Sunday, 11 August 2013

100 கிலோவில் இராட்சத இட்லி:சமையல்காரரின் சாதனை

100 கிலோவில் இராட்சத இட்லி:சமையல்காரரின் சாதனை

தண்டையார்பேட்டை கொடுங்கையூர் எழில் நகரை சேர்ந்தவர் இனியவன்(42).சமையல்காரர். இவர் திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சமையல் செய்து கொடுப்பது வழக்கம். இவருக்கு சமையல் செய்வதில் கின்னஸ் சாதனை செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக எண்ணம் உள்ளது. அதற்காக பலவித சமையல்களை செய்துள்ளார்.
இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் ஏதாவது ஒரு சமையல் வகையை செய்வார்.கடந்த ஆண்டு தலா 50 கிலோ என 2 இட்லி, 40 கிலோவில் ஒரு இட்லியை இனியவன் தயாரித்தார். இந்நிலையில் இந்தாண்டு 100 வித இட்லி தயாரிக்க உள்ளார். இதற்காக இனியவன், கொடுங்கையூரில் ஒரு திருமண மண்டபத்தில் வரும் 11ம் திகதி 100 வித இட்லியை தயாரித்து கண்காட்சி நடத்த உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம், வணிகர் சங்க தலைவர் வெள்ளையன், எர்ணாவூர் நாராயணன் எம்எல்ஏ உள்பட பலர் பங்கேற்கின்றனர்.முன்னதாக நேற்று 100 கிலோ எடையுள்ள ஒரு இட்லியை இனியவன் தயாரித்தார். அதனை காண ஏராளமான பொதுமக்கள் கூடினர். அவர் தயாரித்து வைத்த ராட்சத இட்லியை பார்த்து அனைவரும் பிரமித்து நின்றனர்.

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...