Monday, 14 April 2014

ரத்தன் டாடாவுக்கு விருது வழங்கிய பிரிட்டிஷ் மகாராணி

ரத்தன் டாடாவுக்கு விருது வழங்கிய பிரிட்டிஷ் மகாராணி

Source: Tamil CNN
 ratan_tata
டாடா குழுத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடாவுக்கு, பிரிட்டன் அரசி எலிசபெத், அந்நாட்டின் உயரிய விருதை வழங்கி கௌரவித்துள்ளார்.
இந்திய-பிரிட்டன் உறவில் மேம்பாடு, பிரிட்டனில் அதிக முதலீடு மற்றும் மனித நேயப் பணி ஆகியவற்றில் சிறப்பான சேவையாற்றியதற்காக, 2014ஆம் ஆண்டுக்கான உலக வர்த்தக சிறப்பு விருதை (ஜி.பி.இ) ரத்தன் டாடாவுக்கு வழங்க அரசி ஒப்புதல் அளித்துள்ளதாக பிரிட்டினில் உள்ள வெளிநாடு மற்றும் காமன்வெல்த் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் கெüரவ விருதை 2014-இல் பெறுபவர்களில் 76 வயதாகும் டாடாவும் ஒருவர்.
பிரிட்டனுடனான பொருளாதாரம் மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்த சேவை புரிந்த ஜப்பான் மற்றும் கிரேக்க நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தற்போது “எமிரட்டஸ் ஆஃப் டாடா சன்ஸ்’ என்ற நிறுவனத்தின் தலைவராகப் பதவி வகித்து வரும் ரத்தன் டாடா, தனது நிறுவனங்களின் மூலம் பிரிட்டன் முழுவதும் 60,000 பேருக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்நாட்டின் மேற்கு மிட்லண்ட்ஸ் பிராந்தியத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய தொழிற்சாலையை நிறுவ இந்த ஆண்டில் 50 கோடி பவுண்ட் (இந்திய மதிப்பில் ரூ.5050 கோடி) முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment