Sunday, 17 November 2013

900 வருடங்கள் பழைமையான கோயில் வழக்கு: கம்போடியாவுக்கு சொந்தமென ஐ.நா. நீதிமன்றம் தீர்ப்பு

900 வருடங்கள் பழைமையான கோயில் வழக்கு: கம்போடியாவுக்கு சொந்தமென ஐ.நா. நீதிமன்றம் தீர்ப்பு

Source: Tamil CNN
900 வரு­டங்கள் பழை­மை­யான ப்ரீஹ் விஹேர் இந்துக் கோயில் கம்­போ­டியா நாட்­டுக்குச் சொந்­த­மா­னது என்ற வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த தீர்ப்­பினை ஐ.நா உயர் நீதி­மன்றம் நேற்­று­முன்­தினம் வழங்­கி­யுள்­ளது.
கம்­போ­டியா மற்றும் தாய்­லாந்து ஆகிய நாடு­களின் எல்­லையி­ல் இக் கோயில் அமைந்­துள்­ளது. இதனால் இக்­கோ­யி­லுக்­காக இவ்­விரு நாடு­களும் நீண்ட கால­மாக சண்­டை­யிட்­டுக்­கொண்­டி­ருந்­தன.தீர்ப்பு வெளி­யா­­வ­தற்கு முன்னர் கோயிலைச் சுற்­றி­யி­ருந்த பகு­தியில் தாய்­லாந்து மற்றும் கம்­போ­டிய பாது­காப்பு படை­யினர் குவிக்­கப்­பட்­டி­ருந்­தனர். இதனால் அங்கு பெரும் பதற்ற நிலை காணப்­பட்­டது.
இந்­நி­லையில், இக்­கோ­யிலும் அதனைச் சுற்­றி­யுள்ள குறித்­த­வொரு பகு­தியும் கம்­போ­டிய அரசின் அதி­கா­ரத்­துக்­குட்­பட்­டது என ஐ.நா உயர் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.எனவே கோயிலை அண்­மித்த பகு­தியில் நிலை­கொண்­டி­ருந்த தாய்­லாந்தின் இரா­ணுவம், பொலிஸ், காவற்­படை, பாது­கா­வ­லர்கள் அனை­வ­ரையும் அங்­கி­ருந்து அகற்ற வேண்­டிய கடப்­பாட்­டினை தாய்­லாந்து கொண்­டுள்­ளது எனவும் நீதி­மன்றம் குறிப்­பிட்­டுள்­ளது.
இதே­வேளை இவ்­விரு நாடு­க­ளுக்­கு­மான புதிய வரை­படம் எத­னையும் நீதி­மன்றம் அளிக்­க­வில்லை. தற்­போது இத்­தீர்ப்­பினை இரு தரப்­பி­னரும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். இது குறித்து கம்­போ­டிய வெளி­நாட்டு அமைச்சர் நம்ஹொங் கூறு­கையில், கோயிலைச் சுற்­றி­யுள்ள அனைத்து பகு­தி­க­ளையும் எமக்கு வழங்­க­வில்­லை­யென்­றாலும் இத்­தீர்ப்பு மகிழ்ச்­சி­ய­ளிக்­கி­றது என்றார்.தாய்­லாந்து வெளி­நாட்டு அமைச்சர் சுரபொங் கருத்து வெளி­யி­டு­கையில், இத்­தீர்ப்பு இரு தரப்­புக்கும் திருப்­தி­ய­ளித்­துள்­ள­தாக கண்­ணீ­ருடன் தெரி­வித்­துள்ளார்.
1962ஆம் ஆண்டில் இக்­கோயில் உரிமை தொடர்­பாக இவ்­விரு நாடு­களும் முட்­டிக்­கொண்­டன. இதன்­போது இக்­கோயில் கம்­போ­டி­யா­வுக்கு சொந்தம் என சர்­வ­தேச நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
பின்னர் 2008ஆம் ஆண்டில் மீண்டும் இது தொடர்பில் சர்ச்சை தோன்­றி­யது. 2011ஆம் ஆண்டு கலவரம் ஏற்பட்டு 28 பேர் பலியாகினர். அதைத் தொடர்ந்து கம்போடிய அரசு ஐ.நா நீதிமன்றினை நாடியது. இந்நிலையில் அக்கோவில் கம்போடியாவுக்கு சொந்தமானது என ஐ.நா. நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2953kovil2
2953kovil
2953pvvvvv5
29537ec6326f

No comments:

Post a Comment

போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்!

  போர்ச் சூழலில் எருசலேமில் குருத்தோலை ஞாயிறுக் கொண்டாட்டம்! கட்டுப்பாடுகள் காரணமாக, இயேசுவின் புனிதக் கல்லறைக் கோவிலுக்குச் செல்ல முடியாத ந...