வெங்சர்க்காருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
2013-14-ம் ஆண்டு சீசனில் இந்தியாவின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரராக வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 24 வயதான உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த புவனேஷ்வர்குமார், விருதுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலக்கட்டத்தில் 7 டெஸ்டில் 22 விக்கெட்டுகளும், 3 அரைசதம் உள்பட 263 ரன்களும், 22 ஒரு நாள் போட்டிகளில் 17 விக்கெட்டுகளும், 7 இருபது ஓவர் போட்டியில் 7 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். அவருக்கு பாலி உம்ரிகர் விருதுடன் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையும் கிடைக்கும்.
2013-14-ம் ஆண்டு ரஞ்சி கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ரிஷிதவான் (49 விக்கெட், இமாச்சலபிரதேச அணி), அதிக ரன்கள் குவித்த கேதர் ஜாதவ் (6 சதத்துடன் 1223 ரன், மராட்டிய அணி) ஆகியோர் மாதவ்ராவ் சிந்தியா விருதையும், ரஞ்சியில் சிறந்த ஆல்-ரவுண்டராக ஜொலித்த பர்வேஸ் ரசூல் (ஜம்மு-காஷ்மீர்), உள்ளூர் முதல்தர ஒரு நாள் போட்டியில் ஆல்-ரவுண்டராக தேர்வான வினய்குமார் (கர்நாடகா) ஆகியோர் லாலாஅமர்நாத் விருதையும் பெறுகிறார்கள். இவர்களுக்கு விருதுடன் தலா ரூ.2½ லட்சமும் ரொக்கமும் வழங்கப்படும்.
விருது வழங்கும் விழா வருகிற 21-ந்தேதி மும்பையில் நடக்கிறது. விழாவில் கலந்து கொண்டு விட்டு அன்றைய தினம் இந்திய அணியினர் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment