Tuesday, 17 December 2013

‘ஆண்டிராய்டு மொபைல்’: மாணவனின் சாதனை

‘ஆண்டிராய்டு மொபைல்’: மாணவனின் சாதனை

source: Tamil CNN
‘ஆண்டிராய்டு கைப்பேசியில் ’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஒகேம்பேட்டையை சேர்ந்தவர் எல்.ராஜசேகரன். இவருடைய மகன் சஞ்சீவி (20). இவர் சென்னை ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
இவர் ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து சஞ்சீவி நிரூபர்களிடம் கூறுகையில், பெண்களுக்கு ஏற்படும் ஆபத்து, ஏ.டி.எம். சென்டர்களில் ஏற்படும் கொள்ளை போன்ற நேரத்திலும் மேலும் விபத்து நடக்கும் போதும் அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கும் இந்த மென்பொருள் மிக நல்ல முறையில் சேவை செய்கிறது என்று கூறியுள்ளார்.
அதற்கு, ஆண்டிராய்டு மொபைலில், பிளே ஸ்டோர் மெனுவில் ரெஸ்கியூமி என்ற மென்பொருளை முதலில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இதுமுற்றிலும் இலவசம் தான். அதன் உள்ளே கேட்கப்படும் அனைத்து பதிவுகளையும் பதிவு செய்துவிட்டால் போதும், அதற்கேற்றபடி இயங்கும் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...