பேஸ்புக், கூகுள் மீதான நடவடிக்கைக்கு அமெரிக்காஒத்துழைக்கவில்லை:விசாரணையை நிறுத்தியது இந்திய நீதிமன்றம்
அமெரிக்காவைச் சேர்ந்த இந்த இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, அமெரிக்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு, சுதந்திரமான கருத்துகளை தெரிவிக்கும் உரிமையில் தலையிட தாங்கள் தயாராக இல்லை என்ற பதில் கிடைத்ததால் அந்த இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இந்த ஆண்டின் துவக்கத்திலும், புதிய சம்மன்கள் அனுப்பி வைக்கப்பட்டன. எனினும், அவற்றின் மீதும்,அமெரிக்க உள்துறை பதில் நடவடிக்கை எடுக்காததால், வழக்கின் விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் ஒத்துழைப்பு கிடைத்தால் மட்டுமே, இவ்விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு நீதிபதி கூறினார். அமெரிக்காவின், 13 இணையதளங்கள் உட்பட, 21 இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment