Thursday, 10 April 2014

சீனாவில் பனிப்புகை தாக்கத்திலிருந்து தப்பிக்க உதவும் குமிழி வடிவ கட்டமைப்புகள்

சீனாவில் பனிப்புகை தாக்கத்திலிருந்து தப்பிக்க உதவும் குமிழி வடிவ கட்டமைப்புகள்

Source: Tamil CNN
வர்த்தகம் மற்றும் கட்டுமானப் பணிகளில் மேற்கத்திய நாடுகளுக்கு சவால்விடும் விதமாக சீனாவின் வளர்ச்சி காணப்பட்டு வரும்போதும் இதன் விளைவாக ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் அம்மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
அந்நாட்டின் பெரும்பான்மையான நகரங்களில் பனிப்புகை அதிகரித்து அபாய அளவைத் தொட்டுள்ளது. இதற்கான சிறப்புப் பாதுகாப்பு இல்லாமல் மக்கள் வெளியில் செல்வது என்பதே தற்போது சிரமமாக காணப்படுகின்றது.
இந்த நிலைக்குத் தீர்வு காணும்விதமாக இந்தியர் ஒருவர் இணைந்து நடத்தும் லண்டன் கட்டிடக்கலை நிறுவனம் ஒன்று குமிழி வடிவ கட்டமைப்புகளை சீனாவிற்குப் பரிந்துரைத்துள்ளது. இன்னும் கருத்து வடிவில் இருக்கும் இந்தக் கட்டிடக் கலை அமைப்பானது பெரிய குமிழி வடிவ அமைப்புகளின்கீழ் வெளிப்புறப் பச்சை புல்வெளிகளை உருவாக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துகின்றது.
இதேபோன்று அலுவலகக் கட்டிடங்கள், வர்த்தக வளாகங்கள் போன்றவையும் பெரிய வெளிப்படையான கூரையின் கீழ் அமைக்கப்படலாம் என்று இந்த நிறுவனம் குறிப்பிடுகின்றது. கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் ஆண்டுமுழுவதும் இந்த கட்டமைப்புக்குள் வழங்கப்படும் என்று லண்டன், பீஜிங் மற்றும் புதுடெல்லியில் பணியாற்றிவரும் ஒர்ப்ராஜெக்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான ரஜத் சோதி தெரிவித்துள்ளார்.
குமிழி வடிவ கட்டமைப்புகள் பயோமெட்ரிக் கட்டிடக்கலை அமைப்பை அடிப்படையாகக் கொண்ட இலகுரக சுற்றுப்புற சூழலைப் பாதிக்காத எளிய கட்டமைப்புகளாக இருக்கும் என்றும், குமிழிகளின் விதானம் இலைகளில் உள்ள நரம்புகள் அல்லது பட்டாம்பூச்சியின் இறக்கைகள் போன்ற வடிவியல் வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது மெட்ரோ நிலையங்கள், பூங்காக்கள் போல் கட்டப்படும் ஒரு உட்கட்டமைப்பு திட்டமாகும். ஆண்டு முழுவதும் வெளிப்புற பச்சைப் புல்வெளிகள் தேவைப்படும் மாசுபட்ட பெரிய நகரங்களில் இதுபோன்ற அமைப்புகளை ஏற்படுத்திக் கொள்வதன்மூலம் மக்கள் ஆரோக்கியமான காற்றை சுவாசிக்கலாம் என்று ரஜத் சோதி தெரிவித்தார்.
article-0-1BE48A9200000578-96_634x475

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...