Wednesday, 14 August 2013

பாம்பை உயிருடன் விழுங்கிய அதிசய சிறுமி

பாம்பை உயிருடன் விழுங்கிய அதிசய சிறுமி

சிறுமி ஒருவர் பாம்பினை உயிருடன் விழுங்கிய காட்சியானது பார்வையாளர்களின் மத்தியில் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பாஸ்தி கிராமத்தில் சிராவண மாதம் 5ம் நாள் பாம்புகளை வணங்கும் பழக்கம் இன்னமும் நடைமுறையில் உள்ளது. இந்த கிராமத்தில் பாம்புகளுடன் சிறுவர், சிறுமியர்களை 4 வயது முதலே பழகவிட்டு பயத்தை போக்குகின்றனராம்.
நாகபஞ்சமி தினத்தன்று ஆயிரம் பேர் கூடியிருந்தபோது, பெரிய பாம்பை எடுத்து முத்தம் கொடுத்த அந்த 9 வயது சிறுமி அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே எந்தவித இடர்பாடும் இல்லாமல், முக பாவனையுமில்லாமல் அந்தப் பாம்பை உயிருடன் விழுங்கிருக்கிறார்.
பாம்பை முத்தம் கொடுப்பது எப்படி என்பதை இவர்களிடமிருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அங்கு நேரில் சென்ற பத்திரிக்கையாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.சிறுவர் சிறுமியர் கூட பாம்புடன் விளையாடும் இந்த பயங்கரம் சம்பங்கள் பாஸ்தி அருகேயுள்ள இந்த கிராமத்தில் வருடா வருடம் நடந்து வருகிறதாம்.

No comments:

Post a Comment