Monday, 5 August 2013

முதுகுவலி தீர….

முதுகுவலி தீர….

இரண்டு எலும்புகள் சேர்ந்து ஒரு மூட்டை உருவாக்குகின்றன. அந்த மூட்டுக்குள் நரம்புகள், இரத்தக் குழாய்கள், திரவங்கள் என்று பல மாதிரியான அமைப்புகள் உடலில் இடத்திற்கு இடம் மாறுபட்டு அமைந்துள்ளன. நாம் நேராக நிமிர்ந்து நடக்க, நிற்க உதவுபவை முதுகுத்தண்டும் அது சார்ந்த எலும்புகளும்தான். அதன்வழியாகத்தான் மூளை தொடர்பான தண்டுவடம், அத்தனை உறுப்புகளிலிருந்து வரும் தகவல்களை மூளைக்கு கொண்டு செல்ல பயன்படுகிறது. இந்தத் தண்டுவடத்தை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கும் எலும்புகள் மொத்தம் 32. இந்த எலும்புகளுக்கு இடையே தட்டுக்களும் அதில் ஈரத்தன்மையுடைய சவ்வுகளும் இருப்பதால், நாம் அசையும்போது, குதிக்கும்போது, இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் போது, ஆட்டோவில் செல்லும்போது என குதிகாலில் அதிர்வுகள் ஏற்படாது இருக்க உதவுகிறது. மேடுபள்ளமான பாதையில் இரு சக்கர வாகனத்தில் அடிக்கடி வெகுதூரம் பயணிப்பது, இருக்கையில் நேராக சரியான நிலையில் உட்காராமல் இருப்பது, முறையற்ற உடற்பயிற்சி, அல்லது உடற்பயிற்சியே இல்லாமை, எலும்புகளில் ஏற்படும் சுண்ணாம்புக் குறைவு, சரியாகக் குணப்படுத்தப்படாத வாயுக்கோளாறு, முதுமை ஆகியவை காரணமாக இந்தத் தட்டுக்கள் பாதிக்கப்பட்டு கழுத்து, இடுப்பில் வலி ஏற்படும். இடுப்பு மற்றும் கழுத்து தலைப் பகுதிகளில் கடும் வலியும், தசைகளில் இறுக்கமும் ஏற்படும். இவற்றுடன் இடுப்பு எலும்புத் தேய்வு, காரணமாக பிட்டம், பின்னங்கால் தொடைப் பகுதிகளில் வலி ஏற்படக்கூடும். காலை உயர்த்தும்போது வலி கூடும். கழுத்து எலும்பு தேய்மானம் அடையும் நிலையில் கைகளில் வலியும், உள்ளங்கையில் மரத்துப்போன உணர்வும், சில நேரங்களில் எறும்பு ஊறுவது போன்றும், எரிச்சல் போன்றும் வலி ஏற்படும். இந்நோயாளிகள் வாயு பிரச்சனையை ஏற்படுத்தக்கூடிய உணவுப் பொருள்கள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.

 

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...