Thursday, 23 January 2014

அந்தமானில் கடத்தப்பட்ட 8 பழங்குடியின பெண்கள் மீட்பு

அந்தமானில் கடத்தப்பட்ட 8 பழங்குடியின பெண்கள் மீட்பு

Source: Tamil CNN
அந்தமான் நிகோபார் தீவுகளில் சமூக விரோதிகளால் கடத்தப்பட்ட ஜராவா பழங்குடி இனத்தைச் சேர்ந்த 8 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தெற்கு அந்தமான் பொலிஸ் சூப்பிரெண்டு சின்மாய் பிஸ்வால் கூறுகையில்,
“ஜராவா பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்த சில நபர்கள், அங்கிருந்த பெண்களை இரண்டு ரப்பர் படகுகளில் கடத்தி செல்வதாக எங்களுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஹிரன் திக்ரி பகுதியில் கடந்த 16-ம் திகதி நடத்திய தேடுதல் வேட்டையில் 4 ஜராவா பெண்களும், 17-ம் திகதி மேலும் 4 பெண்களும் மீட்கப்பட்டனர்.
கடத்தலில் ஈடுபட்ட 7 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார். இதுதெடார்பாக பழங்குடி நலத்துறை அதிகாரி பிரணாப் கொடுத்த புகாரின் பேரில், கடத்தல்காரர்கள் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...