Friday, 17 January 2014

சீனா அனுப்பிய தானியங்கி வாகனம் சந்திரனில் இயங்கத் தொடங்கியது

சீனா அனுப்பிய தானியங்கி வாகனம் சந்திரனில் இயங்கத் தொடங்கியது

Source: Tamil CNN
சந்திரனுக்கு சீனா அனுப்பிய ‘யுது’ என்ற தானியங்கி வாகனம் பத்திரமாக தரை இறங்கி, நேற்று முன்தினத்தில் இருந்து செயல்பட தொடங்கியுள்ளது. இந்த தானியங்கி வாகனத்தல் எந்திர கைகள் பொருத்தப்பட்டிருந்தன.
அவற்றை பூமியில் இருந்து சீன அதிகாரிகள் ரீமோட் கண்ட்ரோல் மூலம் செயல்பட செய்தனர்.
தற்போது அந்த வாகனம் பூமியில் இருந்து 3 லட்சத்து 80 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. பீஜிங்கில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து வாகனத்தின் எந்திர கையை செயல்பட செய்தனர். அது சிறப்பாக செயல்படுவதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்தனர். யுது வாகனம் பல்வேறு இடங்களுக்கு ஊர்ந்து சென்று ஆய்வுகளை செய்ய உள்ளது. அதில் சந்திரனைப் பற்றிய பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...