Friday 2 September 2022

ஏலக்காய் மலை

 

ஏலக்காய் மலை


வனங்களும், மலைகளும் மனிதகுலத்தின் வளத்திற்கான ஆதாரங்கள் என்கிற மனநிலைக்கு நாம் மாறவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

"காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம், நோக்க நோக்க களியாட்டம் நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை'' என்றார் பாரதி.

வனங்களும், மலைகளும் மனிதகுலத்தின் வளத்திற்கான ஆதாரங்கள் என்கிற மனநிலைக்கு நாம் உடனே மாறவேண்டும், மற்றும், மலைகள் இயற்கை வளங்களோடு மதிக்கப்பட வேண்டும். இந்நோக்கத்துடன் அண்மை நாள்களில் நாம் வழங்கும் இனியது இயற்கை நிகழ்ச்சியில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் தென் பகுதியில் அமைந்துள்ள ஏலக்காய் மலை குறித்து காண்போம்

இது தமிழ்நாட்டின் தென் மேற்குப் பகுதியிலும் கேரளாவின் தென் கிழக்குப் பகுதியிலும் உள்ளது ஏலக்காய் மலை. இம்மலைப் பகுதியில் ஏலக்காய் அதிகம் பயிராவதால் இதற்கு ஏலக்காய் மலை என பெயர் ஏற்பட்டது. ஏலக்காய் தவிர, காப்பி மற்றும் மிளகும் இங்கு பயிராகின்றன. ஆழமான பள்ளத்தாக்குகள் உடைய மலைப் பகுதிகளைக் கொண்ட இதன் பரப்பு 2,800 சதுர கி.மீ ஆகும். மேற்கு நோக்கிப் பாயும் பெரியாறு, பம்பை ஆறு ஆகியவை இம்மலைப் பகுதி வழியாகப் பாய்கின்றன. இடுக்கி அணை, முல்லைப் பெரியாறு அணை ஆகியவை இம்மலைத்தொகுதியில் உள்ளன. இதன் வடமேற்கில் ஆனை மலையும் வடகிழக்கில் பழனி மலையும், தென் பகுதியில் அகத்திய மலையும் உள்ளன.

குளிர் காலத்தில் இம்மலைப் பகுதியின் வெப்பநிலை சராசரியாக 15° செல்சியசும் கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் 31° செல்சியசும் இருக்கும். ஆண்டு சராசரி மழைப்பொழிவு பெரியாறு உள்ள பகுதிகளில் 2,000 - 3,000 மி.மீ ஆகும்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...