Sunday, 11 August 2013

இந்திய நீர்மூழ்கியில் செயற்படத் தொடங்கியது அணுஉலை

இந்திய நீர்மூழ்கியில் செயற்படத் தொடங்கியது அணுஉலை

முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அணுசக்தி நீர்மூழ்கி கப்பலில் உள்ள அணு உலை செயல்பட தொடங்கியது. இதற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய கடற்படைக்காக அணுசக்தி மூலம் இயங்கும் அரிஹந்த் (எதிரிகளை அழிப்பவன் என பொருள்) என்ற நீர்மூழ்கி கப்பல், முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கட்டப்பட்டு வருகிறது.
112 மீட்டர் நீளமும், 25 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பல், 14,500 கோடி செலவில் தயாரிக்கப்படுகிறது. பல்வேறு கட்ட சோதனைகளுக்கு இது உட்படுத்தப்பட்டு வருகிறது. இது நிலம், நீர், காற்று என மூன்று தளங்களிலும் இருந்து வரும் ஏவுகணையை தடுக்கும் வல்லமை கொண்டது.
மேலும், எந்த பகுதியில் இருந்து ஏவப்படுகிறது என்று தெரியாத அளவுக்கு எதிரி நாட்டை குறிவைத்து சகாரிகா பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை செலுத்தும் திறன் இதற்கு உண்டு.இந்தியாவில் டீசல் மூலம் இயக்கும் நீர்மூழ்கி கப்பல் உள்ளது. எனினும், அடிக்கடி எரிபொருள் நிரப்ப மேலே வர வேண்டியிருக்கும். ஆனால், அணுசக்தி பொருள் அடங்கிய அணு உலையை பொருத்திவிட்டால், 10 முதல் 30 ஆண்டுகளுக்கு எரிபொருள் பிரச்னையே இருக்காது. எரிபொருள் தேவையே இல்லாமல் மாதங்களுக்கு கடலுக்குள் சுற்றிவர முடியும்.இந்த கப்பலுக்கு தேவையான அணு எரிசக்தியை தயாரிக்க, அணு உலை அமைக்கப்பட்டுள்ளது. இதை விஞ்ஞானிகள் நேற்று முன்தினம் வெற்றிகரமாக செயல்பட வைத்தனர்.
இதில், எரிசக்தி உற்பத்தி தொடங்கியுள்ளது. இந்திய ராணுவ வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இது கருதப்படுகிறது. அணு உலை செயல்பட தொடங்கியதை தொடர்ந்து, விரைவில் இந்த கப்பல் கடற்படையில் சேர்க்கப்படுவதற்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த நீர்மூழ்கி கப்பல் இயங்க தொடங்கியதற்கு பிரதமர் மன்மோகன்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், உள்நாட்டு தொழில்நுட்ப முன்னேற்றத்தில் மிகப்பெரிய சாதனை செய்யப்பட்டுள்ளது. இதை வெற்றிகரமாக்கிய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...