சிபிஐக்கு விரைவில் தன்னாட்சி அதிகாரம் : படியிறங்குகிறது மத்திய அரசு
இந்த வகையில், சி,.பி.ஐ., இயக்குனர் அரசு செயலருக்கான அந்தஸ்தை விரைவில் பெறுகிறார். அதற்கான அறிவிப்பை மத்திய அரசு அடுத்த வாரம் வெளியிட உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசிடம் ஆலோசித்து ஒப்புதல் பெற்றுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ தெரிவித்துள்ளது.
சிபிஐ இயக்குனருக்கு கூடுதல் அதிகாரத்துடன், உறுதி தன்மையுடன்,வேகமாகவும், திறமையாகவும் மற்றும் பாரபட்சமின்றி விசாரணை நடத்தும் அதிகாரம் ஆகியவற்றை அளி்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்திடம் இருந்து விரைவில் வெளியாகும் என சிபிஐ மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிபிஐ.க்கு தனி அந்தஸ்து வழங்குவதற்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. ஒரு குறிப்பிட்ட துறைக்கு மட்டும் கூடுதல் அதிகாரம் வழங்க முடியாது எனவும் மத்திய அரசு தீர்க்கமாக தெரிவித்தது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் விவகாரம் தொடர்பான வழக்கில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை விசாரிக்கும் அதிகாரத்தை சிபிஐ.,க்கு அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் புகார் அளிக்கப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான சுப்ரீம் கோர்ட் பென்ஞ், சிபிஐ.,க்கு அதிகாரம் அளிக்காததற்கான காரணம் குறித்து மத்திய அசிடம் விளக்கம் கேட்டது. இது குறித்து நேற்று நடைபெற்ற கோர்ட் விசாரணையின் போது, சிபிஐக்கு கூடுதல் அந்தஸ்து வழங்காததற்கான காரணங்களின் பட்டியலை மத்திய அரசு அளித்தது.
சிபிஐ.க்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவது தொடர்பான விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து சட்ட அமைச்சர் அஸ்வினி குமார் பதவி விலகினார். மத்திய அரசின் இந்த பிடிவாத போக்கை கண்டித்த சுப்ரீம் கோர்ட் பென்ஞ், சிபிஐ., கூண்டு கிளி போல் செயல்படுவதாக கூறியது.சமீபத்தில் சிபிஐ.,யின் ஆண்டு விழா கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், சிபிஐ விசாரணைக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
இருப்பினும், கூடுதல் அதிகாரம் கொடுத்தாலும் மக்களின் பணத்தை வீணடிக்காமலும், அரசு உட்பட்ட அமைப்பு என்பதை மனதில் வைத்துக் கொண்டு, விசாரணையை நேர்மையான முறையில் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளையும் சிபிஐ.,க்கு பிரதமர் விதித்தார்.
இந்நிலையில் அரசும், சிபிஐ.,ம் எதிரெதிராக சுப்ரீம் கோர்ட்டில் வாதம் செய்தன. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், சிபிஐ.,க்கு கூடுதல் சுதந்திரம் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். இதனையடுத்து தற்போது சிபிஐ.,க்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க தனது நிலையில் இருந்து மத்திய அரசு இறங்கி வந்துள்ளது.
No comments:
Post a Comment