Thursday, 23 January 2014

உறைந்து போன ஆற்றில் த்ரில்லான பயணம்

உறைந்து போன ஆற்றில் த்ரில்லான பயணம்

Source: Tamil CNN
 ice_water_china_003-300x191
பனியில் உறைந்து போன மஞ்சள் ஆற்றை காரில் கடந்து நபர் ஒருவர் த்ரில்லான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
ஆர்ட்டிக் பிரதேசத்தில் பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால், உலக நாடுகள் பலவும் பனிப்புயலால் சிக்கித் தவிக்கின்றன.
சீனாவில் 0 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை நிலவுவதால், ஆறுகள் பெருமளவும் உறைந்த நிலையில் காணப்படுகிறது.
மஞ்சள் ஆறு உறைந்து பனிக்கடல் போன்று காட்சியளிக்கிறது, இந்நிலையில் பாலத்தின் வழியாக செல்வதற்கு பதிலாக மங்கோலாவில் 1 கி.மீ நீளமுள்ள மஞ்சள் ஆற்றை காரில் கடந்து நபர் ஒருவர் அபாயகரமான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அப்போது பயங்கர சத்தம் கேட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்ததுடன், எவ்வித ஆபத்தும் நேரக்கூடாது என்ற அச்சத்திலேயே காரை பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் காரை ஓட்டிய நபரோ, 10 நிமிடத்தில் மிகச் சாதாரணமாக கடந்துள்ளார்.

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...