவ்வாது மலை


ஜவ்வாது மலையில் உள்ள நீர்மத்தி மரங்களை 15 பேர் ஒன்றிணைந்தால் மட்டுமே கட்டிப்பிடிக்க முடியும். அந்தளவுக்கு அதன் விட்டம் பெரியது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

வேலூர் - திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் வரும் கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி ஜவ்வாது மலை. இந்த மலையின் மேற்குப் பகுதியில் மனதுக்கு குளிர்ச்சி தரும் ஏலகிரி மலை உள்ளது. கிழக்குப் பகுதியில், வரலாற்று தகவல்கள், பொது அறிவுத் தகவல்கள் புதைந்துள்ள, ஒரு சுற்றுலாத் தலமாக ஜம்னாமத்தூர் பகுதி உள்ளது.

ஜவ்வாது மலையின் மையப் பகுதியான ஜம்னாமத்தூர், திருவண்ணாமலையில் இருந்து 70 கி.மீ தொலைவில் உள்ளது. ஜம்னாமத்தூரிலிருந்து 3 கி.மீ தொலைவு சென்றால் அழகான பீமன் நீர் வீழ்ச்சியுள்ளது. இங்கு நீர் 80 அடி உயரத்தில் இருந்து கொட்டுகிறது.

மலையின் சில இடங்களில் நீர்மத்தி மரங்கள் உள்ளன. இந்த மரங்களை 15 பேர் ஒன்றிணைந்தால் மட்டுமே கட்டிப்பிடிக்க முடியும். அந்தளவுக்கு அதன் விட்டம் பெரியது. தெற்குப் பகுதியில் பர்வதமலை என்ற மலை, இம்மலையை ஒட்டியுள்ளது. இங்குள்ள அம்மன் கோயில் சிறப்பு வாய்ந்ததாகும்.

மலையில் பேஎள் என்ற எள் விளைகிறது. இதிலிருந்து கொழுப்பு சத்து இல்லாத எண்ணெய் எடுக்க முடியும். அதேபோல், மலைப் பகுதியில் மட்டுமே விளையும் சாமை என்ற தானியம் இங்கு அதிகமாக விளைவிக்கப்படுகின்றது.

ஜம்னாமத்தூரில் இருந்து 15 கி.மீ தூரம் சென்றால் காவனூர் வருகிறது. ஆசியாவின் மிகப் பெரிய தொலைநோக்கி மையம் இதுதான். ஜம்னாமத்தூரில் இருந்து அமிர்திக்குச் செல்லலாம். 32 வது கி.மீட்டரில் உள்ளது அமிர்தி. இங்கு நீர்வீழ்ச்சியும், விலங்கியல் பூங்காவும் உள்ளன.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...