Wednesday, 2 April 2014

ஆந்திராவில் துணிகரம் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ ரெயிலில் பயணிகளிடம் நகை, பணம் கொள்ளை

ஆந்திராவில் துணிகரம் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ ரெயிலில் பயணிகளிடம் நகை, பணம் கொள்ளை

Source: Tamil CNN
 chennaiexpressweb
ஆந்திராவில் சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகளிடம் நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
சென்னை எக்ஸ்பிரசில்
சென்னையில் இருந்து ஐதராபாத் செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் நந்திகோட்லா என்ற இடத்தில் அதிகாலை 3 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது சில கொள்ளையர்கள் அந்த ரெயிலில் உள்ள எஸ்–9, எஸ்–10, எஸ்–11 ஆகிய பெட்டிகளில் ஏறினார்கள்.
அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த பயணிகளை மிரட்டி அவர்கள் வைத்திருந்த நகை, பணம், கேமரா, லேப்–டாப் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் ரெயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். நடிகுடே ரெயில் நிலையம் அருகில் ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்தபோதே அவர்கள் ரெயிலில் இருந்து குதித்து இருட்டில் தப்பி மறைந்தனர்.
9 பயணிகளிடம் கொள்ளை
இந்த தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசாரும், உள்ளூர் போலீசாரும் அந்த இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் ரெயில் பயணிகளிடம் கொள்ளை நடந்தது பற்றி விசாரித்தனர். 9 பயணிகளிடம் லட்சக்கணக்கிலான நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த கொள்ளை தொடர்பாக 9 பயணிகளும் செகந்திராபாத் ரெயில்வே போலீசில் புகார் செய்தனர். விஜயவாடா ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஷியாம்பிரசாத் சம்பவ இடத்தை பார்வையிட்டார். ஓடும் ரெயிலில் கொள்ளையை தடுக்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்று உறுதி அளித்தார். பயணிகள் இரவு நேர ரெயில் பயணத்தின்போது குறிப்பாக, கோடைக்காலத்தில் அதிக நகைகளை அணிந்து வரவேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
துப்பாக்கியால் சுட்டனர்
உத்தரபிரதேச மாநிலத்திலும் ஓடும் ரெயிலில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளை நடந்துள்ளது. அலகாபாத்தில் இருந்து மீரட் செல்லும் சங்கம் எக்ஸ்பிரஸ் ரெயில் பர்தானா – ஏக்தில் ரெயில் நிலையங்களுக்கு இடையே அதிகாலை 1.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் சுமார் 12 கொள்ளையர்கள் துப்பாக்கிகளுடன் ஏறினார்கள்.
எஸ்–2, எஸ்–3 பெட்டிகளில் அவர்கள் பயணிகளின் நகைகளை கொள்ளையடித்தனர். அப்போது 3 மருத்துவ மாணவர்கள் கொள்ளையர்களை தடுக்க முயன்றபோது அவர்களை துப்பாக்கியால் சுட்டனர். இதில் 3 பேரும் குண்டு பாய்ந்து காயம் அடைந்தனர். உடனே கொள்ளையர்கள் அவர்களது பணம், செல்போன், கைக்கெடிகாரங்கள், நகைகளை எடுத்துக் கொண்டு அபாய சங்கிலியை இழுத்தனர்.
ஒருவர் கவலைக்கிடம்
துப்பாக்கி சத்தம்கேட்டு அந்த பெட்டிக்கு வந்த பாதுகாப்பு அதிகாரிகள் கொள்ளையர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவர்களை நோக்கியும் கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் ரெயிலில் இருந்து குதித்து இருளில் ஓடி மறைந்தனர்.
காயமடைந்த 3 மாணவர்களும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...