Wednesday, 19 November 2014

அதிக இளைஞர்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் முதலிடத்தில் இந்தியா: ஐ.நா. தகவல்

அதிக இளைஞர்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் முதலிடத்தில் இந்தியா: ஐ.நா. தகவல்

Source: Tamil CNN. UN-Logoஅதிக இளைஞர்கள் கொண்ட நாடுகள் வரிசையில் இந்தியா முதலாவதாக இருப்பதாக ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை, தனது மக்கள் தொகை அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
‘தி பவர் ஆப் 1.8 மில்லியன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், அதிக இளைஞர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
10 வயது முதல் 24 வயது கொண்ட இளைஞர்கள் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 356 மில்லியன் இளைஞர்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது மொத்த எண்ணிக்கையில் 28 சதவீதம் ஆகும்.
இதற்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளா சீனாவில் 269 மில்லியன் இளைஞர்களும், இந்தோனேசியாவில் 67 மில்லியன், அமெரிக்காவில் 65 மில்லியன், பாகிஸ்தானில் 59 மில்லியன், நைஜிரியாவில் 57 மில்லியன், பிரேசிலில் 51 மில்லியன் மற்றும் வங்களாதேசத்தில் 48 மில்லியன் இளைஞர்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இளைஞர்கள் மக்கள் தொகை அதிகம் கொண்ட வளரும் நாடுகள், தங்கள் நாடுகளில் பொருளாதார வளர்ச்சியை பார்க்க முடியும் எனவும், இந்த நாடுகள், இளைஞர்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் அவர்களின் உரிமைகள் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக அதிக முதலீடு செய்துள்ளன என்றும், வறுமையான நாடுகளில்தான் இளைஞர்கள் எண்ணிக்கை வேகமாக வளருகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களே எதிர்காலத்தை உருவாக்குபவர்கள் மற்றும் தலைவர்கள் ஆவர். அவர்கள், போதிய திறமை வளர்ப்பு, உடல் நலம், முடிவெடுக்கும் திறன் மற்றும் வாழ்க்கை தொடர்பான உண்மையான தேர்வு ஆகியவற்றை கொண்டிருந்தால் மட்டுமே எதிர்க்காலத்தை மாற்ற முடியும். இன்றைய கணக்கின்படி எதிர்க்காலத்தை மாற்றி அமைக்கும் மகத்தான வாய்ப்பு 1.8 மில்லியன் இளைஞர்கள் கையில் உள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...