Thursday, 10 April 2014

ஈரான்–வல்லரசு நாடுகள் பேச்சுவார்த்தை தொடங்கியது அணு ஆயுதத்திட்டங்களை முடிவுக்கு கொண்டுவர நிரந்தர உடன்படிக்கை?

ஈரான்–வல்லரசு நாடுகள் பேச்சுவார்த்தை தொடங்கியது அணு ஆயுதத்திட்டங்களை முடிவுக்கு கொண்டுவர நிரந்தர உடன்படிக்கை?

Source: Tamil CNN
 iran-9636
வியன்னா ஐ.நா. வளாகத்தில், ஈரான் மற்றும் வல்லரசு நாடுகள் இடையேயான பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில், ஈரானின் அணு ஆயுதத்திட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து நிரந்தர உடன்படிக்கை செய்து கொள்வது பற்றி முடிவு எடுக்கப்படலாம்.
ஈரானுக்கு எதிர்ப்பு
எண்ணெய் வளம் கொண்ட ஈரான், அணு ஆயுதத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு உலகளாவிய அளவில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. ஈரானின் அணு ஆயுதத்திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகள் அமலில் உள்ளன.இந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஈரான் மற்றும் ‘பி5பிளஸ்1’ என்று அழைக்கப்படுகிற (வல்லரசு நாடுகள்) அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய 6 நாடுகளின் தூதர்கள் ஜெனீவாவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில், ஈரான் அந்த நாடுகளுடன் ஒரு தற்காலிக உடன்படிக்கை செய்துகொண்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த உடன்படிக்கையின்படி, ஈரான் 5 சதவீத அளவுக்கு மட்டுமே யுரேனியம் செறிவூட்டலாம், அதை சர்வதேச நிபுணர்கள் கண்காணிக்கலாம், இதற்கு பிரதிபலனாக 6 மாதத்துக்கு புதிய பொருளாதார தடை விதிக்கப்பட மாட்டாது. இதன் காரணமாக ஈரான் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபட முடியாது.
பேச்சுவார்த்தை
யுரேனியம் செறிவூட்டுவது, மின்சார உற்பத்திக்காகத்தான் என ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது. அதே நேரத்தில் தனது அணு உலைகளை மூடுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் நிராகரித்து உள்ளது.இந்த நிலையில், ஈரான் மற்றும் ‘பி5பிளஸ்1’ வல்லரசு நாடுகளின் அடுத்த சுற்றுச் பேச்சுவார்த்தை ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் உள்ள ஐ.நா. வளாகத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 9.45 மணிக்கு தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தை இன்று (புதன்கிழமை) முடிகிறது.
இந்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி முகமது ஜாவத் ஜரிப் தலைமை தாங்கி வருகிறார். ஐரோப்பிய நாடுகளின் வெளிநாட்டுக்கொள்கை தலைவர் கேதரின் ஆஷ்டன் ஒருங்கிணைப்பு செய்து வருகிறார். அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, சீனா, ரஷியாவின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
ஈரான் கருத்து
ஈரான் தனது அணு சக்தி திட்டங்களை முழுமையாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும், அப்போது தான் அந்த நாட்டால் அணு குண்டு தயாரிக்க முடியாத நிலை ஏற்படும் என வல்லரசு நாடுகள் கருதுகின்றன. ஆனால் ஈரான், தனது அணுசக்தித்திட்டங்கள் ஆக்கப்பூர்வமானது தான் என்று கூறி, தனக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தடைகள் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என விரும்புகிறது.
இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக ஈரான் வெளியுறவு துணை மந்திரி அப்பாஸ் ஆராக்சி கருத்து தெரிவிக்கையில், ‘‘கடந்த கூட்டங்களின் போது விவாதிக்கப்பட்ட பிரச்சினைகள் இப்போதும் விவாதிக்கப்படும், குறிப்பாக ஈரான் யுரேனியம் செறிவூட்டுதல், ஆராக் கனநீர் அணு உலை பற்றி விவாதிக்கப்படும்’’ என கூறினார்.
முடிவு வருமா?
இந்த பேச்சுவார்த்தையில் ஈரான் மற்றும் வல்லரசு நாடுகள் இடையே ஈரான் அணுதிட்டங்கள் தொடர்பாக நிரந்தர உடன்படிக்கை ஏற்படுத்துவது தொடர்பாக ஒரு முடிவு எட்டப்படலாம்.

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...