Monday 1 September 2014

மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் தனிநாயகம் அடிகளார் நினைவு நிகழ்வு

மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் தனிநாயகம் அடிகளார் நினைவு நிகழ்வு

Source: Tamil CNN. தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் இறையடி சேர்ந்த நினைவுதினமாகிய செப்டெம்பர் 1ஆம் திகதி திங்கட்கிழமை (01-09-2014) காலை 10.00 மணிக்கு மன்னாரில் அடிகளாரின் நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற ஏற்பாடாகி உள்ளது. மன்னார் பழைய நூல் நிலையத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள தனிநாயகம் அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் அதைத்தொடர்ந்து அஞ்சலி உரைகளும் இடம்பெறவுள்ளது.
மன்னார் ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்கிறார். இந்நிகழ்வுக்கு மன்னார் தமிழ்ச் சங்கத்தின் உபதலைவர் மஹாதேவ சர்மா தர்மகுமார குருக்கள் தலைமை தாங்குகிறார்.
தமிழ்ச் சங்கத்தின் சிரேஸ்ர உபதலைவர் ஜனாப் மக்கள் காதர் வரவேற்புரை நிகழ்த்துகிறார். தமிழ்ச் சங்கத்தின் உதவிப் பொதுச் செயலாளர் திருமதி பெப்பி விக்ரர் லெம்பேட் அவர்கள் சிறப்புரை ஆற்றுகின்றார். நிர்வாக உறுப்பினர் திரு. தே. பி. சிந்தாத்துரை நன்றியுரை ஆற்றுகின்றார்.
தமிழ்ச் சங்கத் தலைவர் அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் தலைமையில் இந்நிகழ்வுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பிக்கும்படி மன்னார் தமிழ்ச் சங்கம் அனைவரையும் அழைத்து நிற்கின்றது.
மன்னார் நிருபர்-
thaninayakam

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...