பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பப்புவா நியூ கினியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தீவு முழுவதும் குலுங்கியது. 7.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டபோதிலும், பசிபிக் கடலில் சுனாமி எச்சரிக்கை ஏதும் இல்லை என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பாகன்வில்லி தீவின் காங்குணா நகரில் அருகில் கடலுக்கு அடியில் 54 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. அருகில் உள்ள சாலமன் தீவு வரை இதன் தாக்கம் இருந்தது. இதில் பாதிப்பு இருக்கும் எனறு ஆஸ்திரேலிய புவியியல் மைய அதிகாரி டேவிட் ஜெப்சன் தெரிவித்தார்.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று ஹவாலியை மையமாகக் கொண்ட பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. ஆனால், சுனாமி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று ஜெப்சன் எச்சரித்துள்ளார்.
No comments:
Post a Comment