Sunday 25 November 2012

ஈழத்தில் இனக்கொலை இதயத்தில் ரத்தம் ஒளிப்பட குறுவட்டு இந்தியில் வெளியீடு!

 

ஈழத்தில் இனக்கொலை இதயத்தில் ரத்தம் ஒளிப்பட குறுவட்டு இந்தியில் வெளியீடு!

வைகோஅவர்களின் உருவாக்கத்தில் வெளியான "ஈழத்தில் இனக்கொலை இதயத்தில் ரத்தம்" ஒளிப்பட குற
ுவட்டு புத்தகம் நாளை நியூடெல்லியில் வெளியிடப்படவுள்ளது.

நாளை மாலை 6.00 மணிக்கு இஸ்லாமிக் கல்சுரல் சென்டர், 87-88,லோதிரோடு, புதுடெல்லி என்ற இடத்தில் இந்திமொழியில் உருவான இந்த குறுவட்டு பத்தகம் வெளியிடப்படவுள்ளது.

ஈழத்தில் நடந்த படுகொலைகளை ஏனைமொழியினர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கிலும் ஈழத்தில் நடந்தது இனஅழிப்புத்தான் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும் நோக்கிலும் வைகோ அவர்கள் ஆதாரபூர்வமான காணொளிகளை தொகுத்து இந்த குறுவட்டு புத்தகத்தினை வெளியீடு செய்யவுள்ளார்.

இந்த குறுவட்டினனை டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி இராஜேந்திர சச்சர் வெளியீடுசெய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த குறுவட்டு மராட்டிய மொழியிலும் வெளியிடப்படவுள்ளது

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...