Friday 26 April 2013

பூமியைக் காப்பதில் தனியொருவரின் பங்கு

பூமியைக் காப்பதில் தனியொருவரின் பங்கு

  • பயன்படுத்தும் வாகனத்தை சரியாகப் பராமரித்து, அதிகப் புகையை வெளியிடாமல் பார்த்துக் கொள்ளலாம்.
  • பிளாஸ்டிக் பைபிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்திவிட்டு அதனைத் தூக்கி எறியாமல், மறு சுழற்சிக்குப் பயன்படுத்தலாம்.
  • வீட்டிலோ, வீட்டுப்பக்கத்திலோ இடம் இருந்தால், மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்கலாம்.
  • வாங்கிப் போட்டுள்ள இடங்களில் தற்போதைக்கு குடியேற முடியாமல் இருந்தாலும் அவ்விடங்களில் ஒரு சில மரங்களையாவது நடலாம்.
  • ஏதாவது ஒரு காரணத்துக்காக ஒரு மரத்தை வெட்ட நேர்ந்தால், அதற்குப் பதிலாக குறைந்தது 5 மரக்கன்றுகளையாவது நட்டு விடலாம்.
  • வீட்டில் இருக்கும் மின் விளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றலாம். குண்டுப் பல்புகளின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கலாம்.
  • தேவையற்ற மின்சாதனப் பயன்பாட்டைத் தவிர்க்கலாம். ஏனெனில் ஒரு யூனிட் மின்சாரத்தை மிச்சப்படுத்துவது, 2 யூனிட் மின்சார உற்பத்திக்குச் சமமாகும்.
  • சூரிய ஒளி மூலமாக மின்சாரத்தைத் தயாரித்து இயங்கும் கருவிகளைப் பயன்படுத்தலாம்.
  • கணனிகளைப் பயன்படுத்தும்போது, 10 நிமிடத்துக்கு மேல் பயன்படுத்தாமல் இருந்தால், தானாகவே கணனித்திரைகள் ஆப் ஆகும் வகையில் செய்துவிடலாம்.
  • தண்ணீரைத் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு சொட்டுத் தண்ணீரையும் காசு கொடுத்து வாங்கியிருந்தால் எவ்வாறு பயன்படுத்துவோமோ அப்படிப் பயன்படுத்தினால் அது நாட்டுக்கு நல்லது.

ஆதாரம் தினமணி
 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...