Monday, 5 August 2013

குண்டுகளை கண்டுபிடிக்கும் நவீன கருவி:இந்தியா கண்டுபிடித்ததை அமெரிக்கா தயாரிக்கிறது

குண்டுகளை கண்டுபிடிக்கும் நவீன கருவி:இந்தியா கண்டுபிடித்ததை அமெரிக்கா தயாரிக்கிறது

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சாதனம் முதன் முறையாக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட உள்ளது. குண்டுகளை விரைவாகக் கண்டறிய உதவும் இந்த சாதனம் வாஷிங்டனில் வெள்ளை மாளிகையை ஒட்டி அமைந்துள்ள அமெரிக்க வர்த்தகக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் சனிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
இதுகுறித்து அமெரிக்க முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் வில்லியம் எஸ்.கோஹென் கூறுகையில், இந்தியா, அமெரிக்கா இடையே பரஸ்பரம் தொழில்நுட்ப பரிமாற்றம் நடைபெறுவதற்கு இந்த முயற்சி சிறந்த உதாரணமாக உள்ளது. இதன் மூலம் இரு நாடுகளும் பயன்பெறும் என்றார்.
இந்த சாதனத்தை தெற்கு கரோலினாவில் உள்ள குரோவே அன்ட் கம்பெனி உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும். இதுதொடர்பாக, டி.ஆர்.டி.ஓ. மற்றும் பிக்கி ஆகியவை இணைந்து குரோவே நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. ஐ.இ.டி., நைட்ரோ-ஈஸ்டர்ஸ், நைட்ரமைன்ஸ், டிரைநைட்ரோலூன், டைனமைட் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகளை எளிதில் கண்டறிவதற்கு இந்த சாதனம் உதவும்.
இதை எளிதாக எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விலை குறைவானது. வெடிகுண்டு வெடிப்பதற்கு முன்பும், பின்பும் இந்தக் கருவியைக் கொண்டு முக்கியமான தகவலை சேரிக்க முடியும். இந்திய ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல் துறையில் இந்த சாதனம் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...