ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் ஊடகங்களும் அடக்கப்படுகின்றது : மன்னார் ஆயர்
ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருகின்றவர்களை அடக்கி ஆளும் இலங்கை அரசு தற்போது ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் ஊடகங்களையும் அடக்கி வருவதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இந்த அடக்குமுறையின் ஒரு கட்டமாகவே தமிழ்.சி.என்.என்.இணையமும் அடக்கப்பட்டுள்ளதாக நான் அறிகின்றேன். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்து பாதிக்கப்பட்ட, பாடசாலை கல்வியை தொடர முடியாதவர்களுக்கு தமிழ் சி.என்.என்.இணையம் செய்த உதவிகளை கணக்கிட முடியாது.
இந்த நிலையில் தமிழ்.சி.என்.என்.இணையத்தை இலங்கையில் பர்வையிட முடியாத அளவிற்கு இலங்கை அரசு தொழில் நுட்ப ரீதியாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
எனவே இலங்கையில் ஊடக சுதந்திரத்தை நிலை நாட்டும் வகையில் உடனடியாக தடை செய்யப்பட்ட தமிழ்.சி.என்.என்.இணையத்தின் செயற்பாடுகள் வழமைக்குத்திரும்ப இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்னார் ஆயர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment