Saturday 21 December 2013

அனுமதித்தால் தினமும் 10 ஆயிரம் லீட்டர் மூலிகை பெட்ரோல் தயாரிப்பேன்: ராமர்பிள்ளை அதிரடிப் பேட்டி

அனுமதித்தால் தினமும் 10 ஆயிரம் லீட்டர் மூலிகை பெட்ரோல் தயாரிப்பேன்: ராமர்பிள்ளை அதிரடிப் பேட்டி

Source: Tamil CNN
என் மீது கருணை கொண்டு அனுமதி வழங்கினால் தினமும் 10 ஆயிரம் லிட்டர் மூலிகை பெட்ரோல் மற்றும் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று உறுதி அளிப்பதாக ராமர் பிள்ளை தெரிவித்துள்ளார்.
சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ராமர்பிள்ளை,
என்னால் கண்டுபிடிக்கப்பட்ட மூலகை பெட்ரோல் புதுமையானது என்றும், சுற்றுப்புற ழேலை பாதுகாக்கக் கூடிய எரிபொருள் என்றும் உலக காப்புரிமை மையம், அமெரிக்கா, சிங்கப்பூர், டென்மார்க், மலேசியா போன்ற நாடுகளில் சான்றிதழ் பெற்றுள்ளேன்.
மேலும் 1996ம் ஆண்டில் சென்னை ஐஐடி மற்றும் டேராடூனில் உள்ள ஐஐபி போன்ற பரிசோதனை சாலையில் நடைபெற்ற சோதனையில் நான் தவறு ஏதும் செய்யவில்லை எஎன்று நான் சேகரித்து வைத்துள்ள சான்றிதழ்கள் கூறுகிறது.
தற்போது நான் ரூபாய் 20 லட்சம் செலவில் மூலகை பெட்ரோல் தயாரிக்கும் இயந்திரங்கள் நிறுவி உள்ளேன். இதன் மூலம் தினமும் 10 ஆயிரம் லிட்டர் மூலிகை எரிபொருள் உற்பத்தி செய்ய இயலும்.
தமிழக அரசு என் மீது கருணைகொண்டு அனுமதி வழங்கும்பட்சத்தில் இதனை பயன்படுத்தி சுமார் 6 மாத காலத்திற்குள் மின்சாரம் தயார் செய்து குறைந்த விலையில் (1 யூனிட் ரூபாய் 2க்கு) தமிழக மக்களுக்கு வழங்கி மின்சார பற்றாக்குறையை போக்க முடியும் என உறுதி கூறுகிறேன் என்றார்.
ch00022

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...