Sunday, 11 August 2013

கிரானைட் வெட்டியதில் அரசுக்கு ரூ.327 கோடி நஷ்டம்

கிரானைட் வெட்டியதில் அரசுக்கு ரூ.327 கோடி நஷ்டம்

கிரானைட் வெட்டி எடுத்ததில் அரசுக்கு ரூ.327 கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக பி.ஆர். பழனிச்சாமி உள்பட 3 பேர் மீது புதிய வழக்கு பதிவு பட்டுள்ளது.மேலூர் அருகே உள்ள கீழவளவு கிராம நிர்வாக அதிகாரி ரவிசந்திரபிரபு போலீசில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருந்தாவது:–
சிறுமாணிக்ககுளம் என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததில் ரூ.6.33 கோடி, கீழவளவில் மொத்தமுள்ள 11 சர்வே எண்களில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில் ரூ.273.80 கோடியும் மோசடி நடந்துள்ளது. கீழவளவில் அரசு புறம்போக்கு நிலத்தில் கிரானைட் கற்கள் வெட்டியெடுத்து ரூ.47.07 கோடி மோசடி நடந்துள்ளது. இதனால் அரசுக்கு மொத்தம் ரூ.327 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஈடுபட்ட பி.ஆர்.பி., பல்லவா கிரானைட், மதுரை சின்ன சொக்கிகுளத்தை சேர்ந்த ஒருவர் உள்பட 3 பேர் மீதும் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள், நிறுவனத்தின் நிர்வாகிகள், ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் 3 பேர் மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...