Sunday 26 January 2014

இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கும் தயார் நிலை

இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கும் தயார் நிலை

Source: Tamil CNN
 25-geneva-human-rights-council1-300
ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக சுயாதீன சர்வதேச விசாரணைகளை நடத்தும் யோசனை நிறைவேற்றப்பட உள்ளது.
இந்த யோசனை நிறைவேற்றப்பட்ட பின்னர் இலங்கை சம்பந்தமாக ஆராய 6 மாத கால அவகாசம் வழங்கப்பட உள்ளது.
குறித்த காலப் பகுதியில் நியமிக்கப்படும் சுயாதீன விசாரணை குழு ஊடாக இலங்கை தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டாவது நடவடிக்கையாக 6 மாதங்களுக்கு பின்னர் வெளியிடப்படும் விசாரணை அறிக்கையை அடிப்படையாக கொண்டு இலங்கை எதிராக பொருளாதார தடைகளை விதிக்கும் தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவித்தன.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...