Wednesday 21 August 2013

3 இந்தியர்களை என்கவுண்டரில் போட்டுத் தள்ளியது மலேசிய பொலிஸ்

3 இந்தியர்களை என்கவுண்டரில் போட்டுத் தள்ளியது மலேசிய பொலிஸ்

மலேசியாவில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட, மூன்று இந்தியர்கள் உட்பட, ஐந்து ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மலேசியாவில் பினாங் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில், ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. பயங்கர ஆயுதங்களுடன் இவர்கள் கோஷ்டி மோதலில் ஈடுபட்டு வந்தனர்.
இது தொடர்பாக, பொதுமக்களிடம் இருந்து அதிக புகார்கள் வந்தன. இதையடுத்து, இவர்களை ஒடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். கடந்த வார இறுதியில், 200 பேரை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இவர்களில், ஐந்து பேர் போலீசாரிடம் மோதலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
பினாங் மாகாணத்தின், சுங்காய் நிபாங் பகுதியில், கோபிநாத், 31, உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டனர். இதே மாகாணத்தில் மற்றொரு பகுதியில் நடந்த சண்டையில், சுரேஷ், 25, ரேகன், 25, ஆகியோர் கொல்லப்பட்டனர்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...