பர்மாவில் ஜனநாயக மாற்றத்துக்கு வித்திட்ட 8888 போராட்டத்தின் 25வது ஆண்டு விழா
ரங்கூனில் இந்த விழா இந்த ஆண்டுதான் முதல் முறையாக அனுமதிக்கப்பட்டது. கடந்த 1988 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆரம்பித்த ஆர்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கெடுத்தனர். இந்தப் போராட்டங்களுக்குப் பின்தான் முக்கியத் தலைவராக ஆங் சான் சூ கி உருவெடுத்தார். ஆனால் ஆறு வாரங்களுக்குப் பிறகு, போராட்டத்தில் கலந்து கொண்ட மூவாயிரம் பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பல ஆயிரம்பேர் சிறையிலடைக்கப்பட்டனர். இராணுவம் தனது பிடியை இறுக்கியது.
இன்றைய நிகழ்ச்சியில் ஆங் சான் சூ கி யும் பங்கெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பர்மாவில் இராணுவத்தின் அனுசரணையுடன் செயல்படும் ஆட்சிதான் இப்போதும் நடக்கிறது. முன்னாள் இராணுவத்தினரே முக்கியப் பதவிகளில் இருக்கின்றனர்.
No comments:
Post a Comment