Tuesday 26 November 2013

பிரபாகரனுக்கு இலங்கை நாடாளுமன்றில் புகழாரம் சூட்டிய ஸ்ரீதரன் எம்.பி

பிரபாகரனுக்கு இலங்கை நாடாளுமன்றில் புகழாரம் சூட்டிய ஸ்ரீதரன் எம்.பி

Source: Tamil CNN
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், பாராளுமன்றில் புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரபாகரனின் பிறந்த நாள் இன்றைய தினம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.மாவீரர் தினத்தில் பிரபாகரன் மற்றும் உயிரிழந்த ஏனைய போராளிகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரபாகரனின் போராட்டமானது நியாயமானது எனவும், அதில் தவறில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் ஒர் சுதந்திரப் போராட்டமாக கருதப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் உரைக்கு ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ் சிங்கத் தலைவர்களை கொலை செய்துள்ளதாக உயர்கல்வி அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஸ்ரீதரனின் உரைக்கு, அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.பிரபாகரன் தொடர்பில் ஸ்ரீதரன் ஆற்றிய உரையின் சர்ச்சைக்குரிய பகுதிகளை ஹன்சார்டிலிருந்து நீக்கிவிடுமாறு பிரதி சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...