Thursday, 21 November 2013

அமெரிக்காவில் இந்திய வம்சாவழி பெண்ணை காரால் மோதி கொன்ற வாலிபனின் வெறிச்செயல்

அமெரிக்காவில் இந்திய வம்சாவழி பெண்ணை காரால் மோதி கொன்ற வாலிபனின் வெறிச்செயல்

source: Tamil CNN
அமெரிக்காவில் வசிக்கும் ஓர் இந்திய தம்பதிக்கு சமீபத்தில் அமெரிக்க குடியுரிமை கிடைத்தது. இந்த மகிழ்ச்சியை பாஸ்டன் அருகே வ்ரென்தான் மாவட்டத்தில் உள்ள தான் பணி புரியும் ஓட்டலில் கொண்டாட நினைத்த பட்டேல் தனது மனைவி காஞ்சன்பென்(58) உடன் அங்கு சென்றார்.
அப்போது ஓட்டலில் வாடகையை கட்ட மறுத்த ஒரு வாடிக்கையாளருடன் ஊழியர்கள் தகராறு செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஆதரவாக பட்டேலும், அவருக்கு ஆதரவாக காஞ்சன்பென்னும் அந்த வாலிபரிடம் பணத்தை கட்டிவிட்டு செல்லும்படி கூறினர்.
ஆத்திரமடைந்த அந்த வாலிபன் கோபத்துடன் தனது வேனில் ஏறி காஞ்சன்பென் மீது வேகமாக மோதினான். மோதியதோடு இல்லாமல் சக்கரத்துக்கு அடியில் சிக்கிக்கொண்ட அவரது பிரேதத்துடன் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று வேனை விட்டு இறங்கி ஓடி விட்டான்.
வேனின் அடிபாகத்தில் ரத்த வெள்ளத்தில் பிணம் கிடப்பதை கண்ட போலீசார் வேன் உரிமையாளர் மோசஸ் அக்லோக்(22) என்பவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
amerika

No comments:

Post a Comment