Friday, 17 January 2014

சீனாவில் குழந்தைகளை விற்ற மருத்துவருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை நிறுத்திவைப்பு

சீனாவில் குழந்தைகளை விற்ற மருத்துவருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை நிறுத்திவைப்பு

Source: Tamil CNN
சீனாவை சேர்ந்த டாக்டர் ஜாங்க் சுக்சியா (வயது 55). மகளிர் மற்றும் குழந்தைப்பேறு மருத்துவ நிபுணரான இவர் புதிதாக பிறந்த சிசுக்களை கடத்தல்காரர்களுக்கு விற்றுவிடுவதாக புகார் எழுந்தது.
கடந்த ஆகஸ்டு மாதம் இவர் கைது செய்யப்பட்டார். 2011-2013 இடையே புதிதாக பிறந்த 7 சிசுக்களை தலா 3 ஆயிரத்து 600 டொலர் என்ற விலையில் விற்பனை செய்ததாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த சிசுக்கள் காப்பாற்ற இயலாத நோய் கண்டிருப்பதாக அதன் பெற்றோரிடம் பொய் சொல்லி இவர் விற்று வந்தது அம்பலத்துக்கு வந்துள்ளது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, குற்றத்தை ஒப்புக்கொண்ட டாக்டர் சுக்சியாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.
இந்த நிலையில் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைத்து பெய்ஜிங் கோர்ட்டு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. சீனாவில் பொதுவாக மரண தண்டனை நிறுத்தப்பட்டால், அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...