இன அழிப்பிற்கு சர்வதேச விசாரணையே வேண்டுமென வலியுறுத்தி வடக்கு மாகாண சபையில் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது
Source: Tamil CNNதமிழ் மக்கள் மீதான இன அழிப்பிற்கு உள்ளக பொறி முறையில் நம்பிக்கை இல்லை என்றும் உள்ளக பொறிமுறையை அடியோடு நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் இன அழிப்பிற்கு சர்வதேச விசாரணையே மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் கோரியுள்ளார்.
மேற்படி விடயங்களை உள்ளடக்கியதான மூன்று பிரேரனைகளை வடக்கு மாகாண சபையின் அடுத்த கூட்டத் தொடரில் கொண்டு வந்து சர்வதேசத்திற்கு உண்மையானதும் உறுதியானதுமான அவசிய நிலைப்பாட்டை தெரிவிக்கஉள்ளதாகவும் சிவாஐpலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண சபையின் இந்த வருடத்திற்கான இரண்டாவது மாதாந்தக் கூட்டத் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன் போது கொண்டு வரப்படவுள்ள பிரேரனை தொடர்பாக மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திற்கு பிரேரனை சமர்ப்பிக்கப்பட்டு முன்மொழியப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இத் தீர்மானத்தற்கு அமைவாக எங்களுடைய நிலைப்பாட்டினைத் தெரிவிக்கும் வகையில் இந்தப் பிரேரனை அமையவுள்ளது.
அதாவது தமிழ்த் தேசத்தின் மீது நடாத்தப்பட்டதும் நடாத்தப்பட்டுக் கொண்டிருப்பதும் இலங்கை அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்கின்ற திட்டமிட்ட இன அழிப்பே என்பதனை அனைத்துலக சமூகத்திற்குமு; நாம் சுட்டிக்காட்டுகின்றோம்.
No comments:
Post a Comment