மகளை அடைத்து வைத்திருந்த ஐகோர்ட் நீதிபதி : காதலனிடம் ஒப்படைக்குமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ராஜஸ்தான் மாநிலத்தின் ஐகோர்ட் நீதிபதி ராகவேந்திரா சிங் ரத்தோர் தனது 30 வயது மகள், அவளது காதலர் சித்தார் முகர்ஜியுடன் சென்றுவிடுவார் என்ற பயத்தில் வீட்டுக் காவலில் வைத்துவிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி சித்தார் முகர்ஜி சுப்ரீம் கோட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவில் எங்களது திருமணத்திற்கு ராகவேந்திரா சிங் ரத்தோர் எதிராக உள்ளார். அவர் தனது மகளுக்கு தனது வம்சமான ராஜபுத்திர சமூகத்தில் திருமணம் செய்து கொடுக்க முயற்சிக்கிறார் என்றும் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், இதற்காக அவரது மகளை வீட்டுக் காவலில் வைத்துள்ளார் என்று கூறியிருந்தார்.
முன்னதாக நீதிபதியின் மகள் கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டுக்கும், ராஜஸ்தான் கோர்ட்டுக்கும் உதவி கேட்டு மெயில் மூலம் தகவல் அனுப்பிருந்தார். ஆனால் சித்தார் முகர்ஜியின் மனு மீதான விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே சுப்ரீம் கோர்ட் உதவி செய்துள்ளது. மேலும், ஐகோர்ட்டு நீதிபதியின் மகளை இன்று கோர்ட்டில் ஒப்படைக்க ஜெய்பூர் போலீசாருக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் நீதிபதியின் மகளை அவரது காதலருடன் செல்ல அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டு ராஜஸ்தான் ஐகோர்ட்டு நீதிபதியிடம் கேட்டுக் கொண்டுள்ளது.மேலும், பெண்ணை மனுதாரரிடம் ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட்டு ஜெப்பூர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment