Friday, 9 August 2013

பர்மாவில் ஜனநாயக மாற்றத்துக்கு வித்திட்ட 8888 போராட்டத்தின் 25வது ஆண்டு விழா

பர்மாவில் ஜனநாயக மாற்றத்துக்கு வித்திட்ட 8888 போராட்டத்தின் 25வது ஆண்டு விழா

பர்மாவில் ஐனநாயக மாற்றத்துக்கான இயக்கத்துக்கு வித்திட்ட எழுச்சி ஏற்பட்ட 25 ஆவது ஆண்டுவிழா இன்று அனுசரிக்கப்பட்டது. இராணுவ ஆட்சிக்கு எதிராக பல மாதங்களாக தொடர்ந்த கடும் எதிர்ப்பு, ஆகஸ்ட் 8 இல் பெரும் மக்கள் இயக்கமாக வெடித்தது. 1988 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி இந்தப் போராட்டம் ஆரம்பித்ததால் இது 8888 போராட்டம் என்று பொதுவாக அறியப்படுகிறது. அதில் மாணவர்கள் மாத்திரமல்லாது அனைத்து தரப்பு பர்மிய மக்களும் பங்கெடுத்தனர். ஜனநாயகத்தை கோரினர். இராணுவம் பலப்பிரயோகம் செய்தது.
ரங்கூனில் இந்த விழா இந்த ஆண்டுதான் முதல் முறையாக அனுமதிக்கப்பட்டது. கடந்த 1988 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆரம்பித்த ஆர்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கெடுத்தனர். இந்தப் போராட்டங்களுக்குப் பின்தான் முக்கியத் தலைவராக ஆங் சான் சூ கி உருவெடுத்தார். ஆனால் ஆறு வாரங்களுக்குப் பிறகு, போராட்டத்தில் கலந்து கொண்ட மூவாயிரம் பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பல ஆயிரம்பேர் சிறையிலடைக்கப்பட்டனர். இராணுவம் தனது பிடியை இறுக்கியது.
இன்றைய நிகழ்ச்சியில் ஆங் சான் சூ கி யும் பங்கெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பர்மாவில் இராணுவத்தின் அனுசரணையுடன் செயல்படும் ஆட்சிதான் இப்போதும் நடக்கிறது. முன்னாள் இராணுவத்தினரே முக்கியப் பதவிகளில் இருக்கின்றனர்.

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...