Wednesday, 14 August 2013

பரஸ்பர புரிந்துணர்வை ஊக்குவிக்க கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இணையவேண்டும்; பாப்பரசர் கோரிக்கை

பரஸ்பர புரிந்துணர்வை ஊக்குவிக்க கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இணையவேண்டும்; பாப்பரசர் கோரிக்கை

மத நம்பிக்கையுடயவர்களின் பிள்ளைகளுக்கான கற்பித்தலின் ஊடாக பரஸ்பர புரிந்துணர்வினை அபிவிருத்தி செய்ய முடியுமென புனித பாப்பரசர் கூறியுள்ளார்.அத்துடன் புனித ரமழானின் நிறைவில் உலகளாவிய முஸ்லிம்களுக்கு வாழ்த்துகள் கூறியதை பாப்பரசர் நல்லிணக்கத்துக்காக உலகளாவிய நாடுகளிலுள்ள கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் இணைந்து பரஸ்பர நல்லிணக்க முற்றுகைகளில் ஈடுபடவேண்டுமெனவும் கூறியுள்ளார். ரோமின் புனித சென்.பீற்றர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றியபோதே பாப்பரசர் இக் கருத்துகளை கூறியிருந்தார்,எமது சகோதரர்களான முஸ்லிம்கள் தமது புனித ரமழான் மாதத்தினை நிறைவு செய்துள்ளன. நோன்புப் பிரார்த்தனை தானம் வழங்குதல் என இம்மாதம் அவர்களுக்கு நிறைந்ததெனவும் அவர் கூறியிருந்தார்.வத்திக்கான் நிர்வாகத்தில் பாரிய மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு பாப்பரசர் முயற்சிப்பதாக கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment