Thursday, 6 November 2014

யாழ். காரைநகரைச் சேர்ந்த சம்பந்தன் எழுதிய ‘நீங்காத நினைவுகள்’ நூல் வெளியீடு கொழும்பில் வெகுவிமரிசை

யாழ். காரைநகரைச் சேர்ந்த சம்பந்தன் எழுதிய ‘நீங்காத நினைவுகள்’ நூல் வெளியீடு கொழும்பில் வெகுவிமரிசை

Source: Tamil CNN. கடந்த 60 வருடங்களுக்கும் மேலாகத் தொழிற்சங்க அரசியல் சமூகப் பணியாற்றி வருபவரும் யாழ்.காரைநகரைச் சொந்த இடமாகக் கொண்டவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இலண்டன் கிளை முக்கியஸ்தருமான ஐ.தி.சம்பந்தன் எழுதிய ‘நீங்காத நினைவுகள்’ நூல் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02.11.2014) பிற்பகல் 05.30 மணி முதல் கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் உடுவை தில்லை நடராஜா தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் பிரதம விருந்தினராகவும், வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், சட்டத்தரணி கந்தையா நீலகண்டன், பத்திரிகை ஆசிரியர் வீ.தனபாலசிங்கம், தமிழருவி சிவகுமாரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.
வரவேற்புரையை தமிழ்ச்சங்கத் தலைவர் பாலஸ்ரீதரன் நிகழ்த்தியதுடன் தமிழருவி சிவகுமாரன் நூலுக்கான ஆய்வுரையை நிகழ்த்தினார்.
தொழிலதிபர் எஸ்.பி.சாமி மற்றும் கல்வியியலாளர்கள், சட்டத்தரணிகள், விரிவுரையாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர். இந் நிகழ்வில் நூற்றுக்கணக்கான ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை குறித்த நூல் அண்மையில் இலண்டனில் வெளியிட்டு வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
செய்தி மற்றும் படங்கள்: ரவி
neenkaatha ninaivukal (6)
neenkaatha ninaivukal (5)
neenkaatha ninaivukal (4)
neenkaatha ninaivukal (1)
neenkaatha ninaivukal (3)
neenkaatha ninaivukal (2)

No comments:

Post a Comment