நொய்டாவில் 3 பேர் கொண்ட குமபலால் பெண் கற்பழிப்பு ; கழுத்தில் துப்பாகி சூடு
உத்தரபிரதேச மாநிலம் நொய்டா மாவட்டம் கன்சிராம் அவாஷ் பகுதியில் செக்டார் 45ல் நேற்று இரவு வீட்டிற்குள் புகுநத மர்ம மனிதர்கள் அங்கு தனியாக இருந்த பெண்னையும் அவரது 6 வயது மகளயும் தாக்கி உள்ளனர்.
பெண்ணின் கழுத்தில் துப்பாக்கியை வைத்து மிரட்டி குமபலாக கற்பழித்து உள்ளனர். பின்னர் பெண்ணின் கழுத்தில் துப்பாகியால் சுட்டு உள்ளனர்.
துப்பாக்கி சத்தம் கேட்டத்தும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்து உள்ளனர் அதற்குள் அந்த கும்பல் ஓடி விட்டது உடனடியாக ரத்த்ய வெள்ளத்தில் கிடந்த பெண் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கபட்டார் அவரது உஅடல் நிலை மோசமானதை தொடர்ந்து அவர் டெல்லி குரு தேஜ் பகதூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரது நிலமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.அவரது கழுத்தில் துப்பாக்கி க்குண்டு ஆழமாக பாய்ந்து உள்ளது.
பெண்ணை கற்பழித்து துப்பாக்கியால் சுட்டவர்களை 6 வயது மகள் அடையாளம் காட்டி உள்ளார். மர்ம கும்பல் ராஜு மற்றும் அவரது நண்பர்கள் என கூறி உள்ளார். ராஜூ அடிக்கடி அவர்களது வீட்டுக்கு வந்து செல்பவர் என பெண்ணின் உறவினர்கள் கூறி உள்ளனர்.
பெண்ணின் சகோதரரின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ் ராஜு மற்றும் அவரது கூட்டாளிகளும் தேடி வருகின்றனர்.போலீசார் பெண்ணின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகாக காத்து உள்ளனர்.
No comments:
Post a Comment